வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. சிறுகதைகள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்த முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 
 

நூறு சிறந்த சிறுகதைகள் -

எஸ். ராமகிருஷ்ணன்

1. காஞ்சனை - புதுமைபித்தன்
2. கடவுளும் கந்தசாமி பிள்ளையும்- புதுமைபித்தன்
3. செல்லம்மாள் - புதுமைபித்தன்
4. அழியாச்சுடர் -மௌனி
5. பிரபஞ்ச கானம் - மௌனி
6. விடியுமா - கு.ப.ரா
7. கனகாம்பரம் -கு.ப.ரா
8. நட்சத்திர குழந்தைகள் -பி. எஸ். ராமையா
9. ஞானப்பால் - பிச்சமூர்த்தி
10. பஞ்சத்து ஆண்டி - தி.ஜானகிராமன்
11. பாயசம் - தி.ஜானகிராமன்
12. ராஜா வந்திருக்கிறார் - கு. அழகிரிசாமி
13. அன்பளிப்பு - கு. அழகிரிசாமி
14. இருவர் கண்ட ஒரே கனவு � கு. அழகிரிசாமி
15. கோமதி - கி. ராஜநாராயணன்
16. கன்னிமை - கி.ராஜநாராயணன்
17. கதவு. கி.ராஜநாராயணன்
18. பிரசாதம் -சுந்தர ராமசாமி
19. ரத்னாபாயின் ஆங்கிலம் -சுந்தர ராமசாமி
20. விகாசம் - சுந்தர ராமசாமி
21. பச்சை கனவு -லா.ச.ராமாமிருதம்
22. பாற்கடல் -லா.ச.ராமாமிருதம்
23. ஒரு ராத்தல் இறைச்சி - நகுலன்
24. புலிக்கலைஞன் -அசோகமித்ரன்
25. காலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்ரன்
26. பிரயாணம் - அசோகமித்ரன்
27. குருபீடம் - ஜெயகாந்தன்
28. முன்நிலவும் பின்பனியும் - ஜெயகாந்தன்
29. அக்னிபிரவேசம் -ஜெயகாந்தன்
30. தாலியில் பூச்சூடியவர்கள் - பா.ஜெயபிரகாசம்
31. காடன் கண்டது - பிரமீள்
32. உயரமாக சிவப்பா மீசை வைக்காமல் - ஆதவன்
33. ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன்
34. பைத்தியக்கார பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம்
35. மகாராஜாவின் ரயில்வண்டி - அ. முத்துலிங்கம்
36. நீர்மை - ந.முத்துசாமி
37. அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை
38. காட்டிலே ஒரு மான் -அம்பை
39. எஸ்தர் - வண்ணநிலவன்
40. மிருகம் - வண்ணநிலவன்
41. பலாப்பழம் - வண்ணநிலவன்
42. சாமியார் ஜ�விற்கு போகிறார் - சம்பத்
43. புற்றில் உறையும் பாம்புகள் - ராஜேந்திரசோழன்
44. தனுமை - வண்ணதாசன்
45. நிலை - வண்ணதாசன்
46. நாயனம் - ஆ.மாதவன்
47. நகரம் -சுஜாதா
48. பிலிமோஸ்தவ் -சுஜாதா
49. தக்கையின் மீது நான்கு கண்கள் - சா.கந்தசாமி
50. டெரிலின் சர்ட்டும் எட்டு முழு வேஷ்டி அணிந்த மனிதர் - ஜி. நாகராஜன்
51. ஒடிய கால்கள் - ஜி.நாகராஜன்
52. தங்க ஒரு - கிருஷ்ணன் நம்பி
53. மருமகள்வாக்கு - கிருஷ்ணன் நம்பி
54. ரீதி - பூமணி
55. இந்நாட்டு மன்னர் - நாஞ்சில் நாடன்
56. அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன்
57. மரி எனும் ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்
58. சோகவனம்- சோ.தர்மன்
59. இறகுகளும் பாறைகளும் -மாலன்
60. ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி
61. முங்கில் குருத்து - திலீப்குமார்
62. கடிதம் - திலீப்குமார்
63. மறைந்து திரியும் கிழவன் - சுரேஷ்குமார இந்திரஜித்
64. சாசனம் - கந்தர்வன்
65. மேபல் -தஞ்சை பிரகாஷ்
66. அரசனின் வருகை - உமா வரதராஜன்
67. நுகம் - எக்பர்ட் சச்சிதானந்தம்
68. முள் - சாரு நிவேதிதா
69. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் - சுப்ரபாரதி மணியன்
70. வனம்மாள் -அழகிய பெரியவன்
71. கனவுக்கதை - சார்வாகன்
72. ஆண்மை - எஸ்பொ.
73. நீக்கல்கள் - சாந்தன்
74. மூன்று நகரங்களின் கதை -கலாமோகன்
75. அந்நியர்கள் - சூடாமணி
76. சித்தி - மா. அரங்கநாதன்.
77. புயல் - கோபி கிருஷ்ணன்
78. மதினிமார்கள் கதை - கோணங்கி
79. கறுப்பு ரயில் - கோணங்கி
80. வெயிலோடு போயி - தமிழ்செல்வன்
81. பத்மவியூகம் - ஜெயமோகன்
82. பாடலிபுத்திரம் - ஜெயமோகன்
83. ராஜன் மகள் - பா.வெங்கடேசன்
84. தாவரங்களின் உரையாடல் - எஸ்.ராமகிருஷ்ணன்
85. புலிக்கட்டம் - எஸ்.ராமகிருஷ்ணன்
86. இருளப்பசாமியும் 21 ஆட்டுகிடாய்களும் -வேல.ராமமூர்த்தி
87. ஒரு திருணையின் பூர்வீகம் -சுயம்புலிங்கம்
88. விளிம்பின் காலம் - பாவண்ணன்.
89. காசி - பாதசாரி
90. சிறுமி கொண்டு வந்த மலர் - விமாலதித்த மாமல்லன்
91. மூன்று பெர்நார்கள் - பிரேம் ரமேஷ்
92. மரப்பாச்சி - உமா மகேஸ்வரி
93. வேட்டை - யூமா வாசுகி
94. நீர்விளையாட்டு - பெருமாள் முருகன்
95. அழகர்சாமியின் குதிரை - பாஸ்கர் சக்தி
96. கண்ணியத்தின் காவலர்கள் - திசேரா
97. ஹார்மோனியம் - செழியன்
98. தம்பி - கௌதம சித்தார்த்தன்
99. ஆண்களின் படித்துறை. ஜே.பி.சாணக்யா
100. பூனைகள் இல்லாத வீடு - சந்திரா

