வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா மற்றும் சீன பிரதமர்களின் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பரிவர்த்தனைத் திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சீனாவிற்கு இந்தியாவில் இருந்து 100 இளையோரைக் கொண்ட குழு ஆண்டு தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்தக் குழுவினர் சமீபத்தில் சீனாவிற்குச் சென்றுள்ளார்கள். இக்குழுவில் தமிழ்நாடு சார்பில், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் 2001 முதல் இயங்கிவரும் ஸ்ரீ சக்தி சமூகப் பொருளாதாரக் கல்வி நலன் அறக்கட்டளையின் இயக்குநரும், கவிஞருமான சக்திஜோதி அவர்கள் சீனாவிற்கு சென்று வந்துள்ளார். தனது சீன அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொள்ளவிருக்கிறார்.

தொடராக வரவிருக்கும் இந்தப் பகுதியின் அனைத்துக் கட்டுரைகளும் வாசகர்களுக்கு உறுதியாக பயனளிக்கக் கூடிய ஒன்று அமையும் என்பதில் எமக்கு ஐயமில்லை.

 

 
     
     
     
   
பயணக் கட்டுரை
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


சக்தி ஜோதி

கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா மற்றும் சீன பிரதமர்களின் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பரிவர்த்தனைத் திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சீனாவிற்கு இந்தியாவில் இருந்து 100 இளையோரைக் கொண்ட குழு ஆண்டு தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்தக் குழுவினர் சமீபத்தில் சீனாவிற்குச் சென்றுள்ளார்கள். இக்குழுவில் தமிழ்நாடு சார்பில், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் 2001 முதல் இயங்கிவரும் ஸ்ரீ சக்தி சமூகப் பொருளாதாரக் கல்வி நலன் அறக்கட்டளையின் இயக்குநரும், கவிஞருமான சக்திஜோதி அவர்கள் சீனாவிற்கு சென்று வந்துள்ளார். தனது சீன அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொள்ளவிருக்கிறார்.
தொடராக வரவிருக்கும் இந்தப் பகுதியின் அனைத்துக் கட்டுரைகளும் வாசகர்களுக்கு உறுதியாக பயனளிக்கக் கூடிய ஒன்று அமையும் என்பதில் எமக்கு ஐயமில்லை.

இனி அவரைப் பற்றியும் அவரது நிறுவனம் பற்றியும் அவரது பயணத்திற்கான காரணம் பற்றியும் ஒரு விரிவான அறிமுகம்.

சக்தி ஜோதி அவர்கள் "நிலம் புகும் சொற்கள்" என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளை:

ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளையானது 21-12-2001 அன்று திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு துவக்கப்பட்டது. தற்பொழுது 680 கிராமங்களை உள்ளடக்கி திண்டுக்கல், தேனி, ஈரோடு மற்றும் கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் செயல்படுகிறது.

பார்வையும் நோக்கமும்

“வளர்ச்சியை நோக்கி....” சமூகத்தின் அனைத்து நிலையினரையும் வளர்ச்சியின் அடுத்த நிலை நோக்கி வழிநடத்திச் செல்வதையே, சமூகத்தின் மீதான நீள்பார்வையாகக் கொண்டு செயல்படுகிறது. கிராமப்புற வளங்களை மேம்படுத்துவதும், கிராமப்புற மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மனிதர்களை சமுதாயத்தின் மைய நீரோட்டத்தில் இணைப்பதற்காக ஒட்டு மொத்த ஆதார சக்தியை திரட்டித் தருவதற்காகவும், பெண்கள், குழந்தைகள் முன்னேற்றத்திற்காகவும் சமூகத்தின் அனைத்து வகையான முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

சமூக மேம்பாட்டு செயல்பாடுகள்

மகளிர் மேம்பாட்டில்….
1. 2880 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் 680 கிராமங்களில் 34,800 உறுப்பினர்களுக்கு மேல் சக்தி அறக்கட்டளையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
2. பாரத ஸ்டேட் வங்கியுடன் 18 கிளைகளுடன் இணைந்து சுய உதவிக் குழவினருக்கு கடனுதவிப் பெற்றுத்தரப்படுகிறது. இது வரை 56 கோடி வரை கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
3. மேலும் ர்னுகுஊ வங்கியுடன் இணைந்து 3 கோடி வரை கடனுதவி பெற்றுத் தரப்பட்டுள்ளது.

சுற்றுச் சூழல் மேம்பாட்டில் ...
சுற்றுபுறச் சூழல் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக வருடம் 1000 மரக்கன்றுகளை நடுதல், இதுவரை 7,000 மரக்கன்றுகளை சக்தி அறக்கட்டளையின் சார்பாக நடப்பட்டுள்ளது.

