வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா மற்றும் சீன பிரதமர்களின் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பரிவர்த்தனைத் திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சீனாவிற்கு இந்தியாவில் இருந்து 100 இளையோரைக் கொண்ட குழு ஆண்டு தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்தக் குழுவினர் சமீபத்தில் சீனாவிற்குச் சென்றுள்ளார்கள். இக்குழுவில் தமிழ்நாடு சார்பில், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் 2001 முதல் இயங்கிவரும் ஸ்ரீ சக்தி சமூகப் பொருளாதாரக் கல்வி நலன் அறக்கட்டளையின் இயக்குநரும், கவிஞருமான சக்திஜோதி அவர்கள் சீனாவிற்கு சென்று வந்துள்ளார். தனது சீன அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொள்ளவிருக்கிறார்.

தொடராக வரவிருக்கும் இந்தப் பகுதியின் அனைத்துக் கட்டுரைகளும் வாசகர்களுக்கு உறுதியாக பயனளிக்கக் கூடிய ஒன்று அமையும் என்பதில் எமக்கு ஐயமில்லை.

 

 
     
     
     
   
பயணக் கட்டுரை
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


சக்தி ஜோதி

கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா மற்றும் சீன பிரதமர்களின் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பரிவர்த்தனைத் திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சீனாவிற்கு இந்தியாவில் இருந்து 100 இளையோரைக் கொண்ட குழு ஆண்டு தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்தக் குழுவினர் சமீபத்தில் சீனாவிற்குச் சென்றுள்ளார்கள். இக்குழுவில் தமிழ்நாடு சார்பில், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் 2001 முதல் இயங்கிவரும் ஸ்ரீ சக்தி சமூகப் பொருளாதாரக் கல்வி நலன் அறக்கட்டளையின் இயக்குநரும், கவிஞருமான சக்திஜோதி அவர்கள் சீனாவிற்கு சென்று வந்துள்ளார். தனது சீன அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொள்ளவிருக்கிறார்.
தொடராக வரவிருக்கும் இந்தப் பகுதியின் அனைத்துக் கட்டுரைகளும் வாசகர்களுக்கு உறுதியாக பயனளிக்கக் கூடிய ஒன்று அமையும் என்பதில் எமக்கு ஐயமில்லை.

இனி அவரைப் பற்றியும் அவரது நிறுவனம் பற்றியும் அவரது பயணத்திற்கான காரணம் பற்றியும் ஒரு விரிவான அறிமுகம்.

சக்தி ஜோதி அவர்கள் "நிலம் புகும் சொற்கள்" என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளை:

ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளையானது 21-12-2001 அன்று திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு துவக்கப்பட்டது. தற்பொழுது 680 கிராமங்களை உள்ளடக்கி திண்டுக்கல், தேனி, ஈரோடு மற்றும் கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் செயல்படுகிறது.

பார்வையும் நோக்கமும்

“வளர்ச்சியை நோக்கி....” சமூகத்தின் அனைத்து நிலையினரையும் வளர்ச்சியின் அடுத்த நிலை நோக்கி வழிநடத்திச் செல்வதையே, சமூகத்தின் மீதான நீள்பார்வையாகக் கொண்டு செயல்படுகிறது. கிராமப்புற வளங்களை மேம்படுத்துவதும், கிராமப்புற மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மனிதர்களை சமுதாயத்தின் மைய நீரோட்டத்தில் இணைப்பதற்காக ஒட்டு மொத்த ஆதார சக்தியை திரட்டித் தருவதற்காகவும், பெண்கள், குழந்தைகள் முன்னேற்றத்திற்காகவும் சமூகத்தின் அனைத்து வகையான முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

சமூக மேம்பாட்டு செயல்பாடுகள்

மகளிர் மேம்பாட்டில்….
1. 2880 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் 680 கிராமங்களில் 34,800 உறுப்பினர்களுக்கு மேல் சக்தி அறக்கட்டளையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
2. பாரத ஸ்டேட் வங்கியுடன் 18 கிளைகளுடன் இணைந்து சுய உதவிக் குழவினருக்கு கடனுதவிப் பெற்றுத்தரப்படுகிறது. இது வரை 56 கோடி வரை கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
3. மேலும் ர்னுகுஊ வங்கியுடன் இணைந்து 3 கோடி வரை கடனுதவி பெற்றுத் தரப்பட்டுள்ளது.

சுற்றுச் சூழல் மேம்பாட்டில் ...
சுற்றுபுறச் சூழல் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக வருடம் 1000 மரக்கன்றுகளை நடுதல், இதுவரை 7,000 மரக்கன்றுகளை சக்தி அறக்கட்டளையின் சார்பாக நடப்பட்டுள்ளது.

