வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. சிறுகதைகள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்த முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 
 

நூறு சிறந்த சிறுகதைகள் -

எஸ். ராமகிருஷ்ணன்

1. காஞ்சனை - புதுமைபித்தன்
2. கடவுளும் கந்தசாமி பிள்ளையும்- புதுமைபித்தன்
3. செல்லம்மாள் - புதுமைபித்தன்
4. அழியாச்சுடர் -மௌனி
5. பிரபஞ்ச கானம் - மௌனி
6. விடியுமா - கு.ப.ரா
7. கனகாம்பரம் -கு.ப.ரா
8. நட்சத்திர குழந்தைகள் -பி. எஸ். ராமையா
9. ஞானப்பால் - பிச்சமூர்த்தி
10. பஞ்சத்து ஆண்டி - தி.ஜானகிராமன்
11. பாயசம் - தி.ஜானகிராமன்
12. ராஜா வந்திருக்கிறார் - கு. அழகிரிசாமி
13. அன்பளிப்பு - கு. அழகிரிசாமி
14. இருவர் கண்ட ஒரே கனவு � கு. அழகிரிசாமி
15. கோமதி - கி. ராஜநாராயணன்
16. கன்னிமை - கி.ராஜநாராயணன்
17. கதவு. கி.ராஜநாராயணன்
18. பிரசாதம் -சுந்தர ராமசாமி
19. ரத்னாபாயின் ஆங்கிலம் -சுந்தர ராமசாமி
20. விகாசம் - சுந்தர ராமசாமி
21. பச்சை கனவு -லா.ச.ராமாமிருதம்
22. பாற்கடல் -லா.ச.ராமாமிருதம்
23. ஒரு ராத்தல் இறைச்சி - நகுலன்
24. புலிக்கலைஞன் -அசோகமித்ரன்
25. காலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்ரன்
26. பிரயாணம் - அசோகமித்ரன்
27. குருபீடம் - ஜெயகாந்தன்
28. முன்நிலவும் பின்பனியும் - ஜெயகாந்தன்
29. அக்னிபிரவேசம் -ஜெயகாந்தன்
30. தாலியில் பூச்சூடியவர்கள் - பா.ஜெயபிரகாசம்
31. காடன் கண்டது - பிரமீள்
32. உயரமாக சிவப்பா மீசை வைக்காமல் - ஆதவன்
33. ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன்
34. பைத்தியக்கார பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம்
35. மகாராஜாவின் ரயில்வண்டி - அ. முத்துலிங்கம்
36. நீர்மை - ந.முத்துசாமி
37. அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை
38. காட்டிலே ஒரு மான் -அம்பை
39. எஸ்தர் - வண்ணநிலவன்
40. மிருகம் - வண்ணநிலவன்
41. பலாப்பழம் - வண்ணநிலவன்
42. சாமியார் ஜ�விற்கு போகிறார் - சம்பத்
43. புற்றில் உறையும் பாம்புகள் - ராஜேந்திரசோழன்
44. தனுமை - வண்ணதாசன்
45. நிலை - வண்ணதாசன்
46. நாயனம் - ஆ.மாதவன்
47. நகரம் -சுஜாதா
48. பிலிமோஸ்தவ் -சுஜாதா
