வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. சிறுகதைகள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்த முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 
 

நூறு சிறந்த சிறுகதைகள் -

எஸ். ராமகிருஷ்ணன்

1. காஞ்சனை - புதுமைபித்தன்
2. கடவுளும் கந்தசாமி பிள்ளையும்- புதுமைபித்தன்
3. செல்லம்மாள் - புதுமைபித்தன்
4. அழியாச்சுடர் -மௌனி
5. பிரபஞ்ச கானம் - மௌனி
6. விடியுமா - கு.ப.ரா
7. கனகாம்பரம் -கு.ப.ரா
8. நட்சத்திர குழந்தைகள் -பி. எஸ். ராமையா
9. ஞானப்பால் - பிச்சமூர்த்தி
10. பஞ்சத்து ஆண்டி - தி.ஜானகிராமன்
11. பாயசம் - தி.ஜானகிராமன்
12. ராஜா வந்திருக்கிறார் - கு. அழகிரிசாமி
13. அன்பளிப்பு - கு. அழகிரிசாமி
14. இருவர் கண்ட ஒரே கனவு � கு. அழகிரிசாமி
15. கோமதி - கி. ராஜநாராயணன்
16. கன்னிமை - கி.ராஜநாராயணன்
17. கதவு. கி.ராஜநாராயணன்
18. பிரசாதம் -சுந்தர ராமசாமி
19. ரத்னாபாயின் ஆங்கிலம் -சுந்தர ராமசாமி
20. விகாசம் - சுந்தர ராமசாமி
21. பச்சை கனவு -லா.ச.ராமாமிருதம்
22. பாற்கடல் -லா.ச.ராமாமிருதம்
23. ஒரு ராத்தல் இறைச்சி - நகுலன்
24. புலிக்கலைஞன் -அசோகமித்ரன்
25. காலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்ரன்
26. பிரயாணம் - அசோகமித்ரன்
27. குருபீடம் - ஜெயகாந்தன்
28. முன்நிலவும் பின்பனியும் - ஜெயகாந்தன்
29. அக்னிபிரவேசம் -ஜெயகாந்தன்
30. தாலியில் பூச்சூடியவர்கள் - பா.ஜெயபிரகாசம்
31. காடன் கண்டது - பிரமீள்
32. உயரமாக சிவப்பா மீசை வைக்காமல் - ஆதவன்
33. ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன்
34. பைத்தியக்கார பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம்
35. மகாராஜாவின் ரயில்வண்டி - அ. முத்துலிங்கம்
36. நீர்மை - ந.முத்துசாமி
37. அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை
38. காட்டிலே ஒரு மான் -அம்பை
39. எஸ்தர் - வண்ணநிலவன்
40. மிருகம் - வண்ணநிலவன்
41. பலாப்பழம் - வண்ணநிலவன்
42. சாமியார் ஜ�விற்கு போகிறார் - சம்பத்
43. புற்றில் உறையும் பாம்புகள் - ராஜேந்திரசோழன்
44. தனுமை - வண்ணதாசன்
45. நிலை - வண்ணதாசன்
46. நாயனம் - ஆ.மாதவன்
47. நகரம் -சுஜாதா
48. பிலிமோஸ்தவ் -சுஜாதா
49. தக்கையின் மீது நான்கு கண்கள் - சா.கந்தசாமி
50. டெரிலின் சர்ட்டும் எட்டு முழு வேஷ்டி அணிந்த மனிதர் - ஜி. நாகராஜன்
51. ஒடிய கால்கள் - ஜி.நாகராஜன்
52. தங்க ஒரு - கிருஷ்ணன் நம்பி
53. மருமகள்வாக்கு - கிருஷ்ணன் நம்பி
54. ரீதி - பூமணி
55. இந்நாட்டு மன்னர் - நாஞ்சில் நாடன்
56. அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன்
57. மரி எனும் ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்
58. சோகவனம்- சோ.தர்மன்
59. இறகுகளும் பாறைகளும் -மாலன்
60. ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி
61. முங்கில் குருத்து - திலீப்குமார்
62. கடிதம் - திலீப்குமார்
63. மறைந்து திரியும் கிழவன் - சுரேஷ்குமார இந்திரஜித்
64. சாசனம் - கந்தர்வன்
65. மேபல் -தஞ்சை பிரகாஷ்
66. அரசனின் வருகை - உமா வரதராஜன்
67. நுகம் - எக்பர்ட் சச்சிதானந்தம்
68. முள் - சாரு நிவேதிதா
69. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் - சுப்ரபாரதி மணியன்
70. வனம்மாள் -அழகிய பெரியவன்
71. கனவுக்கதை - சார்வாகன்
72. ஆண்மை - எஸ்பொ.
73. நீக்கல்கள் - சாந்தன்
74. மூன்று நகரங்களின் கதை -கலாமோகன்
75. அந்நியர்கள் - சூடாமணி
76. சித்தி - மா. அரங்கநாதன்.
77. புயல் - கோபி கிருஷ்ணன்
78. மதினிமார்கள் கதை - கோணங்கி
79. கறுப்பு ரயில் - கோணங்கி
80. வெயிலோடு போயி - தமிழ்செல்வன்
81. பத்மவியூகம் - ஜெயமோகன்
82. பாடலிபுத்திரம் - ஜெயமோகன்
83. ராஜன் மகள் - பா.வெங்கடேசன்
84. தாவரங்களின் உரையாடல் - எஸ்.ராமகிருஷ்ணன்
85. புலிக்கட்டம் - எஸ்.ராமகிருஷ்ணன்
86. இருளப்பசாமியும் 21 ஆட்டுகிடாய்களும் -வேல.ராமமூர்த்தி
87. ஒரு திருணையின் பூர்வீகம் -சுயம்புலிங்கம்
88. விளிம்பின் காலம் - பாவண்ணன்.
89. காசி - பாதசாரி
90. சிறுமி கொண்டு வந்த மலர் - விமாலதித்த மாமல்லன்
91. மூன்று பெர்நார்கள் - பிரேம் ரமேஷ்
92. மரப்பாச்சி - உமா மகேஸ்வரி
93. வேட்டை - யூமா வாசுகி
94. நீர்விளையாட்டு - பெருமாள் முருகன்
95. அழகர்சாமியின் குதிரை - பாஸ்கர் சக்தி
96. கண்ணியத்தின் காவலர்கள் - திசேரா
97. ஹார்மோனியம் - செழியன்
98. தம்பி - கௌதம சித்தார்த்தன்
99. ஆண்களின் படித்துறை. ஜே.பி.சாணக்யா
100. பூனைகள் இல்லாத வீடு - சந்திரா

