வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. செய்திகள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 
 

First News Paper in India

James Augustus Hickey or Hicky, a highly eccentric Irishman who had previously spent two years in gaol for debt, Hickey's Bengal Gazette or the Calcutta General Advertiser was the first English language newspaper, and indeed the first printed newspaper, to be published in the Indian sub-continent.

It was a weekly newspaper, and was founded in 1779, in Calcutta, the capital of British India. The memoirist William Hickey (who, confusingly, was not in fact related to the paper's founder) describes its establishment shortly after he had succeeded (in his capacity as an attorney-at-law) in having James Hicky released from debtor's gaol.

http://en.wikipedia.org/wiki/
Hickey's_Bengal_Gazette


 
  ------------------------------  
 

Guinness World Record for the world's smallest newspaper

From The Guinness World Records 2010: 'the smallest newspaper measures 32 x 22 mm (1.25 x 0.86 in) achieved by First News Newspaper in West Horsley, Surrey, UK published on the November 8, 2007 in celebration of Guinness World Records Day.'

http://www.firstnews.co.uk/
weird/first-news-is-the-worlds-smallest-newspaper-i97

 
     
   
செய்திகள்
1
 

          உலகின் முதல் செய்தி தாள்

 

Johann Carolus (1575 - 1634) was the publisher of the first newspaper, called Relation aller Fürnemmen und gedenckwürdigen Historien (Collection of all distinguished and commemorable news). The Relation is recognised by the World Association of Newspapers[1], as well as many authors[2] as the world's first newspaper. The German Relation was published in Strassburg, which had the status of an imperial free city in the Holy Roman Empire of the German Nation.

 

 
  ---------------------------------  
  ஸ்வதேசமித்ரன்

இந்தியாவில் பதிப்பிக்கப்பட்ட தமிழின் முதல் செய்தி் தாள்.

இந்த செய்தி தாள் இந்தியா மட்டுமின்றி, பர்மா, சிங்கப்பூர், மலேசியாவின் சில பகுதிகள், பெனாங், இலங்கை, சுமத்ரா, சீனா, தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பரிக்க நாடுகளில் கூட பரவலாக வாசகர்களைப் பெற்றிருந்தது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்த செய்தி தாள் பதிப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.indianetzone.com/
24/swadesamitran_first_
tamil_newspaper.htm
 
 

 

 

 
  ---------------------------------  
     
     
 

 

 

 
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  மற்றவை TS செய்திகள் செய்திகள் வாயில்


பாமா பங்கேற்ற கேணி இலக்கிய சந்திப்பு 


சா.ரு. மணிவில்லன், பத்மநாபன்  

கேணி அமைப்பின் 12வது மாத இலக்கியக் கூட்டம் 09.05.2010 அன்று நடைபெற்றது.

கேணி இலக்கிய அமைப்பின் 12-வது கூட்டம் 09/05/10 அன்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் பாமா கலந்து கொண்டார். முதலில் பாமாவின் சாமியாட்டம் சிறுகதையை தனிநபர் நாடகமாக நாடகக்காரர் விநோதினி நிகழ்த்தினார். பத்திரிக்கையாளர் ஞாநி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

ஞாநி :-

சாமியாட்டம் நாடகத்தை நிகழ்த்திய விநோதினி, MBA படித்துவிட்டு பெரிய நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்தவர். கலை மீதான ஈடுபாடு காரணமாக வேலையை உதறிவிட்டு நாடகத்துறைக்கு வந்துள்ளார். கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்று தற்போது நாடகத்தை முழுநேர தொழிலாக கொண்டு இயங்கி வருபவர்.

எழுத்தாளர் பாமா 1992-ல் கருக்கு நாவல் மூலம் இலக்கியத் துறைக்கு வந்தவர். அப்போது தமிழில் நிலவிவந்த வெற்றிடத்தை இவருடைய எழுத்துக்கள் நிரப்பியது. தமிழ் எழுத்தாளர்களில் மிகச்சிலரே சுயசாதியை விமர்சனம் செய்துள்ளனர். அந்த வகையில் மாதவைய்யாவின் தொடர்ச்சியாக பாமாவை குறிப்பிடலாம்.

ஒடுக்குமுறையில் இருந்து வெளியேற வேண்டுமானால் ஒன்றுபட வேண்டும். ஒன்றுபட வேண்டுமானால் சுய விமர்சனம் வேண்டும். பாமா இன்னும் விளிம்புநிலை எழுத்தாளராகத்தான் உள்ளார். அவரது எழுத்துகள் தகுந்த கவனம் பெறவில்லை. தற்போது அவர் ஐந்தாம் வகுப்பு ஆசிரியராகவும் பணியாற்றிக் கொண்டுள்ளார்.

