வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கவிதைகள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 
 

சில கவிதைகள் :

விதி

அந்திக்கருக்கலில்
இந்தத்திசை தவறிய
பெண்பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலை மோதிக்கரைகிறது.

எனக்கதன்கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்

இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை.

--கலாப்ரியா 

-----------------------------------------

சைக்களில் வந்த
தக்காளி கூடை சரிந்து
முக்கால் சிவப்பில் உருண்டது
அனைத்து திசைகளிலும் பழங்கள்
தலைக்கு மேலே
வேலை இருப்பதாய்
கடந்தும் நடந்தும்
அனைவரும் போயினர்
பழங்களை விடவும்
நசுங்கி போனது
அடுத்த மனிதர்கள்
மீதான அக்கறை

--கல்யாண்ஜி


-----------------------------------------

ஒரு கட்டு வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு புகையிலை
வாய் கழுவ நீர்
பிளாஸ்க் நிறை ஐஸ்
ஒரு புட்டி பிராந்தி
வத்திப்பெட்டி சிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு.

--நகுலன்

-----------------------------------------
வாழ்க்கை

நான் என் காலை வைக்கவேண்டிய படி எது?
நான் குலுக்க வேண்டிய கை,
நான் அணைக்க வேண்டிய தோள்,
நான் படிக்க வேண்டிய நூல்,
நான் பணியாற்ற வேண்டிய இடம்
ஒன்றும் எனக்குத் தெரியவில்லை

இப்படி இருக்கிறது வாழ்க்கை.

-- பசுவய்யா 

-----------------------------------------

என்ன மாதிரி

என்னை நோக்கி ஒருவர் வந்தார்
எதையோ கேட்கப் போவது போல

கடையா? வீடா? கூடமா? கோயிலா?

என்ன கேட்கப் போகிறாரென்று
எண்ணிக் கொண்டு நான் நின்றிருக்கையில்

அனேகமாய் வாயைத் திறந்தவர் என்னிடம்
ஒன்றும் கேளாமல் சென்றார்.

என்ன மாதிரி உலகம் பார் இது.

--ஞானக்கூத்தன்

 

 

 
     
     
     
   
கவிதைகள்
1
 
 
     
   
  -----------------------------------  
 

கவிதைகள்

கவிதை என்பதற்கு பல பார்வைகளில் வெவ்வேறு வரையறைகள் உண்டு. கவிதை சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்திலக்கியக் கலை வடிவம் ஆகும். உணர்ச்சி, கற்பனை, கருத்துக்களை வெளிப்படுத்தவும் தூண்டவும் கவிதை உதவுகின்றது.

 
  -----------------------------------  
  தமிழின் முக்கியமான கவிஞரான ‘பிரமிள்’ எழுதிய புகழ்பெற்ற கவிதை இது  
 

சிறகிலிருந்து பிரிந்த
ஒற்றை இறகு
காற்றின் முடிவற்ற பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச்செல்கிறது

 
  -----------------------------------  
  புதுக்கவிதை சுருக்கமான வரலாறு  
     
  http://www.jeyamohan.in/?p=290  
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS கவிதைகள்
கவிதைகள் வாயில்

வனம்

ப.மதியழகன் திங்கள் , 12-04-2010, 10:10 PM

வனத்தில் அடியெடுத்து வைத்த
சில் நிமிடங்களில்
மனிதர்களின் ஆரவாரம் மறைந்து
அந்தகாரம் கவிய
நிசப்தம் சர்ப்பமாய் கண்முன்னே
படமெடுத்துப் பயமுறுத்தியது
பலநூறு கிளைகள் பரப்பி
விசித்திரமாய் அமைந்த
அரசமரத்தின் ஆகிருதி
கானகத்தை எங்கு நோக்கினும்
கண்ணைவிட்டு அகலாமல்
நீக்கமற நிறைந்திருந்தது
விலங்குகளின் கால் தடங்கள்
அழியாமல் பல நாட்களாய்
அப்படியே நிலைத்திருப்பது
கடற்கரை மணலில்
கலைந்துபோய் கிடக்கும்
எண்ணற்ற காலடிச்சுவடுகளை
ஞாபகப்படுத்தியது
மூங்கில்களின் உரசலினால்
உண்டான சப்தம்
வனம் முழுவதும் எதிரொலித்தது
அடர்ந்த அந்த வனாந்திரத்தில்
பாதையைத் தேடித் தேடி
கானகத்தின் இதயப் பகுதியை நோக்கி
கால்கள் செல்லச் செல்ல
மனம் தான் மனிதன் என்பதையே
ஆதாம் நிலையை அடைந்திருந்தது!

காளி

அன்றிருந்த
அதே கடல்
அதே வானம்
அதே நிலவு
அதே நட்சத்திரக்கூட்டங்கள்
அதே சுண்டல்காரன்
அன்று கடற்கரை மணலில்
எனதருகில் நீ
இன்று அவ்விடத்தில் காரிருள்
தனிமையெனும நஞ்சுதனை
மெல்ல மெல்ல அருந்திச்சாகும்
பித்தனாய் நான்
எனதுயிரை களப்பலியாக
எடுத்துக்கொண்ட
காளியாய் நீ.

தூரிகை வரையாத ஓவியம்

ஓவியங்களை
வரைந்து வரைந்து
திருப்தி ஏற்படாமல்
காகிதங்களைக் கிழித்து
அறை முழுவதும் குப்பையாக்கிக்
கொண்டிருந்தான்
இறுதியில்
கண்டடைந்துவிட்டான்
காலச்சரித்திரத்தில்
அவனது பெயரை நிலையாகச்
செதுக்கி வைக்கப் போகும் ஓவியத்தை
தரையில் விரித்து வைத்து
தனது கைவண்ணத்தைப்
பார்த்து தானே பிரமித்துப் போனான்
ஓவியப் போட்டியில்
உலகின் மிகச் சிறந்த ஓவியன்-
என்ற பட்டத்தைப்
பெறுவதைப் போன்ற கற்பனையில்
கண்ணயர்ந்து உறங்கிப்போனான்
கண்விழிக்கையில்
அக்காகிதத்தைக் கிழித்து
அவனது குழந்தை
விளையாடிக் கொண்டிருந்தது
கோபத்தில் அடிக்கக் கை ஓங்கிய
அவனைப் பார்த்து
அன்பு பொங்க கபடமற்றுச் சிரித்தது
அவனுடைய தூரிகை வரையாத ஓவியம்.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</