வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. நேர்காணல்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

தொடர் பற்றி

கவிஞர் விக்ரமாதித்தன் நம்பி.. தமிழின் மிக முக்கியமான ஆளுமை.. எப்போதும் விக்ரமாதித்தன் ஒருவரை கவிஞர் என்று அங்கீகரித்தால் அவரது கவிதை சக்தி வாய்ந்த சொல்லாடல்களின் கூடலாக இருக்கும். எப்போது விக்ரமாதித்தன் நம்மை கவிஞர் என்று சொல்லுவாரோ என்று பல பெருங்கவிகள் ஏங்கியக் காலங்கள் கூட உண்டு... இப்போதும் தொடர்ந்து நல்ல கவிதைகளை அடையாளம் கண்டு அதனை ஊரறிய செய்து வருகிறார் விக்ரமாதித்தன். அந்த வகையில் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஒரு கவிஞரின் சில கவிதைகளை எடுத்துக் கொண்டு அது பற்றி விவாதிக்க இருக்கிறார்.

 

 

 

 

 
     
     
     
   
அரும் பெறல் மரபின் கரும்பு இவண்...
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


மேலும் ஒளிப்படங்களைக் காண:

விக்ரமாதித்தன் நம்பி

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
   
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS அரும் பெறல் மரபின் கரும்பு இவண்... தொடர்கள் வாயில்


அரும் பெறல் மரபின் கரும்பு இவண் - ராணி திலக்

விக்ரமாதித்தன் நம்பி  

ராணி திலக்

நீ எழுதுகிறாய் ஒரு மேசையின் நீள அகலத்தைப் பற்றி
நீ எழுதுகிறாய் ஒரு மேசையின் நீள அகலத்தைப் பற்றி
ஒரு மண்குடுவை கீழே விழுந்து உடைவதை என்னால்
தடுக்க முடிவதில்லை.
அவள் எழுதுகிறாள் ஒரு நியாயாதிபதியின் ஒருவத்தைப் பற்றி ஒரு நிரபராதி தூக்கிலிடப்படுவதை என்னால் பார்க்கத்தான் முடிகிறது.
இவள் எழுதுகிறாள் ஒரு கடலின் உப்பைப் பற்றி
அதன் அலைகள் மக்களை விழுங்குவதிலிருந்து என்னால்
காப்பாற்ற முடிவதில்லை.
அவன் எழுதுகிறான் ஒரு நடிகையின் கன்னிமை பற்றி கற்பழித்தலிலிருந்து பல ஆண்டுகள் என்னால் மீட்கமுடிவதில்லை இவன் எழுதுகிறான் ஒரு வயதான நடிகனின் இளமையான ஒப்பனையைப் பற்றி
நடுத்தெருவில் நிற்கும் ரசிகைகளை என்னால் காப்பாற்ற முடிவதில்லை அவர்கள் எழுதுகிறார்கள் ஒரு அரசியல்வாதியின் பிறந்ததினம் பற்றி தொண்டர்கள் வேசிகளுடன் சல்லாபிப்பதை என்னால் தடுக்கமுடிவதில்லை.
உவன் எழுதுகிறான் ஒரு சாதனை வீரனைப் பற்றி
சூதாட்டத்தில் கொள்ளையடிக்கப்படும் பணத்தை நிறுத்த முடிவதில்லை.
உவள் எழுதுகிறாள் ஒரு சாமியாரைப் பற்றி பக்தர்களின் உடல்கள் நெருப்பில் எரிவதைப் பார்க்கத் தான் முடிகிறது.
நாம் எழுதுவோம் ஒரு தேசத்தைப் பற்றி
அடகு வைக்கப்படுவதை நம்மால் தடுக்கமுடிவதில்லை நான் எழுதுவேன் செயற்கையாக ஒரு கவிதையை எழுவது பற்றி
வாசிப்பவை அனைத்தும் நிகழ்வதை உன்னால் மறுக்க முடிவதில்லை.

