காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை
 
அறிவிக்கை
 

 

 
புதிய பதிவேற்றங்கள்
 

கல் மனிதர்கள் - ஆவணப்படம் - குட்டி ரேவதி

கல்லுடைக்கும் தொழிலாளர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள், வேதனைகளைச் சித்திரிக்கும் ஆவணப்படம். குறிப்பாக, கல்லுடைக்கும் பெண்களின் வலி நிறைந்த உலகம், உண்மையான அக்கறையுடன் சொல்லப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு கல்லுடைக்கும் தொழிலாளர் சங்கத்தின் (டிகேடிஎஸ்) நிறுவனர் S.P. ஞானமணி அவர்கள் ஒருங்கிணைவில் உருவான இந்த ஆவணப்படம், கல்லுடைக்கும் தொழிலாளர்கள் எப்படி எழுச்சியும் விழிப்பும் பெற்றனர் என்பதையும் சொல்கிறது. அந்தச்சங்கத்தால் 48 நிமிட கால அளவு கொண்ட இப்படத்தை கவிஞர் குட்டி ரேவதி இயக்கியுள்ளார். இக்காணொளியில் ஆங்கிலத் துணை உரையுடன் காணலாம். கல்லுடைக்கும் தொழிலாளர்களின் உழைக்கும்திறனும், அவர்கள் சந்திக்கும் அவலங்களும் முழுமையாக வெளியுலகுக்குத் தெரிய இதை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். இக்காணொளியைப் பரப்புங்கள்!


 

தமிழ் ஸ்டுடியோவின் 5 வது ஊர் சுற்றலாம் வாங்க

நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் ஐந்தாவது ஊர் சுற்றலாம் வாங்க எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15 மற்றும் 16 தேதிகளில் நடக்கவிருக்கிறது. குற்றாலம், செங்கோட்டை, கோவில்பட்டி அருகில் உள்ள கழுகு மலை உள்ளிட்ட பல இடங்களுக்கு செல்லவிருக்கிறோம். நண்பர்கள் அதிகம் பார்த்திராத முக்கியமான பகுதிகளுக்கு செல்வதே இந்த பயணத்தின் நோக்கம். இந்த முறை நமது பயணத்தில் இரு இலக்கிய ஆளுமைகள் கலந்துக் கொள்கிறார்கள். கழுகு மலை சமணர்கள் ஓவியம் பற்றியும், கழுகு மலையின் பின்னணி பற்றியும் எழுத்தாளர் கோணங்கி நமக்கு விளக்கி சொள்ளவிருக்கிறார். ஒரு நாள் முழுவதும் கோணங்கியோடு நமது பயணம்..


 
படைப்பாளிகள் -  அம்ஷன் குமார்

மாற்று சினிமாவிற்கான முதல் விதை எப்போது விழுந்தது ?

மாற்று சினிமாவிற்கான முதல் விதை என்றால், மெயின்ஸ்ட்ரீம் படங்களை பார்த்துதான் வந்தது. அதுவும் ஆங்கிலப் படங்களை பார்த்துதான் வந்தது.திருச்சியில் ப்ளாசா, அருணா என்று இரண்டு தியேட்டர்கள் இருந்தது. இரண்டிலும் ஆங்கிலப் படங்கள் தான் போடுவார்கள். இதில் என்ன படங்கள் போட்டாலும் நான் பார்ப்பேன். குறிப்பாக காலைக்காட்சி தவறாமல் பார்ப்பேன். ஏனென்றால் மற்ற காட்சிகளை விட காலைக்காட்சிக்கு கட்டணம் குறைவு. அதனால் காலைக் காட்சியை தவற விடுவதே இல்லை. வாராவாரம் இதே போல் தொடர்ந்து ஏழெட்டு வருடங்கள் பார்த்திருக்கிறேன்.