நீர்வடிப் பகுதி மேம்பாட்டு திட்டம் :
தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (நபார்டு) உதவியுடன் கிராமப்புறங்களின் இயற்கை வளங்களை மேம்படுத்துவது, மண் அரிப்பைத் தடுப்பது மேலும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது மூலமாக கிராமங்களிலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்து கிராம மக்களின் வாழ்;க்கைத்தரம் மேம்பாடு அடைய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

பாரத ஸ்டேட் வங்கியின் வணிக வழிகாட்டியாக (Business Facilitator)

திண்டுக்கல், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளிலும் கடன் மற்றும் சேமிப்பு சம்பந்தமான வசதிகளை வாடிக்கையாளர்களுக்குப் பெற்றுத்தரும் வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறது.

மருத்துவ முகாம்கள் :

கண் பரிசோதனை முகாம்இ எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்இ தாய்இ சர்க்கரை நோய் விழிப்புணர்வு, சேய் நல பரிசோதனை முகாம் உட்பட 15 வகையான மருத்துவ முகாம் நடத்தப்பட்டு 28இ000 மக்கள் பயனடைந்துள்ளனர்.

சக்தி சுய தொழில் பயிற்சி நிலையம் :
பயிற்சிகளில் சில…….
1. நான்கு இடங்களில் தையல் பயிற்சிப்பள்ளி
2. சானிடரி நாப்கின் பயிற்சி
3. கண்ணாடி மற்றும் பேப்ரிக் பெயிண்டிங் பயிற்சி
4. ரெக்ஸின் மற்றும் ஜூட் பை தயாரிப்பு பயிற்சி
5. செருப்பு தயாரித்தல் பயிற்சி
6. கயிறு (ஊழசை Pசழனரஉவ) தயாரித்தல்
7. உணவு பொருட்கள் தயாரிப்பு பயிற்சி
8. இயற்கை விவசாயப் பயிற்சி

யுரேகா மாலை நேர பயிற்சிப் பள்ளி :
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்காக 10 மையங்களில் மாலை நேர சிறப்பு பயிற்சி நடத்தப்படுகிறது

ஹெலன் பகல் நேர குழந்தைகள் காப்பகம் :
கொடைக்கானல் மலைப்பகுதியில் வடகவுஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் மேல்பள்ளம் காலணியில் மலைவாழ் குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

சக்தி இறகு பந்துக் கழகம் :
கிராமப்புற இளைஞர்கள் மாணவர்களுக்காக உன் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.

பொது சுகாதாரம் :
அய்யம்பாளையத்தில் பெண்களுக்காக பொது கழிப்பறை கட்டித் தரப்பட்டுள்ளது.

சிறப்பு நிகழ்ச்சிகள் :
1. குழந்தைகள் தினம் மாரத்தான் போட்டி
2. பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சிகள்
3. கல்லூரி மாணவர்களுக்காக தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி
4. இளைஞர்களுக்காக புகை, மது பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
5. உலக மகளிர் தின கருத்தரங்கம்
6. உடல் ஊனமுற்றோருக்காக சுய முன்னேற்ற சிறப்பு பயிற்சிகள்.

விருதுகள் :
1. பாரத ஸ்டேட் வங்கி விருது – 2 முறை
2. மாவட்ட ஆட்சியர் பசுமை விருது - 2 முறை
3. லைவ் விருது - லயோலா கல்லூரி
4. மக்கள் தொலைக்காட்சி விருது
5. சி.பா.ஆதித்தனார் விருது
6. நேரு யுவகேந்திரா தேனி மாவட்டம் மற்றும் மாநில விருது
7. நபார்டு விருது.

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பயணக் கட்டுரை TS சக்தி ஜோதி தொடர்கள் வாயில்

சீனப் பயணக் கட்டுரைகள் - 16

சக்தி ஜோதி  

வழக்கமாக வெளிநாடு செல்பவர்கள் பூங்காக்களையும், அங்குள்ள மலர்களையும் பார்த்து வியப்பது உண்டு. இத்தனை வண்ணங்களில், இத்தனை வடிவங்களில் எத்தனை மலர்கள் என்று பாராட்டுவார்கள். ஆனால் வெளிநாட்டிலிருந்து இங்கு வருபவர்கள் நம்ம ஊரின் மல்லிகை மலரின் மனத்திற்கு மயங்கிப் போய்விடுவார்கள்.

மலர்கள் என்று சொன்னாலே நமக்கு நினைவுக்கு வருவது அதன் மணம் தான். மணம் நிறைந்த மலர்களை வைத்து புனையப்பட்ட கவிதைகள் சங்க காலம் தொட்டே நம்மிடம் உண்டு. ஃபியூஷோ நகரத்தின் மிகப்பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் நான் உணர்ந்த மல்லிகை மணம் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஒரு முழம் அளவுள்ள மல்லிகைப் பூ பத்து யுவான் என்று கூவிக் கூவி ஒருவர் விற்றுக் கொண்டிருந்தார். சீனாவில் தள்ளுவண்டியில் வாழைப்பழம் விற்பதையும் கூடையில் வைத்து மல்லிகைப் பூ விற்பதையும் பார்த்த காட்சி வித்தியாசமாகவும், மனதிற்கு இதமாகவும் இருந்தது.

ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்க்குள் இருந்த கறி வகைகளைப் பார்த்து பாம்புக் கறி கிடைக்குமா என்று எங்களுடன் வந்த “வாண்டோ” விடம் கேட்ட போது அவர், இங்கு வித்தியாசமாகப் பார்க்க வேண்டும் என்றால் “நாய்க்கறி” கிடைக்கும் என்று கூறினார். உலகின் சில நாடுகளில் நாய்க்கறி சாப்பிடுவார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கின்றேன். ஆனால் நாய்க்கறியைக் கண்ணால் பார்த்தது அன்று தான்.

கிறிஸ்து பிறப்பதற்கு 500 ஆண்டுகள் முன்பிருந்தே சீனாவில் நாய்களை உண்ணும் பழக்கம் இருக்கிறது. மென்சியஸ் என்ற தத்துவ ஞானி, நாய்க்கறி மருத்துவ குணம் நிறைந்ததாக குறிப்பிடுகிறார். ஷியோ வம்சத்தினர், மூன்று கறி வகைகளை மிகவும் முக்கியமானதாக கருதினர். அவை பன்றி, ஆடு மற்றும் நாய். இதில் நாய்க்கறியை “வாசனைக் கறி” என்று கூறுவார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாய்க்கறி சீனாவில் புழக்கத்தில் இருக்கிறது. குளிர் காலங்களில் கருப்பு நிற நாய்க்கறியைச் சாப்பிடுவதன் மூலமாக உடலின் கதகதப்பை உருவாக்கிக் கொள்ள நாய்க்கறி உணவைச் சாப்பிடுகிறார்கள். உணவுக்குப் பயன்படுத்தப்படும் நாய்க்கு 6லிருந்து 12வரை வயது வரை இருக்கும். செல்லப் பிராணியாக வளர்க்கும் நாயினை இவர்கள் சாப்பிடுவது இல்லை.

சீன சமூகத்தின் மக்களால் நாய்க்கறியின் மலிவு விலை காரணமாகவே உணவாக ஏற்றுக் கொள்ளப்பட்டு இருந்தது. ஆனால் தற்சமயம் மற்ற கறிகளின் விலையைவிட நாய்க்கறியின் விலை அதிகமாக இருக்கிறது. வடகிழக்கு, தெற்கு சீனா நாடுகளில் குறிப்பிட்ட சில மக்களால் மட்டுமே நாய்க்கறி பயன்படுத்தப்படுகிறது. மெல்லிய ஓடு உடைய ஆமை மற்றும் நாய்க்கறியின் “சூப்”பினை விரும்பிச் சாப்பிடுகிறார்கள். சிபேரியா, அலாஸ்கா, வடக்கு கனடா மற்றும் கிரீன்லாந்து போன்ற நாடுகளில் சுமை இழுப்பதற்காக நாய்களைப் பயன்படுத்துகின்றனர். கறி நாய்கள் கிடைக்காத சமயத்தில் சுமை இழுக்கும் நாய்களை உணவாக உட்கொள்ளுகின்றனர். தற்சமயம் பூனைக்கறி, நாய்க்கறி இவற்றை உணவாகச் சாப்பிடுவதற்கு எதிராக ஒரு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது. அதற்குப் பெயர் “கையெழுத்து இயக்கம்”. சீனாவின் “விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு” இவர்களின் மூலமாக கையெழுத்து இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. ஜனவரி 2007லிருந்து சீனாவில் ஆன்லைன் மூலமாகவும், நேரிலும் 42,000 கையெழுத்திட்டு இருக்கிறார்கள்.

நாய்க்கறி பற்றி கூறிய வாண்டோ கூறிய ஒரு விஷயம் எனக்குப் புதியதாகவும், ஆச்சரியம் அளிப்பதாகவும் இருந்தது. அது இந்தியாவிலும் கூட மிசோரம், நாகாலாந்து போன்ற இடங்களில் நாய்க்கறியை உணவாகப் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் இந்து மதம் வலிமையான காய்கறி பற்றிய கோட்பாட்டினை கடைபிடித்துக் கொண்டிருப்பதால் நாய்க்கறி உணவு பரவலாக்கப்படவில்லை. ஆனாலும் இந்துமத கதைகளில் விசுவாமித்திரர் நாய்க்கறி சாப்பிட்டதாக வரலாறு கூறுகிறது என்று இந்தியாவைப் பற்றி வாண்டோ கூறினார். அவர் ஏற்கனவே இந்தியாவின் அரசியல் பற்றியும், பொருளாதாரம் பற்றியும் என்னிடம் பேசியிருந்தார். கலாச்சாரம், மதம் பற்றிப் பேசியது கண்டு மேலும் வியப்படைந்தேன்.

பயணிப்போம்...

 

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</