 

 

 
     
     
     
   
சிறுகதைகள்
1
 
 
     
   
  -----------------------------------  
 

சிறுகதை

சிறுகதை என்பது சுருக்கமான, கதைகூறும் புனைவுவகை உரைநடை இலக்கியமாகும். பெரும்பாலும் ஒரு மையக் கருவினை அல்லது நிகழ்ச்சியின் அநுபவத்தை விபரிக்கும் இலக்கிய வகையாகும். சிறுகதை பொதுவாக குறுநாவல் மற்றும் நாவலை விடச் சுருக்கமானதாகும்.

 
  ---------------------------------  
  ஜெயமோகன்  
  ”சொல்லாதீர்கள், காட்டுங்கள்.” எழுத ஆரம்பிப்பவர்கள் கதைகளை சுருக்கமாகச் சொல்ல முயல்வார்கள். காரணம் அது நாம் சாதாரணமாக வாழ்க்கையில் செய்வது. நடந்ததை சுருக்கமாக சொல்வது. ஆனால் இலக்கியத்தின் நோக்கம் அனுபவத்தைத் தெரிவிப்பது அல்ல. அது கற்பனை மூலம் வாசகனை அந்த அனுபவத்தை தானும் அடைய வைக்கவே முயலவேண்டும். ஆகவே அந்த கதை கண்முன் உண்மையில் நிகழ்ந்தால் எப்படி இருக்குமோ அந்த காட்சியனுபவத்தை வாசகனுக்கு அளியுங்கள். நுண்ணிய தகவல்கள் மூலம் கதையை கண்ணிலே காட்டுங்கள். கடற்கரை வாழ்க்கையை எனக்கு சொல்லாதீர்கள், நானே அங்குவந்து வாழும் அனுபவத்தை எனக்கு அளியுங்கள்.  
  -----------------------------------  
  சிறுகதை வரலாறும், வளர்ச்சியும்  
     
