வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


எப்போதும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சாபக் கேடு உண்டு. கலைஞர்களையோ, படைப்பாளிகளையோ அவர்கள் வாழும் காலத்தில் நாம் நாம் அறிந்துக் கொள்வதே கிடையாது. தான் வாழும் காலத்தில் பத்து கோடி மக்கள் தொகை கூட இல்லாத காலத்தில் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்பட்ட விதமும், முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் பாரதியார் கொண்டாடப்பட்ட விதமும் நாம் அறிந்ததே. இறந்தப் பின்னரும் கூட நாம் ஒரு சில கலைஞர்கலைதான் கொண்டாடுகிறோமே தவிர திறமை படைத்த அனைவரையும் கொண்டாடுவதில்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படத் துறையில் சாதித்த ஒரு சில இசைக் கலைஞர்களை பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறப் போகிறது.

"சிகரம் தொட்டவர்கள்". திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


பி.ஜி.எஸ். மணியன்

இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள அவர், இசையில் ஓரளவிற்கு பரிச்சயமும் உள்ளவர். ஆன்மீக கட்டுரைகளை மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் (கச்சாலீஸ்வரர் கோவில் - அரண்மனைக்கார தெருவில் - அமைந்துள்ளது) வெளியிட்ட ஆண்டு விழா மலர்களில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழில் "மகாலக்ஷ்மி சுப்ரபாதம்" எழுதி வெளியிட்டுள்ளார்.

அவற்றுக்கு அவரே ராகங்களும் அமைத்து இருக்கிறார். (தற்போது அவரது சொந்த உபயோகத்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆன்மீக சொற்பொழிவுகள் சிலகாலம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகில் உள்ள நெமிலி பாலா பீடத்தின் சார்பாக "சொற்பொழிவு செம்மல்" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பழைய திரைப்படங்களில் ஆர்வம் அதிகம்.

இனி தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே கதைக்கிறார்.

பொழுது போகாமல் சமீபத்தில் ஒருநாள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்தக்காலத்து இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவர் போன்று அந்தக்காலத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி குறைவான அந்தக்கால கட்டத்தில் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.

அவர்களை பற்றி "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுடியோவில் எழுதலாமே என்று தோன்றி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து விட்டு உங்கள் மேலான கருத்தகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சிகரம் தொட்டவர்கள் தொடர்கள் வாயில்


இசைச் சக்கரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 9

பி.ஜி.எஸ். மணியன்  pgs.melody@gmail.com

"நானும் எஸ். வரலக்ஷ்மியும்தான் ராமநாத ஐயருக்கு பிடித்த பாடகிகள். அவர் கொடுக்குற சங்கதிகள் எவ்வளவு கஷ்டமானதாக இருந்தாலும் நாங்க ரெண்டு பேரும் சுலபமா கிரகித்துக் கொண்டு பாடி விடுவோம் என்பதாலே அவருக்கு எங்களை ரொம்ப பிடிக்கும்"
- காலம் சென்ற பின்னணிப் பாடகி திருமதி ஜிக்கி.


ஹரிதாஸ் படம் வெளியான அன்று காலையில் எம்.கே.தியாகராஜ பாகவதர் பயணித்த வெள்ளைக்குதிரை பூட்டிய கோச்சு வண்டி கவிழ்ந்து முழங்காலில் பலத்த அடி.

"செண்டிமெண்ட்" களில் பெருத்த நம்பிக்கை வைத்திருந்த பாகவதர் அதனை ஒரு அபசகுனமாக கருதினார். பின்னால் தனக்கு ஏதோ பெருத்த அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்று பயந்தார்.

அவர் பயந்தது போலவே நடந்தது. லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக அவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். அதே நாளில் கலைவாணரும் கைது செய்யப்பட்டார். சில நாட்களுக்குப் பிறகு பக்ஷிராஜா ஸ்டுடியோவின் அதிபரும் படத்தயாரிப்பாளரும், இயக்குனருமான ஸ்ரீராமுலு நாயுடுவும் இந்தக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவங்கள் ஜி. ராமநாதனை பெரிதும் பாதித்திருக்கவேண்டும். ஏனென்றால் சம்பந்தப் பட்ட மூவரும் அவருடைய நெருகிய நண்பர்களாக இருந்தனர்.

