வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கொஞ்சம் தேநீர்...கொஞ்சம் அரட்டை் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்த முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 
 

கல்கி

கல்கி அவர்கள் 1899-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புட்டமங்கலம் என்னும் ஊரில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். ஆரம்பப்பள்ளிப் படிப்பைத் தனது கிராமத்தில் முடித்த பிறகு அவர் திருச்சியில் உள்ள தேசிய உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார்.

கல்கி (செப்டம்பர் 9, 1899 - டிசம்பர் 5, 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.

ப. சிங்காரம்

எழுத்துலகத்திலிருந்தும் குறிப்பாக நூல்களை பதிப்பிப்பதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் காரணமாகத் தொடர்ந்து எழுதாமல் ஒதுங்கிக் கொண்டார். 1950_ஆம் ஆண்டு ‘கடலுக்கு அப்பால்’ நாவலை எழுதினார். புலம் பெயர்ந்து அந்நியச் சூழலில் வாழும் தமிழர்கள் வாழ்வை களனாகக் கொண்டு எழுதப்பட்ட முதல் நாவல் இது. இதைப் பிரசுரம் செய்ய மதுரைக்கும் சென்னைக்குமாக பல தடவைகள் அலைந்தார். பின்னர் ஆனந்தவிகடன் நாவல் போட்டிக்கு அனுப்பினார், திரும்பி வந்தது. ஒன்பது வருடங்களுக்கு பிறகு 1959_ஆம் ஆண்டு கலைமகள் நாவல் போட்டியில் ‘கடலுக்கு அப்பால்’ முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது. 1962_ஆம் ஆண்டு ‘புயலிலே ஒரு தோணி’ நாவலை எழுதினார். அது பத்து ஆண்டுகளாக பல பிரசுரகர்த்தர்களின் கைமாறி, கடைசியில் மலர் மன்னன் (‘1/4’ இதழை நடத்தியவர்) எடுத்துக்கொண்ட முயற்சியின் விளைவாக 1972_ஆம் ஆண்டு கலைஞன் பதிப்பகத்தால் பெரியதாகயிருக்கிறது என்கிற காரணம் சொல்லி எடிட் செய்யப்பட்டு, வெளியானது. ‘‘அதிகாரம், செல்வாக்கு, நட்பு, அரசியல் போன்ற பல குறிக்கீடுகளால் படைப்பு தீர்மானிக்கப்-படும் தமிழ்ச் சூழலில், எழுத்தாளனுடைய வேலை எழுதுவது மட்டுமே என்று ஒதுங்கியிருந்த சிங்காரம் பல காலமாகச் சற்றும் பொருட்படுத்தப்படாமல் அசட்டையாக ஒதுக்கப்பட்டிருந்தது ஆச்சர்யமில்லை’’ என்கிறார் விமர்சகரான சி. மோகன். ‘புதுயுகம் பிறக்கிறது’ பத்திரிகையில் வெளியான நாவல் பற்றிய கட்டுரையில் தொடங்கி தமிழ்ச் சூழலில் ப. சிங்காரத்தின் முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் சி. மோகன் மட்டும்தான். சிங்காரத்தின் மறைவுக்குப் பின்னர் 1999_ஆம் ஆண்டு தமிழினி பதிப்பகம் ‘புயலிலே ஒரு தோணி’, ‘கடலுக்கு அப்பால்’ இரண்டு நாவல்களையும், எடிட் செய்யப்படாத மூலப் பிரதியை தேடியெடுத்துப் பதிப்பித்தது

 

 

 

 
     
     
     
   
எழுத்தாளர்கள்
1
 
 

புதுமைப்பித்தன்

உலகின் சிறந்த சிறுகதை ஆசிரியர்கள் எவரோடும் சமமாக வைத்துப் பேசப்படக்கூடிய எழுத்து புதுமைப்பித்தனுடையது. திருநெல்வேலியில் 1906&ல் பிறந்த இவரது பெயர் விருத்தாசலம். முதல் கதை, மணிக்கொடி இதழில் 1934\ம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு தொடர்ந்து பதினாலு ஆண்டுகள் சிறுகதை, கவிதை, நாடகம், சினிமா, அரசியல் கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கதைகள் என பன்முகத் தன்மைகொண்ட கலைஞனாக விளங்கினார். இவரது கதைகளை தமிழ்வாழ்வின் நாடித் துடிப்புகள் எனலாம். கடவுளைக்கூட காபி கிளப்புக்கு அழைத்துச் செல்லும் அபூர்வமான பகடி கொண்ட எழுத்து புதுமைப்பித்தனுடையது. காசநோய் தாக்கி 42 வயதில் மரணமடைந்த இந்த அபூர்வ கலைஞன், புதிய தமிழ்ச் சிறுகதைகளுக்கு மூலவித்தாக தனது படைப்புகளை விட்டுச் சென்றிருக்கிறார்.