 
 

தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது பெற்ற அம்ஷன் குமார் படங்கள் திரையிடல்

நண்பர்களே எதிர்வரும் சனிக்கிழமை (11-08-2012) காலை பத்து மணி முதல் எக்மோரிலுள்ள ஜீவன ஜோதி அரங்கில் (கன்னிமாரா நூலகம் எதிரில் உள்ளது) திரையிடப்படும் அம்ஷன் குமார் படங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாமல் இந்த முறை நுழைவுக் கட்டணம் நிர்னைக்கப்பட்டுள்ளது. நண்பர்கள் இதனை பெரிய சுமையாக கருதாமல் அவசியம் இந்த திரையிடலில் கலந்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நுழைவுக் கட்டணம் 50/- ரூபாய் மட்டுமே.


 
 

தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது 2012 ஆம் ஆண்டு பெறுபவர் அம்ஷன் குமார்

மாற்று திரைப்பட வளர்ச்சிக்காகவும், மாற்று திரைப்பட கலைஞர்களை கவுரவப்படுத்தவும் தமிழ் ஸ்டுடியோவால் உருவாக்கப்பட்ட "லெனின் விருது" இந்த ஆண்டு ஆவணப்பட / திரைப்பட இயக்குனர் அம்ஷன் குமார் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கான விழா ஆகஸ்ட் 15 ஆம் தேதி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள எம்.எம். திரையரங்கில் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில்..


 
 

தமிழ் ஸ்டுடியோ நடத்தும் 8 ஆவது குறுந்திரைப் பயணம் - புதுவை

திரையிடல் முடிந்ததும் அருகில் உள்ள மீனவ கிராமத்தில் மீன் குழம்பு (பதிவு செய்யும் ஆர்வலருக்கு மட்டுமே) வைத்து இரவு விருந்தை முடித்துக் கொண்டு கடற்கரையிலேயே விடிய விடிய திரைப்படங்கள் பற்றி பேசிக்கொண்டிருந்துவிட்டு ஞாயிறு மாலை சென்னை திரும்புகிறோம். ஆர்வமுள்ளவர்கள் இதில் கலந்துக் கொள்ளலாம். தமிழ்நாட்டில் இருந்து வருபவர்கள் அவசியம் முன்பதிவு செய்து கொள்ளவும். இரவு எங்களோடு விவாதத்தில் கலந்துக் கொள்ள விரும்பும் புதுவை நண்பர்களுக்கும் முன்பதிவு அவசியம்.


 
 

குறும் பயணம் - 1 .......புதுவை

இதன்படி நாளை மறுநாள் (17-06-2012) ஞாயிற்றுக் கிழமை புதுவையில் மாலை 12 மணியளவில் குறும்பட இயக்குனர்கள், குறும்பட ஆர்வலர்களை சந்திக்க புதுச்சேரி வருகிறேன். ஆர்வமுள்ள நண்பர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொள்ளலாம். குறும்பட / ஆவணப்படங்கள் மற்றும் அதன் இயக்குனர்கள் சார்ந்த ஒரு தகவல் களஞ்சியம் உருவாக்கவும், எல்லா மாவட்டங்களிலும் குறுந்திரை பயணம் தொடர்ந்து நடத்திடவும், இனி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பயணம் தொடரும். ஆர்வமுள்ள நண்பர்கள் இதில் தன்னார்வலர்களாக கலந்துக் கொண்டு எல்லா மாவட்டங்களுக்கும் எங்களுடன் வரலாம்.


 
 

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் - 38 - வெங்கட் சாமிநாதன்

ஒரு பஞ்சாபி தன் பிழைப்புக்காக தாற்காலிகமாக எழுப்பிய தார்ப்பாலின் கொட்டகையில் தான் (நினைவில் மறுபடியும் பதித்துக் கொள்ளவும் நான் பேசுவது 1952 – 1956 காலத்தில்) அந்தப் பஞ்சாபிக்கு வரவு செலவு கணக்குப் பார்க்கத் தெரியும். அவன் சினிமா அந்தக் காலத்து வெகு ஜன ஹிந்தி சினிமாவை விட மோசம். அந்த முகாமின் கலவையான மக்கள் கூட்டத்தில் ஒரிய மக்கள் தான் அதிகம். பின் வங்காளிகள், பஞ்சாபிகள், தமிழர், மலையாளிகள் எல்லாம் சேர்த்தால் கொஞ்சம் முன் பின்னாக ஒரே அளவில் ஒரிய மக்களின் எண்ணிக்கைக்கு சமமாக இருப்பார்கள். ஆனால் சினிமா பார்ப்பது ஒரிய மக்கள் இல்லை. மற்ற மொழிக் காரர்கள் தான்.