நீர்வடிப் பகுதி மேம்பாட்டு திட்டம் :
தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (நபார்டு) உதவியுடன் கிராமப்புறங்களின் இயற்கை வளங்களை மேம்படுத்துவது, மண் அரிப்பைத் தடுப்பது மேலும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது மூலமாக கிராமங்களிலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்து கிராம மக்களின் வாழ்;க்கைத்தரம் மேம்பாடு அடைய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

பாரத ஸ்டேட் வங்கியின் வணிக வழிகாட்டியாக (Business Facilitator)

திண்டுக்கல், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளிலும் கடன் மற்றும் சேமிப்பு சம்பந்தமான வசதிகளை வாடிக்கையாளர்களுக்குப் பெற்றுத்தரும் வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறது.

மருத்துவ முகாம்கள் :

கண் பரிசோதனை முகாம்இ எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்இ தாய்இ சர்க்கரை நோய் விழிப்புணர்வு, சேய் நல பரிசோதனை முகாம் உட்பட 15 வகையான மருத்துவ முகாம் நடத்தப்பட்டு 28இ000 மக்கள் பயனடைந்துள்ளனர்.

சக்தி சுய தொழில் பயிற்சி நிலையம் :
பயிற்சிகளில் சில…….
1. நான்கு இடங்களில் தையல் பயிற்சிப்பள்ளி
2. சானிடரி நாப்கின் பயிற்சி
3. கண்ணாடி மற்றும் பேப்ரிக் பெயிண்டிங் பயிற்சி
4. ரெக்ஸின் மற்றும் ஜூட் பை தயாரிப்பு பயிற்சி
5. செருப்பு தயாரித்தல் பயிற்சி
6. கயிறு (ஊழசை Pசழனரஉவ) தயாரித்தல்
7. உணவு பொருட்கள் தயாரிப்பு பயிற்சி
8. இயற்கை விவசாயப் பயிற்சி

யுரேகா மாலை நேர பயிற்சிப் பள்ளி :
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்காக 10 மையங்களில் மாலை நேர சிறப்பு பயிற்சி நடத்தப்படுகிறது

ஹெலன் பகல் நேர குழந்தைகள் காப்பகம் :
கொடைக்கானல் மலைப்பகுதியில் வடகவுஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் மேல்பள்ளம் காலணியில் மலைவாழ் குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

சக்தி இறகு பந்துக் கழகம் :
கிராமப்புற இளைஞர்கள் மாணவர்களுக்காக உன் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.

பொது சுகாதாரம் :
அய்யம்பாளையத்தில் பெண்களுக்காக பொது கழிப்பறை கட்டித் தரப்பட்டுள்ளது.

சிறப்பு நிகழ்ச்சிகள் :
1. குழந்தைகள் தினம் மாரத்தான் போட்டி
2. பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சிகள்
3. கல்லூரி மாணவர்களுக்காக தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி
4. இளைஞர்களுக்காக புகை, மது பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
5. உலக மகளிர் தின கருத்தரங்கம்
6. உடல் ஊனமுற்றோருக்காக சுய முன்னேற்ற சிறப்பு பயிற்சிகள்.

விருதுகள் :
1. பாரத ஸ்டேட் வங்கி விருது – 2 முறை
2. மாவட்ட ஆட்சியர் பசுமை விருது - 2 முறை
3. லைவ் விருது - லயோலா கல்லூரி
4. மக்கள் தொலைக்காட்சி விருது
5. சி.பா.ஆதித்தனார் விருது
6. நேரு யுவகேந்திரா தேனி மாவட்டம் மற்றும் மாநில விருது
7. நபார்டு விருது.

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பயணக் கட்டுரை TS சக்தி ஜோதி தொடர்கள் வாயில்

சீனப் பயணக் கட்டுரைகள் - 5

சக்தி ஜோதி  

அடுத்ததாக ஹூவேய் டெக்னாலஜி நிறுவனம் எங்களை வரவேற்றது. இந்த நிறுவனத்தைப் பற்றி உங்களோடு நான் பகிர்ந்து கொண்டே ஆக வேண்டும். உலகம் முழுவதையும் தொலைத் தொடர்பு சாதனங்களினால் இணைத்து வைத்திருக்கும் இந்த நிறுவனத்தின் வசம் இல்லாத தொழில் நுட்பங்கள் இல்லை என்றே சொல்லலாம். 3G, வீடியோ டெலிபோனி, ஆப்டிகல் கேபிள், ரேடியோ வேவ், மைக்ரோ வேவ் என நவீன மயமான தொலைத் தொடர்பு வசதிகளை செய்து கொடுப்பதிலும் சாதனங்களை உருவாக்குவதிலும் இவர்களுக்கு இணை இவர்கள் தான்.