ஹரிதாஸ்-படத்துக்கு தான் அமைத்த இசையால் பாகவதர் பெரிதும் கவரப்பட்டிருந்தார். ஆகவே தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் நடிகரின் படங்களுக்கு தொடர்ந்து இசை அமைக்கும் வாய்ப்புகள் தனக்கு வந்து சேரும் - என்று அவர் எதிர்பார்த்திருக்கக் கூடும். வெற்றிகள் தானே தொடர் வாய்ப்புகளுக்கு விலாசமாக அமைகின்றன?

ஆனால்.. ஹரிதாஸ் வெளியாகும் முன்பே பாகவதர் தனது அடுத்த "உதயணன்"படத்துக்கு இசை அமைப்பாளராக சி.ஆர்.சுப்பராமனுக்கு வாய்ப்பு அளித்துவிட்டிருந்தார்.

"வெற்றிகரமான இசை அமைப்பாளராக ஜி.ராமநாதனுக்கு சரியான அங்கீகாரம் கிடைத்து விட்டிருக்கிறது. இனி நாம் புதியதாக ஒரு திறமைசாலிக்கு வாய்ப்பு அளித்து அவர் முன்னுக்கு வர உதவுவோம்." - என்ற எண்ணத்தில் கூட அவர் சி.ஆர். சுப்பராமனை தேர்ந்தெடுத்திருக்கலாம்.

ஆனால் தமிழ்நாடே அதிர்ந்து போகும் அளவுக்கு பாகவதர் கைது செய்யப்பட்டதால் சுப்பராமனின் வாய்ப்பும் பறிபோனது.

மூன்று வருடங்கள்... ஹரிதாஸ் தொடர்ந்து ஓடியபோதும்.. அந்த வெற்றியை முழுதுமாக அனுபவிக்க வேண்டிய தியாகராஜ பாகவதர் சிறையில் வாடியது விதியின் விசித்திரம்தான் என்று கூற வேண்டும்

ஆனால்.. ஜி. ராமனாதனின் வாழ்வைப் பொருத்தமட்டில் "ஹரிதாஸ்" படத்தின் வெற்றி அவருக்கு மாடர்ன் தியேட்டர்ஸின் ஆஸ்தான இசை அமைப்பாளராகும் வாய்ப்பை கொடுத்து இசை உலகில் அவரை நிரந்தரமாக்கியது.

ஏற்கெனவே தனது "உத்தம புத்திரன்" படத்திற்கு ராமநாதன் அமைத்த இசையால் ஈர்க்கப்பட்டிருந்த அதிபர் டி.ஆர். சுந்தரம் அடுத்த வாய்ப்புகளை தொடர்ந்து அவருக்கு கொடுத்தார்.

என்றாலும்.. ஹரிதாஸ் வெளியான 1944 -ஆம் ஆண்டுக்கு பிறகு ஜி. ராமனாதனின் இசை அமைப்பில் வெளிவந்த படங்கள் தோல்வியையே தழுவின.

பாகவதரின் இடத்தில் அவருக்கு மாற்றாக ஜி.என்.பி. அவர்களை கொண்டுவர நினைத்து எடுக்கப்பட்ட "ருக்மாங்கதன்" என்ற படத்துக்கு அற்புதமான இசையை ஜி.ராமநாதன் அளித்தும்... அருமையான முறையில் ஜி. என்.பி. அவர்கள் பாடி நடித்தும் கூட படம் பெருத்த அடியை வாங்கியது.

தனது படங்கள் தோல்வி அடைந்தாலும் - அதிபர் சுந்தரம் ஜி. ராமநாதனை கைவிட்டுவிடவில்லை. மாடர்ன் தியேட்டர்சில் சுந்தரம் அவர்களின் படகு போன்ற காருக்கு அருகில் தன்னுடைய காரை நிறுத்தும் அளவுக்கு ஜி. ராமநாதன் வளர்ந்தது குறிப்பிடப் படவேண்டிய ஒன்று.

"பொன்னருவி", "கடகம்" "ஏகம்பவாணன்" போன்ற படங்களுக்கு ஜி.ராமநாதன் இசை அமைத்திருந்தார் என்று பட்டியலைப் பார்த்துதான் தெரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது.

