வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------

வாழ்வில் நாம் நினைக்கும் பல இலக்குகளை நம்மால் அடைய முடிவதில்லை. சரி நம்மால் முடியாது இந்த முயற்சியை கைவிட்டு விடுவோம் என நினைக்கும் தருவாயில் புதிய நம்பிக்கைகள் தோண்றி நம்மால் சாதிக்க முடியும் என்ற சிந்தனைக்கு நம்மை கொண்டு செல்கிறது. உண்மையில் நம்முடைய இலக்குகளை அடைய இந்த புதிய நம்பிக்கைகள் எந்தவகையிலும் உதவுவதில்லை. மாறாக நம்மை ஒரு உறுதியான முடிவெடுக்க விடாமல் ஒரு நிலையற்ற வாழ்கை வாழ இந்த நம்பிக்கைகள் பயன்படுகின்றது. நம்மை நாம் தோற்றுவிட்டோம் என்று எண்ணிக்கொள்ள இயலாது. அதே சமயத்தில் நம்மை வெற்றியாளர் என்று சொல்லிக்கொள்ளவும் முடியாது. இதற்கு இடைப்பட்ட நிலையில் நாம் காலம் தள்ளிக்கொண்டிருக்க இந்த நம்பிக்கைகள் பயன்படுகின்றது. இப்படிப்பட்ட ஒரு துன்பமிக்க உணர்வை நாம் கற்பனை செய்து பார்க்கின்றோம். ஆனால் பலர் இதை தினமும் அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களில் மிக முக்கியமானவர்கள் பங்குச்சந்தையில் ஈடுபடும் நபர்கள்.

நாம் லாபம் சம்பாதித்துவிட்டோம் என்று சந்தோஷம் கொள்வதும், மறுநாளே நஷ்டம் அடைந்து துவண்டுவிடுவதும், அதற்கு அடுத்த நாள் மீண்டும் லாபம் சம்பாதித்து... இப்படியே லாபம், நஷ்டம் என்று மாறி மாறி நிகழும் நிகழ்வில் நிலையான சந்தோஷமும் இல்லாமல், நிலையான துக்கமும் இல்லாமல் இடைப்பட்ட நிலையில் துவண்டுபோவார்கள். பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்களிடம் பல திட்டங்கள் இருக்கும். ஆனால் எந்த செயல்பாடுகளும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்காது. ஆற்றில் விழுந்த இலைபோல, சந்தை செல்லும் போக்கில் அடித்துச் செல்லப்படுவார்கள். அப்போது ஏற்படும் இடர்பாடுகளை அவர்கள் சந்தித்தே ஆக வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார்கள்.

பங்குச்சந்தையில் மூன்றுவிதமான மனிதர்கள் இருக்கின்றாகள்.

முதலாமவர்: அவருக்கு பங்குச்சந்தை பற்றி எந்த விபரமும் தெரியாது. முதலீடு செய்யலாமா வேண்டாமா என்ற சிந்தனையிலேயே இருப்பார்கள்.

இரண்டாம் நபர்: தெரியாமல் முதலீடு செய்து ஒரு குறிப்பிட்ட தொகையை இழந்தவர்கள். அந்த தொகையை எப்படியாவது பங்குச்சந்தையில் இருந்தே மீட்க வேண்டும் என்று போராடுபவர்கள்.

மூன்றாம் நபர்: பங்குச்சந்தை பற்றி அனைத்து விசயங்களும் இவர்களுக்குத் தெரியும். இவர்கள் பங்குச்சந்தையில் பணம் சம்பாதிக்க பலவிதமான வித்தைகளை கற்று வைத்திருப்பார்கள். ஆனாலும் வெற்றிகரமாக பணம் சம்பாதிக்க இயலாமல் இருப்பவர்கள்.