 
 

தமிழ் ஸ்டுடியோவின் இரண்டாவது சனிக்கிழமை நிகழ்வு

இந்த மாத இரண்டாவது சனிக்கிழமை பாலு மகேந்திரா அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த தமிழின் ஆக சிறந்த படங்களில் ஒன்றான "சந்தியா ராகம்" திரையிடப்படவிருக்கிறது. இப்படியான அரிய படங்களை இனி ஒவ்வொரு மாதமும் திரையிடலாம் என்று நினைக்கிறேன். ஆனால் இதுப் போன்ற படங்களை தேடுவதில் நிறைய சிக்கல்கள் இருக்கிறது. பல சிக்கல்களையும் தாண்டி இதுப் போன்ற படங்களை தமிழின் மாற்று திரைப்பட ஆர்வலர்களுக்காக திரையிடுவதில் தமிழ் ஸ்டுடியோ உறுதியாக இருக்கிறது. நல்ல திரைப்படங்களை தொடர்ச்சியாக பார்ப்பதன் மூலமும் நாம் நமது திரைப்பட ரசனையை வளர்த்துக் கொள்ள முடியும்.


 
 

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் - 37 - வெங்கட் சாமிநாதன்

நான் சொல்லி வந்த விஷயங்கள் ஏதும் சுலபத்தில் புரியாத அரிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளோ, ஆழ்ந்த தத்துவங்களோ அல்ல. ஏதும் தமிழ் வாழ்க்கைக்கு அந்நியமான வேற்றுலக வாழ்க்கை பற்றியன அல்ல. நான் தமிழ் அல்லாது ஏதும் வேற்று மொழியில் பேசவில்லை. அப்படி இருந்தும் நான் சொல்லும் பொதுப்புத்திக்கு ஏலும் விஷயங்களையே கூட கொஞ்சம் காது கொடுத்துக் கேட்கும் மன நிலையில் நம்மில் பெரும்பாலோர் இல்லை. தலையில் சட்டியைக் கவிழ்ந்துக்கொண்டு தெருவில் நடக்கிறவனை, ஏன் இந்த பைத்தியக்காரத்தனம் என்று தான் கேட்கிறேன். அவ்வளவே. ஆனால் இது நம்மவர்ககு ஏற்பதில்லை. ஏன்? இது எப்படி நிகழ்கிறது?, ஏன் நிகழ்ந்து விடுகிறது? என்பது எனக்கு புரிவதும் இல்லை. வருத்தம் தருவதாகவும் இருக்கிறது.


 
 

தமிழ் ஸ்டுடியோ நடத்தும் 7 ஆவது குறுந்திரைப் பயணம் - கிராமம்:மேட்டுகார்க்குணம் - திருவண்ணாமலை

திருவண்ணாமலையிலிருந்து வேலூருக்குச் செல்லும் அனைத்து தனியார் மற்றும் அரசு பேருந்துகள் நாயுடு மங்கலம் கூட்ரோடு பேருந்து நிறுத்தத்தில் நிற்க்கும். அங்கிருந்து நம் கிராமத்திற்கு நமது நண்பர்கள் வண்டியில் அழைத்துக்கொண்டு வந்து விடுவார்கள்....எத்தனை பேர் வந்தாலும் உணவு,தங்குமிடம் செய்து தருகிறோம் என்று அந்த கிராமத்தில் வசிக்கும் நண்பரும் இந்த நிகழ்வை ஒருங்கிணைக்கும் ச. சு. அருள் கூறி இருக்கிறார். எனவே அருமையான குறும்படங்களை மக்களோடு மக்களாக பார்க்க அனைவரும் வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதில் குறும்பட இயக்குனர்களும், கலைஞர்களும் கலந்துக் கொள்ளலாம். உங்கள் குறும்படமும் இந்த நிகழ்வில் திரையிட விருப்பமிருந்தால் தொடர்பு கொள்க. 9840698236


