வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கவிதைகள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 
 

சில கவிதைகள் :

விதி

அந்திக்கருக்கலில்
இந்தத்திசை தவறிய
பெண்பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலை மோதிக்கரைகிறது.

எனக்கதன்கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்

இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை.

--கலாப்ரியா 

-----------------------------------------

சைக்களில் வந்த
தக்காளி கூடை சரிந்து
முக்கால் சிவப்பில் உருண்டது
அனைத்து திசைகளிலும் பழங்கள்
தலைக்கு மேலே
வேலை இருப்பதாய்
கடந்தும் நடந்தும்
அனைவரும் போயினர்
பழங்களை விடவும்
நசுங்கி போனது
அடுத்த மனிதர்கள்
மீதான அக்கறை

--கல்யாண்ஜி


-----------------------------------------

ஒரு கட்டு வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு புகையிலை
வாய் கழுவ நீர்
பிளாஸ்க் நிறை ஐஸ்
ஒரு புட்டி பிராந்தி
வத்திப்பெட்டி சிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு.

--நகுலன்

-----------------------------------------
வாழ்க்கை

நான் என் காலை வைக்கவேண்டிய படி எது?
நான் குலுக்க வேண்டிய கை,
நான் அணைக்க வேண்டிய தோள்,
நான் படிக்க வேண்டிய நூல்,
நான் பணியாற்ற வேண்டிய இடம்
ஒன்றும் எனக்குத் தெரியவில்லை

இப்படி இருக்கிறது வாழ்க்கை.

-- பசுவய்யா 

-----------------------------------------

என்ன மாதிரி

என்னை நோக்கி ஒருவர் வந்தார்
எதையோ கேட்கப் போவது போல

கடையா? வீடா? கூடமா? கோயிலா?

என்ன கேட்கப் போகிறாரென்று
எண்ணிக் கொண்டு நான் நின்றிருக்கையில்

அனேகமாய் வாயைத் திறந்தவர் என்னிடம்
ஒன்றும் கேளாமல் சென்றார்.

என்ன மாதிரி உலகம் பார் இது.

--ஞானக்கூத்தன்

 

 

 
     
     
     
   
கவிதைகள்
1
 
 
     
   
  -----------------------------------  
 

கவிதைகள்

கவிதை என்பதற்கு பல பார்வைகளில் வெவ்வேறு வரையறைகள் உண்டு. கவிதை சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்திலக்கியக் கலை வடிவம் ஆகும். உணர்ச்சி, கற்பனை, கருத்துக்களை வெளிப்படுத்தவும் தூண்டவும் கவிதை உதவுகின்றது.

 
  -----------------------------------  
  தமிழின் முக்கியமான கவிஞரான ‘பிரமிள்’ எழுதிய புகழ்பெற்ற கவிதை இது  
 

சிறகிலிருந்து பிரிந்த
ஒற்றை இறகு
காற்றின் முடிவற்ற பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச்செல்கிறது

 
  -----------------------------------  
  புதுக்கவிதை சுருக்கமான வரலாறு  
     
  http://www.jeyamohan.in/?p=290  
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS கவிதைகள கவிதைகள் வாயில்

ரோஸ்லின் கவிதைகள்


ரோஸ்லின, சென்னை ஞாயிறு, 21-02-2010, 7:53 PM

ஏக்கம்

என்னுள் ஆயிரம் மின்னற் பூ பூத்தது
உன் குரல் கேட்கும் அந்நொடி
வரவேண்டும் .
ஆம்!
அருமையான அந்நொடிக்கு
மரணம் இல்லா வரம் வேண்டும்!

பனிக்காக ஏங்கும் மலரைப்போல
ஏங்கினேன் நான் உன் முகம் காண
உன் முகம் காணும் அத்தருணம்
மலர்ந்தேன் நான்
நல் மணம் வீசும் மலராக.

சுகமான சுமையாக நீ இருக்க
அச்சுமையைச் சுகித்து சுமக்கும்
சுமைத்தாங்கி நான்.

கருவறையைக்காட்டிலும்
கருமையானது உன் பிரிவு
என் கண்கொண்டு
உன்னைக்காணும் அந்நொடி
என் வாழ்வில் காரிருள் அற்ற காலமாகிறது.

நான் செயல் இழந்தேன்
வியப்பிற்குரிய உன் செயல்களால்.
நான் பார்வை இழந்தேன்
உன் பாசமிகு பார்வையால்.

கடைசியாக உன் மலர்பாதத்திற்கு
என்னை அர்பணித்தேன்
பாசமிகு பிள்ளையாய்!!

நட்பு

மலரின் மணம் மாசற்றது.
தாயின் அன்பு துயரமற்றது.
பாலின் நிறம் வெண்மையானது.
இவையனைத்தும்
நிலையானது, நிரந்தரமானது.
அதுப்போல
நட்பும் சுயநலமற்றது, சுகமானது.
நாடித்துடிப்போடு ஒப்பிடலாம் நட்பை.
நாடித்துடிப்பின்றி நம்முடல் நமதில்லை.
அதுபோல் நட்பின்றி நண்பர்கள் இல்லை.
பாசம்
உள்ளத்தை ஊடுருவும்
இந்த உலர்காற்றில்

கண்ணைக்கவரும்
இந்த ரோசா தோட்டத்தில்

தயக்கத்தைப் போக்கும்
இந்த தனிமை உலகத்தில்

என் இதயத்தைப்
பறிக்கொடுத்து நின்றாலும்

என் இதயத்தைத் திருடிய
கள்வனைக் காணாமல்
என் கண்ணீர் துளிகள் ததும்ப

அக்கண்ணீர் துளிகள்
இம்மண்ணில் விழும் முன்
என் கண்ணின் மணியே
அத்துளியை கையில் ஏந்தியது.

தமிழுணர்வு

தமிழா தலைநிமிர்ந்து நில்!
உன் தடைகளைத் தகர்த்தெறிந்து,
வீறுக்கொண்டு எழு !
உன் விடியலை நோக்கி.

தெளிவுக்கொண்டு எழு!
உன் திறமைகளை நோக்கி.

சாந்தம் கொண்டு எழு!
உன் சாதனைகளை நோக்கி.

தமிழனுக்கு நிகர் தமிழனே என்னும்
தணியாத தாகம் கொண்டு எழு!

பின்பு அடைவாய் நீ
உயரத்தின் உச்சநிலை!

வாழ்க தமிழ்!
வாழ்க தமிழினம்!
வாழ்த்துப்பாடட்டும் தமிழ் மக்கள்!

கண்ணீர் காணிக்கை

சிவப்பா? சிவப்பா?
சிவப்பு நிறத்தைப் பார்த்தாலே
பதறுகிறது மனம்.

இறைவன் படைத்த
இனிமையான உணர்வுகளான
இரக்கம், பரிவு, பாசம், சாந்தம் போன்ற
உணர்வுகளை மறந்து
மரக்கட்டைகளான மனிதர்களால்
மாண்ட உயிர் பல்லாயிரம்!

ஈவு இரக்கமற்ற
இம்மனிதர்கள் இருந்தும்
இல்லாததற்கு சமமே இப்பூவுலகில்!

மாண்ட உயிர்கள் அனைத்தும்
மரியாதைக்குரியவையே இம்மண்ணுலகில்!

மாண்ட என் இதயம் மறவா சகோதர்ர்களுக்கு
என் மனமார்ந்த கண்ணீர் காணிக்கை!!


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</