மேற்கண்ட இந்த மூன்று நபர்களுக்குமே பிரச்சனை ஒன்றுதான் சந்தை அவர்களின் பிடியில் இருக்காது. சந்தை ஏற்படுத்தும் விளைவுகளுக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார்கள். இந்த சூழ்நிலையை நானும் உணர்ந்திருக்கின்றேன். இந்த சுழற்சி முறையில் இருந்து தப்பிக்க பல காரணங்களை, பல காரியங்களை தேடியிருக்கின்றேன். அகப்பட்ட விசயங்களை பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
.
தோற்றவர்களின் சிந்தனை ஒன்றிணையும் போது, அந்த சிந்தனை அவர்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்லும் என்பது எனது நம்பிக்கை. எனவே உங்களின் சிந்தனைகளையும் என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.

 

 

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
காணாமல் போன காளையைத் தேடி ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 



பூபதி

ஊர் : உழைப்பிற்கு பெயர் பெற்ற ஊரை சேர்ந்தவன்.

தொழில் :பிடித்தமான தொழிலை தேடி இன்று வரை ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன்.

விருப்பம் : மனித விருப்பங்கள் மாறக்கூடியது என்பதற்க்கு நானும் ஓர் உதாரணம்.

விரும்பி படிப்பது: பாரதி, பாரதி சார்ந்த எழுத்துக்களை.

விருப்பமானவர் : பன்றி ஏன் தெருவிற்கு வந்தது என பகுத்தறிவு பேசிய பாவேந்தர்.

பிடித்த எழுத்தாளர் : இன்னும் பிடிபடவில்லை.

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பூபதி தொடர்கள் வாயில்


காளையை அடக்க தேவையான காலநிலை

பூபதி  

விவசாயம் செய்வோம் வாருங்கள் என அழைத்ததும் சேற்றில் கால்வைக்க ஏதுவாக காலில் செருப்பில்லாமல் நீங்கள் வந்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் நாற்று நடும் நம்பிக்கையில் நீங்கள் வந்திருப்பதுபோல் தெரிகிறது. அப்படி ஒரு நம்பிக்கை உங்களுக்கிருந்தால் அந்த நம்பிக்கையை நீங்கள் சிறிது காலத்திற்கு தள்ளிப்போடுங்கள். நாம் இப்போது பார்க்கப்போவது நாற்று நடும் விசயமல்ல. விவசாயத்திற்கு ஏற்ற கால நிலைகளை பற்றி பார்க்கப்போகிறோம். பங்குச்சந்தையில் இந்த கால நிலையை Trend என்று சொல்வார்கள். பங்குச்சந்தையில் பயணிக்க விரும்பும் உங்களுக்கு இந்த Trend என்பது மிக மிக முக்கியமான ஒன்று. ஒருவேலை நீங்கள் Trend பற்றி அறிந்துகொள்ளாமல் பங்குச்சந்தையில் ஈடுபட்டால், கமல்ஹாசன் அவர்களைப்போல காற்றடிக்கும் நேரம் மாவு விற்கப்போனேன், கொட்டும் மழை பெய்யும் காலம் உப்பு விற்கப்போனேன்... தப்புக்கணக்கை போட்டுத்தவித்தேன்... என சோகமாக பாட வேண்டிய நிலை உருவாகிவிடும்.

சரி அதென்ன Trend? இதை விளக்க மனித வாழ்க்கையையே உதாரணமாக கூற முடியும். கீழே உள்ள படத்தை பாருங்கள் உங்களுக்கே புரியும்.

மனித வாழ்க்கையில் எவ்வளவோ விசயங்கள் நடக்கிறது. அது ஒவ்வொன்றும் நிகழும்போது அதற்கு ஏற்ப நாம் ஆடுகிறோம் அல்லது அழுகிறோம். ஆனால் இறுதியாக கடலில் கரையும் ஆற்றைப்போல, நம் வாழ்க்கை மரணத்தை நோக்கியே செல்கிறதல்லவா! அதுதான் Trend. நேற்று நடந்ததோ இன்று நடப்பதோ முக்கியமல்ல இறுதியாக எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதுதான் Trend.