வேறு ஒரு இசை அமைப்பாளராக இருந்தால் இப்படி தொடர் தோல்விப் படங்கள் என்றால் காணாமலே போயிருப்பார். ஆனால் ஜி. ராமனாதனின் விஷயத்தில் கதையே வேறு.

அவர் ஒரு வெற்றியைக் கண்டால் அந்த வெற்றியின் வீச்சமும் அதிர்வும் அடுத்து வரும் தோல்விகளுக்கு ஈடு கொடுத்து அடுத்த வெற்றி வரும் வரை அவருக்கு துணையாக இருக்கும்.

முதலில் உத்தம புத்திரன் - படத்தின் வெற்றி .. அடுத்து வந்த தோல்விகளை கடந்து "ஜகதலப் பிரதாபன்" வரை நீடித்தது. அதுபோலவே இப்போது "ஹரிதாஸ்"படத்தின் மாபெரும் வெற்றி - அடுத்த வெற்றி வரும் வரை அவரை திரை உலகில் தாக்குப் பிடிக்க வைத்தது.

எத்தனை காலம் தெரியுமா..? சரியாக மூன்று ஆண்டுகள்.. 1947 - வரை.

அதே சமயம் காலமும் மெல்லமெல்ல மாறத்தொடங்கியது. "பாகவதரோட பாட்டு போச்சு என்று சொல்கிறமாதிரி வேறு எந்த பாடக நடிகரையும் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே இனிமேல் வெறும் பாட்டுக்களை வைத்து மட்டும் படம் பண்ணினால் அது பப்படம் தான்" - என்ற அச்சம் தயாரிப்பாளர்களை மெல்ல மெல்ல கவ்வ ஆரம்பித்தது.

"புதிதாக எதையாவது செய்யவேண்டும்". என்று படத்துறையில் ஈடுபட ஆரம்பித்த புதிய தயாரிப்பாளர்களை நினைக்க வைக்க ஆரம்பித்தது.

ஏ.வி.எம். போன்றவர்கள் புதிய வெற்றிகளை படைக்க ஆரம்பித்து புதுமைகளை புகுத்த ஆரம்பித்தனர். "பின்னணி"பாடல் முறை மெல்ல மெல்ல வேர் விட ஆரம்பித்தது.

"அழகும் நடிப்புத் திறமையும் தான் முக்கியம். பாட முடியாவிட்டாலும் பரவாயில்லை.. இரவல் குரல்களில் பாடிக்கொள்ளலாம்." என்ற நிலை நிலவ ஆரம்பித்தது.

திரைப்படத்துறையில் ஏற்பட்டுக்கொண்டிருந்த புதிய மாறுதல்களை கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார் டி.ஆர். சுந்தரம். தனது துறையில் ஏற்பட்டுக்கொண்டிருந்த மாறுதல்களுக்கு ஏற்ப தன்னை வளர்த்துக்கொள்வதில் ஈடுபட ஆரம்பித்தார் ஜி.ராமநாதன். ஜி. ராமனாதனின் இந்த குணாதிசயம் சுந்தரம் அவர்களை பெரிதும் கவர்ந்திருக்கவேண்டும்.

"அடுத்த படம் நிச்சயம் வெற்றிப்படம் தான்" - என்று சொல்லி அடிப்பது போல வெற்றியை குறிவைத்து இயங்க ஆரம்பித்தார் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் சுந்தரம். அவருக்கு பக்க பலமாக - உற்ற துணையாக - கதை வசனத்துக்கு கவிஞர் பாரதிதாசன், இசை அமைப்புக்கு ஜி. ராமநாதன்.

அவர் வைத்த புள்ளி தப்பவில்லை . அவருக்கு மட்டும் அல்ல. மூன்றாண்டுகளுக்கு பிறகு அதுவரை "எங்கே அபூர்வமாகவே மாறிவிடுமோ" என்று இருந்த வெற்றியை இசைச் சக்கரவர்த்தி ஜி. ராமனாதனுக்குமே ஒரு சிந்தாமணியாக கொண்டுவந்து சேர்த்தது.

சாதாரண சிந்தாமணி இல்லை. அபூர்வ சிந்தாமணி. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி.

சிகரம் தொடுவோம்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</