 
 

நெய்வேலி புத்தகக் கண்காட்சி - குறும்படப் போட்டி

நெய்வேலிப் பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஆதரவில் பதினைந்தாவது ஆண்டாக 29-06-2012 முதல் 08-07-2012 முடிய நடைபெற உள்ள புத்தகக் கண்காட்சியை ஒட்டித் ‘தினமணி’ நாளிதழும், நெய்வேலிப் புத்தகக் கண்காட்சிக் குழுவும் இணைந்து நடத்தும் குறும்படப் போட்டிக்கான குறும்படங்கள் கீழ்க்காணும் விதிகளுக்கு உட்பட்டு வரவேற்கப்படுகின்றன.


 
 

சிறுவர் திரைப்பட விழாவில் சார்லி - காணொளி

தமிழ் ஸ்டுடியோ மே மாதம் 11 & 12 ஆகிய தேதிகளில் நடத்திய "சிறுவர் உலகத் திரைப்பட திருவிழாவில்" சார்லி அவர்கள் ஆற்றிய உரை.



 
 

தமிழ் ஸ்டுடியோ மற்றும் தெருப் புகைப்படக் கலைஞர்கள் இணைந்து நடத்திய அடிப்படை புகைப்பட பயிற்சி

இதுப் போன்ற பயிற்சிகள் ஆர்வலர்களை நான்கு சுவருக்குள் அடைத்து, குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கும் அறையில் வைத்தே நடத்தப்படும். ஆனால் நாங்கள் நடத்திய இந்த பயிற்சி மரங்களால் சூழப்பட்டு, இயற்கையே செய்துக் கொடுத்த அருமையான காற்றோட்டமான சூழலில் நடைபெற்றது. முழுக்க முழுக்க புகைப்படக் கலை என்பது இயற்கையை நேசிக்கும் ஒரு அடிப்படைக் கலை என்பதன் குறியீடாகவே இந்த பயிற்சி இதுப் போன்ற தோட்டத்தில் நடைபெற்றது.



 
 

தமிழ் ஸ்டுடியோ சிறுவர் திரைப்பட விழாவில் அரங்கேறிய சுக்கா பக்கா - நாடகம்

தமிழ் ஸ்டுடியோ மே மாதம் 11 & 12 ஆகிய தேதிகளில் நடத்திய "சிறுவர் உலகத் திரைப்பட திருவிழாவில்" வேலு சரவணன் மாணவர்கள் அறிவழகன், சுதன் ஆகியோர் நடத்திய சுக்கா பக்கா சிறுவர்களுக்கான நாடகம்.


 
 

படிமை திரைப்பட பயிற்சி - இரண்டாவது பேட்ச் - ஆர்வலர்கள் சேர்க்கை

இங்கே பேராசிரியர்கள் இல்லை. ஆசிரியர்கள் இல்லை. கல்விக்கூடம் போன்ற அமைப்பு இல்லை. புரியாத மொழியான ஆங்கிலத்தில் பயிற்சி இல்லை. திரைப்படம் என்றால் என்ன? திரைப்படம் எப்படி எடுப்பது? என்பதை மிக சுலபமான வழியில் நீங்கள் கற்றுக்கொள்ளப் போகும் இடமே படிமை. புரியாத பல பெயர்களை சொல்லி இவர்களை தெரியுமா? இந்த தொழில்நுட்பம் தெரியுமா? என்றெல்லாம் உங்களை யாரும் கேட்கப்போவதில்லை.