மனித வாழ்வின் Trend பற்றி முழுமையாக அறிந்ததால்தான் ஞானிகள் ஆடாமல் அமைதியாக வாழ்ந்தார்கள். அதுபுரியாமல்தான் நாம் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறோம். மனித வாழ்க்கையில் மட்டுமல்ல பங்குச்சந்தை பயணத்திலும் இந்த Trend பற்றி நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அதை புரிந்துகொள்ளாமல் பயணத்தை நீங்கள் ஆரம்பித்தால் பின்பு நீங்கள் அவதிப்படுவதை யாராலும் தடுக்க முடியாது.

பங்குச்சந்தையை பொருத்தவரையில் மூன்று வகையான Trend உள்ளது ஒன்று Uptrend இரண்டு Down trend மூன்றாவது Sideways trend. இனி ஒவ்வொரு Trend பற்றியும் தெரிந்துகொள்வோம்.

Uptrend

ஒரு பங்கின் விலையானது இன்று அதிகரிக்கலாம், நாளை குறைந்துவிடலாம் அது முக்கியமல்ல. இறுதியாக அந்த பங்கின் விலை எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை கவக்க வேண்டும். அந்த பங்கின்விலை இரண்டு மாதங்களுக்கு முன் எப்படி இருந்தது, இப்போது எப்படி இருக்கிறது என்றுதான் கவனிக்க வேண்டுமே தவிர இரண்டு நாட்களை கணக்கில் கொண்டு யோசிக்க கூடாது. கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு பங்கின் வரைபடத்தை கவணமாக பாருங்கள்.

மார்ச் 2010-ல் ரூபாய் 160 என்ற ரீதியில் இருந்த இந்த பங்கின் விலையானது ஆகஸ்ட் 2010-ல் ரூபாய் 250-ஐ தொட்டிருப்பதை கவனியுங்கள். கிட்டத்தட்ட 90 ரூபாய் அதிகரித்திருக்கிறது. இப்போது ஆரம்ப விலையில் இருந்து இறுதி விலைக்கு கீழே உள்ள படத்தில் இருப்பதை போல ஒரு கோடு போட்டுப்பாருங்கள்.


இப்போது புரிந்திருக்குமே! இதற்கு பெயர்தான் Uptrend. ஒரு பங்கின் விலை குறிப்பிட்ட காலத்திற்கு அதிகரித்தவாரே இருக்க வேண்டும் அதற்குப் பெயர்தான் Uptrend. படத்தை கூர்ந்து கவனித்தீர்களானால் ஒரு விசயம் உங்களுக்கு புரியும். விலையானது தொடர்ந்து ஏறிக்கொண்டே செல்ல வில்லை. விலை அதிகரித்து இருப்பதைப்போல பல இடங்களில் விலையானது குறைந்தும் இருக்கிறது. குறிப்பாக விலையானது 190-ஐ தொட்டதும் கீழே இறங்கியிருப்பதை கவனியுங்கள். இப்படி விலை குறையும் தருவாயில் பங்குகளை வைத்திருப்பவர்கள் அடடே பங்கின் விலை குறைகிறதே என பதட்டப்பட்டு வாங்கிய விலையைவீட 20 அல்லது 30 ரூபாய் வித்தியாசத்தில் விற்றுவிடுவார்கள். ஆனால் பங்கின் விலையானது தொடர்ந்து அதிகரித்து 250ஐ தொட்டதும் ச்சே 190 ரூபாய்க்கு அநியாயமாக விற்று விட்டேனே! வாங்கிப்போட்டுவிட்டு பேசாமல் இருந்திருந்தால் இன்று எவ்வளவு இலாபம் பார்த்திருக்கலாம் என்று புலம்புவார்கள். இப்படி அவர்கள் புலம்புவதற்கு முக்கியமான காரணம் அந்த பங்கு எந்த Trend-ல் சென்று கொண்டிருக்கிறது என்பதை அறியாமல் அல்லது புரியாமல் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதுதான்.

Down trend

மேலே சொன்ன அத்தனை விசயங்களை கீழே உள்ள படத்திலும் பயன்படுத்தி பாருங்கள். விலையின் ஆரம்பத்திலிருந்து இறுதி விலைக்கு ஒரு கோடு போடுங்கள் விலை எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை கவனித்துப்பாருங்கள். குறிப்பிட்ட காலத்திற்கு இப்படி ஒரு பங்கின் விலை இறங்கிக் கொண்டே செல்வதற்குத்தான் Down trend என்று பெயர்.

