வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. நேர்காணல்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

நூறு சிறந்த சிறுகதைகள் -

எஸ். ராமகிருஷ்ணன்

1. காஞ்சனை - புதுமைபித்தன்
2. கடவுளும் கந்தசாமி பிள்ளையும்- புதுமைபித்தன்
3. செல்லம்மாள் - புதுமைபித்தன்
4. அழியாச்சுடர் -மௌனி
5. பிரபஞ்ச கானம் - மௌனி
6. விடியுமா - கு.ப.ரா
7. கனகாம்பரம் -கு.ப.ரா
8. நட்சத்திர குழந்தைகள் -பி. எஸ். ராமையா
9. ஞானப்பால் - பிச்சமூர்த்தி
10. பஞ்சத்து ஆண்டி - தி.ஜானகிராமன்
11. பாயசம் - தி.ஜானகிராமன்
12. ராஜா வந்திருக்கிறார் - கு. அழகிரிசாமி
13. அன்பளிப்பு - கு. அழகிரிசாமி
14. இருவர் கண்ட ஒரே கனவு � கு. அழகிரிசாமி
15. கோமதி - கி. ராஜநாராயணன்
16. கன்னிமை - கி.ராஜநாராயணன்
17. கதவு. கி.ராஜநாராயணன்
18. பிரசாதம் -சுந்தர ராமசாமி
19. ரத்னாபாயின் ஆங்கிலம் -சுந்தர ராமசாமி
20. விகாசம் - சுந்தர ராமசாமி
21. பச்சை கனவு -லா.ச.ராமாமிருதம்
22. பாற்கடல் -லா.ச.ராமாமிருதம்
23. ஒரு ராத்தல் இறைச்சி - நகுலன்
24. புலிக்கலைஞன் -அசோகமித்ரன்
25. காலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்ரன்
26. பிரயாணம் - அசோகமித்ரன்
27. குருபீடம் - ஜெயகாந்தன்
28. முன்நிலவும் பின்பனியும் - ஜெயகாந்தன்
29. அக்னிபிரவேசம் -ஜெயகாந்தன்
30. தாலியில் பூச்சூடியவர்கள் - பா.ஜெயபிரகாசம்
31. காடன் கண்டது - பிரமீள்
32. உயரமாக சிவப்பா மீசை வைக்காமல் - ஆதவன்
33. ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன்
34. பைத்தியக்கார பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம்
35. மகாராஜாவின் ரயில்வண்டி - அ. முத்துலிங்கம்
36. நீர்மை - ந.முத்துசாமி
37. அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை
38. காட்டிலே ஒரு மான் -அம்பை
39. எஸ்தர் - வண்ணநிலவன்
40. மிருகம் - வண்ணநிலவன்
41. பலாப்பழம் - வண்ணநிலவன்
42. சாமியார் ஜ�விற்கு போகிறார் - சம்பத்
43. புற்றில் உறையும் பாம்புகள் - ராஜேந்திரசோழன்
44. தனுமை - வண்ணதாசன்
45. நிலை - வண்ணதாசன்
46. நாயனம் - ஆ.மாதவன்
47. நகரம் -சுஜாதா
48. பிலிமோஸ்தவ் -சுஜாதா
49. தக்கையின் மீது நான்கு கண்கள் - சா.கந்தசாமி
50. டெரிலின் சர்ட்டும் எட்டு முழு வேஷ்டி அணிந்த மனிதர் - ஜி. நாகராஜன்
51. ஒடிய கால்கள் - ஜி.நாகராஜன்
52. தங்க ஒரு - கிருஷ்ணன் நம்பி
53. மருமகள்வாக்கு - கிருஷ்ணன் நம்பி
54. ரீதி - பூமணி
55. இந்நாட்டு மன்னர் - நாஞ்சில் நாடன்
56. அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன்
57. மரி எனும் ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்
58. சோகவனம்- சோ.தர்மன்
59. இறகுகளும் பாறைகளும் -மாலன்
60. ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி
61. முங்கில் குருத்து - திலீப்குமார்
62. கடிதம் - திலீப்குமார்
63. மறைந்து திரியும் கிழவன் - சுரேஷ்குமார இந்திரஜித்
64. சாசனம் - கந்தர்வன்
65. மேபல் -தஞ்சை பிரகாஷ்
66. அரசனின் வருகை - உமா வரதராஜன்
67. நுகம் - எக்பர்ட் சச்சிதானந்தம்
68. முள் - சாரு நிவேதிதா
69. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் - சுப்ரபாரதி மணியன்
70. வனம்மாள் -அழகிய பெரியவன்
71. கனவுக்கதை - சார்வாகன்
72. ஆண்மை - எஸ்பொ.
73. நீக்கல்கள் - சாந்தன்
74. மூன்று நகரங்களின் கதை -கலாமோகன்
75. அந்நியர்கள் - சூடாமணி
76. சித்தி - மா. அரங்கநாதன்.
77. புயல் - கோபி கிருஷ்ணன்
78. மதினிமார்கள் கதை - கோணங்கி
79. கறுப்பு ரயில் - கோணங்கி
80. வெயிலோடு போயி - தமிழ்செல்வன்
81. பத்மவியூகம் - ஜெயமோகன்
82. பாடலிபுத்திரம் - ஜெயமோகன்
83. ராஜன் மகள் - பா.வெங்கடேசன்
84. தாவரங்களின் உரையாடல் - எஸ்.ராமகிருஷ்ணன்
85. புலிக்கட்டம் - எஸ்.ராமகிருஷ்ணன்
86. இருளப்பசாமியும் 21 ஆட்டுகிடாய்களும் -வேல.ராமமூர்த்தி
87. ஒரு திருணையின் பூர்வீகம் -சுயம்புலிங்கம்
88. விளிம்பின் காலம் - பாவண்ணன்.
89. காசி - பாதசாரி
90. சிறுமி கொண்டு வந்த மலர் - விமாலதித்த மாமல்லன்
91. மூன்று பெர்நார்கள் - பிரேம் ரமேஷ்
92. மரப்பாச்சி - உமா மகேஸ்வரி
93. வேட்டை - யூமா வாசுகி
94. நீர்விளையாட்டு - பெருமாள் முருகன்
95. அழகர்சாமியின் குதிரை - பாஸ்கர் சக்தி
96. கண்ணியத்தின் காவலர்கள் - திசேரா
97. ஹார்மோனியம் - செழியன்
98. தம்பி - கௌதம சித்தார்த்தன்
99. ஆண்களின் படித்துறை. ஜே.பி.சாணக்யா
100. பூனைகள் இல்லாத வீடு - சந்திரா