- ராணி திலக்
(விதி என்பது இவைதான் தொகுப்பு பக்கம் 6)


எது கவிதை என்று அறுதியிட்டுச் சொல்லமுடியாத புதிர்த்தன்மையைத் தன் வசீகரமாகவும் சவாலாகவும் கொண்டு தன் இருப்பைப் புதுப்பித்துக் கொள்கிறது கவிதை. நிர்ணயிக்க முயலும் கோட்பாடுகளையும் வரையறுக்க முனையும் சூத்திரங் கடந்து ஒரு தப்படி முன்னே சென்று கொண்டேயிருக்கிறது. களையும் கவிதை செத்துவிட்டது. என்பது போன்ற மகா வாக்கியங்களையும் சட்டை செய்யாமல் நகர்கிறது.
ராணி திலக்கின் இந்தக் கவிதை எளிமையாகத் தோற்றமளிக்கிறது. எனில் எளிமையான கவிதை அல்ல. எப்படி உள்ளடக்கம் அப்படி. பல பரிமாணங்கள் கொண்டிருக்கிறது.

எழுத்தின் பயனின்மைப் பற்றிச் சொல்லும்போதுப் படுகிறதா. அப்படியும் வைத்துக் கொள்ளலாம்.
ஊதிப் பெருக்கிக் காட்டும் ஊடகங்கள் குறித்து தகவல் கலாசாலம் குறித்துக் கூறுகிறதா அப்படியும் எடுத்துக் கொள்ளலாம்.

நிகழ்வனவெல்லாம் நிகழ்ந்துகொண்டுதாம் இருக்கின்றன. நாம் எழுதிக் கொண்டிருக்கிறோம் என்று மொழிவது போலத் தோன்றுகிறதா இருக்கலாம்.

எல்லோரும் எழுதுகிறார்கள் எல்லாவற்றையும் பற்றி.

ஆனால் எல்லாமும சம்பவித்துக் கொண்டிருக்கின்றன. எல்லோரும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவைபோல எடுத்துக் காட்டுகிறதோ. இல்லையென்று சொல்ல முடியாது.

எல்லாமும்தான். அப்பாலும்கூட.

பன்முகம் கொண்ட கவிதை. ஒற்றைப் பொருள் உரைத்துக் குறுக்கிட இயலாது.
சமூகம் சார் கவிதை. பார்க்கப்போனால் அரசியல் கவிதையும்தான்.
கடைசிப் பத்திக்கு முந்தைய பத்தியின் வரிகள் எதைக் காட்டுகின்றன.
நாம் எழுதுவோம் ஒரு தேசத்தைப் பற்றி
அடகு வைக்கப்படுவதை நம்மால் தடுக்க முடிவதில்லை
நான் எழுதுவேன் செயற்கையாக ஒரு கவிதையை எழுதுவது பற்றி இந்த வரி என்ன சுட்டுகிறது. கவிதை செய்யப்படுகிறது செயற்கையாக. அதைப்பற்றி எழுதுவேன் என்கிறார் கவிஞர் சரிதான். முதல் பத்தி.

நீ எழுதுகிறாய் ஒரு மேசையின் நீள அகலத்தைப் பற்றி
ஒரு மண்குடுவை கீழே விழுந்து உடைவதை என்னால்
தடுக்க முடிவதில்லை.

விஷயம் வெளிப்படையாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. விளக்கம் தேவையில்லை.
அவள் எழுதுகிறாள் ஒரு நியாயாதிபதியின் ஒருவத்தைப் பற்றி ஒரு நிரபராதி தூக்கிலிடப்படுவதை என்னால் பார்க்கத்தான் முடிகிறது.

இப்படி இருக்கிறது நிகழ்வு என்ன செய்ய.
இவள் எழுதுகிறாள் ஒரு கடலின் உப்பைப் பற்றி
அதன் அலைகள் மக்களை விழுங்குவதிலிருந்து என்னால்
காப்பாற்ற முடிவதில்லை.
இந்த வரிகள் சொல்வதென்ன நேரடியாகத்தானே கூறுகிறார் கவிஞர்.

