வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------

வாழ்வில் நாம் நினைக்கும் பல இலக்குகளை நம்மால் அடைய முடிவதில்லை. சரி நம்மால் முடியாது இந்த முயற்சியை கைவிட்டு விடுவோம் என நினைக்கும் தருவாயில் புதிய நம்பிக்கைகள் தோண்றி நம்மால் சாதிக்க முடியும் என்ற சிந்தனைக்கு நம்மை கொண்டு செல்கிறது. உண்மையில் நம்முடைய இலக்குகளை அடைய இந்த புதிய நம்பிக்கைகள் எந்தவகையிலும் உதவுவதில்லை. மாறாக நம்மை ஒரு உறுதியான முடிவெடுக்க விடாமல் ஒரு நிலையற்ற வாழ்கை வாழ இந்த நம்பிக்கைகள் பயன்படுகின்றது. நம்மை நாம் தோற்றுவிட்டோம் என்று எண்ணிக்கொள்ள இயலாது. அதே சமயத்தில் நம்மை வெற்றியாளர் என்று சொல்லிக்கொள்ளவும் முடியாது. இதற்கு இடைப்பட்ட நிலையில் நாம் காலம் தள்ளிக்கொண்டிருக்க இந்த நம்பிக்கைகள் பயன்படுகின்றது. இப்படிப்பட்ட ஒரு துன்பமிக்க உணர்வை நாம் கற்பனை செய்து பார்க்கின்றோம். ஆனால் பலர் இதை தினமும் அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களில் மிக முக்கியமானவர்கள் பங்குச்சந்தையில் ஈடுபடும் நபர்கள்.

நாம் லாபம் சம்பாதித்துவிட்டோம் என்று சந்தோஷம் கொள்வதும், மறுநாளே நஷ்டம் அடைந்து துவண்டுவிடுவதும், அதற்கு அடுத்த நாள் மீண்டும் லாபம் சம்பாதித்து... இப்படியே லாபம், நஷ்டம் என்று மாறி மாறி நிகழும் நிகழ்வில் நிலையான சந்தோஷமும் இல்லாமல், நிலையான துக்கமும் இல்லாமல் இடைப்பட்ட நிலையில் துவண்டுபோவார்கள். பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்களிடம் பல திட்டங்கள் இருக்கும். ஆனால் எந்த செயல்பாடுகளும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்காது. ஆற்றில் விழுந்த இலைபோல, சந்தை செல்லும் போக்கில் அடித்துச் செல்லப்படுவார்கள். அப்போது ஏற்படும் இடர்பாடுகளை அவர்கள் சந்தித்தே ஆக வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார்கள்.

பங்குச்சந்தையில் மூன்றுவிதமான மனிதர்கள் இருக்கின்றாகள்.

முதலாமவர்: அவருக்கு பங்குச்சந்தை பற்றி எந்த விபரமும் தெரியாது. முதலீடு செய்யலாமா வேண்டாமா என்ற சிந்தனையிலேயே இருப்பார்கள்.

இரண்டாம் நபர்: தெரியாமல் முதலீடு செய்து ஒரு குறிப்பிட்ட தொகையை இழந்தவர்கள். அந்த தொகையை எப்படியாவது பங்குச்சந்தையில் இருந்தே மீட்க வேண்டும் என்று போராடுபவர்கள்.

மூன்றாம் நபர்: பங்குச்சந்தை பற்றி அனைத்து விசயங்களும் இவர்களுக்குத் தெரியும். இவர்கள் பங்குச்சந்தையில் பணம் சம்பாதிக்க பலவிதமான வித்தைகளை கற்று வைத்திருப்பார்கள். ஆனாலும் வெற்றிகரமாக பணம் சம்பாதிக்க இயலாமல் இருப்பவர்கள்.