49. தக்கையின் மீது நான்கு கண்கள் - சா.கந்தசாமி
50. டெரிலின் சர்ட்டும் எட்டு முழு வேஷ்டி அணிந்த மனிதர் - ஜி. நாகராஜன்
51. ஒடிய கால்கள் - ஜி.நாகராஜன்
52. தங்க ஒரு - கிருஷ்ணன் நம்பி
53. மருமகள்வாக்கு - கிருஷ்ணன் நம்பி
54. ரீதி - பூமணி
55. இந்நாட்டு மன்னர் - நாஞ்சில் நாடன்
56. அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன்
57. மரி எனும் ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்
58. சோகவனம்- சோ.தர்மன்
59. இறகுகளும் பாறைகளும் -மாலன்
60. ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி
61. முங்கில் குருத்து - திலீப்குமார்
62. கடிதம் - திலீப்குமார்
63. மறைந்து திரியும் கிழவன் - சுரேஷ்குமார இந்திரஜித்
64. சாசனம் - கந்தர்வன்
65. மேபல் -தஞ்சை பிரகாஷ்
66. அரசனின் வருகை - உமா வரதராஜன்
67. நுகம் - எக்பர்ட் சச்சிதானந்தம்
68. முள் - சாரு நிவேதிதா
69. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் - சுப்ரபாரதி மணியன்
70. வனம்மாள் -அழகிய பெரியவன்
71. கனவுக்கதை - சார்வாகன்
72. ஆண்மை - எஸ்பொ.
73. நீக்கல்கள் - சாந்தன்
74. மூன்று நகரங்களின் கதை -கலாமோகன்
75. அந்நியர்கள் - சூடாமணி
76. சித்தி - மா. அரங்கநாதன்.
77. புயல் - கோபி கிருஷ்ணன்
78. மதினிமார்கள் கதை - கோணங்கி
79. கறுப்பு ரயில் - கோணங்கி
80. வெயிலோடு போயி - தமிழ்செல்வன்
81. பத்மவியூகம் - ஜெயமோகன்
82. பாடலிபுத்திரம் - ஜெயமோகன்
83. ராஜன் மகள் - பா.வெங்கடேசன்
84. தாவரங்களின் உரையாடல் - எஸ்.ராமகிருஷ்ணன்
85. புலிக்கட்டம் - எஸ்.ராமகிருஷ்ணன்
86. இருளப்பசாமியும் 21 ஆட்டுகிடாய்களும் -வேல.ராமமூர்த்தி
87. ஒரு திருணையின் பூர்வீகம் -சுயம்புலிங்கம்
88. விளிம்பின் காலம் - பாவண்ணன்.
89. காசி - பாதசாரி
90. சிறுமி கொண்டு வந்த மலர் - விமாலதித்த மாமல்லன்
91. மூன்று பெர்நார்கள் - பிரேம் ரமேஷ்
92. மரப்பாச்சி - உமா மகேஸ்வரி
93. வேட்டை - யூமா வாசுகி
94. நீர்விளையாட்டு - பெருமாள் முருகன்
95. அழகர்சாமியின் குதிரை - பாஸ்கர் சக்தி
96. கண்ணியத்தின் காவலர்கள் - திசேரா
97. ஹார்மோனியம் - செழியன்
98. தம்பி - கௌதம சித்தார்த்தன்
99. ஆண்களின் படித்துறை. ஜே.பி.சாணக்யா
100. பூனைகள் இல்லாத வீடு - சந்திரா

