வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா மற்றும் சீன பிரதமர்களின் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பரிவர்த்தனைத் திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சீனாவிற்கு இந்தியாவில் இருந்து 100 இளையோரைக் கொண்ட குழு ஆண்டு தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்தக் குழுவினர் சமீபத்தில் சீனாவிற்குச் சென்றுள்ளார்கள். இக்குழுவில் தமிழ்நாடு சார்பில், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் 2001 முதல் இயங்கிவரும் ஸ்ரீ சக்தி சமூகப் பொருளாதாரக் கல்வி நலன் அறக்கட்டளையின் இயக்குநரும், கவிஞருமான சக்திஜோதி அவர்கள் சீனாவிற்கு சென்று வந்துள்ளார். தனது சீன அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொள்ளவிருக்கிறார்.

தொடராக வரவிருக்கும் இந்தப் பகுதியின் அனைத்துக் கட்டுரைகளும் வாசகர்களுக்கு உறுதியாக பயனளிக்கக் கூடிய ஒன்று அமையும் என்பதில் எமக்கு ஐயமில்லை.

 

 
     
     
     
   
பயணக் கட்டுரை
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


சக்தி ஜோதி

கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா மற்றும் சீன பிரதமர்களின் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பரிவர்த்தனைத் திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சீனாவிற்கு இந்தியாவில் இருந்து 100 இளையோரைக் கொண்ட குழு ஆண்டு தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்தக் குழுவினர் சமீபத்தில் சீனாவிற்குச் சென்றுள்ளார்கள். இக்குழுவில் தமிழ்நாடு சார்பில், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் 2001 முதல் இயங்கிவரும் ஸ்ரீ சக்தி சமூகப் பொருளாதாரக் கல்வி நலன் அறக்கட்டளையின் இயக்குநரும், கவிஞருமான சக்திஜோதி அவர்கள் சீனாவிற்கு சென்று வந்துள்ளார். தனது சீன அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொள்ளவிருக்கிறார்.
தொடராக வரவிருக்கும் இந்தப் பகுதியின் அனைத்துக் கட்டுரைகளும் வாசகர்களுக்கு உறுதியாக பயனளிக்கக் கூடிய ஒன்று அமையும் என்பதில் எமக்கு ஐயமில்லை.

இனி அவரைப் பற்றியும் அவரது நிறுவனம் பற்றியும் அவரது பயணத்திற்கான காரணம் பற்றியும் ஒரு விரிவான அறிமுகம்.

சக்தி ஜோதி அவர்கள் "நிலம் புகும் சொற்கள்" என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளை:

ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளையானது 21-12-2001 அன்று திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு துவக்கப்பட்டது. தற்பொழுது 680 கிராமங்களை உள்ளடக்கி திண்டுக்கல், தேனி, ஈரோடு மற்றும் கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் செயல்படுகிறது.

பார்வையும் நோக்கமும்

“வளர்ச்சியை நோக்கி....” சமூகத்தின் அனைத்து நிலையினரையும் வளர்ச்சியின் அடுத்த நிலை நோக்கி வழிநடத்திச் செல்வதையே, சமூகத்தின் மீதான நீள்பார்வையாகக் கொண்டு செயல்படுகிறது. கிராமப்புற வளங்களை மேம்படுத்துவதும், கிராமப்புற மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மனிதர்களை சமுதாயத்தின் மைய நீரோட்டத்தில் இணைப்பதற்காக ஒட்டு மொத்த ஆதார சக்தியை திரட்டித் தருவதற்காகவும், பெண்கள், குழந்தைகள் முன்னேற்றத்திற்காகவும் சமூகத்தின் அனைத்து வகையான முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

சமூக மேம்பாட்டு செயல்பாடுகள்

மகளிர் மேம்பாட்டில்….
1. 2880 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் 680 கிராமங்களில் 34,800 உறுப்பினர்களுக்கு மேல் சக்தி அறக்கட்டளையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
2. பாரத ஸ்டேட் வங்கியுடன் 18 கிளைகளுடன் இணைந்து சுய உதவிக் குழவினருக்கு கடனுதவிப் பெற்றுத்தரப்படுகிறது. இது வரை 56 கோடி வரை கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
3. மேலும் ர்னுகுஊ வங்கியுடன் இணைந்து 3 கோடி வரை கடனுதவி பெற்றுத் தரப்பட்டுள்ளது.

சுற்றுச் சூழல் மேம்பாட்டில் ...
சுற்றுபுறச் சூழல் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக வருடம் 1000 மரக்கன்றுகளை நடுதல், இதுவரை 7,000 மரக்கன்றுகளை சக்தி அறக்கட்டளையின் சார்பாக நடப்பட்டுள்ளது.

நீர்வடிப் பகுதி மேம்பாட்டு திட்டம் :
தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (நபார்டு) உதவியுடன் கிராமப்புறங்களின் இயற்கை வளங்களை மேம்படுத்துவது, மண் அரிப்பைத் தடுப்பது மேலும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது மூலமாக கிராமங்களிலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்து கிராம மக்களின் வாழ்;க்கைத்தரம் மேம்பாடு அடைய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

பாரத ஸ்டேட் வங்கியின் வணிக வழிகாட்டியாக (Business Facilitator)

திண்டுக்கல், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளிலும் கடன் மற்றும் சேமிப்பு சம்பந்தமான வசதிகளை வாடிக்கையாளர்களுக்குப் பெற்றுத்தரும் வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறது.

