அந்திக்கருக்கலில்
இந்தத்திசை தவறிய
பெண்பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலை மோதிக்கரைகிறது.
எனக்கதன்கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை.
--கலாப்ரியா
-----------------------------------------
சைக்களில் வந்த
தக்காளி கூடை சரிந்து
முக்கால் சிவப்பில் உருண்டது
அனைத்து திசைகளிலும் பழங்கள்
தலைக்கு மேலே
வேலை இருப்பதாய்
கடந்தும் நடந்தும்
அனைவரும் போயினர்
பழங்களை விடவும்
நசுங்கி போனது
அடுத்த மனிதர்கள்
மீதான அக்கறை --கல்யாண்ஜி
-----------------------------------------
ஒரு கட்டு வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு புகையிலை
வாய் கழுவ நீர்
பிளாஸ்க் நிறை ஐஸ்
ஒரு புட்டி பிராந்தி
வத்திப்பெட்டி சிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு.
--நகுலன்
----------------------------------------- வாழ்க்கை
நான் என் காலை வைக்கவேண்டிய படி எது?
நான் குலுக்க வேண்டிய கை,
நான் அணைக்க வேண்டிய தோள்,
நான் படிக்க வேண்டிய நூல்,
நான் பணியாற்ற வேண்டிய இடம்
ஒன்றும் எனக்குத் தெரியவில்லை
இப்படி இருக்கிறது வாழ்க்கை.
-- பசுவய்யா
-----------------------------------------
என்ன மாதிரி
என்னை நோக்கி ஒருவர் வந்தார்
எதையோ கேட்கப் போவது போல
கடையா? வீடா? கூடமா? கோயிலா?
என்ன கேட்கப் போகிறாரென்று
எண்ணிக் கொண்டு நான் நின்றிருக்கையில்
அனேகமாய் வாயைத் திறந்தவர் என்னிடம்
ஒன்றும் கேளாமல் சென்றார்.
என்ன மாதிரி உலகம் பார் இது.
--ஞானக்கூத்தன்
கவிதைகள்
-----------------------------------
கவிதைகள்
கவிதை என்பதற்கு பல பார்வைகளில் வெவ்வேறு வரையறைகள் உண்டு. கவிதை சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்திலக்கியக் கலை வடிவம் ஆகும். உணர்ச்சி, கற்பனை, கருத்துக்களை வெளிப்படுத்தவும் தூண்டவும் கவிதை உதவுகின்றது.
-----------------------------------
தமிழின் முக்கியமான கவிஞரான ‘பிரமிள்’ எழுதிய புகழ்பெற்ற கவிதை இது
சிறகிலிருந்து பிரிந்த
ஒற்றை இறகு
காற்றின் முடிவற்ற பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச்செல்கிறது
வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.
எனக்குள் உறுதியெடுத்துக்கொண்டென்
இனி பொய்சொல்லப் போவதில்லையென்று
புதிதாய் முளைத்தது
ஒரு ஆசை
கவிதை எழுத வேண்டுமென்று
இரண்டுவித எண்ணங்கள்
முரண்பட்டனவாய்
மனதில் தோன்றின.
எப்படிச் சாத்தியமாகும் இது!
பொய்யின்றிக் கவிதை ஏது!
கவிதைக்கு அழகே
பொய்தானே
ஒப்பனைகளும்,புனைவுகளும்
பொய்தானே
உவமையும்,உருவகமும்
பொய்தானே
குழப்பமே கூடியது.
தேடல்களின் முடிவுகளை
தேடினேன் என்னுள்ளே
கேள்விகளின் பதில்களை
கேட்கிறேன் என்னிடமே
சிந்தனைகளின் சிதரல்களில்
சிரித்தது
ஒரு பதில்
அது கேட்டது
ஒரு புதிய கேள்வி
பொய்க்கு மெய்யுண்டா(உடல்) என்று
உறைத்தது உள்ளுக்குள்
உணர்ந்தேன் உண்மையை
பொய்க்கு மெய்யெது
பொய்க்கு உயிர் உண்டு
அதனால்தான்
அது பலசமயங்களில்
நம்பப்படுகிறது
சில சமயங்களில்
ஜெயிக்கவும் செய்கிறது
எனில்
பொய்க்கு மெய் எது?
பொய்யின் மெய்
கவிதை
ஆம்!பொய்கள்
எழுதப்படுவதினால்
உருவம் பெறுகிறது
கவிதை வருகிறது
விளக்கம் கிடைத்ததினால்
விரைந்து எழுதுகிறேன்
பொய்யின் மெய்யை.
வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.
require('karuthu.php');
getComments("141"); // 2 is the article number // Edit this
function curPageURL()
{
$isHTTPS = (isset($_SERVER["HTTPS"]) && $_SERVER["HTTPS"] == "on");
$port = (isset($_SERVER["SERVER_PORT"]) && ((!$isHTTPS && $_SERVER["SERVER_PORT"] != "80") ||
($isHTTPS && $_SERVER["SERVER_PORT"] != "443")));
$port = ($port) ? ':'.$_SERVER["SERVER_PORT"] : '';
$url = ($isHTTPS ? 'https://' : 'http://').$_SERVER["SERVER_NAME"].$port.$_SERVER["REQUEST_URI"];
return $url;
}
submitComments("141",curPageURL()); // Edit this
?>