சுற்றுச் சூழல் மேம்பாட்டில் கவனமுடைய ஹூவேய் நிறுவனம் படிக்க இயலாத குழந்தைகளுக்காக சீனாவில் ஐந்து “ஹோப்” பள்ளிகள் நடத்துகிறார்கள். பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையமாக உலகமெங்கும் தங்கள் கரம்விரித்த ஹூவேய் நிறுவனம் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. ஹூவேய்; ஆராய்ச்சி நிலையம் பெங்களுரில் உள்ளது. ஹூவேய்நிறுவனத்தின் தனிச்சிறப்பே அந்தந்த நாட்டின் உள்ளூர் மக்களின் திறமையை பயன்படுத்துவது தான். உலகம் முழுவதும் பல்வேறு கிளைகளில் 86,000க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகிறார்கள். இவர்களில் 60 சதவீதம் பேர் உள்ளூரைச் சேர்ந்தவர்கள். உலக முழுவதும் உள்ள ஹூவேய் நிறுவனத்தின் மொத்த வியாபாரம் 23.3 பில்லியன் அமெரிக்கன் டாலர்கள்.

பெங்களுரில் உள்ள ஹூவேய் நிறுவனத்தில் சீனாவின் ஹார்டுவேருடன் 1,600 இந்திய இளைஞர்களின் சாப்ட்வேர் திறமை இணைந்து பல கோடி மதிப்புள்ள தொழில் ஒப்பந்தத்தை ரிலையன்ஸ், டாடா இண்டிகாம், மற்றும் பார்தி ஏர்டெல்-ஸ்ரீலங்காவுடன் ஏற்படுத்தி உள்ளனர். BSNL நிறுவனத்துடன் 93 மில்லியன் GSM லைனுக்கும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

உலக அளவில் ஹூவேய் நிறுவனத்தின் மிகப் பெரிய ஆராய்ச்சி நிலையம் இந்தியாவில் உள்ள பெங்களுர் நிறுவனம் தான் என்பதை சீனாவிற்கு போய் தெரிந்து கொண்டேன். இந்தியாவில் எல்லா வளங்களும் இருக்கிறது.

நாம் தாம் முறையாக பயன்படுத்துவது இல்லை என்ற என் நெடுநாளைய ஆதங்கம் மீண்டும் வலுப்பெற்றது.

பழங்கள் மட்டும் அதிகமாக எடுத்துக் கொண்ட மதிய உணவிற்கு பின்பு நாங்கள் சென்ற இடம் உலகமெல்லாம் வியந்து பார்க்கும் சீனப் பெருஞ்சுவர். பெய்ஜிங்கிலிருந்து 50 கி.மீ தூரத்தில் இரண்டு மலைத்தொடர்களின் பள்ளத்தாக்கில் உள்ள ஜூ யாங் பாஸ் என்ற நுழைவாயில் வழியாக சீனப்பெருஞ்சுவர் நோக்கி நடந்தோம். செங்கிஸ்கான் சிலையும் சீனர்களின் ஆயுதங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பகுதிகள் வழியாக நடந்து சென்றோம். உலக அதிசயம் என போற்றப்படும் பகுதியில் நடக்கும் பரவசம் வந்து மனதில் ஒட்டிக்கொண்டிருந்தது. சீனர்களுக்கு இந்த சுவரைக் கட்டும் எண்ணம் எப்போது எதற்காக வந்தது என்ற என்னுடைய நெடுநாளைய கேள்விக்கு வழக்கம்போல ரோஸி என்ற வான் டூ பதில் சொன்னார்.

யுவான் வம்சத்து அரசர்களால் 1268ல் கட்டி முடிக்கப்பட்ட ஜூ யாங் பாஸ் என்ற இந்த நுழைவாயில் செங்கிஸ்கான் வந்து சென்ற இடம். நான்கு அரச வம்சத்தைப் பற்றி சமஸ்கிருதம், திபெத்யன், மங்கோலியன் போன்ற பல்வேறு மொழிகளில் எழுதி வைக்கப்பட்டுள்ளன. மேலும் 2000 புத்த சிற்பங்களும் இந்தப் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ளது. தரைப்பகுதி மார்பில் கற்களாலும் அகன்ற சுற்றுச் சுவர் சாம்பல் வண்ணக் கற்களால் கட்டப்பட்டுள்ளது. சீனர்களுக்கு பிடித்த சாம்பல் வர்ண கற்களே எங்கும் பரவியிருக்கிறது. பலர் தங்கள் வீடுகளைக் கூட இந்த சாம்பல் வாணக் கற்களால் கட்டியிருக்கிறார்கள். எளிமையை குறிக்கும் வர்ணம் சாம்பல் வர்ணம் என சீனர்கள் நம்புகிறார்கள். சிதறிக்கிடந்த சீனாவின் குறுநிலப் பகுதிகளை க்வின் ஷின் ஹான் என்ற அரசர் கிறிஸ்து பிறப்பதற்கு 221 ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைத்து சுற்றுச் சுவர் எழுப்ப துவங்கினார்.