மருத்துவ முகாம்கள் :

கண் பரிசோதனை முகாம்இ எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்இ தாய்இ சர்க்கரை நோய் விழிப்புணர்வு, சேய் நல பரிசோதனை முகாம் உட்பட 15 வகையான மருத்துவ முகாம் நடத்தப்பட்டு 28இ000 மக்கள் பயனடைந்துள்ளனர்.

சக்தி சுய தொழில் பயிற்சி நிலையம் :
பயிற்சிகளில் சில…….
1. நான்கு இடங்களில் தையல் பயிற்சிப்பள்ளி
2. சானிடரி நாப்கின் பயிற்சி
3. கண்ணாடி மற்றும் பேப்ரிக் பெயிண்டிங் பயிற்சி
4. ரெக்ஸின் மற்றும் ஜூட் பை தயாரிப்பு பயிற்சி
5. செருப்பு தயாரித்தல் பயிற்சி
6. கயிறு (ஊழசை Pசழனரஉவ) தயாரித்தல்
7. உணவு பொருட்கள் தயாரிப்பு பயிற்சி
8. இயற்கை விவசாயப் பயிற்சி

யுரேகா மாலை நேர பயிற்சிப் பள்ளி :
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்காக 10 மையங்களில் மாலை நேர சிறப்பு பயிற்சி நடத்தப்படுகிறது

ஹெலன் பகல் நேர குழந்தைகள் காப்பகம் :
கொடைக்கானல் மலைப்பகுதியில் வடகவுஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் மேல்பள்ளம் காலணியில் மலைவாழ் குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

சக்தி இறகு பந்துக் கழகம் :
கிராமப்புற இளைஞர்கள் மாணவர்களுக்காக உன் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.

பொது சுகாதாரம் :
அய்யம்பாளையத்தில் பெண்களுக்காக பொது கழிப்பறை கட்டித் தரப்பட்டுள்ளது.

சிறப்பு நிகழ்ச்சிகள் :
1. குழந்தைகள் தினம் மாரத்தான் போட்டி
2. பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சிகள்
3. கல்லூரி மாணவர்களுக்காக தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி
4. இளைஞர்களுக்காக புகை, மது பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
5. உலக மகளிர் தின கருத்தரங்கம்
6. உடல் ஊனமுற்றோருக்காக சுய முன்னேற்ற சிறப்பு பயிற்சிகள்.

விருதுகள் :
1. பாரத ஸ்டேட் வங்கி விருது – 2 முறை
2. மாவட்ட ஆட்சியர் பசுமை விருது - 2 முறை
3. லைவ் விருது - லயோலா கல்லூரி
4. மக்கள் தொலைக்காட்சி விருது
5. சி.பா.ஆதித்தனார் விருது
6. நேரு யுவகேந்திரா தேனி மாவட்டம் மற்றும் மாநில விருது
7. நபார்டு விருது.

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பயணக் கட்டுரை TS சக்தி ஜோதி தொடர்கள் வாயில்

சீனப் பயணக் கட்டுரைகள் - 6

சக்தி ஜோதி  

மனிதனின் உயிர், ஆரோக்யம், அமைதி இவற்றை இயற்கை மட்டுமே காப்பதாக உலக மக்கள், நம்புகின்றனர். இந்த தத்துவத்தையே சீனர்கள் வழிபடுகிறார்கள். பச்சை நிறத்தை இயற்கையின் அடையாளமாக குறிப்பிடுகின்றனர். பச்சை, தன்மையான நிறம். ஆழ் மனதில் மனித நேயத்தையும், அமைதியையும், மன உறுதியையும் பச்சை நிறமே வழங்குவதாக சீனர்கள் நம்புகின்றனர். கன்பூசியனிசம், தாவோயிஸம், புத்திஸம் என்ற மூன்று தத்துவங்கள் சீனாவை ஆக்கிரமித்துள்ளன. இவையனைத்தும் வலியுறுத்தும் ஒரே விஷயம் எதுவென்றால் ‘இயற்கையை நேசியுங்கள்’ என்பது தான். எனவே சீனர்கள் பசுமையைப் போற்றுகின்றனர். பச்சை நிறத்தை வணங்குகின்றனர். மிகப்பெரிய மரங்கள் அல்லது மிகச் சிறிய புற்கள் எவையானாலும் அதன் பச்சை நிறம் மனிதனை இயற்கையோடு இணைக்கின்றது. ஆறுகள், மலைகள், காடுகள் இவை அதன் வளம் குன்றாமல் காப்பது மனிதனின் கடமை என்பதை சீனர்கள் உணர்ந்துள்ளனர்.