மேற்கண்ட இந்த மூன்று நபர்களுக்குமே பிரச்சனை ஒன்றுதான் சந்தை அவர்களின் பிடியில் இருக்காது. சந்தை ஏற்படுத்தும் விளைவுகளுக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார்கள். இந்த சூழ்நிலையை நானும் உணர்ந்திருக்கின்றேன். இந்த சுழற்சி முறையில் இருந்து தப்பிக்க பல காரணங்களை, பல காரியங்களை தேடியிருக்கின்றேன். அகப்பட்ட விசயங்களை பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
.
தோற்றவர்களின் சிந்தனை ஒன்றிணையும் போது, அந்த சிந்தனை அவர்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்லும் என்பது எனது நம்பிக்கை. எனவே உங்களின் சிந்தனைகளையும் என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.

 

 

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
காணாமல் போன காளையைத் தேடி ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 



பூபதி

ஊர் : உழைப்பிற்கு பெயர் பெற்ற ஊரை சேர்ந்தவன்.

தொழில் :பிடித்தமான தொழிலை தேடி இன்று வரை ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன்.

விருப்பம் : மனித விருப்பங்கள் மாறக்கூடியது என்பதற்க்கு நானும் ஓர் உதாரணம்.

விரும்பி படிப்பது: பாரதி, பாரதி சார்ந்த எழுத்துக்களை.

விருப்பமானவர் : பன்றி ஏன் தெருவிற்கு வந்தது என பகுத்தறிவு பேசிய பாவேந்தர்.

பிடித்த எழுத்தாளர் : இன்னும் பிடிபடவில்லை.

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பூபதி தொடர்கள் வாயில்


காளையை கட்டிப்போடும் சக்தி - 2

பூபதி  

இதோ பங்குச்சந்தை படுத்துவிட்டது என பரபரப்பாக செய்திகள் வெளிவரும் போது பாதிப்படைந்தவர்கள் பற்றிய செய்தியையே பெரும்பாலும் நாம் கேட்கிறோம். ஆனால் உண்மை என்னவெனில் பங்குச்சந்தையை பொருத்தவரையில் ஒருவர் வீட்டில் துன்பம் என்றால்தான் மற்றொருவரின் வீட்டில் இன்பம் உண்டாகும், இதுதான் எதார்த்தம். நாம் பணத்தை இழந்து துக்கத்தை அனுபவிக்கின்றோம் என்றால் நாம் இழந்த பணம் மற்றொருவரின் வீட்டில் இன்பத்தை கொடுத்துக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம். உங்களுடைய வீழ்ச்சி என்னுடைய எழுச்சியாக இருக்கும். அல்லது என்னுடைய துயரம் உங்களிடம் மகிழ்ச்சியாக மாற்றம் கொள்ளும்.

இந்த சுழற்சியில் பெரும்பாலும் துன்பம் கொள்பவர்கள் நடுத்தர மக்களாகவும், இன்பம் அனுபவிப்பவர்கள் மேல்தட்டு மக்களாகவும் இருக்கிறார்கள். அதற்கு முக்கியமாக காரணம் அவர்களிடம் உள்ள பணத்தின் அளவு. அவர்களிடம் பணத்தின் இருப்பு அதிகமாக இருப்பதால்தான் பங்குச்சந்தையின் ஒவ்வொரு விலை இறக்கமும் அவர்களுக்கு பணம் சம்பாதிக்க ஒரு வாய்ப்பாக அமைந்துவிடுகிறது.

மேல்தட்டு மக்கள் தாங்கள் வாங்கிய பங்கின் விலை இறங்கினால் மீண்டும் ஒருமுறை குறைவான விலையில் அதே பங்கினை வாங்குவார்கள். மறுபடியும் விலை இறங்கினால் மேலும் ஒரு முறை பங்குகளை வாங்குவார்கள். இப்படி பங்கின் விலை ஒவ்வொரு முறை குறையும் போதும் மேல்தட்டு மக்கள் தொடர்ந்து பங்குகளை வாங்கிக்கொண்டே இருப்பார்கள். பின்னர் வாங்கிய பங்குகளின் விலை மேலே ஏறிவரும்போது பங்குகளை விற்று பெரிய அளவில் இலாபம் அடைகிறார்கள்.