 

 

 
     
     
     
   
சிறுகதைகள்
1
 
 
     
   
  -----------------------------------  
 

சிறுகதை

சிறுகதை என்பது சுருக்கமான, கதைகூறும் புனைவுவகை உரைநடை இலக்கியமாகும். பெரும்பாலும் ஒரு மையக் கருவினை அல்லது நிகழ்ச்சியின் அநுபவத்தை விபரிக்கும் இலக்கிய வகையாகும். சிறுகதை பொதுவாக குறுநாவல் மற்றும் நாவலை விடச் சுருக்கமானதாகும்.

 
  ---------------------------------  
  ஜெயமோகன்  
  ”சொல்லாதீர்கள், காட்டுங்கள்.” எழுத ஆரம்பிப்பவர்கள் கதைகளை சுருக்கமாகச் சொல்ல முயல்வார்கள். காரணம் அது நாம் சாதாரணமாக வாழ்க்கையில் செய்வது. நடந்ததை சுருக்கமாக சொல்வது. ஆனால் இலக்கியத்தின் நோக்கம் அனுபவத்தைத் தெரிவிப்பது அல்ல. அது கற்பனை மூலம் வாசகனை அந்த அனுபவத்தை தானும் அடைய வைக்கவே முயலவேண்டும். ஆகவே அந்த கதை கண்முன் உண்மையில் நிகழ்ந்தால் எப்படி இருக்குமோ அந்த காட்சியனுபவத்தை வாசகனுக்கு அளியுங்கள். நுண்ணிய தகவல்கள் மூலம் கதையை கண்ணிலே காட்டுங்கள். கடற்கரை வாழ்க்கையை எனக்கு சொல்லாதீர்கள், நானே அங்குவந்து வாழும் அனுபவத்தை எனக்கு அளியுங்கள்.  
  -----------------------------------  
  சிறுகதை வரலாறும், வளர்ச்சியும்  
     
  http://tamilstories-sakthi.blogspot.com/2010/01/blog-post_07.html  
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  சிறுகதைகள் TS கண்காட்சி சிறுகதைகள் வாயில்

கண்காட்சி

மயூரேசன், திருச்சி  

எங்கோ ஒரு தூரத்து கூரையில் இருந்து சேவல் ஒன்று தன் முன்னங்காலில் எம்பி மிகுந்த பிராயத்தனத்துடன் ஒரு தடவை கூவியது. சூரியனின் கதிர் பட்டு அந்தச் சேவலின் சிறகுகள் பளபளத்தன. அங்கங்கே பறவைகள் தம்பாட்டுக்கு தாங்களும் "கீச்.. கீச்..." என்று சத்தம் போடத் தொடங்கிவிட்டிருந்தன. சூரியன் மேற்கில் அலுப்பு முறிக்கத் தொடங்கிவிட்டான்.