 
  ---------------------------------  
  ல. ச. ராமாமிர்தம்  
 

லா.ச.ரா.வின் முதல் கதை 18வது வயதில் வெளியானது. லா. சா. ராமாமிர்தம் ஆரம்பத்தில் சிறுகதைகள் எழுதிவந்த அவரை அவருடைய 50-வது வயதில் சென்னை வாசகர் வட்டம் "புத்ர" என்ற நாவல் எழுத வைத்தது. அவருக்கு 1989-ல் "சாகித்ய அகாதெமி விருது" பெற்றுத் தந்த சுயசரிதை ""சிந்தாநதி தினமணி கதிரில் தொடராக வந்தது.

லா.ச.ரா.வின் படைப்புகள் பல இந்திய மற்றும் அயல் மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட "மஹஃபில்", பெங்குவின் நிறுவனத்தார் வெளியிட்ட "நியூ ரைட்டிங் இன் இந்தியா" செக் மொழியில் அவரை மொழியாக்கம் செய்த கமீல் ஜீவலபில் என்ற தமிழ் ஆய்வாளர் சுதந்திர இந்தியாவின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக லா.ச.ரா.வைக் கருதினார். அவருடைய "பாற்கடல்" என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள். அவருடைய "புத்ர" மற்றும் "அபிதா" நாவல்கள் மொழிநடையால் தனித்துச் சிறந்து விளங்கும். கட்டுரை நூல் "சிந்தாநதி" அவருடைய இயல்பான குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில் எழுதப்பட்டது.

 
  ---------------------------------  
  சி.சு.செல்லப்பா  
     
 

சி.சு.செல்லப்பா தமிழின் சிறப்புவாய்ந்த எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். எழுத்து என்ற பத்திரிக்கையினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா.

பல நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர் செல்லப்பா. சிறந்த விமர்சகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட் சாமிநாதன், பிரமீள், ந.முத்துசாமி மற்றும் பல எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பாவினால் ஊக்குவிக்கப்பட்டவர்கள். தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படும் வாடிவாசல், சுதந்திர தாகம் போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா. காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர்.

 
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS மற்றவை TS கொஞ்சம் தேநீர்...கொஞ்சம் அரட்டை


கொஞ்சம் தேநீர்... நிறைய அரட்டை... - கி. ராஜநாராயணன்

சா.ரு. மணிவில்லன்  

தமிழ் ஸ்டுடியோ.காம் அங்கமான கூடு இணைய இதழின் கொஞ்சம் தேநீர்...நிறைய அரட்டை...ஒவ்வொரு மாதமும் நான்காவது சனிக்கிழமை நடத்துவது என முடிவானது. அதன் படி முதல் சந்திப்பு கரிசல் காட்டுத் தந்தை கி.ரா.வுடன் என முடிவாயிற்று. புதுவையில் வசிக்கும் கி.ரா.வுடன் சந்திப்புக்கு சுமார் 65 ஆர்வலர்கள் பதிவு செய்தனர் அவர்களில் சுமார் 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் இறுதியில் ஆறு ஆர்வலர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர். ஆர்வலர்களுக்கு முதலில் இருந்த ஆர்வம் இறுதியில் இல்லாமல் போனது வருத்தப்பட கூடிய நிகழ்வாகும். சென்னை கோயம்பேடு பேருந்து நிறுத்தத்திலிருந்து 25.9.10 காலை 9 மணிக்கு புறப்படுவது என ஆர்வலர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. சரியான நேரத்திற்கு மூன்று பேர்களும், அரைமணி நேர தாமதத்தில் இரண்டு நபர்களும் ஒரு மணி நேர தாமத்தில் மற்றொரு நபரும் என ஒன்று சேர்ந்தோம்.

