வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா மற்றும் சீன பிரதமர்களின் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பரிவர்த்தனைத் திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சீனாவிற்கு இந்தியாவில் இருந்து 100 இளையோரைக் கொண்ட குழு ஆண்டு தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்தக் குழுவினர் சமீபத்தில் சீனாவிற்குச் சென்றுள்ளார்கள். இக்குழுவில் தமிழ்நாடு சார்பில், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் 2001 முதல் இயங்கிவரும் ஸ்ரீ சக்தி சமூகப் பொருளாதாரக் கல்வி நலன் அறக்கட்டளையின் இயக்குநரும், கவிஞருமான சக்திஜோதி அவர்கள் சீனாவிற்கு சென்று வந்துள்ளார். தனது சீன அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொள்ளவிருக்கிறார்.

தொடராக வரவிருக்கும் இந்தப் பகுதியின் அனைத்துக் கட்டுரைகளும் வாசகர்களுக்கு உறுதியாக பயனளிக்கக் கூடிய ஒன்று அமையும் என்பதில் எமக்கு ஐயமில்லை.

 

 
     
     
     
   
பயணக் கட்டுரை
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


சக்தி ஜோதி

கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா மற்றும் சீன பிரதமர்களின் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பரிவர்த்தனைத் திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சீனாவிற்கு இந்தியாவில் இருந்து 100 இளையோரைக் கொண்ட குழு ஆண்டு தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்தக் குழுவினர் சமீபத்தில் சீனாவிற்குச் சென்றுள்ளார்கள். இக்குழுவில் தமிழ்நாடு சார்பில், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் 2001 முதல் இயங்கிவரும் ஸ்ரீ சக்தி சமூகப் பொருளாதாரக் கல்வி நலன் அறக்கட்டளையின் இயக்குநரும், கவிஞருமான சக்திஜோதி அவர்கள் சீனாவிற்கு சென்று வந்துள்ளார். தனது சீன அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொள்ளவிருக்கிறார்.
தொடராக வரவிருக்கும் இந்தப் பகுதியின் அனைத்துக் கட்டுரைகளும் வாசகர்களுக்கு உறுதியாக பயனளிக்கக் கூடிய ஒன்று அமையும் என்பதில் எமக்கு ஐயமில்லை.

இனி அவரைப் பற்றியும் அவரது நிறுவனம் பற்றியும் அவரது பயணத்திற்கான காரணம் பற்றியும் ஒரு விரிவான அறிமுகம்.

சக்தி ஜோதி அவர்கள் "நிலம் புகும் சொற்கள்" என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளை:

ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளையானது 21-12-2001 அன்று திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு துவக்கப்பட்டது. தற்பொழுது 680 கிராமங்களை உள்ளடக்கி திண்டுக்கல், தேனி, ஈரோடு மற்றும் கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் செயல்படுகிறது.

பார்வையும் நோக்கமும்

“வளர்ச்சியை நோக்கி....” சமூகத்தின் அனைத்து நிலையினரையும் வளர்ச்சியின் அடுத்த நிலை நோக்கி வழிநடத்திச் செல்வதையே, சமூகத்தின் மீதான நீள்பார்வையாகக் கொண்டு செயல்படுகிறது. கிராமப்புற வளங்களை மேம்படுத்துவதும், கிராமப்புற மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மனிதர்களை சமுதாயத்தின் மைய நீரோட்டத்தில் இணைப்பதற்காக ஒட்டு மொத்த ஆதார சக்தியை திரட்டித் தருவதற்காகவும், பெண்கள், குழந்தைகள் முன்னேற்றத்திற்காகவும் சமூகத்தின் அனைத்து வகையான முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

சமூக மேம்பாட்டு செயல்பாடுகள்

மகளிர் மேம்பாட்டில்….
1. 2880 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் 680 கிராமங்களில் 34,800 உறுப்பினர்களுக்கு மேல் சக்தி அறக்கட்டளையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
2. பாரத ஸ்டேட் வங்கியுடன் 18 கிளைகளுடன் இணைந்து சுய உதவிக் குழவினருக்கு கடனுதவிப் பெற்றுத்தரப்படுகிறது. இது வரை 56 கோடி வரை கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
3. மேலும் ர்னுகுஊ வங்கியுடன் இணைந்து 3 கோடி வரை கடனுதவி பெற்றுத் தரப்பட்டுள்ளது.