இயற்கை விவசாயத்தையே பெரிதும் விரும்புகின்றனர். எங்கும் பசுமை நிறைந்திருக்கும் இயற்கையை மட்டுமன்றி இவர்களின் கைவினைப் பொருட்களிலும் பச்சை நிறமே அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

சீனாவில் தயாராகும் மூங்கில் வீட்டு உபயோக பொருட்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தேனீர் பருகுவது அங்கே தியானம் போலவே கையாளப்படுகிறது.

பர்மாவிலிருந்து சுமார் 15வது நூற்றாண்டு காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட ஜேட் (Jade) எனப்படும் பச்சை மரகதக் கல் அதன் நிறத்திற்காகவே க்விங் அரசப் பரம்பரையினரால் முதன்முதலாக விரும்பி வாங்கப்பட்டது. சீனாவில் வெள்ளை, மஞ்சள், நீலம் வண்ணங்களில் ஜேட், கற்கள் கிடைத்தாலும் ஆழமான பச்சை நிறம் கொண்ட கற்களையே ஆபரணமாக அணிந்து கொள்ள விருப்பப்பட்டனர். பச்சை கற்களினால் ஆன மோதிரம், நெக்லஸ், மூக்குப் பொடி டப்பா, ஸ்மோகிங் பைப் மூடி என தாங்கள் பயன்படுத்தும் பொருட்களில் எல்லாம் விலையுயர்ந்த ஜேட் கற்களை பயன்படுத்துவதை கௌரவமாக கருதினர். சீனர்களின் கைத் திறனாலேயே பச்சை கற்களுக்கு மதிப்பு உயர்ந்தது. இவ்வாறு சீனர்கள் பச்சை நிறத்திற்கு தருகின்ற மதிப்பினை பற்றி சீன இளைஞர் வாண் டூ வர்ணித்தவாறே எங்களை கூட்டிச் சென்ற இடம் க்யூஷோ மாகாணத்தின் குய்யாங் நகரம்.

க்யூஷோ மாகாணம்: சீனாவில் சிறுபான்மை மக்கள் தொகையில் 3வது இடத்தில் விளங்குகிறது. இங்கு 49 சிறுபான்மை இனத்தினர் வசிக்கின்றனர். யான் லே என்ற மிங் வம்சத்து அரசரால் 1413ல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட மாகாணம் இது.

எண்பதுக்கும் மேற்பட்ட வரலாற்று கலாச்சாரம் நிரம்பியது இந்த மாகாணம். பழங்குடியினர் வசிக்கின்ற இந்த மாகாணம் முக்கியமான சுற்றுலா தலமாகவும் இருக்கிறது. இதற்குக் காரணம் இங்கு நிரம்பிக் கிடக்கும் பசுமை நிறைந்த இயற்கை மற்றும் பாரம்பரிய கலாச்சாரமும் தான். நாங்கள் ஹ_யாக்ஸி மாவட்டத்தில் உள்ள ப்ளாக்ஸ்டோன் குடியிருப்பு பகுதிக்கு சென்றோம்.

சாம்பல் வண்ண கற்கள் நிரம்பிய இந்த பகுதியில் அந்த கற்களாலேயே வீடுகளும் அதன் கூரைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளது. வீடுகளின் அழகு மற்றும் அதன் தோற்றத்தினால் ப்ளாக்ஸ்டோன் குடியிருப்பு என்று பெயர் பெற்றது. இந்த வகை கற்களால் கட்டப்படுகிற வீடுகள் கோடை மற்றும் குளிர் காலங்களில் வாழ்வதற்கு ஏதுவாக அமைந்திருக்கின்றது.

2006ஆம் ஆண்டு முதல் சீன அரசின் ஊரக புதுமைபடுத்தும் திட்டத்தில் இந்த குடியிருப்பை முன்னோடி கிராம மண்டலமாக அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இத்திட்டத்தின் கீழ் கிராமிய கலாச்சாரம், சுற்றுலா வளம் மற்றும் சுற்றுலா கட்டிடங்களை

பாதுகாப்பது இதன் மூலமாக சுற்றுலா பயணிகளை கவர்ந்து இந்த பகுதியின் பொருளாதார மேம்பாட்டினை உயர்த்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றி அதை நூறு சதவீதம் சிறப்பாக செயல்படுத்தவும் செய்திருக்கின்றனர். இந்த பகுதியில் உள்ள வீடுகளில் குடிநீர் மற்றும் மின்சாரம் போன்றவை இணைய தளத்திற்கு இணையாக வழங்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு பைப் லைன் மூலமாக அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மிக எளிமையான சமையல் முறையின் காரணமாக பெண்களின் சமையல் வேலைப்பளு குறைந்து அவர்களும் விவசாயத்தில் கவனம் செலுத்துகின்றனர். மலைப்பிரதேசமாக அமைந்துள்ள இந்த நகரம் சுற்றுலா பகுதியாக இருந்தாலும் கூட அந்த பகுதி மக்கள் வெகுளித்தனமும், மிரட்சியும் நிறைந்த பார்வையாலேயே எங்களை வரவேற்றனர். மையோ இன மக்கள் வசிக்கின்ற இந்த பகுதியில் அரசின் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

பயணிப்போம்...

 

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</