பாமா கேணி இலக்கியக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் முதல் பெண் படைப்பாளி. அடுத்த மாதம் ஆய்வாளர் வ.கீதா கலந்து கொள்கிறார். பெரியாரும் - காந்தியும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்துகிறார். யாரை அழைக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ அந்த படைப்பாளியின் பெயரை துண்டுச் சீட்டில் எழுதித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

எழுத்தாளர் பாமா :-

என்னுடைய கதாப்பாத்திரங்களை நாடகம் மூலம் உயிரோட்டமாக பார்த்ததினால் மிக உணர்ச்சி மிகுந்து இருக்கிறேன். பேச நினைத்த விஷயங்களை உடனே பேசிவிட முடியுமா என சந்தேகமாக உள்ளது.

நகரத்தின் பரபரப்பு வாழ்க்கை எனக்கு உவப்பானது இல்லை. கிராமச் சூழலில் பிறந்து வளர்ந்தவள். அங்கு வாழ்ந்த, வாழ்கின்ற மனிதர்களைப் பற்றிதான் கதைகள் எழுதுகிறேன். என்னுடைய கதைகள் கற்பனைக் கதைகள் அன்று. என்னுடைய கதைகளின் கரு நிசமானது. சில இடங்களில் மட்டுமே புனைவுத் தன்மை காணப்படும்.

வாழ்க்கையில் நிர்க்கதியான நிலை ஏற்பட்டபோது, என்னை இனம் காண்பதற்காகவே எழுத ஆரம்பித்தேன். என் தேடல்களே என் எழுத்துக்கள். தனிமையாக வாழ நேர்ந்ததும் தேடல்கள் காரணமாகத்தான். எல்லாவற்றையும் மௌனமாக ரசிக்கிறேன்.

மனித உறவுகள் முன்போல் இல்லை. எல்லோரும் பணத்தை முன்வைத்தே இயங்குகின்றனர். பணம்தான் பாசத்தை நிர்ணயிக்கிறது. இன்று பெரும்பாலானோர் மனித உறவுகளை மதிப்பதில்லை. எல்லாம் நுகர்வு கலாச்சாரமாக மாறிவிட்டது. இதுதான் உலகமயமாக்கலின் கொடைபோலும்.

என் இருத்தலுக்கான அடையாளம்தான் என்னுடைய எழுத்து. அதில் தடம் பதிக்க வேண்டும் என்பதுதான் என் நோக்கமே அன்றி, விருதுகள் பெறுவதல்ல. மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும், சமத்துவம் பெருக வேண்டும் என்பதே எனது விருப்பம்.

பெண்கள் ஒரே இடத்தில் அடங்கி இருக்க வேண்டும் என்ற நிலை மாற வேண்டும். தலித்தாக பிறந்த பெண்ணிற்கு இச்சமூகம் கொடுக்கும் நெருக்கடி மிகக் கொடுமையானது. பெண் முதலில் அப்பாவை சார்ந்து, பிறகு கணவனை சார்ந்து, அதன் பின் மகனை சார்ந்து வாழும் நிலை மாற வேண்டும். அவளுடைய வளர்ச்சி என்பது அவளது விடுதலையில்தான் உள்ளது.

வீட்டு வேலைக்கு வேலைக்காரி, சமையல் வேலைக்கு சமையல்காரி வைத்துக் கொள்வது போல் பாலியல் தேவைக்கு ஒரு பாலியல் தொழிலாளியை வைத்துக்கொள்ள இச்சமூகம் அனுமதிக்காது. ஆனால், மனைவி என்ற பெயரில் வேலைக்காரி, சமையல்காரி, பாலியல் தொழிலாளியாக பெண் மாற்றப்படுவது இயல்பாக உள்ளது. பெண்கள் விடுதலையை மையமாகக் கொண்டு நான் எழுதுகிறேன். அவர்களுக்கு சுதந்திர உணர்வு வேண்டும்.

தற்போதைய சமூக அமைப்பில் பெண்ணுக்கு விடுதலை இல்லை. அதனால்தான், நான் தனியாக வாழ்கிறேன். என்போலவே மற்றவர்களும் இருக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை. என் எழுத்துக்கு சமூகப் பொறுப்பும், சமூகக் கடமையும் இருப்பதாகக் கருதுகிறேன்.

