வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


திரைத் துறையில் ஓய்வின்றி உழைத்தாலும் தனக்கு இலக்கியத்தின் மீது உள்ள காதலால் தொடர்ந்து எழுதி வரும் திரு. ரவிவர்மன் ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கு உரிய அத்துனை அடையாளங்களையும் கொண்டுள்ளார். 

திரைத்துறையில் பணிபுரியும் பலருக்கு இலக்கியத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், தங்களை இலக்கியத்தில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்வதில்லை. ஆனால் திரு. ரவிவர்மன் அவர்கள் பரவலாக அறியப்பட்ட ஓர் எழுத்தாளர். இலக்கியம் மீது தீராக் காதல் கொண்டவர். அவரது எழுத்தின் நடை, சொல்லாடல் போன்றவை தனித்தன்மை பெற்று விளங்குபவை.

"யாவரும் கேளிர்" தொடர்கதை (நாவல்) கிராமத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்படும் தொடர். அவரது சொல்லாடல், காட்சிப்படுத்துதல் போன்றவை ஒரு கிராமத்திற்கே சென்றது போன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். இன்றைய எந்திர உலகில் நாம் இழந்த நமது கிராமத்து உணர்வுகளை, நிகழ்ச்சிகளை நம் கண்முன்னே அழைத்து வரப்போகிறது இந்தத் தொடர். 

 

 
     
     
     
   
யாவரும் கேளிர்
1
 
யாவரும் கேளிர்
ஆசிரியர் பற்றி
------------------------

 
 

 
 



ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்

கிராமத்து மைந்தனாக இருந்தாலும் திரைத்துறை மீது கொண்ட காதலால் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ரவிவர்மன் அவர்கள், தமிழ், தெலுகு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும், ஹிந்தி உள்ளிட்ட வடமொழிப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

"ஆட்டோகிராப்", "அந்நியன்", "வேட்டையாடு விளையாடு", "தசாவதாரம்", "வில்லு", போன்ற தமிழ் படங்களிலும், "கிளிச்சுண்டன் மாம்பலம்" (கிளிசுண்டன் மாம்பழம்), போன்ற மலையாளப் படங்களிலும், "ஜெய்" (Jai), போன்ற தெலுகுப் படங்களிலும் "பிர் மிலேஞ்சே" (Phir Milenge), ராம்ஜி லண்டன் வாளா" (Ramji London Vala) போன்ற ஹிந்திப் படங்களிலும், "பைவ் பைவ் போர்" (Five Five Four) போன்ற இந்திய ஆங்கிலப்படங்களிலும்

ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.இது தவிர M.I.A Video 2007 (English) ஆல்பத்திலும், சைல்ட் என்விரான்மென்ட் (Child Environment) என்கிற ஆங்கில ஆவணப்படத்திலும், ஐநூறுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

இதுவரை அவர் பெற்றுள்ள விருதுகள்:

2000 ஆம் ஆண்டு சாந்தம் என்கிற மலையாளப் படத்துக்காக 23 EME 3rd continents International Award மற்றும் அதே திரைப்படத்திற்காக கேரளா சாலச்சித்ரா விருதையும் (2000) பெற்றுள்ளார். SICA வழங்கும் சாதனையாளர் விருதை 2001 வருடமும், அந்நியன் திரைப்படத்திற்காக 2005 ஆம் ஆண்டு பிலிம் பேர் (Film Fare) விருதையும், இந்தியா டுடேவின் Award for face of the feature in cinema (2005) விருதையும், வேட்டையாடு விளையாடு" படத்திற்காக தமிழக அரசின் விருதையும் (2005), இதே படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2005) விருது மற்றும் IIFA (2006) விருதையும், தசாவதாரம் படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2009) விருதையும் பெற்றுள்ளார்.

 

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS யாவரும் கேளிர் TS ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் யாவரும் கேளிர் வாயில்