மேல்தட்டு மக்களிடம் வாங்கும் சக்தி அதிகமாக இருப்பதால் அவர்கள் பங்குச்சந்தையில் நஷ்டம் அடைய வாய்ப்பே இல்லை. எனவே சந்தையின் விலை இறக்கம் என்பது அவர்களுக்கு பணம் சம்பாதிக்கும் முயற்சியில் உண்டாகும் முன்னேற்றம். நடுத்தர மக்களை பொருத்தவரையில் சந்தையின் விலை இறக்கம் என்பது அவர்கள் பணம் சம்பாதிக்கும் முயற்சியின் முடிவு.

எனவே நடுத்தர மக்கள் தங்களின் வாங்கும் சக்தியை அதிகரித்துக் கொண்டால் மட்டுமே சந்தையில் இலாபத்தை சம்பாதிக்க முடியும். ஆனால் கடன் வாங்காமல் நடுத்தர மக்களால் எவ்வாறு தங்களின் வாங்கும் சக்தியை அதிகரித்துக்கொள்ள முடியும்! கடன் வாங்கினால் மேலும் பிரச்சனைதான் அதிகமாகும். மேல்தட்டு மக்களின் அளவிற்கு நடுத்தர மக்களால் பங்குகளை வாங்க முடியாது ஆனால் மேல்தட்டு மக்களின் வியாபார முறையை பின்பற்ற முடியும்.
மேல்தட்டு மக்கள் எந்த மாதிரி வியாபாரம் செய்கிறார்கள்? அவர்களிடம் நடுத்தர மக்கள் கற்றுக்கொள்ள வேண்டிய வியாபார முறைதான் என்ன?

நம்மில் பெரும்பாலானவர்கள் பணக்காரர் போல நடிக்கிறோமே தவிர பணக்காரர் போல நடந்துகொள்வதில்லை. மேல்தட்டு மக்கள் தங்களிடம் பணம் அதிகம் இருக்கிறதே என்பதற்காக அதிக இலாபத்தை எதிர்பார்த்து தங்களிடம் உள்ள மொத்த தொகைக்கும் பங்குகளை வாங்கிவிடுவதில்லை. (நம்மில் பெரும்பாலானோர் செய்யும் மிகப்பெரிய தவறு இது) ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மட்டுமே பங்குகளை வாங்குகிறார்கள். அதற்குப்பிறகு ஒவ்வொரு விலை இறக்கத்தின்போது மட்டுமே பங்குகளை வாங்குவார்கள். இதன் மூலமாக ஒவ்வொரு விலை இறக்கத்தையும் தங்களின் ஏற்றத்திற்கான ஒரு வாய்ப்பாக மாற்றியமைத்துக்கொள்கிறார்கள். இந்த வகையிலான வியாபாரத்தின் மூலமாக அவர்களால், விலையிறக்கத்தை கண்டு அஞ்சாமல் தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட முடிகிறது. அதிகமான இலாபத்தை அடைய முடிகிறது. எனவே நடுத்தர மக்கள்

தங்களிடம் உள்ள மொத்த தொகைக்கும் பங்குகளை வாங்காமல், தங்களிடம் உள்ள பணத்தை (குறைந்த பட்சம்) மூன்றாக பிரித்து வைத்துக் கொண்டு வியாபாரத்தில் ஈடுபட வேண்டும்.

