வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

சில கவிதைகள் :

விதி

அந்திக்கருக்கலில்
இந்தத்திசை தவறிய
பெண்பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலை மோதிக்கரைகிறது.

எனக்கதன்கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்

இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை.

--கலாப்ரியா 

-----------------------------------------

சைக்களில் வந்த
தக்காளி கூடை சரிந்து
முக்கால் சிவப்பில் உருண்டது
அனைத்து திசைகளிலும் பழங்கள்
தலைக்கு மேலே
வேலை இருப்பதாய்
கடந்தும் நடந்தும்
அனைவரும் போயினர்
பழங்களை விடவும்
நசுங்கி போனது
அடுத்த மனிதர்கள்
மீதான அக்கறை

--கல்யாண்ஜி


-----------------------------------------

ஒரு கட்டு வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு புகையிலை
வாய் கழுவ நீர்
பிளாஸ்க் நிறை ஐஸ்
ஒரு புட்டி பிராந்தி
வத்திப்பெட்டி சிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு.

--நகுலன்

-----------------------------------------
வாழ்க்கை

நான் என் காலை வைக்கவேண்டிய படி எது?
நான் குலுக்க வேண்டிய கை,
நான் அணைக்க வேண்டிய தோள்,
நான் படிக்க வேண்டிய நூல்,
நான் பணியாற்ற வேண்டிய இடம்
ஒன்றும் எனக்குத் தெரியவில்லை

இப்படி இருக்கிறது வாழ்க்கை.

-- பசுவய்யா 

-----------------------------------------

என்ன மாதிரி

என்னை நோக்கி ஒருவர் வந்தார்
எதையோ கேட்கப் போவது போல

கடையா? வீடா? கூடமா? கோயிலா?

என்ன கேட்கப் போகிறாரென்று
எண்ணிக் கொண்டு நான் நின்றிருக்கையில்

அனேகமாய் வாயைத் திறந்தவர் என்னிடம்
ஒன்றும் கேளாமல் சென்றார்.

என்ன மாதிரி உலகம் பார் இது.

--ஞானக்கூத்தன்

 

 

 

 

 

 

 

 

 
     
     
     
   
கவிதைகள்
1
 
   
 

கவிதைகள்

கவிதை என்பதற்கு பல பார்வைகளில் வெவ்வேறு வரையறைகள் உண்டு. கவிதை சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்திலக்கியக் கலை வடிவம் ஆகும். உணர்ச்சி, கற்பனை, கருத்துக்களை வெளிப்படுத்தவும் தூண்டவும் கவிதை உதவுகின்றது.

 
  -----------------------------------  
  தமிழின் முக்கியமான கவிஞரான ‘பிரமிள்’ எழுதிய புகழ்பெற்ற கவிதை இது  
 

சிறகிலிருந்து பிரிந்த
ஒற்றை இறகு
காற்றின் முடிவற்ற பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச்செல்கிறது

 
  -----------------------------------  
  புதுக்கவிதை சுருக்கமான வரலாறு  
     
  http://www.jeyamohan.in/?p=290  
     
     
     
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS கவிதைகள்
கவிதைகள் வாயில்


என‌க்கான‌தொரு நில‌ம்

லிவி 27-09-2011, 07:55 PM


ஒரு நெடும்பகல் கடந்துசெல்லும்
நாட்களில் கண்டிருக்கிறேன்
வாழ்வறியா வெறுமையின் நீறூற்றினை

மொழியறியாதெனினும் உணர்வறிந்திருந்த காலங்கள்
இச்சை உற்றிருந்த பொழுதன்றி
வேறெதுவாயும் நினைவில் இல்லை

போகக் கடவுள் புணர்வையும் மதுவையும்
ஒருசேர படைத்துவிட்ட‌ கொள்கைப் பிரிவை
த‌ன‌தாக்கி நொந்து கொண்டார்.

ஐம்புல‌ன் கொண்ட‌ காமுமும்
ஆற‌றிவ‌ற்ற‌ போதையும்
யாமென‌க் கொண்டாட‌ த‌குதிய‌ற்ற‌ மானுட‌ம்.

ப‌ட்டாவாக்கிக் கொண்ட நிலமும்
முய‌ங்கித் திரிய‌ ஒரு புண்டையும்
என‌ப் பெற்றிருந்த‌ ம‌னித‌ரே வெட்க‌ங்கெட்டோரென‌ க‌ட‌வுள் சொன்னார்.

நிலை திரிய‌ நிலை திரிய‌
காம‌ம் க‌ட‌வுள் க‌ட‌வுள் காம‌ம் என்ப‌தெல்லாம் மாறி
அடைப‌ட்ட‌ குமிழுக்குள் ஒருகோடி பிர‌ப‌ஞ்ச‌ம்

பால் வீதிக்குள் அணு உலைக‌ள்
உலைக‌ள் வெடிக்க‌ ம‌று உற்ப‌த்திக்குள் பிர‌ப‌ஞ்ச‌ம்
ஏழு வ‌ர்ண‌ங்க‌ளையும் சொறிந்த‌ பின் வெடிக்கிற‌து நீர்குமிழி

ஆறு கைக‌ளும் அடங்கா சிற‌கும்
முளைக்க‌த் தொட‌ங்கும் சிசுவுக்குள்
யார‌ற்றும் உப‌தேசிக்க‌ உருவமில்லா ம‌னித‌ம்

மிருக‌மான‌ ப‌ட்சிக்கெத‌ற்கு ச‌மாதான‌ம்
அமைதியென்ற‌ வார்த்தை சொல்ல‌
விதிக்க‌ப்ப‌ட‌வில்லை எந்த‌வொரு மாமிச‌ இன‌த்துக்கும்.




 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

</