அவன் எழுதுகிறான் ஒரு நடிகையின் கன்னிமை பற்றி கற்பழித்தலிலிருந்து பல ஆண்டுகள் என்னால் மீட்கமுடிவதில்லை. ஒரு விஷயத்தின் இன்னொரு பக்கம்? முரண்?
யூகிக்க வேண்டும். யோசிக்க வேண்டும்.
இவன் எழுதுகிறான் ஒரு வயதான நடிகனின் இளமையான ஒப்பனையைப் பற்றி.
நடுத்தெருவில் நிற்கும் ரசிகைகளை என்னால் காப்பாற்ற முடிவதில்லை.
வாசக அறிவை நம்பி எழுதப்படும்
வரிகள் இவைபோலும்தான் அமையும்.
அவர்கள் எழுதுகிறார்கள் ஒரு அரசியல்வாதியின் பிறந்ததினம் பற்றி தொண்டர்கள் வேசிகளுடன் சல்லாபிப்பதை என்னால் தடுக்கமுடிவதில்லை.
உவன் எழுதுகிறான் ஒரு சாதனை வீரனைப் பற்றி
சூதாட்டத்தில் கொள்ளையடிக்கப்படும் பணத்தை நிறுத்த முடிவதில்லை.
சாதனைக்குப் பின்னால் நிகழ்த்தப்பெறும் சூதாட்டம் கவனம் கொள்ள வேண்டியது இல்லையா.
உவள் எழுதுகிறாள் ஒரு சாமியாரைப் பற்றி பக்தர்களின் உடல்கள் நெருப்பில் எரிவதைப் பார்க்கத் தான் முடிகிறது.

கவிதையின் கடைசி வரி.

வாசிப்பவை அனைத்தும் நிகழ்வதை உன்னால் மறுக்க முடிவதில்லை.
உண்மைதான். சரிதான்.

இன்றும் ஆழ்ந்து கூர்ந்து கவனிக்கலாம். ஒரு நிகழ்வு, அதோடு முடிந்து விடுவதில்லை. அந்த நிகழ்வின் தொடர்ச்சியாக எதிர்வினையாக பாதிப்பாக மறுபக்கமாக இன்னொரு நிகழ்வும் இருக்கிறது. எனில், அது கவனிக்கப் பெறுவதில்லை அல்லது மறைக்கப்பட்டு விடுகிறது. ஒற்றைத் தொட்டு ஒன்று. ஆனால் ஒன்றைத்தான் மையப்படுத்துகிறோம் நாம். அப்படியானால் உண்மை.

மிக நுணுக்கமான விஷயத்தை முன்வைக்கிறார். ராணி திலக். இதனாலேயே மிக முக்கியமான கவிதை. ஓடு நீரின் உள்ளோட்டம் காட்டும் கவிதை. இதனாலேயே மேலான கவிதை.

சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லிவிடுகிறார் கவிஞர். சொல்முறையில் நூதனம் காட்டுகிறார். அதுதான் மருட்சி. ஒரு கவிதையை விஷயத்தை கவிஞன் தன் மனோதர்மத்துக்கிசையவே கட்டுகிறான். ராணி திலக்கின் கவிமனம் இப்படியாக.

ராணிதிலக்கின் சமூக ஓர்மையே இப்படி ஒரு கவிதையைத் தோற்றுவித்திருக்கிறது. ராணி திலக்கின் கவிமனவே இப்படி ஓர் உத்தியைக் கைக் கொண்டிருக்கிறது. அதைச் சொல்லி இதைச் சொல்லி, எதைச் சொல்ல வேண்டாமோ அதையே சொல்வதாக அப்படிச் சொல்லி, இப்படிச் சொல்லி ஆகக்கடைசியில் உரிய ஒன்றாகச் சொல்லியே தீர்வதாக. கட்டுரையில் முன் இருப்பவவற்றையெல்லாம் மறந்துவிட்டுக் கடைசியாக கூறியிருப்பனவற்றையே கருத்துக் கொள்ள வேண்டும். கவிதை அமைந்திருப்பது போலக் கட்டுரையும் அமைந்துவிட்டது. தம்போக்கில்.

ராணி திலக்கின் ஆகச் சிறந்த கவிதை இது. ஆகச் சிறந்த கவிஞராக அவர் வர முடியும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதும் ஆகும். எதுவும் அவரவர் உள்ளுன் இருப்பதுவே. கவிஞனின் விழிப்புணர்வே அவனைக் காப்பாற்றும். பிறவெல்லாம் பேச்சுக்கும் (உதவாது)

--------------------------------------------------------------------------------------

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

</