  http://tamilstories-sakthi.blogspot.com/2010/01/blog-post_07.html  
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  சிறுகதைகள் TS பாக்கெட் சாராயம் சிறுகதைகள் வாயில்

பாக்கெட் சாராயம்

தணிகை  

சிவா தாங்க என்னோட ஒரே பிரண்டு..ரெண்டுபேரும் தான் எப்பவுமே கில்லியாட போறதிலிருந்து பள்ளிகூடத்துக்கு போறவரைக்கும் எப்பவுமே ஒன்னா தான் போவோம்..இன்னிக்கு நான் பள்ளிக்கு கெளம்பி சிவாவை போய் பார்த்தா இன்னும் கிளம்பாம அழுதுட்டு இருந்தான்..

இன்னாடா சிவா அழுதுகினு இருக்கன்னு கேட்டா எங்க அப்பா அடிச்சிட்டாருடான்னு ஹிரும்பவும் தேம்பி தேம்பி அழ ஆரம்பிச்சுட்டான்..உள்ள பாத்தா சித்திரை அண்ணன் அதான் சிவாவோட அப்பா அவுங்கம்மாவவயும் போட்டு அடிச்சிகிட்டு இருந்தாரு..

பாவி மனுஷா காலங்காத்தால குடிச்சிட்டு வந்து இன்னும் இப்படி போட்டு அடிக்கிறியே ..அந்த பள்ளிகொடத்துக்கு போற புள்ள இன்னாயா பாவம் பண்ணுச்சு..என் வயித்துல வந்து பொறந்ததுட்டு இப்படி எங்கூட அதுவும் இப்படி சாவுதேன்னு அழுதுட்டு இருந்துச்சு..

பஞ்சாயத்துபண்றதுக்குன்னே பக்கத்துல இருந்த பெருசுங்க ஏண்டா இந்த மாதிரி பண்ணிட்டிருக்கன்னு கேட்க எதுவுமே காதுல வுழாதமாதிரி சித்திர அண்ணன் டேய் போங்கடா என் பொண்டாட்டி இன்னா வசியம் காட்டி வரவெச்சாளா தேவிடியான்னு திரும்ப போய் எட்டி உதைச்சாரு அந்தண்ணிய..

இவன்லாம் என்ன சொன்னாலும் திருந்தமாட்டான்யான்னு வந்த பெருசுங்க திரும்ப போயிடுச்சு..தெருவில இருக்க பொம்பளைங்கல்லாம் வேடிக்க பாத்தகதியா நின்னுட்டு இருந்ததுங்க.டேய் சிவா அழுவாதடா ன்னு அவன் கண்ணை தொடச்சிவிட்டு மூஞ்ச கழுவிட்டு வாடான்னு தண்ணிமொண்டு கொடுத்து பையை எடுத்துகிட்டு கூட்டிட்டு போனேன்..

பள்ளிகுடமுடிச்சு வரவரைக்கும் சிவா அழுதுட்டே தான் இருந்தான்..பாதிவழியில கல்லுமோட்டு பக்கமா சித்தரண்ண லுங்கி இல்லாம வெரும் டவுசரோட மண்ணுல கிடந்தாரு..தூக்கமுயற்சி பண்ணி பாத்தோம் ரெண்டுபேரும் முடியலை..அதுக்கப்புறம் வுட்டு தள்ளுடா இந்தாளு வூட்டுக்கு வராம இருந்தாலே நிம்மதிடா எங்களுக்குன்னு முன்னாடி போயிட்டிருந்தான்..

