வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கவிதைகள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 
 

சில கவிதைகள் :

விதி

அந்திக்கருக்கலில்
இந்தத்திசை தவறிய
பெண்பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலை மோதிக்கரைகிறது.

எனக்கதன்கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்

இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை.

--கலாப்ரியா 

-----------------------------------------

சைக்களில் வந்த
தக்காளி கூடை சரிந்து
முக்கால் சிவப்பில் உருண்டது
அனைத்து திசைகளிலும் பழங்கள்
தலைக்கு மேலே
வேலை இருப்பதாய்
கடந்தும் நடந்தும்
அனைவரும் போயினர்
பழங்களை விடவும்
நசுங்கி போனது
அடுத்த மனிதர்கள்
மீதான அக்கறை

--கல்யாண்ஜி


-----------------------------------------

ஒரு கட்டு வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு புகையிலை
வாய் கழுவ நீர்
பிளாஸ்க் நிறை ஐஸ்
ஒரு புட்டி பிராந்தி
வத்திப்பெட்டி சிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு.

--நகுலன்

-----------------------------------------
வாழ்க்கை

நான் என் காலை வைக்கவேண்டிய படி எது?
நான் குலுக்க வேண்டிய கை,
நான் அணைக்க வேண்டிய தோள்,
நான் படிக்க வேண்டிய நூல்,
நான் பணியாற்ற வேண்டிய இடம்
ஒன்றும் எனக்குத் தெரியவில்லை

இப்படி இருக்கிறது வாழ்க்கை.

-- பசுவய்யா 

-----------------------------------------

என்ன மாதிரி

என்னை நோக்கி ஒருவர் வந்தார்
எதையோ கேட்கப் போவது போல

கடையா? வீடா? கூடமா? கோயிலா?

என்ன கேட்கப் போகிறாரென்று
எண்ணிக் கொண்டு நான் நின்றிருக்கையில்

அனேகமாய் வாயைத் திறந்தவர் என்னிடம்
ஒன்றும் கேளாமல் சென்றார்.

என்ன மாதிரி உலகம் பார் இது.

--ஞானக்கூத்தன்

 

 

 
     
     
     
   
கவிதைகள்
1
 
 
     
   
  -----------------------------------  
 

கவிதைகள்

கவிதை என்பதற்கு பல பார்வைகளில் வெவ்வேறு வரையறைகள் உண்டு. கவிதை சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்திலக்கியக் கலை வடிவம் ஆகும். உணர்ச்சி, கற்பனை, கருத்துக்களை வெளிப்படுத்தவும் தூண்டவும் கவிதை உதவுகின்றது.

 
  -----------------------------------  
  தமிழின் முக்கியமான கவிஞரான ‘பிரமிள்’ எழுதிய புகழ்பெற்ற கவிதை இது  
 

சிறகிலிருந்து பிரிந்த
ஒற்றை இறகு
காற்றின் முடிவற்ற பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச்செல்கிறது

 
  -----------------------------------  
  புதுக்கவிதை சுருக்கமான வரலாறு  
     
  http://www.jeyamohan.in/?p=290  
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS கவிதைகள கவிதைகள் வாயில்

புளியமரங்களின் வரலாறு குறித்து

ஜோசப் வெள்ளி , 12-03-2010, 08:05 PM

புளியமரங்கள் மனித குலத்திற்கு
பெரிதும் பயன்படுகின்றனஇ
என்பதை அறிவேன்.

அவைகள் இன்றும்
இப்புவியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

அவைகளை கடவுள்
படைத்த காலம் தொட்டே
இங்கு இருக்கின்றன.

உலகெங்கிலும் இருப்பினும்இ
இந்தியாவிலும்இ தழிழகத்திலும்
அவைகள் இருக்கின்றனஇ

அவைகள் சந்தித்த புயல்கள்
ஆயிரக்கணக்கானவையாக இருக்கலாம்.

கொள்ளை நோய்கள் ஒரு
கோடி இருக்கலாம்.

விலங்குகளின் கொடுமைகளை மீறியும் இப்புவியில் தங்கள்
வம்சத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன.

நால் வழி சாலைகள்
அழித்தவை ஆயிரமாயிரங்கள்
என்ற போதிலும்இ
அவைகளின் வம்சத்தை அடியோடு அழியாவண்ணம்
பாதுகாத்து கொண்டன.

உலகின் முடிவு பரியந்தம்
அவைகள்இ
தங்களைப் பாதுகத்துக் கொள்ளுமா?
என்பது நான் அறியாதது.

குளங்கள் நிரம்பியது குறித்து.

குளங்கள் வெறுமையாக
கிடந்தன.

முட்செடிகள் மண்டிகிடந்தன.
ஊரின் குப்பைகளுக்கும்இ
கழிவுகளுக்கும் நாளுக்கு நாள்
வளர்ந்து கொண்டேயிருந்தன.

குளங்களை காப்பாற்றுவது யார்?

மழை பெய்ய ஆரம்பித்தது
மீண்டும் பெய்ததுஇ
தொடர்ந்து பெய்தது.

குளங்கள் நிரம்ப ஆரம்பித்தன.
கசடுகளை மூடின.
குப்பைகளை மூடின.

கொஞ்சம்இ கொஞ்சமாக
நீர் மட்டம் வளர்ந்து கொண்டேயிருந்தது.
அதன்இ அனைத்து துயரங்களையும் தண்ணீர் மூழ்கடித்தது.

எங்கும் நீர்
நீர் மட்டுமே.

நிரம்பிய குளம் கண்களுக்கு இதமாகியது.

அனைவரும் வியந்தனர்.
குளம் ரம்யமானது என்று
பாராட்டினர்.

அதன் கீழ் உள்ள
கசடுகளையும்இ முட்களையும்
கழிவுகளையும்இ அவர்கள் மறந்தே போயினர்.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.