அப்போது அவர் கட்டிய கட்டிடம் செம்மண், மணல், வண்டல் கலந்த ராம்ட் எர்த் என்ற அழுத்தப்பட்ட சுடாத மண் கட்டிகளைக் கொண்டு கட்டப்பட்டது. பிற்காலத்தில் வந்த அரசர்கள் தங்கள் நாட்டின் அரணாக கட்டுகின்ற சுவர்களின் அளவே அவர்களுடைய செல்வாக்கை நிர்ணயிக்கும் அங்கீகாரமாக கருதினர்.

கி.பி.1644ல் மிங் வம்சத்து அரசர்களால் இறுதியாக இந்த சுவர் கட்டிமுடிக்கப்பட்ட போது 6,700 கி.மீ நீளத்தில் ஐந்து மாகாணங்களை இணைத்திருந்தது.

நிலவிலிருந்து பார்க்கும் போது தெரிகின்ற மனித படைப்பு இந்த சீனப் பெருஞ்சுவர் மட்டும் தான். தற்சமயம் பல இடங்களில் குறிப்பாக ஹான்சு பகுதியில் உள்ள சுவர் மண் காற்றடித்து ஐந்து மீட்டர் சுவர் இரண்டு மீட்டராக குறைந்து விட்டது. சில பகுதிகளில் சிறுவர்களின் விளையாட்டு மைதானமாகவும், சில பகுதிகளில் உள்ள கற்களை அந்தப் பகுதி மக்கள் பெயர்த்தெடுத்து கொண்டு போய் வீடு கட்டுவதற்காக பயன்படுத்துவதாலும், மனித நடமாட்டம் இல்லாத வனப் பகுதியிலும் பராமரிப்பின்றியும் சிதைந்து கொண்டு வருகிறது. சுற்றுலா தலமாக உள்ள பகுதிகள் மட்டுமே நன்றாக பராமரிக்கப்படுகிறது.

இது வரை மொத்த சுவரையும் கடந்தவர் எவரும் இல்லை. பராமரிப்பதற்கான முழுத் திட்டமும் இல்லை. இன்னும் 20 ஆண்டுகளில் முற்றிலுமாக சிதைந்து போவதற்கான வாய்ப்புள்ள பகுதிகள் பல உண்டு என வான் டூ கூறிய போது இதைக் கட்டுவதற்காக எத்தனை இலட்சக்கணக்கானவர்களின் உழைப்பு தேவைப்பட்டிருக்கும் என்ற எண்ணம் மேலோங்கியது. ஒருவருக்கு போர் தொடுப்பதற்கான எண்ணம்.

இன்னொருவருக்கு நாட்டின் எல்லையை காப்பாற்றுவதற்கான எண்ணம். இத்தனை பெரிய சுவர் கட்டுவதில் எத்தனை பேர் உயிரிழந்திருப்பார்கள் என்று தோன்றியது. சீனப் பெருஞ்சுவரின் கண்காணிப்பு கோபுரத்தின் உச்சியில்; நின்று நான் எழுதிய கவிதை இதோ.

சீனப் பெருஞ்சுவர்

"இத்தனை அகலமாக இருக்குமென்பது
எனக்குத் தெரியாது
நான்
அப்படிப்பட்ட தேசத்திலிருந்து வந்தவளல்ல
இத்தனை பெரிய சுவர் தேவையா
என்பதும் எனக்குத் தெரியாது
எத்தனை எத்தனை கற்கள்
எத்தனை எத்தனை உயரம்
எத்தனை எத்தனை உழைப்பு
இத்தனைக்கும் மேல் நடக்கிறார்கள்
ஓடுகிறார்கள்

வாகனங்களை ஓட்டுகிறார்கள்
ஆகாயத்தின் மீதிருந்து படமெடுக்கிறார்கள்
எதிலும் பதிவாகவில்லை
அத்தனை அத்தனை மரணங்கள்
ஒரு முறை
ஒரு கல் நகர்ந்தது
ஒன்பது பேர் இறந்தார்கள்
எத்தனையோ கற்கள் நகர்ந்திருக்கின்றன
நான்
என் மெல்லிய பாதங்கள்
அதன்மீது பட்டு நோகாத வண்ணம் நடக்கின்றேன்
ஒரு அஞ்சலி போல
ஆன்மாக்கள் வானத்தில் மிதக்கின்றன
அதைப் பார்த்தவாறே
அடுத்த என் மென்னடியை
எடுத்து வைக்கின்றேன்."
- சக்திஜோதி

பயணிப்போம்...

 

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.