Uptrend-ல் கூட வாடிக்கையாளர்கள் சிறிதளவுதான் இலாபம் கிடைத்ததே என்றுதான் புலம்புவார்கள். ஆனால் இந்த down trend-ல் சிக்கிக்கொண்டவர்களின் நிலை மிகவும் பரிதாபமானதாகவே இருக்கும்.

இந்த Down trend-லும் இடை இடையே விலை அதிகரித்து இருப்பதை கவனியுங்கள், இதுபோன்று Down trend-ல் விலை அதிகரிக்கும் போது, குறிப்பிட்ட இந்த பங்கு Down trend-ல் உள்ளது என்ற விசயம் புரியாமல் ஏதோ ஒரு நம்பிக்கையில் அல்லது ஆலோசனையில் பங்குகளை வாங்கிவிடுவார்கள். ஆனால் வாங்கிய பிறகு விலை ஏறுவதற்கு பதிலாக இறங்கத் தொடங்கியதும், சரி பொருத்திருந்துதான் பார்ப்போமே, சில காலம் இப்படியே வைத்திருப்போம் என்ற சிந்தனையில் இருப்பார்கள். ஆனால் இந்த Down trend-ஆனது அவர்களின் சிந்தனையை சிதைத்துவிடக்கூடியது. மேலே உள்ள படத்தில் ரூபாய் 92-ல் விலை ஆரம்பித்திருக்கிறது அந்த விலையில் நீங்கள் பங்கை வாங்கியிருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம் இறுதி விலையை கவனியுங்கள் விலை 50-க்கும் கீழே அதாவது பாதி விலையில் உள்ளது. Down trend-ல் சிக்கிக்கொண்டவர்களின் நிலை இதுதான். பல நபர்கள் பங்குச்சந்தையை விட்டு வெளியேற காரணமானது இந்த down trend. இப்படி வாடிக்கையாளர்கள் சலித்துப்போய் சந்தையைவிட்டு வெளியேறுவதற்கு அந்த Trend காரணமல்ல. சந்தையில் தற்போது எந்தமாதிரியான Trend உள்ளது என்பதை அறியாமல் வாடிக்கையாளர்கள் வர்த்தகத்தில் ஈடுபடுவதுதான் காரணம்.

Sideways trend

மேற்கண்ட இரண்டுவகையான Trend-களையும் ஒருவகையில் பொருத்துக்கொள்ளலாம் இரண்டையும் மிஞ்சக்கூடிய வகையான ஒரு Trend உள்ளது என்றால் அது Sideways trend-தான். மனிதனின் கோபத்தின் எல்லையை கண்டுவிடக்கூடையது இந்த Sideways trend. ஏன் இப்படி சொல்கிறேன் என்பதை நீங்களே படத்தை பார்த்து புரிந்துகொள்ளுங்கள்.

உங்களுக்கு புரியவில்லையா! பங்கின் விலையை கவனியுங்கள் கிட்டத்தட்ட எட்டு மாத காலம் இந்த பங்கின் விலையானது ரூபாய் 160-க்கும், ரூபாய் 180-க்கும் இடைப்பட்ட காலத்திலேயே இயங்கிக் கொண்டிருக்கிறது. இப்படி ஏறவும் செய்யாமல், இறங்கவும் செய்யாமல் பக்கவாட்டில் பயணம் செய்வதற்குத்தான் Sideways trend என்று பெயர். ஒரு வேலை இந்த பங்கை நீங்கள் ரூபாய் 180-க்கு வாங்கியிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்போது உங்களின் நிலையை நினைத்துப்பாருங்கள்! எதற்க்கும் பயன்படாமல் உங்களின் பணம் முடக்கப்பட்டதுபோல் ஆகிவிடும். விலை ஏறவும் செய்யாமல், இறங்கவும் செய்யாமல் ஒரே திசையில் சென்று கொண்டிருந்தால் முதலீடு செய்தவர்கள் சலிப்படைந்து போவார்கள். என்னய்யா அது ஏறுமா, ஏறாதாய்யா என்று எரிச்சலுடன் கேட்பார்கள். இந்த விலையிலேயே விற்று விட்டு வெளியேறிவிடலாமா என்று கூட யோசிப்பார்கள். ஆனால் விற்ற பிறகு விலை அதிகரித்தால் மனது அடித்துக்கொள்ளுமே. அதனால் கோபத்தை அடக்கிக்கொண்டு அப்படியே வைத்திருப்பார்கள்.