திட்டமிட்டிருந்த நேரத்திற்கு ஒன்னறை மணிநேரம் தாமதமாக புறப்பட்டோம். எவ்வளவு வசதியாக சாலை அமைக்கப்பட்டாலும் ஒட்டுநர் மனது வைக்கவில்லை என்றால் பயண நேரம் குறையாது. எந்த பேருந்தையும் தவறியும் முந்திவிடக்கூடாது என்பதில் நாங்கள் சென்ற பேருந்தின் ஒட்டுநர் கவனமாக இருந்தார்.

கி.ரா. வை சந்திக்க புறப்பட்ட குழுவில் பேராசிரியர் கோபி, கல்லூரி மாணவர் யுகேந்திரன் குறும்பட இயக்குனர்கள் செந்தில், பத்மநாபன், அச்சகத்தில் பணிபுரியும் முருகேசன், ஒரு உதவி இயக்குனர் என பல தரப்பினரும் இருந்தோம்.

புதுவைக்கு சுமார் மதியம் 2 மணியளவில் சென்று சேர்ந்தோம். அரியங்குப்பத்திலுள்ள மயூரி நாட்டியாலயா நடனப்பள்ளி முதல்வர் கலைமாமணி முருகன் வீட்டில் சிறப்பான விருந்து உபசரிப்பு நடைப்பெற்றது. குறும்பட ஆர்வலர்கள் என்ற உணர்வே எங்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அவர் புதல்வர் ஜெய்வினோ மற்றும் அவர் மனைவி குடும்பத்தினர் எங்களை உபசரிப்பதில் பெரும் ஈடுபாட்டை செலுத்தினர். குடும்ப தலைவரின் எண்ணத்தை குடும்ப உறுப்பினர்கள் ஆமோதிப்பதை காணும்போது மகிழ்ச்சியாக உள்ளது. வள்ளுவன் சொன்ன விருந்தோம்பலை இந்த குடும்பம் நன்றாக உணர்ந்துள்ளது.

மதியம் இரண்டு மணிக்கு திட்டமிட்டிருந்த கூட்டம் எங்கள் தாமத வருகையினால் மாலை நான்கு மணிக்கு சந்திப்பு தொடங்கியது. கி.ரா.வை அழைத்து வர குறும்பட இயக்குனர் யாழ்நிலவன் மிகவும் உதவிகரமாக இருந்தார். கி.ரா. வெள்ளை உடுப்பில் தனது துணைவியாருடன் வந்திருந்தார். தோழர் சூரியதீபனையும் உடன் அழைத்து வந்திருந்தார்.

தமிழ் ஸ்டுடியோ, அருண் குறும்பட ஆர்வலர்களை கி.ரா. வுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

கி.ரா தன் பேச்சின் துவக்கத்தில் ''ஒரு எழுத்தாளனின் எழுத்தை படிக்காமலேயே ஒரு பேட்டியை எடுத்துவிட முடியும். அப்படி அல்லாமல் என் படைப்பு சார்ந்த கேள்விகளை எழுப்பினால் நன்றாக இருக்கும்'' எனக் குறிப்பிட்டார். அங்கு கேட்கப்பட்ட சில கேள்வி-பதில்கள் இங்கு வாசகர் பார்வைக்காக.

கேள்வி - நாட்டுப்புற கதைகளில் பெரும்பாலும் நீதி சொல்லப்பட்டிருக்கும். ஆனால் தற்கால இலக்கியத்தில் அறிவுரை சொல்வதல்ல.. ஒரு அனுபவத்தை தருவதுதான் படைப்பின் நோக்கம் என்று சொல்லப்படுவது குறித்து உங்கள் கருத்து என்ன?

கி.ரா - எந்த ஒரு படைப்பும் வெறுமனமே எழுதப்படுவதில்லை நீங்கள் தேடிப் பார்க்க வேண்டும். வாழைப்பழத்தை உரித்துக் கொடுக்க முடியாது. நீங்கள்தான் உறித்து சாப்பிட வேண்டும். நீங்கள் நீதி இல்லை என்று நினைக்கும் கதையை சொல்லுங்கள் நான் அதிலுள்ள நீதியை கூறுகிறேன்.

(இந்த மாதம் காலச்சுவடில் வெளிவந்த கதையை ஒரு ஆர்வலர் கூற அதுப்பற்றிய விவாதம் மேலும் தொடர்ந்து)

கேள்வி - உங்கள் படைப்பில் கிராமத்து வாழ்க்கை மிக துல்லியமாக சொல்லப்பட்டு இருக்கிறது. இது உங்கள் சொந்த அனுபவமா இல்லை கற்பனைப் படைப்பா?