 
 

வழக்கு எண் 18/9 – காதலின் இரு முகங்கள்- ஆர்.அபிலாஷ்

தமிழில் காதல் ஒரு தெய்வீக காரியமாக பூஜிக்கப்பட்ட காலம் ஒன்றிருந்தது. அநேகமான படங்களில் காதலர்கள் இறந்து காதலை வாழ வைப்பார்கள். 90களுக்கு பிறகு இந்நிலைமை மெல்ல மாறியது. பொருளாதார ஸ்திரத்தன்மை பெற்ற ஒரு தலைமுறை காதலை ஆண்-பெண் சமத்துவம் கோரும் ஒரு பரஸ்தர அன்பு பாராட்டலாக காணத் துவங்கியது.


 
 

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் - 36 - வெங்கட் சாமிநாதன்

மனே என்னும் கன்னடப்படம் பற்றி எழுதுவதாகச் சொல்லியிருந்தேன். மனே இரண்டு மாதங்களுக்கு முன் லோக் சபா தொலைக்காட்சியில் பார்த்திருந்த ஞாபகத்தில், ஓரோரிடத்து பயில்வான் என்னும் மலையாளப் படம் பற்றி எழுதி வரும் போது ஒரு கன்னடப் படம் பற்றியும் அதுவும் சமீபத்தில் பார்த்த படம் என்ற காரணமாகவும் அது பற்றி பிரஸ்தாபித்தேன்.


 
 

தமிழ் ஸ்டுடியோ நடத்தும் "சிறுவர் உலகத் திரைப்பட திருவிழா"

தமிழ் ஸ்டுடியோவின் நீண்ட நாள் கனவான சிறுவர்களுக்கான திரைப்பட திருவிழாவை இந்த ஆண்டு நடத்துவதில் முதலில் பெருமை கொள்கிறோம். மாற்று திரைப்படங்களுக்கான ரசனை சிறு வயதில் இருந்தே விதைக்கப்பட வேண்டும். திரைப்படம் என்றால் என்ன என்பதற்கான விளக்கங்கள் இன்னொரு திரைப்படத்தின் மூலமே கொடுப்பது சிறந்தது.

இடம்: Don Bosco Institute of Communication Arts (DBICA), டைலார்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம்
நாள்: மே 11 & 12


 
 

குறுந்திரை 2012 - குறும்பட ஆவணப்பட போட்டி

1. படங்கள் குறுந்தகடில் மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.
2. போட்டியில் பங்கேற்க பதிவுக் கட்டணம் ரூ.250. இதனை உருவங்கள்(URUVANGAL) என்ற பெயரில் டிடி(DD) யாகவோ அல்லது பணவிடையாகவோ (M.O) குறுந்தகடுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனப்ப வேண்டும்.
உருவங்கள்
இமேஜஸ், புலவன்விளை
கல்லன்குழு அஞ்சல்,
குமரி மாவட்டம் – 629 166.


 
 

தீபிகா நடத்தும் ‘‘உலகத் தமிழ்க் குறும்பட விழா 2012’’

படங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் :- ஜூன் 05, 2012)
மொத்த பரிசுத் தொகை:- ரூ. 1 லட்சம்
விதிமுறைகள்:-
01) தேர்வுக்கு அனுப்பப்படும் குறும்படங்கள் தமிழ் மொழிப் படங்களாகவே இருக்க வேண்டும்.


 
 

தமிழ் ஸ்டுடியோ மற்றும் தெருப் புகைப்படக் கலைஞர்கள் இணைந்து நடத்தும் அடிப்படை புகைப்படக்கலைப் பயிற்சிப்பட்டறை

நாள்: மே 4, 5, 6
இடம்: குன்றத்தூரிலுள்ள விவசாயப் பண்ணை.
கட்டணம்: 1000/- ( தங்குமிடம் / உணவு உட்பட. )

நடத்துபவர்: ஆர். ஆர். சீனிவாசன்
(தெருப் புகைப்படக்கலைஞர்)


 
 