இளைய தலைமுறையிடம் மனித மாண்புகள் குறைந்துகொண்டே வருகின்றன. அண்மையில் ஒரு செய்தி வாசித்தேன். கடந்த ஆண்டு எத்தனை கொலைகள் நடந்தன, அவற்றிற்கான காரணங்கள் என்ன என்பதை அறியும்போது மிக வருத்தமாக இருந்தது. காதல் காரணங்களுக்காக அதிக கொலைகள் நடந்துள்ளன. காதல் என்பது வாழ்க்கையில் சிறு பகுதி. அதில் ஏற்படும் பிரச்சினைக்காக ஒரு உயிரை கொலை செய்வது என்பது எவ்வளவு கொடூரமானது. இதற்கெல்லாம் காரணம் இவர்களுக்கு வாழ்க்கை மீது நம்பிக்கை இல்லாதுதான்.

மக்களிடையே தனிமை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. ஆனால், சடப் பொருட்களின் மீதான நேசம் கூடிக்கொண்டே செல்கிறது. என் எழுத்து என் ஆயுதம். ஒவ்வொருவரும் அவர் அவர் துறைகளில் மாறுதல் வேண்டும் என்று செயல்படும்போதுதான் சமூகத்தில் மாறுதல் வரும். ஒவ்வொருவரும் தன்னை சுய ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு பெரிய கோட்டைச் சுவருக்கு அருகில் உயரமாக வளர்ந்த ரோஜா செடிகளும், குட்டையான மஞ்சள் பூ செடிகளும் இருந்தன. ஒரு குட்டையான மஞ்சள் பூவுக்கு, ரோஜாப் பூ போல் கோட்டை உயரத்துக்கு வளர வேண்டும். கோட்டை சுவருக்கு அப்பால் உலகை காண வேண்டும் என ஆவலாக இருந்தது. ஆனால் மற்ற மஞ்சள் பூக்கள் கேலி செய்தன. உயரமாக வளர மஞ்சள் பூ கடவுளிடம் பிரார்த்தனை செய்தது. கடவுளும் அந்த மஞ்சள் பூ உயரமாக வளர வரம் கொடுத்தார். உயரமாக வளர்ந்த மஞ்சள் பூ கோட்டை சுவருக்கு அப்பால் உள்ள உலகை சுதந்திரமாக கண்டுகளித்தது. அன்று இரவு நல்ல காற்றுடன் கூடிய மழை பெய்தது. அந்த மஞ்சள் பூ செடி ஒடிந்து வீழ்ந்தது. அப்போது மற்ற மஞ்சள் பூக்கள் "நாங்கள் அப்பவே சொன்னமே கேட்டாயா? இப்போது பார் சாகப் போகிறாய்" என கேட்டன. அப்போது அந்த மஞ்சள் பூ சொன்னது : "நூறு வருடங்கள் அடிமையாக வாழ்வதைக் காட்டிலும் ஒரு மணிநேரம் சுதந்திரமாக வாழ்வதே சிறப்பானது". இது கலீல் ஜிப்ரானின் கதை. இக்கதை எனக்கு மிகவும் பிடித்தமானது. விடுதலையின் பெருமையை இதைவிட சிறப்பாக சொல்ல முடியாது.

கருக்கு நாவல் எழுதி புத்தகமாக வெளியானவுடன் என்னை பலரும் பாராட்டினார்கள். ஆனால் என் ஊர் மக்கள் என் மீது மிகவும் கோபமாக இருந்தனர். என் அப்பா அம்மாவைக்கூட அடிக்கச் சென்றனர். நான் ஆறு மாதங்கள் ஊருக்குள் செல்லவேயில்லை. அப்போது ஒரு இளைஞன் மட்டும் நாவல் நன்றாக இருப்பதாக எனக்கு கடிதம் எழுதினான். அவன் ஒருவன் மட்டுமே எங்கள் ஊரில் எனக்கு ஆதரவான குரல். பின்னர் மக்களை ஒன்று கூட்டி அவர்களிடம் கருக்கு நாவலை வாசித்துக் காட்டி விளக்கம் சொன்ன பிறகுதான் அவர்களின் கோபம் குறைந்தது.

ஒரு அம்பேத்கர் பிறந்த நாளின்போது வெகுவிமர்சையாக என்னை ஊருக்குள் அழைத்து பாராட்டு கூட்டம் போட்டார்கள். அவர்கள்தான் எனக்கு "கருக்கு பாமா" என பட்டம் கொடுத்தார்கள். என் மக்கள் கொடுத்த அந்த பாராட்டத்தைத்தான் நான் பெற்ற பெரிய விருதாகக் கருதுகிறேன். அவர்களுக்கு நானொரு முன்மாதிரியாக தெரிகிறேன். அதனால் அவர்களின் பிரச்சினைகளை என் எழுத்துக்களில் கொண்டு வருகிறேன்.