 

 

 
     
     
     
   
சிறுகதைகள்
1
 
 
     
   
  -----------------------------------  
 

சிறுகதை

சிறுகதை என்பது சுருக்கமான, கதைகூறும் புனைவுவகை உரைநடை இலக்கியமாகும். பெரும்பாலும் ஒரு மையக் கருவினை அல்லது நிகழ்ச்சியின் அநுபவத்தை விபரிக்கும் இலக்கிய வகையாகும். சிறுகதை பொதுவாக குறுநாவல் மற்றும் நாவலை விடச் சுருக்கமானதாகும்.

 
  ---------------------------------  
  ஜெயமோகன்  
  ”சொல்லாதீர்கள், காட்டுங்கள்.” எழுத ஆரம்பிப்பவர்கள் கதைகளை சுருக்கமாகச் சொல்ல முயல்வார்கள். காரணம் அது நாம் சாதாரணமாக வாழ்க்கையில் செய்வது. நடந்ததை சுருக்கமாக சொல்வது. ஆனால் இலக்கியத்தின் நோக்கம் அனுபவத்தைத் தெரிவிப்பது அல்ல. அது கற்பனை மூலம் வாசகனை அந்த அனுபவத்தை தானும் அடைய வைக்கவே முயலவேண்டும். ஆகவே அந்த கதை கண்முன் உண்மையில் நிகழ்ந்தால் எப்படி இருக்குமோ அந்த காட்சியனுபவத்தை வாசகனுக்கு அளியுங்கள். நுண்ணிய தகவல்கள் மூலம் கதையை கண்ணிலே காட்டுங்கள். கடற்கரை வாழ்க்கையை எனக்கு சொல்லாதீர்கள், நானே அங்குவந்து வாழும் அனுபவத்தை எனக்கு அளியுங்கள்.  
  -----------------------------------  
  சிறுகதை வரலாறும், வளர்ச்சியும்  
     
  http://tamilstories-sakthi.blogspot.com/2010/01/blog-post_07.html  
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  சிறுகதைகள் TS ஒற்றை சாளரம் சிறுகதைகள் வாயில்

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்...

யுவன் சந்திரசேகர்  

மத்தியான வேளை. மண்டையைத் துளைக்கும் உச்சிவெயில். வெறிச்சோடிய மின்ரயில் நிலையம் கத்திரிவெயிலின் உக்கிரத்தைப் பலமடங்கு அதிகரித்துக் காட்டியது. வெயிலின் விளிம்பை நீங்கி விலகியோடத் துடித்து நீளும் தண்டவாளங்கள் தொலைவில் வளையுமிடத்தில் கானல் மிதந்தது. இன்றைக்குச் சென்று வந்த நேர்முகத்தின் பலன் பற்றி மீண்டும் ஒரு மின்னல் முத்தையாவுக்குள் ஓடி விதிர்த்து மறைந்தது.

குளிர்பானம் குடிக்க முடிவெடுத்தான். கடைக்காரரிடம் பானத்தின் பெயர் சொன்னான்.

நிலையக் கூரையைத் தாங்கி நின்ற கம்பத்தின் அருகே, பார்வையில்லாத பெண் ஒருத்தி உட்கார்ந்திருந்தாள். அவள்மீது கவனம் குவிந்தது. குச்சிகுச்சியான கைகள். தட்டையான மார்பு. எலும்பைத் தவிர வேறு எதுவும் இல்லாத உடல். முன்பக்க முந்தானை பிடிப்பின்றி விலகி ஒருக்களித்திருந்தது. தோள்பைக்குள்ளிருந்து எடுத்த மஞ்சள் பையை மடியில் கவிழ்த்துக் கொட்டினாள். உதிர்ந்த சில்லறைகளை வேகவேகமாக எண்ணத் தொடங்கினாள் - அருகில் நின்ற சோனிக் குழந்தையை அவ்வப்போது ’காசெ எடுத்தே, கொன்னுப்புருவேன்’ என்று மிரட்டியபடி.