சுற்றுச் சூழல் மேம்பாட்டில் ...
சுற்றுபுறச் சூழல் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக வருடம் 1000 மரக்கன்றுகளை நடுதல், இதுவரை 7,000 மரக்கன்றுகளை சக்தி அறக்கட்டளையின் சார்பாக நடப்பட்டுள்ளது.

நீர்வடிப் பகுதி மேம்பாட்டு திட்டம் :
தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (நபார்டு) உதவியுடன் கிராமப்புறங்களின் இயற்கை வளங்களை மேம்படுத்துவது, மண் அரிப்பைத் தடுப்பது மேலும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது மூலமாக கிராமங்களிலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்து கிராம மக்களின் வாழ்;க்கைத்தரம் மேம்பாடு அடைய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

பாரத ஸ்டேட் வங்கியின் வணிக வழிகாட்டியாக (Business Facilitator)

திண்டுக்கல், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளிலும் கடன் மற்றும் சேமிப்பு சம்பந்தமான வசதிகளை வாடிக்கையாளர்களுக்குப் பெற்றுத்தரும் வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறது.

மருத்துவ முகாம்கள் :

கண் பரிசோதனை முகாம்இ எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்இ தாய்இ சர்க்கரை நோய் விழிப்புணர்வு, சேய் நல பரிசோதனை முகாம் உட்பட 15 வகையான மருத்துவ முகாம் நடத்தப்பட்டு 28இ000 மக்கள் பயனடைந்துள்ளனர்.

சக்தி சுய தொழில் பயிற்சி நிலையம் :
பயிற்சிகளில் சில…….
1. நான்கு இடங்களில் தையல் பயிற்சிப்பள்ளி
2. சானிடரி நாப்கின் பயிற்சி
3. கண்ணாடி மற்றும் பேப்ரிக் பெயிண்டிங் பயிற்சி
4. ரெக்ஸின் மற்றும் ஜூட் பை தயாரிப்பு பயிற்சி
5. செருப்பு தயாரித்தல் பயிற்சி
6. கயிறு (ஊழசை Pசழனரஉவ) தயாரித்தல்
7. உணவு பொருட்கள் தயாரிப்பு பயிற்சி
8. இயற்கை விவசாயப் பயிற்சி

யுரேகா மாலை நேர பயிற்சிப் பள்ளி :
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்காக 10 மையங்களில் மாலை நேர சிறப்பு பயிற்சி நடத்தப்படுகிறது

ஹெலன் பகல் நேர குழந்தைகள் காப்பகம் :
கொடைக்கானல் மலைப்பகுதியில் வடகவுஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் மேல்பள்ளம் காலணியில் மலைவாழ் குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

சக்தி இறகு பந்துக் கழகம் :
கிராமப்புற இளைஞர்கள் மாணவர்களுக்காக உன் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.

பொது சுகாதாரம் :
அய்யம்பாளையத்தில் பெண்களுக்காக பொது கழிப்பறை கட்டித் தரப்பட்டுள்ளது.

சிறப்பு நிகழ்ச்சிகள் :
1. குழந்தைகள் தினம் மாரத்தான் போட்டி
2. பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சிகள்
3. கல்லூரி மாணவர்களுக்காக தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி
4. இளைஞர்களுக்காக புகை, மது பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
5. உலக மகளிர் தின கருத்தரங்கம்
6. உடல் ஊனமுற்றோருக்காக சுய முன்னேற்ற சிறப்பு பயிற்சிகள்.

விருதுகள் :
1. பாரத ஸ்டேட் வங்கி விருது – 2 முறை
2. மாவட்ட ஆட்சியர் பசுமை விருது - 2 முறை
3. லைவ் விருது - லயோலா கல்லூரி
4. மக்கள் தொலைக்காட்சி விருது
5. சி.பா.ஆதித்தனார் விருது
6. நேரு யுவகேந்திரா தேனி மாவட்டம் மற்றும் மாநில விருது
7. நபார்டு விருது.

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பயணக் கட்டுரை TS சக்தி ஜோதி தொடர்கள் வாயில்

சீனப் பயணக் கட்டுரைகள் - 1

சக்தி ஜோதி  

மகளிர் முன்னேற்றத்திற்கான வழிகாட்டியாக செயல்பட்டதற்காக 2007 –- 2008ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான விருது தேனி நேருயுவகேந்திரா நிறுவனத்தின் மூலமாக வழங்கப்பட்டது. இந்த நிறுவனம் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. இந்தியா முழுவதும் மாநில அளவில் விருது பெற்றவர்களில் இருந்து 15 சமூகப்பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அதில் ஒருவராக தமிழ்நாட்டின் சார்பாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். மாநில விளையாட்டுத் துறை மூலமாக அருள்கண்மணி என்ற மாணவியும் பரதம் மற்றும் சிலம்பக் கலைக்காக தேர்வு செய்து அனுப்பி வைக்கப்பட்டார். தமிழகத்திலிருந்து நாங்கள் இரண்டு பேர் மட்டும் இந்த தூதுக்குழுவில் இடம் பெற்றிருந்தோம்.

இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் அமைச்சர் Dr. M.S. Gill மற்றும் இந்தியாவிற்கான சீனத்தூதர் (Ambassodor of China) Mr.H.E .ஷெங்யாங் (H.E.Zhang young) வழியனுப்ப Mr.S.K..அரோரா தலைமையில் டில்லியிலிருந்து புறப்பட்ட நாங்கள் முதலாவதாக சீனாவின் தலைநகரம் பெய்ஜிங் சென்றடைந்தோம்.

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நூறு இளைஞர்களை ஒருங்கிணைத்து வழி நடத்த அரசு உயர் அதிகாரிகளான திரு.நேதுஜெய்பாய், திருமதி. சாரதா அலிகான், திரு. கேவல்யா மற்றும் திரு. ஞானராஜசேகரன் அவர்களும், நியமிக்கப்பட்டிருந்தார்கள்.மேலும் தமிழகத்தைச் சேர்ந்த திரு.ஞான ராஜசேகரன் அவர்களும், திரு.S.K..அரோரா அவர்களுக்குப் பதிலாக ப்யூஷோ நகரில் எங்களோடு இணைந்து கொண்டார்.
மொத்த குழுவையும் தன் பக்கம் கவனம் திருப்ப வைத்த இன்னொரு நபர் பாண்டிச்சேரியைச் சேர்ந்த கமலக்கண்ணன். இவர் ஆங்கிலம் தெரியாத, ஹிந்தி மட்டுமே தெரிந்த சிலரிடம் பேசி அசத்துவதில் வல்லவர். (கமலக்கண்ணனுக்கு ஹிந்தியில் ஒரு வார்த்தையும் தெரியாது) டெல்லியில் ஏற்கனவே அறிமுகமாகியிருந்த நித்யா வாத்வா (பஞ்சாப்) என் அறைத் தோழியாக அமைந்ததில் இருவரும் மகிழ்ந்தோம். நித்யா தன் கல்லூரி படிப்பு முடித்த பின்பு சமூகப் பணியில் முழுநேரமாக ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்திலிருப்பவர். இப்போதே நிறைய சமூகப் பணிகளை செய்து கொண்டு இருக்கிறார்.

ஐந்து நிமிடம் தாமதமாக கிளம்பியதில் நானும், நித்யாவும் முதல் நாளே வழிநடத்துனர்களாக உள்ள அதிகாரிகளிடம் நன்கு அறிமுகமாகிவிட்டோம். நேரம் தவறாமை என்பது பொதுவாகவே வெளிநாட்டு பயணங்களில் தீவிரமாகவே கடைபிடிக்கப்படுவதுண்டு.

அறுபது சதவீதம் மாணவ மாணவிரும், நாற்பது சதவீதம் சமூகப்பணி மற்றும் பஞ்சாயத்ராஜ் பணியாளர்களும் கலந்து கொண்ட வித்தியாசமான இந்த குழு சீனாவிற்கான இந்திய தூதர் திருமதி. நிருபமா ராவ் அளித்த வரவேற்பு இரவு விருந்தில் கலை நிகழ்ச்சிகளால் சீனர்களை வியப்பிலாழ்த்தினோம். நான் 2005ம் ஆண்டு ஸ்ரீலங்கா சென்றிருந்த போது அப்போது இலங்கையின் இந்திய தூதராக நிருபமாராவ் இருந்தார்.
அவர், அப்போது நடந்த நிகழ்ச்சியில் தலைமையேற்று பேசியிருந்தார். இந்தியாவிலிருந்து வந்திருந்ததால் என்னிடம், என் கட்டுரையை பாராட்டி பேசியிருந்தார்;. எனவே தற்சமயம் சீனாவின் இந்திய தூதராக இருக்கும் திருமதி.நிருபமாராவை மீண்டும் சந்திப்பதில் என் மனதில் பரபரப்பு கூடியிருந்தது.