 

 

 
     
     
     
   
சிறுகதைகள்
1
 
 
     
   
  -----------------------------------  
 

சிறுகதை

சிறுகதை என்பது சுருக்கமான, கதைகூறும் புனைவுவகை உரைநடை இலக்கியமாகும். பெரும்பாலும் ஒரு மையக் கருவினை அல்லது நிகழ்ச்சியின் அநுபவத்தை விபரிக்கும் இலக்கிய வகையாகும். சிறுகதை பொதுவாக குறுநாவல் மற்றும் நாவலை விடச் சுருக்கமானதாகும்.

 
  ---------------------------------  
  ஜெயமோகன்  
  ”சொல்லாதீர்கள், காட்டுங்கள்.” எழுத ஆரம்பிப்பவர்கள் கதைகளை சுருக்கமாகச் சொல்ல முயல்வார்கள். காரணம் அது நாம் சாதாரணமாக வாழ்க்கையில் செய்வது. நடந்ததை சுருக்கமாக சொல்வது. ஆனால் இலக்கியத்தின் நோக்கம் அனுபவத்தைத் தெரிவிப்பது அல்ல. அது கற்பனை மூலம் வாசகனை அந்த அனுபவத்தை தானும் அடைய வைக்கவே முயலவேண்டும். ஆகவே அந்த கதை கண்முன் உண்மையில் நிகழ்ந்தால் எப்படி இருக்குமோ அந்த காட்சியனுபவத்தை வாசகனுக்கு அளியுங்கள். நுண்ணிய தகவல்கள் மூலம் கதையை கண்ணிலே காட்டுங்கள். கடற்கரை வாழ்க்கையை எனக்கு சொல்லாதீர்கள், நானே அங்குவந்து வாழும் அனுபவத்தை எனக்கு அளியுங்கள்.  
  -----------------------------------  
  சிறுகதை வரலாறும், வளர்ச்சியும்  
     
  http://tamilstories-sakthi.blogspot.com/2010/01/blog-post_07.html  
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  சிறுகதைகள் TS அம்மாச்சி வீட்டுத் திண்ணை சிறுகதைகள் வாயில்

அம்மாச்சி வீட்டுத் திண்ணை

க.ராஜ்குமார்  

அன்றும் என் அம்மாச்சியின் இருமல் சத்தம்கேட்டே படுக்கையை விட்டு எழுந்தேன். வடமாநிலத்திலிருக்கும் அம்மா அப்பா மாதமொருமுறை போன் போடுகையில் நான் மறந்ததே இல்லை அம்மாச்சியை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்று சொல்ல. எங்க அம்மாச்சி வீட்டின் திண்ணையில் அம்மாச்சியும், அம்மாச்சியின் சகவயதான பால்த்தாய், தங்கத்தாய், பின்னியம்மாள் மற்றும் பல காதருந்த மூழிகளும் ஊர்கதை பேசுவது வழக்கம். நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் பால்த்தாயையும்,தங்கத்தாயையும் மில்க்மதர்,கோல்டுமதர் என்றே அழைத்தேன். ஊரிலேயே பெரிய திண்ணை எங்க அம்மாச்சி வீட்டின் திண்ணை. நடுவில் நான்கு படிக்கட்டு வாசல், இரண்டு பக்கமும் திண்ணை என அமைந்திருக்கும். கதவு நிலையில் சாய்ந்தபடி முதற்படிக்கட்டில் அம்மாச்சி உட்கார்வது வழக்கம், அம்மாச்சிக்கு இடதுபுறத்தில் நான். பால்த்தாயும்,தங்கத்தாயும் இரண்டாம் மற்றும் மூன்றாம் படிக்கட்டுகளில். பால்த்தாய் ஊர் சத்துணவுக் கூடத்து சமையல்காரி என்பதால் அம்மாச்சிக்கு மதிய வேளை உணவு நிச்சயம் தினமும். 11:10க்கு பள்ளி இடைவேளை நேரத்தில் சரியாக வந்துவிடுவாள் கி்றுக்குமுத்துப்பினாய் என்னும் முத்துப்பினாயம்மாள். தலையில் பெரிய இய்யச் சட்டியில் வடைகள் வைத்திருப்பாள். அவளின் அழுக்கான நகங்களை இன்றும் வெறுக்கிறேன்.

“ மேல் குளியாத சிரிக்கி “ என்றவளை அம்மாச்சி அழைப்பது வழக்கம். அவள் செய்துவரும் வடைகள் மிகவும் ருசியாக இருக்கும் தொக்குச் சிய்யம் எனது விருப்பம்.அம்மாச்சி வீட்டிற்கு பின்புறம் பள்ளிக்கூடம் அமைந்திருப்பதால் அடிக்கடி வந்து விடுவேன், அதற்க்காகவே சில சமயம் புத்தகங்களை வேண்டுமென்றே வீட்டில் வைத்து விட்டு வருவேன். அம்மாச்சி கந்து