கி.ரா. எல்லா படைப்புகளும் என் அனுபவம் மட்டுமல்ல என் நண்பர்கள், என் உறவினர்கள் பார்த்ததும், கேட்டதுமான விசயங்களை சிறிது கற்பனை கலந்து படைப்பாக மாற்றியுள்ளேன்.

கேள்வி - உங்கள் கதவு சிறுகதையை அண்மையில் வாசித்தேன். எனக்கு பிடித்துள்ளது. அதை குறும்படமாக்க விரும்புகிறேன். உங்கள் அனுமதி கிடைக்குமா?

கி.ரா. தாராளமாக, என்னுடைய படைப்புகைள நீங்கள் குறும்படம் எடுக்கலாம். என்னிடம் அனுமதி வாங்க வேண்டும். என் கதைக்காக ஒரு தொகை (சன்மானமாக) தர வேண்டும்.

கேள்வி - இசங்களைப்பற்றிய (இலக்கிய கோட்பாடுகள்) உங்கள் பார்வை என்ன?

கி.ரா. - இசங்களைப்பற்றிய கவலை எனக்கு கிடையாது. நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதுதான் எனக்கு முக்கியமானது. அதை எப்படி சொல்ல போகிறேன் (வடிவங்கள்) என்பதைப் பற்றிய கவலை எனக்கில்லை.

கேள்வி - நீங்கள் அதிகம் கதை மாந்தர்களாக சித்தரித்த நாயக்கர் சமூகத்தில் இருந்த குழந்தை திருமணம் பற்றிய பதிவுகள் உங்கள் படைப்பில் ஏதும் இல்லை என்ற கருத்துக்கு என்ன பதில் சொல்ல விரும்புகிறீர்கள்?

கி.ரா. - உண்மைதான். நான் எல்லாவற்றையும் பதிவு செய்து விட்டேன் என்று சொல்லவில்லை.

கேள்வி - தியாகராசரின் தெலுங்கு கீர்த்தனை தமிழில் மொழிப்பெயர்ப்பதைவிட நேரடியாக தமிழ் இசைக் கீர்த்தனைகள் எழுத வேண்டும். அதற்கு சரியான நபராக இசையமைப்பாளர் இளையராசா பெயரை குறிப்பிட்டிருந்தீர்கள். அதன் பிறகு ஏதாவது கீர்த்தனை இயற்றப்பெற்றதா?

கி.ரா. - இசைக்கீர்த்தனைகளுக்கு வர்ணமெட்டு மிக முக்கியமானது. இசையறியும், மொழியறிவும் இருக்கும் ஒருவர் இசைக்கீர்த்தனைகள் எளிதாக எழுத முடியும் என்ற வகையில் இளையராசா பெயரைக் குறிப்பிட்டேன். கால சூழலில் நாங்கள் இருவரும் சேர்ந்து இருக்க முடியாமல் போயிற்று.

கேள்வி - உங்கள் சமகால எழுத்தாளர்களில் யாருடைய எழுத்து உங்களுக்கு பிடிக்கும்?

கி.ரா. - இதுபோல் பட்டியல் போடுகிறது எனக்கு பிடிக்காது. ஒரு வாசகன் எல்லோருடைய படைப்புகளையும் தேடிப் படிக்க வேண்டும்.

கேள்வி - ஆரம்ப கால கதைகளில் கதைமாந்தர்கள் மட்டும் வட்டார வழக்கு பேசினார்கள். பிறகு கதைச் சொல்லியும் வட்டார வழக்கு மாறியதினால் வாசகர்களுக்கு மிக சிரமமாக உள்ளதே?

கி.ரா. - நீங்கள் சொல்வது உண்மைதான். முதலில் கதை மாந்தர்கள் மட்டும்தான் வட்டார வழக்கு பேசினார்கள். பிறகு கதை சொல்லியும் வட்டார வழக்கு பேசியதற்கு காரணம். வட்டார வழக்கு பேசக்கூடிய கதை மாந்தர்களின் கதை சொல்லியும் அப்படி இருந்தால் நன்றாக இருக்குமென கருதியதால்தான். இதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பிற்காலத்தில் எல்லோரும் அவர் அவர் சார்ந்த வட்டார வழக்குகளில் எழுத ஆரம்பித்து விட்டார்கள். ஒவ்வொரு வட்டார வழக்கிற்கும் அகராதி உள்ளது. புதிது புதியதாக வந்துக் கொண்டும் உள்ளது. வாசகன் எல்லாவற்றையும் தேடிச் செல்ல வேண்டும்.