துவக்க உரை முடிந்த பின்பு இரவு விருந்திற்கு முன்பு நிருபமாராவை சந்தித்து இலங்கை நிகழ்ச்சியை நினைவு படுத்தினேன். அவர் அந்த நிகழ்ச்சியை நினைவில் வைத்திருந்தது மட்டுமின்றி, இலங்கையில் அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்திய லங்கா மகிளாசமிதியின் நிர்வாகி ராணிஹெராத் பற்றியும் என்னிடம் விசாரித்தார். அவர் என்னை நினைவில் வைத்திருந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது.

இரவு உணவிற்கு பின்பு நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் லோக்கல் சிம்கார்டு கிடைக்காதலால், வேறு எங்கே வாங்கலாம் எனறு விசாரித்தோம். ஹோட்டலின் வரவேற்பு பெண்மணி எழுதிக் கொடுத்த முகவரியை கண்டதும் அதிர்ச்சியடைந்தோம். ஏனெனில் அவர் சைனீஸ் மொழியில் எழுதிக் கொடுத்திருந்தார்.மேலும் அவர், கடைகளின் பெயர் பலகைகள் அனைத்தும் சைனீஸ் மொழியில் தான் இருக்கும் என்றும் கூறி எங்களை மேலும் குழம்ப வைத்தார். ஆனால் அங்கு செல்வதற்கான பாதையை வரைபடமாக வரைந்து கொடுத்து உதவி செய்தார்.

எங்களோடு இருந்த சிலர் பயந்து பின்வாங்க, சிம்கார்டு வாங்குவதற்காக என்னுடன் கமலக்கண்ணன், அருள் கண்மணி மற்றும் ஹசன் (அலிகார்க்) மட்டும் வந்தனர். ஏதோ தைரியத்தில் இரவு 9.30 மணிக்கு மேல் நாங்கள் நடந்து சென்றோம். டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் பாதை காட்ட, பதினைந்து நிமிட நடைப்பயணத்திற்கு பின்பு ஒரு வழியாக மூடியிருந்த கடையை கண்டுபிடித்தோம். என்ன செய்வதென்று அறியாமல், ஒருவித ஏமாற்றத்தில் திரும்பலாம் என நினைத்த போது எதிரில், இருந்த ஒரு புத்தக கடையில் விசாரிப்போம் என்று ஹசன் கூற நாங்கள் அங்கு சென்றோம்.

ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் என எந்த மொழியில் கூறி சிம்கார்டு கேட்டாலும் புரியாமல் திணறிய கடைக்கார பெண்மணி விளக்கம் கேட்பதற்காக ஒரு சிறிய கூட்டத்தையே கூட்டி விட்டார். திடீரென எனக்கு தோன்றிய யோசனை, மொபைல் போனிலிருந்து சிம்கார்டை கழட்டி காட்டி கேட்டவுடன் புரிந்து கொண்டு சிம்கார்டை அவர்கள் எடுத்துக் கொடுத்தார்கள். ஆனால் அடுத்த மிகப்பெரிய பிரச்சனை, சிம்கார்டு எவ்வளவு பணம் என்பது தான்.

சைனீஷ் மட்டுமே தெரிந்த அவர்களிடமிருந்து என்ன விலை கொடுத்தாவது வாங்கி விட நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால் எங்களிடம் இருந்தது அமெரிக்கன் டாலர். அவர்கள் யுவான் தான் வேண்டும் என்று கூற, ஒருவழியாக அவர்களை புரியவைத்து, ஒரு சிம் கார்டுக்காக இந்திய பணம் RS.1200/- கொடுத்து வாங்கினோம். வீட்டிற்கு போன் செய்து பேசியவுடன் எனக்கும், என் வீட்டினருக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அனைவரை விடவும் வீட்டோடு அதிக தொடர்புடன் இருந்து நானும், அருள் கண்மணியும் தான்.

தொலைபேசியில் பேசுவதை விடவும் மிக எளிதாக தொடர்பில் நான் இருந்தால், தொலைதூரப் பயணம் மேற்கொண்டிருந்த உணர்வு துளியும் ஏற்படவில்லை. என் அலுவலக பணிகளும் கூட தேக்கம் இன்றி இருந்தது. அலைபேசி தமிழகத்திற்கும் சீனாவிற்குமான தூரத்தை குறைத்து விட்டது. சீனப் பயணத்தில் பெறப்போகிற அனுபவங்கள் பற்றிய கனவுகளோடு முதல் நாள் நிறைவுற்றது.

பயணிப்போம்...

 

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</