வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கவிதைகள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 
 

சில கவிதைகள் :

விதி

அந்திக்கருக்கலில்
இந்தத்திசை தவறிய
பெண்பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலை மோதிக்கரைகிறது.

எனக்கதன்கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்

இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை.

--கலாப்ரியா 

-----------------------------------------

சைக்களில் வந்த
தக்காளி கூடை சரிந்து
முக்கால் சிவப்பில் உருண்டது
அனைத்து திசைகளிலும் பழங்கள்
தலைக்கு மேலே
வேலை இருப்பதாய்
கடந்தும் நடந்தும்
அனைவரும் போயினர்
பழங்களை விடவும்
நசுங்கி போனது
அடுத்த மனிதர்கள்
மீதான அக்கறை

--கல்யாண்ஜி


-----------------------------------------

ஒரு கட்டு வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு புகையிலை
வாய் கழுவ நீர்
பிளாஸ்க் நிறை ஐஸ்
ஒரு புட்டி பிராந்தி
வத்திப்பெட்டி சிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு.

--நகுலன்

-----------------------------------------
வாழ்க்கை

நான் என் காலை வைக்கவேண்டிய படி எது?
நான் குலுக்க வேண்டிய கை,
நான் அணைக்க வேண்டிய தோள்,
நான் படிக்க வேண்டிய நூல்,
நான் பணியாற்ற வேண்டிய இடம்
ஒன்றும் எனக்குத் தெரியவில்லை

இப்படி இருக்கிறது வாழ்க்கை.

-- பசுவய்யா 

-----------------------------------------

என்ன மாதிரி

என்னை நோக்கி ஒருவர் வந்தார்
எதையோ கேட்கப் போவது போல

கடையா? வீடா? கூடமா? கோயிலா?

என்ன கேட்கப் போகிறாரென்று
எண்ணிக் கொண்டு நான் நின்றிருக்கையில்

அனேகமாய் வாயைத் திறந்தவர் என்னிடம்
ஒன்றும் கேளாமல் சென்றார்.

என்ன மாதிரி உலகம் பார் இது.

--ஞானக்கூத்தன்

 

 

 
     
     
     
   
கவிதைகள்
1
 
 
     
   
  -----------------------------------  
 

கவிதைகள்

கவிதை என்பதற்கு பல பார்வைகளில் வெவ்வேறு வரையறைகள் உண்டு. கவிதை சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்திலக்கியக் கலை வடிவம் ஆகும். உணர்ச்சி, கற்பனை, கருத்துக்களை வெளிப்படுத்தவும் தூண்டவும் கவிதை உதவுகின்றது.

 
  -----------------------------------  
  தமிழின் முக்கியமான கவிஞரான ‘பிரமிள்’ எழுதிய புகழ்பெற்ற கவிதை இது  
 

சிறகிலிருந்து பிரிந்த
ஒற்றை இறகு
காற்றின் முடிவற்ற பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச்செல்கிறது

 
  -----------------------------------  
  புதுக்கவிதை சுருக்கமான வரலாறு  
     
  http://www.jeyamohan.in/?p=290  
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS கவிதைகள்
கவிதைகள் வாயில்

நேசமித்ரன் கவிதைகள்

நேசமித்ரன் புதன், 17-11-2010, 00:35 AM


அசுத்த வரிகள்

இருந்த ஒத்தப்பட்டுச் சீல ஜரிகைய
வித்துதான் மினி ட்ராப்டருக்கு அம்மா
காசு குடுத்துச்சு

தீட்டுதுணிக்குங்கூட ஒதவாதத வச்சு என்ன
செய்யன்னு சொன்னாலுங் கண்ணுல
தண்ணி கோத்துருச்சு அப்பத்தா இதுங்
கலியாணத்துக்கு எங்கியோ நெச்சு வாங்கியாந்ததாம்

அன்னிக்கு அப்பனுக்கும் அம்மாவுக்கும் செம சண்ட
லச்ச ரூவா குடுத்தாலும் பொண்ணுங்க
ஹாஸ்டலுக்கு வேலைக்கு போமாட்டேன்னுச்சு
அப்பன் என்னிய பார்த்துக்கிட்டே

அப்பலேர்ந்து பெரியவாத்தி
பேசுறதும் பாக்குறதும் சரியில்ல

அப்பனுக்கு இப்பல்லாம் கண்ணு செரியா
தெரிய மாட்டெங்குது
அதுந்தான் என்ன செய்யும்
சாராயம் குடிக்காட்டி அடப்பெடுக்க எப்பிடி எறங்க
முடியும் பீத்தொட்டிக்குள்ளாற

நெஞ்சு வலிக்குது
அம்மாட்ட எப்பிடி சொல்றது வாத்திய அறஞ்சத

******************************************
வளர்ப்பு மிருகம்

பெருந்துயருக்குப் பிறகான மௌனங்களில்
பிணைந்து கிடக்கும் வேசைத்தனமும் நடிப்பும்
அருவருப்பானது.