இத்தனையும் நிதானமாக நடக்க சுகுமார் மட்டும் பதறித் துடித்து நேரத்தைப் பார்த்தான். காலை நான்கு மணி இருக்கும், சுகுமார் எழுந்துவிட்டான். அருகிலே தூங்கிக்கொண்டு இருந்த தன் தந்தையாரையும் தாயாரையும் பார்த்தான், பின்னர் ஒரு தயக்கத்துடன் தந்தையாரை நெருங்கி.

"அப்பா.. அப்பா..."

"என்னடா தம்பி??" அரைத் தூக்கக் கலக்கத்தில் கேள்வி கேட்டார் சுந்தரேசன்.

"இண்டைக்கு நாங்கள் செய்த அந்த பொம்மை வீட்டை ஸ்கூலுக்குக் கொண்டு போகவேணும். இண்டைக்கு கொண்டு போகாட்டால் என்ட அந்த வீட்டை கண்காட்சியில வைக்கேலாது எண்டு ரீச்சர் சொன்னவர்" ஒருவிதப் பதட்டத்துடன் கூறினான் சுகுமார்.

"சரியடா.. இப்ப படடா! காலம்பிற பஸ் ஸ்டாண்டில கொண்டு வந்து எல்லாச் சாமானையும் தாறன்" புன்னகையுடன் கூறினார் சுந்தரேசன்.

அரைமனதுடன் மீள கண்களை மூடினான் சுகுமார். அவனால் தூங்க முடியவேயில்லை. கனவில் தான் பாடசாலைக்குக் கொண்டு சென்ற பொம்மை வீடு மழை நீர் பட்டு பழுதுபட்டுவிடுவது போன்ற நிகழ்வுகள் திரும்பத் திரும்ப வந்துகொண்டு இருந்தது.

கடைசியாக ஆறு மணியளவில் சுகுமார் தாயாரின் குரல் கேட்டு துகில் நீத்தான்.

சுகுமார் ஏழு வயதுப் பாலகன். இவன் கல்விகற்கும் பாடசாலை இவன் வீட்டில் இருந்து 10 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது. இவன் கிராமத்தில் இருந்து பாடசாலைக்குச் செல்வதென்றால் காலையில் ஏழு மணிக்கு வரும் அரச பேரூந்தில் செல்ல வேண்டும். தனியார் பேரூந்தில் செல்வதென்றால் பணம் அதிகம் செலவாகும், அதனால் இந்த ஏழைகளுக்கு அந்த அரச பேரூந்தே தஞ்சம்.

சில நாட்களுக்கு முன்னர் சுகுமாரின் வகுப்பாசிரியர் தனது மாணாக்கருடன் பேசத் தொடங்கினார்.

"பிள்ளைகளே!!! எங்கட பாடசாலையில ஒரு கண்காட்சி நடக்கப்போகுது.. அதுக்கு நீங்கள் உங்களுக்கு விருப்பமான கைவினைப் பொருட்களைக் கொண்டு வரலாம்"

அன்று முதல் சுகுமார் கனவெல்லாம் தானும் அந்தக் கண்காட்சியில் ஒரு கைவினைப் பொருளை வைக்கவேண்டும் என்பதே. வீடு திரும்பியதும் தன் தந்தையாரை நச்சரித்து ஒரு சிறிய பொம்மை வீடு செய்துகொண்டான்.

அழகான சிவப்பு நிறக் கூரை, பளீர் என்ற வெள்ளை நிறத்தில் சுவர்கள். வீட்டினுள்ளே பொம்மை மனிதர்கள், தளபாடங்கள், தொலைக்காட்சி, வீட்டின் வெளியே சின்னப் பூந்தோட்டம், கிணறு என்று அவன் வீடு கலாதியாக இருந்தது.

