நிகழ்கால குறும்படங்கள் பற்றி ஒரு தெளிவானப் பார்வையை வாசகர்களுக்கு ஏற்படுத்தும் வண்ணம் இந்தப் பகுதியில் திரு. யாழினி முனுசாமி அவர்கள் குறும்படங்கள் குறித்த தனது திறனாய்வுக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் எழுத உள்ளார்.
இனி அவரைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம்:
யாழினி முனுசாமி
 |
இவரது பூர்வீகம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுக்காவில் மோரணம் கிராமத்தில் பிறந்த இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் M. Phil., முடித்துவிட்டு தற்போது ஒரு தனியார் பல்கலைகழகத்தில் தமிழ்த் துறைப் பேராசிரியராக பணியாற்றிகொண்டுள்ளார்.முன்னதாக "குமுதம்" பத்திரிகையில் நான்கு வருடம் பணியாற்றியுள்ளார். |
2005 ஆம் ஆண்டு மித்ரா பதிப்பகம் வெளியிட்டுள்ள "உதிரும் நிலை" எனும் கவிதைத் தொகுப்பை எழுதியுள்ளார். இவர் எழுதிய மாற்ற நூல்கள்:
"உதிரும் நிலையும், உதிராத பதிவுகளும்" - விமர்சனத்தொகுப்பு
"தேவதை அல்ல பெண்கள்" - கவிதை தொகுப்பு
"பின் நவீனத்துவ சூழலில் புலம் பெயர்ந்த கவிதைகளும், பெண்ணியக் கவிதைகளும்" - கட்டுரைத் தொகுப்பு
"தலித் இலக்கியமும் அரசியலும்" - கட்டுரை தொகுப்பு
மேலும், இலக்கியமும் குறும்படமும், தமிழ் வளர்க்கும் இதழ்கள் போன்ற நூல்களையும் எழுதியுள்ளார்.
இவர் நமது தளத்தில் தமிழின் குறும்படங்கள் / ஆவணப்படங்கள் குறித்து தனது திறனாய்வுக் கட்டுரைகள் எழுத உள்ளார்.
விரைவில்...