வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


எப்போதும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சாபக் கேடு உண்டு. கலைஞர்களையோ, படைப்பாளிகளையோ அவர்கள் வாழும் காலத்தில் நாம் நாம் அறிந்துக் கொள்வதே கிடையாது. தான் வாழும் காலத்தில் பத்து கோடி மக்கள் தொகை கூட இல்லாத காலத்தில் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்பட்ட விதமும், முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் பாரதியார் கொண்டாடப்பட்ட விதமும் நாம் அறிந்ததே. இறந்தப் பின்னரும் கூட நாம் ஒரு சில கலைஞர்கலைதான் கொண்டாடுகிறோமே தவிர திறமை படைத்த அனைவரையும் கொண்டாடுவதில்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படத் துறையில் சாதித்த ஒரு சில இசைக் கலைஞர்களை பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறப் போகிறது.

"சிகரம் தொட்டவர்கள்". திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


பி.ஜி.எஸ். மணியன்

இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள அவர், இசையில் ஓரளவிற்கு பரிச்சயமும் உள்ளவர். ஆன்மீக கட்டுரைகளை மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் (கச்சாலீஸ்வரர் கோவில் - அரண்மனைக்கார தெருவில் - அமைந்துள்ளது) வெளியிட்ட ஆண்டு விழா மலர்களில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழில் "மகாலக்ஷ்மி சுப்ரபாதம்" எழுதி வெளியிட்டுள்ளார்.

அவற்றுக்கு அவரே ராகங்களும் அமைத்து இருக்கிறார். (தற்போது அவரது சொந்த உபயோகத்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆன்மீக சொற்பொழிவுகள் சிலகாலம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகில் உள்ள நெமிலி பாலா பீடத்தின் சார்பாக "சொற்பொழிவு செம்மல்" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பழைய திரைப்படங்களில் ஆர்வம் அதிகம்.

இனி தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே கதைக்கிறார்.

பொழுது போகாமல் சமீபத்தில் ஒருநாள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்தக்காலத்து இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவர் போன்று அந்தக்காலத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி குறைவான அந்தக்கால கட்டத்தில் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.

அவர்களை பற்றி "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுடியோவில் எழுதலாமே என்று தோன்றி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து விட்டு உங்கள் மேலான கருத்தகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சிகரம் தொட்டவர்கள் தொடர்கள் வாயில்


டி. ஜி. லிங்கப்பா - 2

பி.ஜி.எஸ். மணியன்  

சென்னை வந்த புதிதில் - இளமையில் தன்னுடைய பதினான்காவது வயதில் சிறுவன் லிங்கப்பா விஸ்வநாதன் என்பவர் தயாரித்த "காமதேனு" என்ற திரைப்படத்தில் நடிக்க முயற்சி செய்தான்.

ஆனால் விஸ்வநாதனோ அவனை நடிப்பதற்கு பதிலாக அந்தப் படத்தில் பாட வைத்து விட்டார். லிங்கப்பாவின் பாடல் நன்றாக அமைந்தது. விஸ்வநாதன் அவனை தன்னுடனேயே சில காலம் இருக்கும்படி வைத்துக்கொண்டார். லிங்கப்பவும் அவருடன் இருந்து அவரது அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமானான்.

லிங்கப்பாவுக்கு பல தரப்பட்ட வாத்தியங்களை கையாளத்தெரிந்த காரணத்தினால் அவர் அப்போது பிரபலமாக இருந்த மயூரா பிலிம் ஆர்கெஸ்ட்ராவில் சேர்ந்துகொண்டு ஹார்மோனியம், மாண்டலின், கிடார் ஆகிய இசைக்கருவிகளை வாசிக்க ஆரம்பித்தார்.

இந்த இசைக்குழு திரைப்படங்களுக்கும் கிராமபோன் கம்பெனிகளுக்கும் வாசித்து வந்தது. அந்த வாத்திய கோஷ்டியில் ஒருவராக டி.ஜி. லிங்கப்பாவின் திரையுலக பிரவேசம் ஆரம்பித்தது.

இந்த இடத்தில் ஒரு சுவையான தகவலை குறிப்பிடவேண்டும். 1941-இல் வெளிவந்த எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்த படமான அசோக் குமார் படத்தில் இசை குழுவில் சேர்ந்து லிங்கப்பா பணியாற்றி இருந்திருக்கிறார். அதற்கு அவர் பெற்ற மாத வருமானம் முப்பது ரூபாய்.

