வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. சிறுகதைகள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்த முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 
 

நூறு சிறந்த சிறுகதைகள் -

எஸ். ராமகிருஷ்ணன்

1. காஞ்சனை - புதுமைபித்தன்
2. கடவுளும் கந்தசாமி பிள்ளையும்- புதுமைபித்தன்
3. செல்லம்மாள் - புதுமைபித்தன்
4. அழியாச்சுடர் -மௌனி
5. பிரபஞ்ச கானம் - மௌனி
6. விடியுமா - கு.ப.ரா
7. கனகாம்பரம் -கு.ப.ரா
8. நட்சத்திர குழந்தைகள் -பி. எஸ். ராமையா
9. ஞானப்பால் - பிச்சமூர்த்தி
10. பஞ்சத்து ஆண்டி - தி.ஜானகிராமன்
11. பாயசம் - தி.ஜானகிராமன்
12. ராஜா வந்திருக்கிறார் - கு. அழகிரிசாமி
13. அன்பளிப்பு - கு. அழகிரிசாமி
14. இருவர் கண்ட ஒரே கனவு � கு. அழகிரிசாமி
15. கோமதி - கி. ராஜநாராயணன்
16. கன்னிமை - கி.ராஜநாராயணன்
17. கதவு. கி.ராஜநாராயணன்
18. பிரசாதம் -சுந்தர ராமசாமி
19. ரத்னாபாயின் ஆங்கிலம் -சுந்தர ராமசாமி
20. விகாசம் - சுந்தர ராமசாமி
21. பச்சை கனவு -லா.ச.ராமாமிருதம்
22. பாற்கடல் -லா.ச.ராமாமிருதம்
23. ஒரு ராத்தல் இறைச்சி - நகுலன்
24. புலிக்கலைஞன் -அசோகமித்ரன்
25. காலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்ரன்
26. பிரயாணம் - அசோகமித்ரன்
27. குருபீடம் - ஜெயகாந்தன்
28. முன்நிலவும் பின்பனியும் - ஜெயகாந்தன்
29. அக்னிபிரவேசம் -ஜெயகாந்தன்
30. தாலியில் பூச்சூடியவர்கள் - பா.ஜெயபிரகாசம்
31. காடன் கண்டது - பிரமீள்
32. உயரமாக சிவப்பா மீசை வைக்காமல் - ஆதவன்
33. ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன்
34. பைத்தியக்கார பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம்
35. மகாராஜாவின் ரயில்வண்டி - அ. முத்துலிங்கம்
36. நீர்மை - ந.முத்துசாமி
37. அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை
38. காட்டிலே ஒரு மான் -அம்பை
39. எஸ்தர் - வண்ணநிலவன்
40. மிருகம் - வண்ணநிலவன்
41. பலாப்பழம் - வண்ணநிலவன்
42. சாமியார் ஜ�விற்கு போகிறார் - சம்பத்
43. புற்றில் உறையும் பாம்புகள் - ராஜேந்திரசோழன்
44. தனுமை - வண்ணதாசன்
45. நிலை - வண்ணதாசன்
46. நாயனம் - ஆ.மாதவன்
47. நகரம் -சுஜாதா
48. பிலிமோஸ்தவ் -சுஜாதா
49. தக்கையின் மீது நான்கு கண்கள் - சா.கந்தசாமி
50. டெரிலின் சர்ட்டும் எட்டு முழு வேஷ்டி அணிந்த மனிதர் - ஜி. நாகராஜன்
51. ஒடிய கால்கள் - ஜி.நாகராஜன்
52. தங்க ஒரு - கிருஷ்ணன் நம்பி
53. மருமகள்வாக்கு - கிருஷ்ணன் நம்பி
54. ரீதி - பூமணி
55. இந்நாட்டு மன்னர் - நாஞ்சில் நாடன்
56. அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன்
57. மரி எனும் ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்
58. சோகவனம்- சோ.தர்மன்
59. இறகுகளும் பாறைகளும் -மாலன்
60. ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி
61. முங்கில் குருத்து - திலீப்குமார்
62. கடிதம் - திலீப்குமார்
63. மறைந்து திரியும் கிழவன் - சுரேஷ்குமார இந்திரஜித்
64. சாசனம் - கந்தர்வன்
65. மேபல் -தஞ்சை பிரகாஷ்
66. அரசனின் வருகை - உமா வரதராஜன்
67. நுகம் - எக்பர்ட் சச்சிதானந்தம்
68. முள் - சாரு நிவேதிதா
69. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் - சுப்ரபாரதி மணியன்
70. வனம்மாள் -அழகிய பெரியவன்
71. கனவுக்கதை - சார்வாகன்
72. ஆண்மை - எஸ்பொ.
73. நீக்கல்கள் - சாந்தன்
74. மூன்று நகரங்களின் கதை -கலாமோகன்
75. அந்நியர்கள் - சூடாமணி
76. சித்தி - மா. அரங்கநாதன்.
77. புயல் - கோபி கிருஷ்ணன்
78. மதினிமார்கள் கதை - கோணங்கி
79. கறுப்பு ரயில் - கோணங்கி
80. வெயிலோடு போயி - தமிழ்செல்வன்
81. பத்மவியூகம் - ஜெயமோகன்
82. பாடலிபுத்திரம் - ஜெயமோகன்
83. ராஜன் மகள் - பா.வெங்கடேசன்
84. தாவரங்களின் உரையாடல் - எஸ்.ராமகிருஷ்ணன்
85. புலிக்கட்டம் - எஸ்.ராமகிருஷ்ணன்
86. இருளப்பசாமியும் 21 ஆட்டுகிடாய்களும் -வேல.ராமமூர்த்தி
87. ஒரு திருணையின் பூர்வீகம் -சுயம்புலிங்கம்
88. விளிம்பின் காலம் - பாவண்ணன்.
89. காசி - பாதசாரி
90. சிறுமி கொண்டு வந்த மலர் - விமாலதித்த மாமல்லன்
91. மூன்று பெர்நார்கள் - பிரேம் ரமேஷ்
92. மரப்பாச்சி - உமா மகேஸ்வரி
93. வேட்டை - யூமா வாசுகி
94. நீர்விளையாட்டு - பெருமாள் முருகன்
95. அழகர்சாமியின் குதிரை - பாஸ்கர் சக்தி
96. கண்ணியத்தின் காவலர்கள் - திசேரா
97. ஹார்மோனியம் - செழியன்
98. தம்பி - கௌதம சித்தார்த்தன்
99. ஆண்களின் படித்துறை. ஜே.பி.சாணக்யா
100. பூனைகள் இல்லாத வீடு - சந்திரா