காலநிலையில் கவணிக்க வேண்டியவை

எங்கள் ஊரில் திடிரென்று மழை பெய்ய ஆரம்பிக்கும். தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் நீடிக்கும். ஒரு சந்தேகத்தில் மழைக்காலம் ஆரம்பித்துவிட்டதா என்று கேட்பேன். அதற்கு என்னுடைய அம்மா ஏண்டா இது என்ன மாசம் மழைக்காலமா என்று கேட்கிறாய் அதற்கு இன்னும் எவ்வளவு நாட்கள் இருக்கிறது தெரியுமா! என்பார். அவர் சொன்னபடியே அடுத்த இரண்டு நாட்களில் மழை நின்று வெயில் வருத்தெடுக்க ஆரம்பிக்கும். தொலைக்காட்சியில் மழைக்கு காரணமாக ஏதாவது ஒரு பெண்ணின் பெயர்கொண்ட புயழை காரணமாக சொல்லிக்கொண்டிருப்பார்கள். இதை ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு பங்கின் விலை தொடர்ந்து நான்கு நாட்கள் அதிகரித்தவுடன் அந்த பங்கு Uptrend-ல் செல்ல ஆரம்பித்துவிட்டது என்று தவறாக புரிந்துகொள்ளக்கூடாது. விலை அதிகரிக்க பல காரணங்கள் உண்டு. அந்த நிறுவனம் ஏதாவது ஒரு புதிய தொழிலை துவங்கப்போவதாகவோ, தன்னுடைய ஆண்டு அறிக்கையை வெளியிடப்போவதாகவோ, அல்லது அரசாங்கம் குறிப்பிட்ட அந்த துறைக்கு ஏதாவது சலுகைகள் வழங்கப்போவதாகவோ செய்திகள் வெளியானால் வாடிக்கையாளர்கள் அந்த பங்குகளை வாங்க ஆரம்பிப்பார்கள். அப்படி வாங்கும் போது சில நாட்களுக்கு விலை அதிகரிக்கத்தான் செய்யும் அதை நம்பி Trend மாறிவிட்டது என் நினைத்து வர்த்தகத்தை ஆரம்பிக்கக்கூடாது. அதே போல வைத்திருக்கும் பங்குகளின் விலை இரண்டு மூன்று நாட்கள் இறங்குமுகமாக இருக்கிறதே என்பதற்காகவும் விற்றுவிடக்கூடாது. பங்குகளின் விலை இறங்குவதற்கும் சில காரணங்கள் இருக்கும் அதற்காக Down trend ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தப்படுத்திக்கொள்ளக் கூடாது. சரி உண்மையாலுமே Trend மாறிவிட்டதா என எப்படி தெரிந்துகொள்வது? அதைப்பற்றி அடுத்த வாரம் பார்ப்போம். அதற்கு முன்பாக மேற்கண்ட மூன்று வகையான Trend-களையும் சரியாக புரிந்துகொண்ட பின் உங்களுக்கு நேரம் இருந்தால்! இல்லை இல்லை ஆர்வம் இருந்தால், உங்கள் கண்ணில்படும் அனைத்து பங்குகளின் வரைபடத்தையும் பார்த்து அது எந்த மாதிரியான Trend-ல் தற்போது உள்ளது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

(http://charting.bseindia.com/charting/index.asp?SYMBOL=500106 இந்த தளத்திற்கு சென்றால் அனைத்து பங்குகளின் வரைபடங்களையும் காண முடியும்)

தொடரும்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

s
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</