அதோடு முடங்கி விடவில்லை அவர். மேலும் முன்னேறவேண்டும் என்பதற்காக அவராகவே தன்னுடைய அதிர்ஷ்டத்தை பரிசோதிப்பதற்காக ஜெமினி ஸ்டுடியோவுக்குள் நுழைந்தார்.

பிரபல இசை அமைப்பாளர் சி. ராமச்சந்திரா உள்ளிட்ட மூத்த இசைக் கலைஞர்கள் அங்கு இருந்தனர். அவர்களிடம் குழுவில் ஒருவனாக பணியாற்ற வாய்ப்பு கேட்டார் லிங்கப்பா.

ஆனால் அவருடைய இளம் வயதை காரணம் காட்டி அவரை தங்களுடன் இணைத்துக்கொள்ள ராமச்சந்திரா மறுத்துவிட்டார்.

மனம் உடைந்து போனாலும் முயற்சியை கைவிடாத லிங்கப்பா சேலம் நகரில் இருந்த மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தை அணுகினார்.
அவர் சென்றபோது அங்கே இசை அமைப்பாளர்கள் T.R. பாப்பா மற்றும் கே. வி. மகாதேவன் இருவரையும் சந்தித்தார்.

கே.வி. மகாதேவன் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்துக்காக அந்தக் காலகட்டத்தில் எந்தப் படத்துக்கும் இசை அமைக்கவில்லை.

பின்னாட்களில் தான் வண்ணக்கிளி, கைதி கண்ணாயிரம் ஆகிய இரண்டு படங்களுக்கு மட்டுமே இசை அமைத்தார்.

என்றாலும் நாற்பதுகளின் ஆரம்பத்தில் அவர்கள் அனைவருமே வாய்ப்புக்காக ஒவ்வொரு ஸ்டூடியோவாக அலைந்து கொண்டு இருந்தனர்.

அந்த சமயத்தில் T.R. பாப்பா, டி. ஜி. லிங்கப்பா, கே.வி. மகாதேவன் மூவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

பின்னாட்களில் கே.வி. மகாதேவன் இசை அமைக்க தொடங்கியபோது அவரது இசைக்குழுவில் மற்ற இருவரும் இணைந்து பணியாற்றி அவரது மாபெரும் வெற்றிக்கு காரணமாக இருந்தார்கள் என்றால் அது மிகையாகாது.

அதன் பிறகு 1945 வாக்கில் லிங்கப்பா சென்னை திரும்பி பிரகதி ஸ்டூடியோவில் பிரபலமான இசை அமைப்பாளர் R. சுதர்சனம் அவர்களின் இசைக்குழுவில் சேர்ந்து பணியாற்ற தொடங்கினார்.

அந்த ஆண்டு ஏ. வி. எம். தயாரிப்பில் உருவான "ஸ்ரீவள்ளி" மற்றும் "நாம் இருவர்" ஆகிய படங்களில் லிங்கப்பாவின் பங்களிப்பும் இசைக்குழுவில் ஒருவராக தொடர்ந்தது.

பிறகு இசை அமைப்பாளர் C.R. சுப்பராமன் அவர்களுடன் சில காலம்.

தொடர்ந்து திரைப்படங்களில் பணியாற்றினாலும் குறிப்பிட்ட ஒரு இசை அமைப்பாளருடன் மட்டுமே அவர் தொடர்ந்து பணியாற்ற வில்லை.

ஆங்கிலத்தில் "Free Lance Musician" என்பார்களே அப்படித்தான் அவர் அனைவருடனும் இணைந்து பணியாற்றி வந்தார்.

அதனால் அவருக்கு ஒவ்வொரு இசை அமைப்பாளரின் இசை நுணுக்கங்களும் அத்துப்படி ஆயிற்று.

புதிய பலதரப்பட்ட இசைக்கருவிகளையும் தேடித் தேடி தனக்காக வருவித்துக்கொணடார் அவர். எலெக்ட்ரிக் கிட்டார் ஒன்றை இதற்காக லண்டனில் இருந்து வரவழைத்துக்கொண்டார். பலரும் அதிசயிக்கத்தக்க வகையில் கிட்டார் வாசிப்பில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தினார் லிங்கப்பா.

இசை மேதை G ராமநாத அய்யர், எஸ்.வி. வெங்கட்ராமன், கே. வி. மகாதேவன் போன்றவர்கள் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வந்தார்கள்.

காலம் கனிந்து வந்தது.

1951- டி. ஜி. லிங்கப்பாவுக்கு முதல் முதலாக ஒரு திரைப்படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பு இந்த ஆண்டில் தான் அவரைத் தேடி வந்தது.

சிகரம் தொடுவோம்...



 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</