யாவரும் கேளிர் - 48

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்  

சிக்காகோ கட்டடக் காடுகள் நடுவில் அமைந்த அரிதாவின் தோட்டத்தில் அரிதா அடக்கம் செய்யப்பட்ட மணல் திடல் மீது வேப்பங்கன்று நட்டு அதில் தண்ணீர் ஊற்றினான். செல்லா அவனை சுற்றி அபி, யாழி அரிதா விரும்பிகள் அனைவரும் தேம்பிக்கொண்டு இருந்தனர். செல்லா அங்கிருந்து சிறிது தூரம் நடந்து நின்றான்.அவன் பின் யாழி நின்றாள். அவன் அவளை திரும்பி பார்க்காமலேயே உறுதியுடன் பேசத்தொடங்கினான். அரிதாவோட ஆசையில அன்னை தெரசாவும் ஒன்று. தெரசா மாதிரி அரிதா அழியாப் புகழ்பெறணும். அவள் கடைசிவரை சிரிச்சுக்கிட்டே செத்து என் காலம் முழுக்க அழ வைக்க போறாளோன்னு தோணுது. அதுக்குள்ள நானும் ஏதாவது அவளுக்காக செய்யணும். காலம் முழுக்க கஷ்டப்படுற உங்க தமிழர்கள் மேல அவளுக்கு கொள்ளப் பிரியம். உரிமைக்காக போராடி கடைசியில் ஒருவேளை சாப்பிடக்கூட வழி தெரியாம தவிக்கும் உங்க மக்களுக்கு ஏதாவது பண்ணணும். யாழி பக்கம் செல்லா திரும்பி “நான் ஒண்ணு சொன்னா தட்டமாட்டீங்களே”
“என்னால முடியும்னா செஞ்சுடுறேன்”
“உங்களால மட்டும்தான் முடியும்”
“அப்ப செய்யுறேன் சொல்லுங்க”
“அரிதாவோட சொத்து அனைத்தும் எனக்குன்னு எழுதிய உயிலையும் சேர்த்து நான் திரும்பி ஒரு உயில் எழுதியிருக்கேன். அரிதா அறக்கட்டளை ஆதரவற்ற தமிழ் மக்களுக்கு உதவும் தோழமை என்று ஒன்னு ஆரம்பிச்சு
அதற்கு அவளோட சொத்துக்கள் அனைத்தையும் பயன்படுத்துங்க. நானும் என்னால முடிஞ்ச உதவிகளை செய்யுறேன். அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு அப்பா சொன்னாரு. நான் இன்று இரவே இந்தியா போறேன்.
அவன் அவளைவிட்டு தூரம் நடந்தான். யாழி “நன்றின்னு சொல்லி முற்றுப்புள்ளி வைக்கமுடியாம ஆரம்பமா தொடர்ந்துட்டு போறீங்களே. அவன் அமைதியாக நின்றான். உங்களுக்கு கிடச்சத தூக்கி கொடுத்துட்டு போறீங்களே”.
“என்னோடது எதுவும் இல்ல நான் தூக்கி கொடுக்கறதுக்கு. இப்ப நானே எனக்கு பெரும் சுமையா இருக்கேன். என்ன பெத்தவங்களும் சரி, என்னைய நம்பி வந்து போனவங்களும் சரி என்னால எந்த பயனும் அடையல. அத நெனச்சா எனக்கு நானே சுமையா இருக்கேன். அரிதா உங்களுக்கு நன்றிங்குற வாக்கியத்துக்குள்ள உங்க வாழ்கை. நீங்க இருக்கும் வரை அடங்கிப்போகாது செல்லா. அந்த மாதிரி போயிடக் கூடாதுன்னு தான் எனக்கு இப்ப என் எண்ணம் முழுக்க தோணுது. எனக்கு ஏதாவது கைமாறு செய்யணும் நெனச்சா நான் சொல்றத செஞ்சிங்கன்னா”
யாழி“நான் என் காலம் முழுக்க சந்தோஷமா இருப்பேன் சொல்லுங்க செல்லா”
“அவமேல நட்டுவச்சிருக்குற வேப்பமர கன்றுமேல தெனமும் தண்ணி ஊத்தவேணாம்? பட்டுபோயிடாம பாத்துக்குங்க! அது அவளோட உயிரா நா நினைக்குறேன்”.
“இது என்னோட கடமை”
“நீங்க செய்யும் மிகப்பெரிய புண்ணியம். உங்கள பார்த்து இதுபோல பத்துபேர் செஞ்சா அது நூறா பெருகும். இதுபோல எல்லாரும் செத்த இடத்துல மரம் நட்டா காடு வளர்க்க வேண்டாம் தானாகவே வளரும்”.
யாழி “இப்பவே இளம் ஞானியாயிடாதீங்க” செல்லா.
“வயசுக்கும் ஞானத்துக்கு சம்பந்தமா? அனுபவத்துக்கு வந்துயிருக்கேன். அது எதுவானாலும் பரவாயில்ல” என்று அவன் யாழியின் பார்வையில் இருந்து மறைந்தான். அவன் அமெரிக்காவிற்கு இந்தியாவில் இருந்து ஏரியபோது கண்ட கனாக்கள் எல்லாம் தொலைந்துபோயின. அவன் விரும்பியது கிடைக்கவில்லை என்றாலும் அவனுக்கு கிடைத்ததும் நிலைக்கவில்லை. மன இறுக்கத்துடன் விமான இருக்கையில் அவள் ஏன் இவ்வளவு சீக்கிரம் கரைந்துபோனாள் கண்களை மூடி அழது துக்க களைப்பில் உறங்கிபோனான். விமானம் அமெரிக்காவை கடந்து இந்தியாவை நோக்கி பறந்து கொண்டு இருந்தது.

தொடரும்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</