எவ்வளவு காசுகள். முத்தையாவுக்கு ஒரு கணம் பொறாமையாக இருந்தது. சில்லறைகளை ஒரு பெரிய சுருக்குப் பைக்குள் போட்டுவிட்டு, தோள்பைக்குள் கையை நுழைத்துத் துழாவினாள். தன்னைச் சுற்றிலும் கையெட்டும்வரை தரையைக் கையால் தடவிப் பார்த்தாள். ’பைக்குள்ளெருந்து ஒரு பத்து ரூவா நோட்டு விளுந்திச்சே. எங்கெ சனியனே? கையிலெ வச்சிருக்கியா, திருட்டுச் சிறுக்கி?’ என்று குழந்தையின் முதுகில் ஓர் அறை வைத்தாள்.

’இல்லே, இல்லேம்மா’ என்று அலறி விட்டு, உரத்து அழ ஆரம்பித்தது அது.

அப்ப அவென்தான் களவாண்டுருப்பான். எங்கெ அந்தப் பிச்செக்கார நாயெ. அவனெ எங் கையாலெ ஒரு சாத்துச் சாத்துனாத்தான் எனக்கு அடங்கும்.

என்று அறிவித்துவிட்டு, ரயில் பாலப் படிக்கட்டை நோக்கி நடந்தாள். கைக்கோலை ஊன்றாமல் அவள் விரைவாக நடப்பதை வியப்புடன் பார்த்தான் முத்தையா. தடுமாறாமல் நடந்தாளே யொழிய, சட்டென்று புரியாத, துரிதமான ஒரு கணக்கு அவள் நடையில் இருப்பது தெரிந்தது. குழந்தை அழுதுகொண்டே பின்னால் ஓடியது.

ஒழுங்கற்ற குச்சுத் தாடியுடன் கீழ்ப்படியில் உட்கார்ந்திருந்தவனிடம் போய் நின்றாள். அவனும் பார்வையில்லாதவன். ஏதோ சொல்லியவாறு அவன் உச்சந்தலையில் ஓங்கிக் குட்டினாள். எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்தவன் உடனடியாய் சுதாரித்துக்கொண்டான். ’தேவிடியாச் சிறுக்கி’ என்று ஆவேசமாய் எழுந்தான். இவள் இருந்த திசையில் கையை வீசினான். வீச்சின் அரைவளையத்துக்கு வெளியில் நகர்ந்துவிட்டிருந்தாள் இவள்.

இருவரும் ஒருவரையொருவர் தாக்குவதற்காக முயன்று காற்றில் கடும் வேகத்துடன் இலக்கின்றிக் கைகள் போய்வந்தன. குழந்தை பெருங் குரலில் அலறிக்கொண்டே அருகில் நின்றது.

முத்தையா பதட்டத்துடன் நகர்ந்தான். எட்டிக் கழுத்தை நீட்டி வேடிக்கை பார்த்த கடைக்காரர்,

நீங்க தலையிடாதீங்க சார். அவுங்க ரெண்டுபேரும் புருசம் பொண்டாட்டி என்றார்.

அவன் கையில் அவள் தலைமுடி அகப்பட்டுவிட்டது. கையால் சுழற்றிக் கீழே தள்ளி அவள் மேல் விழுந்தான். எலும்பு தரையில் மோதும் ஒலி தட்டென்று கேட்டது. இலக்கு சிக்கியதில் நிம்மதியானவர்கள் மாதிரி இருவரும் ஒருவரையொருவர் ஒருகையால் பிடித்துக்கொண்டு மறுகையால் தாக்கிக்கொண்டு உருண்டார்கள். சுற்றிலும் பத்திருபது பேர் சேர்ந்துவிட்டார்கள்.

தொலைவில் ரயிலோசை கேட்டது. சண்டை உடனடியாக நின்றது. அவள் உடைகளை வேகமாகச் சரி செய்துகொண்டாள். அவன் தனது தோள் பையிலிருந்து பெரிய கஞ்சிராவை எடுத்தான். ரயில் வந்து நின்றது. பெட்டிச்சுவரைக் கையால் தடவி உணர்ந்து இருவரும் ஏறினார்கள். அழுகையை நிறுத்தியிருந்த குழந்தை பின்தொடர்ந்தது. மறு நிமிடம் ரயில் கிளம்பியது. அவள் பாடும் குரல் ஜன்னல் வழி வெளியே வந்தது.

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்...

அவனுடைய தாளம் பின் தொடர்ந்தது. ’நல்ல குரல் அவளுக்கு’ என்று நினைத்துக்கொண்டான் முத்தையா.

---------------------------------------------------------------------------------------------


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.