சுமார் இரண்டு மணி நேரம் கேள்வி பதில் நீண்டது. இடையில் தேநீர் பருகினோம். இறுதியாக கி.ரா. ஒரு கெட்ட வார்த்தை கதை (பாலியல் சார்ந்த கதை) சொல்லி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

பதினைந்து பேர் வருவதாக சொல்லி கடைசியில் ஏழு பேர் கலந்து கொண்டது. முதலில் மதியம் எனக்கூறி பிறகு சந்திப்பை மாலை நேரத்திற்கு மாற்றியது, படைப்பு சார்ந்த கேள்விகள் அதிகம் இல்லாதது எல்லாம் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. தமிழ் ஸ்டியோ ஏற்படுத்திக் கொடுக்கும் வாய்ப்பை குறும்பட ஆர்வலர்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள முன் வரவேண்டும். இது முதல் நிகழ்வு என்பதினால் குறைகளை பெரியதாக கருத வேண்டியதில்லை. இனிவரும் சந்திப்புகளை சிறப்பாக மாற்ற ஆர்வலர்கள் முன்வரவேண்டும்.

மேலும் நிகழ்வு சார்ந்த ஒளிப்படங்களைக் காண:

http://picasaweb.google.co.in/thamizhstudio/clwXTG#




நிகழ்வின் ஒளித்தொகுப்பை (வீடியோ) காண: 

http://koodu.thamizhstudio.com/oliyum_oliyum_ktka_kira_1.php

-------------------------------------------------------------------------
கொஞ்சம் தேநீர்...
நிறைய அரட்டை...
                     ...எழுத்தாளுமையுடன் ஓர் உரையாடல்

கூடு இணையதளத்தின் மாதந்திர நிகழ்ச்சியாக ஆகஸ்ட் மாதம் முதல் ஒவ்வொரு மாதம் நான்காம் சனிக்கிழமையும் கொஞ்சம் தேநீர்...கொஞ்சம் அரட்டை என்கிற நிகழ்ச்சி நடைபெறும்.

இது புகழ்பெற்ற எழுத்தாளர்களுடன் ஒரு மாலை நேரத்தில் தேநீர் விருந்தோடு கலந்துரையாடும் நிகழ்வாகும்.

கையில் ஒரு கோப்பை தேநீரோடு, நாம் நேசிக்கும் எழுத்துக்கு சொந்தக்காரரான எழுத்தாளருடன் அவர் எழுத்து பற்றியும், அவரின் பிற ஆர்வங்கள் பற்றியும், அவரின் புகழ் பெற்ற புத்தகங்கள் பற்றியும், தற்கால இலக்கிய உலகின் போக்கு குறித்தும் கலந்துரையாடலாம். இந்நிகழ்வில் பங்கு பெற பத்து பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். முதலில் முன்பதிவு செய்யப்படும் பத்து நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

மிக முக்கியமான விதிமுறை.. இதில் பங்குபெற விரும்புவோர் அந்த மாதம் நாம் சந்திக்க இருக்கும் எழுத்தாளரின் புத்தகங்களை படித்திருக்க வேண்டும். அவரின் புத்தகங்கள் குறித்து நேர்மையான கருத்துகள் கொண்டிருக்க வேண்டும். பங்குபெற விரும்பும் நண்பர்களின் முன்பதிவுக்கேற்ப மூன்றாவது சனிக்கிழமை தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தில் நேர்முகத் தேர்வு நடைபெறும். இதில் அந்த எழுத்தாளர் புத்தகங்களை படித்துள்ள நண்பர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

நிகழ்வு அருமையான கலாச்சார சூழல் நிறைந்த இடத்திலோ, எழுத்தாளரின் வீட்டிலோ, அல்லது ஒரு அருமையான தேநீர்க் கடையிலோ நடைபெறும்.

முதல் மாதம்.... இந்நிகழ்வில் பங்கேற்கும் எழுத்தாளர் கரிசல்காட்டு எழுத்தாளர் திரு. கி. இராஜநாராயணன் அவர்கள். நிகழ்வு புதுச்சேரியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

இதில் பங்கேற்க விரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 9840698236, 9894422268

முன்பதிவு செய்ய வேண்டிய இறுதி நாள்: செப்டம்பர் 20, 2010... நிகழ்வு நடைபெறும் நாள்: செப்டம்பர், 25, 2010 மாலை மூன்று மணியளவில்..
இடம் புதுச்சேரி..


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</