 

 

 
     
     
     
   
சிறுகதைகள்
1
 
 
     
   
  -----------------------------------  
 

சிறுகதை

சிறுகதை என்பது சுருக்கமான, கதைகூறும் புனைவுவகை உரைநடை இலக்கியமாகும். பெரும்பாலும் ஒரு மையக் கருவினை அல்லது நிகழ்ச்சியின் அநுபவத்தை விபரிக்கும் இலக்கிய வகையாகும். சிறுகதை பொதுவாக குறுநாவல் மற்றும் நாவலை விடச் சுருக்கமானதாகும்.

 
  ---------------------------------  
  ஜெயமோகன்  
  ”சொல்லாதீர்கள், காட்டுங்கள்.” எழுத ஆரம்பிப்பவர்கள் கதைகளை சுருக்கமாகச் சொல்ல முயல்வார்கள். காரணம் அது நாம் சாதாரணமாக வாழ்க்கையில் செய்வது. நடந்ததை சுருக்கமாக சொல்வது. ஆனால் இலக்கியத்தின் நோக்கம் அனுபவத்தைத் தெரிவிப்பது அல்ல. அது கற்பனை மூலம் வாசகனை அந்த அனுபவத்தை தானும் அடைய வைக்கவே முயலவேண்டும். ஆகவே அந்த கதை கண்முன் உண்மையில் நிகழ்ந்தால் எப்படி இருக்குமோ அந்த காட்சியனுபவத்தை வாசகனுக்கு அளியுங்கள். நுண்ணிய தகவல்கள் மூலம் கதையை கண்ணிலே காட்டுங்கள். கடற்கரை வாழ்க்கையை எனக்கு சொல்லாதீர்கள், நானே அங்குவந்து வாழும் அனுபவத்தை எனக்கு அளியுங்கள்.  
  -----------------------------------  
  சிறுகதை வரலாறும், வளர்ச்சியும்  
     
  http://tamilstories-sakthi.blogspot.com/2010/01/blog-post_07.html  
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  சிறுகதைகள் TS லேசான தூறல் சிறுகதைகள் வாயில்

லேசான தூறல்

சாந்தி  

"சாரிப்பா மன்னிச்சுக்கோ.."

" செய்றதையெல்லாம் செஞ்சுட்டு மன்னிப்பா?.. "

" அதான் சொன்னேன்ல.. மறந்துட்டேன்... திருமண நாளை.."

" அப்ப இப்படியே ஒரு நல்ல நாள் பார்த்து என்னையும் மறந்துடுங்க.."

" ம். சரி.."

" என்னாஆஆஆஆ.....து?" 

" ம். இல்ல இல்ல ..கோவத்த பாரு.. ஆமா இந்த கோவத்தையெல்லாம் ஏன் கல்யாணத்துக்கு முன்னாடி காட்டல??"

" ம். பதில் சொல்ல மாட்டேன்.. "

" ஆமா.. ஏன் காட்டலன்னா, நீங்க ஒழுங்க இருந்தீங்க.. இப்படி இல்ல.."

" பதில் சொல்லிட்ட.. கிகிகி.."

" போதும் சிரிப்பு.."

" அய்யோ என் வேலை அப்படிம்மா... புரிஞ்சுக்கோ."

" அதுக்காக நம்ம கல்யாண நாள்கூட மறக்குமா?.. எங்க அப்பா எவ்வளவோ பரவால்ல.."