கசிந்தொழுகும் பாவனைகளில்
ஊறிக்கிடந்த சொற்களின் கனிவில்
மிதந்ததெல்லாம்
தோலுரிக்க கொதிநீரில் அமிழ்ந்த
மிருகத்தோலின் கொழுப்புவீச்சம் .

உசிதமானவற்றின் மீதான
உணர்விளக்கம் செலுத்திய
திசையின் இரையென
வியூகத்துடனான தந்திரங்களின்
பிரயோகங்களில் புலனொடுங்கிய
மென்னுயிரியின் மீது எய்திய
வெற்றியென எக்காளமிடும் உவகை
எவ்வெப்பொழுதும் நிரப்பிய சிரிப்பின்
வெளிச்சத்தில் ஒட்டியிருந்தது
யாரோவின் கனவு சாம்பல் .

பசித்த குஞ்சுகளின்
அலகுத்திறப்பில் மின்னும்
சூரியனின் எச்சமெனகிடக்கும்
நீர்நிலை வெளியில்
காய்ந்து கொண்டிருக்கும் வலைகள்
இமைப்புகள் தோறும் வீசிப் பரப்பிய கண்ணிகள்.

சாயல்களுடனான ஒப்பீடுகளில்
சாவை புசிக்கத்தரும் உன் கருணைக்கு
மயங்கிக் கிடந்த பித்து இரக்கத்திற்குரியது .

...............பேரூழிக்குப் பின்னும்
விந்தின் அடர்த்தியுடன் உயிருலவும்
கண்ணீரில் மிகுந்து வளர்கிறது
நெடும் யாசிப்பின் ஈவாய் வழங்கப்
பெறும் பிரியத்தின் பிணை

மடிந்த உதடுகளின் விசும்பல் நடுக்கம்
வதையின் ஈற்றாய் விழுங்கும் சப்தங்களின்
வதையை முத்தங்களால் மூடும் உதடுகள்
புதையுண்டிருக்கும் கிரகதூரத்தை கடக்கும்
நெடும்பகல் உச்சிப் பொழுதின் கடல் நிழலில்
**********************************************

மீதமிருக்கிறது
கழிவறை கதவில் ஸ்டிக்கர் பொட்டு நட்சத்திரங்கள்
தாவணிகள் மற்றும் வண்ணக் கோலப் பொடி டப்பாவும்
சமையல் புத்தகமும்

மீதமிருக்கிறது யாருக்கும் தெரியாமல்
சோப்பில் செதுக்கி இருக்கும் பெயர்
உள்ளாடை மஞ்சளிடையே உதிரக்கறை
ரீசார்ஜ் கடையின் பாக்கி மற்றும் சில அசைவ குறிப்புகள்

மீதமிருக்கிறது
விற்கும் முன் கழற்றிய திருஷ்டி சங்கு

வண்டிக்கு பழக்கிய நுகத்தடி
தீவனத்தொட்டியில் கழுத்து அழுக்கு
மரத்தூணில் கொம்பு தேய்த்தத் தடம்

ஆனால் யாருக்கும் தெரியாமல்
உரித்தத் தோலில் தார்க்குச்சி காயங்கள்
குளம்புகளில் தேய்ந்த லாட யிரும்பு
பண்ணையாள் கலந்த விஷம்

மீதமிருக்கிறது
ஓய்ந்த பொழுதில் வாசிக்கும் தோல்பறை
எண்கள் அழிந்த செல்போன் ஒரு எப் எம் ரேடியோ
வெயிலில் வைத்து கேட்க ஒரு சோடி பேட்டரி
ஒரு டார்ச் லைட்டு

எல்லோருக்கும் தெரியும்
மோட்டர் ரூம்பு கூரையில் இருக்கும் ராக்கொடி
பாண்ட்ஸ் பவுடர் டப்பாவுக்குள் இருக்கும்
அவ்வப்போது ஏறிய தாலிக்கொடி
பூச்சிமருந்து கேனுக்குள் இருக்கும் ஆணுறைகள்



 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</