வட்டிக்கு கடன் தருபவள் என்பதால் திண்ணைக் கிழவிகள் ஆமோதித்தே பழகிவிட்டனர், அம்மாச்சியின் பேச்சை. மாலை நேரங்களில் எதையேனும் வாயி்ல் போட்டு அரைத்துக் கொண்டே பேசுவது வழக்கம் பெரும்பாலும் தட்டங்காய் அல்லது அவித்த வேர்க்கடலை, காலை பொழுதுகளில் வெற்றிலை,சுருள் பாக்கு போட்டு எனக்கு வெற்றிலை மெல்லத் தெரியாது, அம்மாச்சி வாயில் சவைத்த வெற்றிலையை எடுத்து தருவாள் எடுத்து தருவாள் எனக்கு. கி்றுக்குமுத்துப்பினாய் வடை விற்ற காசில் மேற்பல் முன்வரிசையில் தங்கப்பல் பொருத்த போவதாக சொல்லிக் கொண்டிருப்பாள், பிற கிழவிகளால் கி்றுக்குமுத்துப்பினாயின் கனவு ஒரு மூண்றாந்தர கனவாகவே கருதப்பட்டது. கோடை காலங்களில் அம்மாச்சி வீட்டின் இரண்டு திண்ணைகளையும் உறுதியாக யாரேனும் ஆக்கிரமித்து கொள்வார்கள் இரவு உறக்கத்திற்கு. அம்மாச்சிக்கு உடல் நிலை சரியில்லை கடந்த ஒரு வருடமாக அவளின் இருமல் சத்தம் ஓய்ந்த நாள் இல்லவே இல்லை. ஒரு இரவில் மூன்று முறையாவது என் தூக்கத்தை கலைக்கும் அம்மாச்சியின் இருமல். அன்று பள்ளி தொடங்கிய முதல் அரை மணி நேரத்திலேயே வீட்டுக்கு போய் சமூக அறிவியல் புத்தகம் எடுத்து வருகிறேன் என்று கேட்டேன் உடனடியாக அனுமதி மறுக்கப்பட்டது. ப்ளோரா டீச்சரை முறைத்தப்படியே சமூக அறிவியல் புத்தகத்தை பையிலிருந்து எடுத்தேன். 11:10 மணி ஓசைக்காக காத்திருந்தது என் செவிகள், கி்றுக்குமுத்துப்பினாயின் தொக்குச் சிய்யம் காலியாகி விடக்கூடாது என்ற பிரார்த்தனை என்னுள், மழை பெய்ய தொடங்கியது மணி அடித்தது, அம்மாச்சி உயிரோடில்லை. அம்மா அப்பா வந்து சேர இன்னும் ஐந்து நாட்களாகும், அன்று மாலையே அம்மாச்சி அடக்கம் செய்யப்பட்டாள். நான் அழவில்லை அழவேயில்லை, நான் ஏன் அழவில்லை எதற்க்காக எனக்கு அழுகை வரவில்லையென்று இன்றுவரை எனக்கு தெரியவில்லை. முந்தைய நாளின் மழை தொடர்ந்தது. தெருக்களில் யாரும் அன்று காகித கப்பல் விடவில்லை , கி்றுக்குமுத்துப்பினாயின் தொக்குச் சிய்யம் உட்பட எந்த வடையும் விற்றாகவில்லை, பால்த்தாயும் தங்கத்தாயும் வெற்றிலையற்ற வாயோடு இரண்டாம் மற்றும் மூன்றாம் படிக்கட்டுகளில் அமைதியாக. அம்மாச்சியின் இடம் விட்டு என்னுடைய இடத்தில் நான். ஒச்சம்மாவின் இடம் யாராலுமே நிறப்பமுடியாத ஒரு வெற்றிடமாகவே இருந்து வருகிறது.


முற்றும்


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.