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய 47வது குறும்பட வட்டம்

பாலாஜி மோகன் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'காதலில் சொதப்புவது எப்படி' திரைப்படத்தின் இயக்குனர் ஆவார். அருள் எழிலன் பத்திரிக்கை, எழுத்து, களப்பணி என பல தளங்களில் இயங்கி வருபவர். இருவரின் குறும்படங்களுமே வெவ்வேறு கதையமைப்பு, அழகியல் தன்மைகளுடன் சிறப்பாய் இருந்தன. 'கனவுக் கீர்த்தனை' தாத்தாவிற்கும் வெளிநாட்டில் இருந்து திரும்பி வரும் பேத்திக்கும் இடையேயான தலைமுறை இடைவெளியை, ரசனை மாறுதல்களை உணர்த்தியது. 'மிட்டாய் வீடு' இன்றைய...



 
 

இங்கே திரைக் கதைகள் பழுது நீக்கித் தரப்படும் - நூல் திறனாய்வு - வெங்கட் சாமிநாதன்

இருப்பினும், தமிழ் சினிமா ரசிகர்கள் இந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டும். இதற்குக் கொடுக்கும் ரூ 120க்கு கோச்சடையான் முதல் ஆட்டம் பார்க்கலாமே என்று அவன் நினைக்கலாம். அவன் உலகைத் திருத்த முடியாது. மகாதேவனே சொல்வது போல, தமிழ் சினிமாத் துறை சார்ந்தவர்கள் அத்தனை பேரும் இந்த ரசிகனின் பலவீனத்தைத் தான் நம்பி வாழ்கிறார்கள்.


 
 

நிழல் - வெள்ளிவிழா குறும்படப் பயிற்சிப் பட்டறை

கல்லூரிகளில் மட்டுமே கற்றுத்தரப்படும் திரைப்படக்கல்வியை கிராமப்புற மாணவர்கள் பெறவேண்டும் என்கிற குறிக்கோளோடு கேமரா,திரைக்கதை,படத்தொகுப்பு,நடிப்பு,முதலியவை கற்றுத்தரப்படுகிறது. ஆசிரியர்கள், வழக்குரைஞ்கர்கள் ,பொறியாளர்கள்,டாக்டர்கள் முதலியோர் இந்த கோடைகால பயிலரங்கத்தில் கலந்து கொள்ளலாம்.இறுதிநாள் மாணவர்களே குறும்படம் எடுக்கலாம். உணவு,உறைவிடம்,பயிற்சி கருவிகளுக்கு கட்டணம் உண்டு.


 
 

தமிழ் ஸ்டுடியோவின் நான்காவது ஊர் சுற்றலாம் வாங்க... - தடா அருவிப் பயணம்

சென்னைக்கருகில் இருக்கும் இந்த தடா அருவிப் பற்றி முன்னமே நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். சில மாதங்களுக்கு முன்னர் தடா அருவிக்கு செல்வதற்கு பதில் புதிதாக கோனே என்கிற அருவிக்கு சென்று திரும்பினோம். தடா, கோனே எல்லாம் ஒரே அருவி என்று சிலர் சொன்னதால். ஆனால் கோனேவும் தடாவும் ஒன்றல்ல இங்கே வந்தப் பிறகு தெரிந்தது. எனவே மீண்டும் தடா அருவிக்கு செல்லும் முடிவில் இருந்தோம். கடந்த வெள்ளியன்று முகநூல் நண்பர் ஹரி பிரசன்னா தடா சென்று வந்தப் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திருந்தார். அங்கே இப்போது தண்ணீர் இருகிறதா என்பதை ஊர்ஜிதம் செய்துக் கொண்டு தடா நோக்கி பத்மநாபன், புகழ், தியாகராஜன், சிலம்பரசன், சுந்தர், ஸ்ரீ கணேஷ், கார்த்தி, நான் என மொத்தம் எட்டு நண்பர்கள் பயணமானோம்.