இத்தனை வேலையும் முடிய நாட்கள் நன்கு சென்றுவிட்டன. பொறுமை இழந்த ஆசிரியர் நாளை உன் கைவினைப் பொருளைக் கொண்டு வராவிட்டால் அதைக் கண்காட்சிக்குச் சேர்த்துக்கொள்ள முடியாது என்று வகுப்பில் சத்தமிட்டுவிட்டார். சுகுமாருக்கு அதைச் சகிக்கவேயில்லை. இவ்வளவு அழகான வீட்டை எப்படி கண்காட்சியில் வைக்காமல் விடுவது??? இன்று அவனுக்குக் கொடுக்கப்பட்ட தவணையின் கடைசிநாள்.

அதனால்தான் இவ்வளவு பதட்டத்துடன் காணப்படுகின்றான் சுகுமார்.

ஆறு முப்பதுக்கே சாப்பாடு முடித்து பாடசாலை செல்லத் தயாராகிவிட்டான். தந்தையார் சுந்தரேசனும் பொம்மை வீட்டை தன் கைகளில் ஏந்தியவாறு தன் புத்திரனுடன் பஸ் தரிப்பிடத்திற்குச் சென்றனர்.

6.45 க்கு வரவேண்டிய தனியார் பேரூந்து இவர்களைக் கடந்து சென்றது. பேரூந்து கடந்து செல்லும் போது சுகுமாரின் கண்கள் சிறிய ஏக்கத்துடன் தந்தையாரைப் பார்த்தது. அந்தப் பார்வையின் அர்த்தம் புரிந்தாலும் புரியாதது போல தந்தையார் அமைதியாக இருந்துவிட்டார்.

சுகுமாரைப் பொறுத்தவரை நேரம் நத்தை வேகத்தில் நகர்ந்து கொண்டு இருந்தது. அந்தப் பொம்மை வீட்டை ஆசிரியரிடம் ஒப்படைக்கும் வரை அவனுக்கு நிம்மதி இல்லை.

கடைசியாக இப்போது ஏழு மணியாகிவிட்டது. இன்னமும் பேரூந்து வரவில்லை. சுகுமார் கலக்கம் அடையத் தொடங்கினான். தந்தையின் கையில் இருந்த மணிக்கூட்டை அடிக்கடி பார்த்துக்கொண்டான்.

"அப்பா..! ஏன் இன்னும் பஸ் வரேல?"

"அடேய்..!! அரசாங்க பஸ்சுகள் எண்டைக்கடா நேரத்துக்கு வந்திருக்குது?" மகனைத் தேற்றினார் தந்தையார். என்றாலும் அவர் மனதின் அடியிலும் இப்போது சந்தேகம் துளிரிவிடத் தொடங்கியிருந்தது.

நேரம் மெல்ல மெல்ல ஓடத் தொடங்கியிருந்தது. ஏழு மணி மெல்ல மெல்ல நகர்ந்து ஏழு முப்பது ஆகிவிட்டது. சுகுமார் கண்களில் இப்போது கண்ணீர்த் துளிகள்.

மற்றய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வீட்டிற்குத் திரும்ப அழைத்துச் செல்லத் தொடங்கிவிட்டனர்.

"சுந்தரேசன்... கார்த்திக் சொன்னவன், சீ.டி.பி பஸ் இண்டைக்கு பிரேக் டவுனாம். வராதாம், பொடியைக் கூட்டிக்கொண்டு வீட்ட போங்கோ" சொல்லிக்கொண்டே நகர்ந்தார் சுந்தரேசனின் அயல் வீட்டுக்காரன் கதிரேசன்.

"தம்பி நீ நாளைக்கு இத பள்ளிக்கூ......" சொல்லிக் கொண்டே சுந்தரேசன் திரும்பிப் பார்த்தார், அவர் மகன் பேரூந்து செல்ல வேண்டிய திசையில் நடந்துகொண்டு இருந்தான். அவனுக்குத் தெரியும அடுத்துவரும் தனியார் பஸ்சில் தன்னை அனுப்பத் தன் தந்தையிடம் பணம் இல்லை என்பது.

கண்ணில் ஒரு துளி கண்ணீர் ததும்ப, அதை தன் பின்னங்கையால் துடைத்துவிட்டுக்கொண்டே கதிரேசன் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார். கதிரேசனிடம் ஒரு பழைய சைக்கிள் உள்ளது சுந்தரேசனுக்குத் தெரியும்.

முற்றும்


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.