" என்ன .. எல்லா நாளையும் மறந்துடுவாரா மொத்தமா?..கிகிகி"

" ரொம்ப கோபப்படுத்தாதீங்க.. இப்பவே நான் அப்பா வீட்டுக்கு போறேன்...1 வாரம்..க்ர்ர்ர்"

" ஆ..ஊ ன்னா அப்பா னு சொல்லி எதுக்கு கம்பேர் பண்ற... உங்க அப்பா ஓட்டை ரைஸ்மில் வெச்சுட்டு வீட்டுக்கு

பக்கத்திலேயே வண்டிஓட்டுறார், வக்கணையா 3 நேரம் சாப்பிட்டு தூங்கி... என் நிலைமை அப்படியா கணினி யை கட்டி அழுவுறேன்,

நேரம் காலம் இல்லாம.."

" சரி.சரி, என் தேவதையே, வழக்கம்போல வழியனுப்புவியாம்... "

" மரியாதையா போய்டுங்க, இன்னும் கோவம் வரதுக்குள்ள.. சே என் பிரண்ட்ஸ் எல்லாம் என்ன நினைப்பாங்க.."

---------------------------------------------------------------------------------------------------------

மதியம்

தோழியுடன்...அரட்டை...

" நல்லா டோஸ் விட்டேன் .. பயந்துட்டாருப்பா.."

" அதானே .. அதெப்படி திருமண நாளை மறக்கலாம்.."

" ம். இப்பத்தான் திருப்தியா இருக்கு...ஆனா பாக்க பாவமாயும் இருக்கு வருக்கு வேலை அப்படி.."

" நீயும் கொஞ்சம் பொறுமையா போயிருக்கலாமோ என்னவோ.."

" சரி சரி அப்புரம் பேசுறேன்.,.சாயங்காலத்துக்கு ஏதாவது விசேஷமா ஸ்வீட் பண்ணனும்.."

"ம். விட்டுக்கொடுக்க மாட்டியே.."

---------------------------------------------------------------------------------------------------

சாயங்காலம்.. 

அலுவல் முடிந்து கோபத்துடன் வீட்டிற்கு வருகிறான் .

" கிளம்பு.."

" எங்க..?."

" ம். உங்க அப்பா வீட்டுக்குதான்.."

" ம். எதுக்குங்க."

" ம். காலங்காத்தால கோபப்படுத்தி மனுசன அலுவலகம் அனுப்ப வேண்டியது... அங்க போய் நான்

தப்பு தப்பா செய்ய வேண்டியது.."

" சரி அது காலையிலேயே முடிஞ்ச விஷயம்.. இப்ப போய்."

" அதெல்லாம் தெரியாது.. இன்னும் 1 வாரம் உங்க அப்பா வீட்டுலதான் .,.. அப்பதான் என்னால புராஜெக்ட் ஒழுங்கா முடிக்க முடியும்.."

" ச்......என்ன இது திடீரென்று..."

" இப்ப நீ கிளம்புறயா இல்ல நான் எடுத்து வைக்கவா?."

எரிச்சலுடன் எடுத்து வைக்கிறாள்..

காரை எரிச்சலுடன் ஓட்டிக்கொண்டே செல்கிறான்... அவளோ தொண தொணன்னு..

" சரி இப்பவாவது ஒரு முடிவுக்கு வாங்க... ஏன் இந்த அவசரம்..."

" நீ மட்டும் கோபப்ப்டலாம் நான் படக்கூடாதா.."

" அதுக்கு பழிக்குப்பழியா.. ?. சரி சாமி இனி கேட்கல போதுமா?."

" அதெல்லாம் போதாது.."

" அப்ப.. என்ன மன்னிப்பு கேட்கணுமா?.."

" ம்.....ம்.. சரி ஆனா மன்னிப்பு நான் சொல்ற மாதிரி சொல்லும்போது கேளு போதும்..."

" என்ன புதிர் போடுறீங்க?.. ஆமா கார் எங்க போகுது ஸ்டேஷன் போகாம..?."

" பேசாம வா.."

" அட நீங்களே என்னை அப்பா வீடு வரை கொண்டு விடப்போறீங்களா??."

" இந்த தொண தொணப்பு தாங்காமதான் " பல்லை கடித்துக்கொண்டு...

" தங்காமதான்???" பயத்துடன்...

" 1 வாரத்துக்கு.."

" 1 வாரத்துக்கு..?????" திகிலுடன் 

" ஹஹஹஹா.."

" நம்ம திருமண நாளை கொண்டாட ஊட்டி போறோம்....இப்ப உன் மன்னிப்பை தாராளமா இங்க தரலாம்.."

"..............:-)) " நாணத்துடனும் பொய் கோபத்துடனும்......

--------------------------------------------------------------------------------------------------

சரி இப்படில்லாம் சர்பிரைஸ் கொடுக்காதீங்க புதுசா கல்யாணம் ஆனவங்க... தாய்குலத்துக்கு பிடிக்காது...:-)))


முற்றும்


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.