மூன்றில் ஒரு பங்கு பணத்திற்கு மட்டுமே பங்குகளை வாங்க வேண்டும். பங்குகளை வாங்கிய பிறகு பங்கின் விலை அதிகரித்தால் பங்குகளை விற்று இலாபம் பார்த்துக்கொள்ளலாம். அதே சமயம் பங்குகளின் விலை சரிவடைந்தால்!... மீண்டும் ஒரு பகுதி பணத்திற்கு பங்குகளை வாங்கலாம். இது போன்று இரண்டு அல்லது மூன்று முறை பங்குகளை வாங்க முடியும். இதன் மூலமாக பங்குகளின் விலை இறக்கத்தை கண்டு அச்சம் கொள்ளாமல் விலை இறக்கத்தை நம்முடைய ஏற்றத்திற்கான ஒரு வாய்ப்பாக மாற்றியமைத்துக்கொள்ள முடியும்.

இந்த முறையின் மூலம் நடுத்தர வர்க்கத்தினரால் தங்களின் வாங்கும் சக்தியை அதிகரித்துக்கொள்ள முடியும். ஆனால் இதை படிக்கும் போது சில பொதுவான சந்தேகங்கள் தோன்றும். இருப்பதோ குறைவான பணம் அதையும் மூன்றாக பிரித்து பங்குகளை வாங்கினால் எவ்வளவு வாங்கிவிட முடியும்! அதில் என்ன இலாபம் கிடைத்துவிடப்போகிறது என சந்தேகம் தோன்றலாம். நம்புங்கள் கிட்டத்தட்ட எண்பதாயிரம் ரூபாய் வரை சந்தையில் முதலீடு செய்துவிட்டு செய்வதறியாமல் முழித்துக்கொண்டிருந்தேன். இயலாமையை ஏற்றுக்கொண்டு இயல்பாய் இருந்த சமயங்களில் தான் இந்த வாங்கும் சக்தி பற்றிய எண்ணங்கள் தோன்றியது. நமக்கு ஏற்பட்ட பிரச்சனை பணக்காரர்களுக்கு ஏற்பட்டால் என்ன செய்வார்கள் என்ற சிந்தனையில் வளர்ந்தது இது. முதலீடு செய்ததுபோக மிச்சம் என்னிடம் ஆராயிரத்தி நானூறு ரூபாய் மட்டுமே இருந்தது. சரி எவ்வளவோ இழந்துவிட்டோம் இருக்கின்ற இந்த பணத்தை புதியதாக தோன்றிய இந்த சிந்தனையில் செலவழிப்போம் என்ற ரீதியில்தான் ஈடுபட்டேன். யோசித்து பாருங்கள் ஆராயிரத்து நானுறு ரூபாயை மூன்றாக பிரித்தால் என்ன தொகை கிடைக்கும்! 2133!!!! இதில் எத்தனை பங்குகளை வாங்க முடியும்? என்ன இலாபத்தை அடைந்துவிட முடியும்? இந்த தொகைக்கு பங்குகளை வாங்கச்சொல்லும் போதே எனக்கு வெட்கமாகத்தான் இருந்தது ஆனால் இந்த முறை வெற்றிகரமாக செயல்படத்தொடங்கியதும் வெட்கத்தையெல்லாம் விட்டுவிட்டு விருப்பத்துடன் செயல்படத்தொடங்கினேன். 100, 200 என குறைவான தொகைதான் இலாபமாக கிடைத்தது ஆனால் குறிப்பிட்ட காலத்திலேயே என்னுடைய தொகை இரண்டு மடங்காக அதிகரித்தது. எனவே உங்களின் சக்திக்கு மீறி செயல்பட வேண்டாம் என்ன உள்ளதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். மற்றவர்களுக்காக உங்களை மாற்றிக்கொள்ள வேண்டாம். இருக்கின்ற தொகையை இரண்டு மடங்காக்கினாலே அது மிகப்பெரிய வெற்றிதானே. அதில் வெக்கப்பட என்ன இருக்கிறது!

இந்த முறையை பின்பற்றுவதிலும் சில நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன அவற்றை அடுத்தவாரம் பார்ப்போம். நன்றி

தொடரும்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

s
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</