தலித் கலாச்சாரத்தில் பிறப்பிற்கும், இறப்பிற்கும் எந்தவிதமான அதீதமும் கிடையாது. என்னுடைய கதைகளில் மேட்டுக்குடியினரின் சாதியை நேரடியாக குறிப்பிட்டால் என் கிராமத்து மக்களுக்கு உடனடியாக பிரச்சினை ஏற்படும். அதனால்தான் நேரிடையாக சாதி பெயரை குறிப்பிடுவதை தவிர்த்து வருகிறேன்.

சாதி, மதம் எல்லாம் கடந்து பெண்கள் ஒன்றுபட வேண்டும். அப்போதுதான் பெண் விடுதலை சாத்தியம். ஒரு தலித் எப்போது தானொரு தலித் என்பதில் பெருமை கொள்கிறானோ அப்போதுதான் அவனுக்கு விடுதலை.

மறுபடியும் ஞாநி :-

அண்மையில் திருச்சியில் ஒரு மாணவர்களுக்கான பயிற்சிப் பட்டறைக்கு சென்றிருந்தேன். மாணவர்கள் அனைவரும் பன்னிரெண்டாம் வகுப்பு. அவர்களை பயிற்சிப் பட்டறையில் நடந்த இரு சம்பவங்கள் மிகவும் பாதித்தது.

ஒன்று வீரபாண்டியன் மிகிஷி அவர்களின் உரை. அவர் மதுரையை சார்ந்தவர். ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தவர். அவர் குடும்பத்தினர் கூட அவர் படிப்பதை விரும்பவில்லை. அவர் வேலைக்குப் போய் சம்பாதித்தால் குடும்பத்திற்கு உதவியாக இருக்குமென நினைத்தனர். அவர் மாட்டுக்கறி கடையில், புரோட்டா கடையில் என பல வேலைகள் பார்த்து பாதி பணத்தை வீட்டுக்கு கொடுத்துவிட்டு, மீதி பணத்தில் தன் படிப்பை தொடர்ந்தார். எந்த சூழ்நிலையிலும் கல்வி கற்பதை அவர் கைவிடவில்லை. சென்னையில் கல்லூரி படிப்பை முடித்தார்.

இப்போது மிகிஷி ஆக தேர்ச்சி பெற்று டில்லியில் பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளார். "கலை இலக்கிய வாசிப்புதான் எனக்கு நம்பிக்கையை தந்தது" என்று சொன்னார். தமிழில் வெளிவரும் அனைத்து சிறுபத்திரிகைகளும் வாசிப்பதாகக் கூறினார்.

மாணவர்களை பாதித்த மற்றொரு சம்பவம் என்னவெனில் திருச்சிக்கு அருகில் உள்ள கல்குவாரிக்கு மாணவர்களை அழைத்துச் சென்று குடிசைக்கு இருவராக சென்று அவர்களின் வாழ்க்கை முறை என்ன என்பதை பார்த்து வரச் சொன்னோம். அந்த வாழ்க்கை எல்லா மாணவர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அப்போது அவர்களுக்கு நமது அரசியல், சமூக அமைப்புகள் பற்றி விளக்கிச் சொன்னோம். வாழ்க்கைத் தரம் மாற போராட வேண்டியதின் அவசியத்தை எடுத்துக் கூறினோம். அப்போது, ஒரு மாணவி அதெல்லாம் அப்புறம் சார் இப்போது அவர்களுக்கு நான் என்ன உதவி செய்வது என உணர்வுப்பூர்வமாக கேட்டார். சமகால இளைய தலைமுறைக்கு இப்படியும் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பது தெரியவில்லை. அவர்களுக்கு அதை முதலில் உணர்த்த வேண்டும். பாமாவின் எழுத்துக்கள் அந்தப் பணியை சிறப்பாக செய்கிறது.

பாஸ்கர் சக்தி:

”படைப்பாளியோடு கருத்து விவாதம் செய்யும் அதே வேளையில் சொந்த விவாதங்களை தவிர்க்கலாம் என ஒரு ஆர்வலர் கருதுகிறார். அதில் எனக்கும் உடன்பாடுதான். அதிக ஆர்வலர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இது மேலும் பெருக வேண்டும். உங்கள் அனைவருக்கும் நன்றி. இத்துடன் இக்கூட்டம் நிறைவு பெறுகிறது.”

இந்நிகழ்வை ஒலி வடிவில் கேட்க

 

மணி: 1 நிமிடம்: 39 --  நொடி: 18

 




இந்நிகழ்ச்சி சார்ந்த ஒளிப்படங்களைக் காண:

http://picasaweb.google.co.in/thamizhstudio/DWvTaC

 


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</