இன்னாடான்னு கேக்க வூட்ல சோறு பொங்கி ரெண்டுநாளாச்சுடா..நாய்க்கர் வீட்டாண்ட ஊத்துன பழைய கஞ்சிய மிச்சம் வெச்சுதாண்டா நேத்துவரைக்கும் குடிச்சோம்..இந்தாளுக்கு மட்டும் எப்படிதான் குடிக்கறதுக்கு காசு வருதுன்னே தெரியலைன்னு புலம்பனான்..

டேய் யாருடா அங்க வாங்கடா இந்த வெறகு கட்ட தூக்கி தலையில வைங்கடான்னு நாராயனந்தாத்தா கண்ணசுருக்கிகின்னே கூப்புட்டாரு..சரின்னு போய் எங்க தாத்தா போற வூட்டுக்கா நானே தூக்கிட்டு வரேன்னு சிவா தூக்கிகிட்டான்..டேய் வூட்டுக்கில்ல இப்பை கல்லுமோட்டு பக்கமா வான்னு வேலிக்காத்தா பொதருக்காகூட்டிட்டு போனாரு ..

பின்னாடியே போய் பாத்தா பாக்கெட்டுல அங்கதான் சாராயம் வித்துகினு இருந்தானுவ.இன்னா தாத்தா இங்க கூட்டியாந்துகீறன்னு நான் கோவமா கேட்டா மடைபயமவனே காசுக்கு நான் எங்கடா போவேன் அதான் வெறகு வெட்டியாந்து குடுத்தா மூனு பாக்கெட் குடுப்பானுவன்னு அதுபக்க ஞாயத்தை அது சொல்லுச்சு..

தலையிலிருந்த வெறக தொப்புன்னு போட்டுட்டு போயாகிழவான்னு வேகமா சிவா நடக்க பின்னாடியே நானும் போனேன்,,டேய் எங்கப்பனும் இப்படி தான் குடிக்கிறான்போலன்னு ஏதோ யோசிச்சுகிட்டு வீட்டுக்கு போனான்.மறுநா காலையிலெழுந்து டேய் வாடான்னு என்னையும் கூட்டிகிட்டு காட்டுபக்கமா போனாக்கா வெறக வெட்டிவெச்சிட்டு வேலி ஓரமா திரும்பி ஒன்னுக்கு போயிட்டிருந்தாரு சித்தரண்ன,,

என்னடா பண்ண போறன்னு கேட்க வெறகதூக்கிகினு இன்னைக்கு எப்படி குடிக்கிறபாருய்யான்னு ஓட ஆரம்பிச்சுட்டான்..அவரு கண்ணுக்கு அப்பால ஓடி வந்தா நாராயணந்தாத்தா எதிர வந்துச்சு ..தாத்தா வெறகு ஓனுமின்னா எடுத்துக்கோன்னு அவருகிட்ட குடுத்துட்டு வீட்டாண்ட வந்தோம்..பாத்தா அங்க கையில கொம்போட அவுங்கப்பா கோவமா நின்னுட்டு இருந்தாரு..

திரும்ப எந்தபக்கமா ஓடுரதுன்னு தெரியாம பயத்துல ஓட ஆரம்பிச்சோம்..பின்னாடியே தொரத்திட்டு ஓடியாந்தாரு அவரும்..டேய் கல்லுமோட்டு பக்கமா பொதார்ல ஓடிரலாம் வாடான்னு இழுத்துட்டு ஓடுனேன்..

பாத்தா அங்க சாராயம் விக்குற இடத்துல சனமெல்லாம் கூடி எல்லாத்தையும் அடிச்சு நொறுக்கிட்டு இருக்குங்க..உள்ள நுழைஞ்சு பாத்தா நாராயணந்தாத்தால இருந்து பதினஞ்சு பேருக்கு வாயில நுரைதள்ளிட்டு கிடந்தாங்க..

பொம்பளைங்கெல்லாம் ஓன்னு அழுதுட்டே இருந்ததுங்க..என்னன்னு புரியாம திரும்பி பாத்தா பின்னாடி அவுங்கப்பா. பயத்தில நடுங்க அவரோ கொம்ப போட்டுட்டு திரும்ப போயிட்டிருந்தாரு..

முற்றும்


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.