 
 

தமிழ் ஸ்டுடியோவின் புதிய பகுதி - திரைப்பயணம்

குறும்பட வட்டம், குறும்படங்கள் / ஆவணப்படங்கள்/ உலகப்படங்கள் திரையிடல், பௌர்ணமி இரவு, குறுந்திரைப் பயணம், நூல் வெளியீட்டு விழா, இலக்கிய நிகழ்வுகள், குறும்பட பயிற்சிகள் / ஆலோசனை, திரைப்பட பயிற்சியகம் ஆகியவற்றை தொடர்ந்து தமிழ் ஸ்டுடியோவின் இன்னொரு புதியப் பகுதி திரைப் பயணம்.

திரைப்படங்களை தங்களின் வாழ்வின் மிக முக்கியமான அங்கமாக கொண்டுள்ள தமிழ்நாட்டு மக்களுக்கு அதுப் பற்றிய சரியான புரிதல் இல்லை. திரைப்பட ரசனை கூட இங்கே சரியாக வளர்க்கப்படவில்லை. திரைப்படத் துறையில் இருந்தே முதல்வர்கள் தொடர்ச்சியாக அரியணை ஏறும் தமிழ்நாட்டில் பள்ளிக் கல்லூரிகளில் திரைப்படம் பற்றிய அடிப்படை பாடம் இல்லை.


 
 

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் -35 - வெங்கட் சாமிநாதன்

இப்போதும் நினைவிலிருந்து இன்னும் இரண்டு படங்களைப் பற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன். இம்மாதிரி படங்கள் தயாரிக்கவேண்டும், தம்மைச் சுற்றியுள்ள வாழ்க்கையை, மனிதர்களைப் பற்றிச் சொல்லவேண்டும், அதுவும் சினிமாவாக உருப் பெறவேண்டும் என்ற நினைப்பு தமிழில் இது வரை எவருக்கும் வராத காரணத்தால், நம்மிலிருந்து அதிகம் வேறுபடாத, அதாவது வாழ்க்கை அம்சங்களில், சினிமா உலக வசதிகளில் அதிகம் வேறுபடாத என்று அர்த்தப் படுத்திக்கொள்கிறேன், அப்படி வேறுபடாத, நாமும் நம் வாழ்க்கை போலத்தான் இவர்களதும், நம்மைப் போன்றவர்கள் தான் இவர்களும் என்று நாம் இனம் காணக்கூடிய கன்னட, மலையாள படங்களிலிருந்தே உதாரணம் எடுத்துக்கொள்கிறேன்.

 
 

தமிழர் நலம் கலை பண்பாட்டியக்கம் - ‘‘யாழ் விருது 2012’’ - தமிழ் குறும்பட போட்டி

குறும்படங்கள் மாற்று சினிமாவுக்கான முயற்சியாகவும், திரைத்துறையில் மக்கள்
பங்கேற்பை கொண்டு வரும் முயற்சியாகவும், நாளைய கலை பண்பாட்டின் செழுமைக்கு
இளைஞர்களை உருவாக்க ஒரு களத்தை ஏற்படுத்தித்தருகிறது. எனவே
முன்னணி திரைப்படஇயக்குனர் மு.களஞ்சியம் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்
தமிழர் நலம் கலை பண்பாட்டியக்கம் ஆண்டு தோறும் மே.12/2012 ’’ யாழ் விருது “
குறும்பட போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி இவ்வாண்டு தனது முதல் குறும்படபோட்டியை நடத்தவுள்ளது. போட்டியில் வெற்றி பெறும் குறும்படங்களுக்கு...

எங்களைப் பற்றி பிரிவுகள் செயல்பாடுகள் தமிழ் ஸ்டுடியோவில் தேட பின் தொடர
         
  கருத்துகள் இலக்கியம் குறும்பட வட்டம்

Google Thamizhstudio
 
Facebook
Picasa Web Albums
Twitter
YouTube
   
  பத்திரிகை செய்திகள் குறும்படம் பௌர்ணமி இரவு
  நிர்வாகம் நாடகம் குறுந்திரைப் பயணம்
  தொடர்புக்கு களம் படிமை
  திரைப்பட இதழ்கள் குறும்பட உதவிகள்

 
 
© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம் - All rights reserved.

Best viewed in Windows 2000/XP |  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome


Concept, design, development & maintenance by thamizhstudio.com