வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா மற்றும் சீன பிரதமர்களின் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பரிவர்த்தனைத் திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சீனாவிற்கு இந்தியாவில் இருந்து 100 இளையோரைக் கொண்ட குழு ஆண்டு தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்தக் குழுவினர் சமீபத்தில் சீனாவிற்குச் சென்றுள்ளார்கள். இக்குழுவில் தமிழ்நாடு சார்பில், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் 2001 முதல் இயங்கிவரும் ஸ்ரீ சக்தி சமூகப் பொருளாதாரக் கல்வி நலன் அறக்கட்டளையின் இயக்குநரும், கவிஞருமான சக்திஜோதி அவர்கள் சீனாவிற்கு சென்று வந்துள்ளார். தனது சீன அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொள்ளவிருக்கிறார்.

தொடராக வரவிருக்கும் இந்தப் பகுதியின் அனைத்துக் கட்டுரைகளும் வாசகர்களுக்கு உறுதியாக பயனளிக்கக் கூடிய ஒன்று அமையும் என்பதில் எமக்கு ஐயமில்லை.

 

 
     
     
     
   
பயணக் கட்டுரை
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


சக்தி ஜோதி

கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா மற்றும் சீன பிரதமர்களின் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பரிவர்த்தனைத் திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சீனாவிற்கு இந்தியாவில் இருந்து 100 இளையோரைக் கொண்ட குழு ஆண்டு தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்தக் குழுவினர் சமீபத்தில் சீனாவிற்குச் சென்றுள்ளார்கள். இக்குழுவில் தமிழ்நாடு சார்பில், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் 2001 முதல் இயங்கிவரும் ஸ்ரீ சக்தி சமூகப் பொருளாதாரக் கல்வி நலன் அறக்கட்டளையின் இயக்குநரும், கவிஞருமான சக்திஜோதி அவர்கள் சீனாவிற்கு சென்று வந்துள்ளார். தனது சீன அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொள்ளவிருக்கிறார்.
தொடராக வரவிருக்கும் இந்தப் பகுதியின் அனைத்துக் கட்டுரைகளும் வாசகர்களுக்கு உறுதியாக பயனளிக்கக் கூடிய ஒன்று அமையும் என்பதில் எமக்கு ஐயமில்லை.

இனி அவரைப் பற்றியும் அவரது நிறுவனம் பற்றியும் அவரது பயணத்திற்கான காரணம் பற்றியும் ஒரு விரிவான அறிமுகம்.

சக்தி ஜோதி அவர்கள் "நிலம் புகும் சொற்கள்" என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளை:

ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளையானது 21-12-2001 அன்று திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு துவக்கப்பட்டது. தற்பொழுது 680 கிராமங்களை உள்ளடக்கி திண்டுக்கல், தேனி, ஈரோடு மற்றும் கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் செயல்படுகிறது.

பார்வையும் நோக்கமும்

“வளர்ச்சியை நோக்கி....” சமூகத்தின் அனைத்து நிலையினரையும் வளர்ச்சியின் அடுத்த நிலை நோக்கி வழிநடத்திச் செல்வதையே, சமூகத்தின் மீதான நீள்பார்வையாகக் கொண்டு செயல்படுகிறது. கிராமப்புற வளங்களை மேம்படுத்துவதும், கிராமப்புற மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மனிதர்களை சமுதாயத்தின் மைய நீரோட்டத்தில் இணைப்பதற்காக ஒட்டு மொத்த ஆதார சக்தியை திரட்டித் தருவதற்காகவும், பெண்கள், குழந்தைகள் முன்னேற்றத்திற்காகவும் சமூகத்தின் அனைத்து வகையான முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

சமூக மேம்பாட்டு செயல்பாடுகள்

மகளிர் மேம்பாட்டில்….
1. 2880 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் 680 கிராமங்களில் 34,800 உறுப்பினர்களுக்கு மேல் சக்தி அறக்கட்டளையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
2. பாரத ஸ்டேட் வங்கியுடன் 18 கிளைகளுடன் இணைந்து சுய உதவிக் குழவினருக்கு கடனுதவிப் பெற்றுத்தரப்படுகிறது. இது வரை 56 கோடி வரை கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
3. மேலும் ர்னுகுஊ வங்கியுடன் இணைந்து 3 கோடி வரை கடனுதவி பெற்றுத் தரப்பட்டுள்ளது.

சுற்றுச் சூழல் மேம்பாட்டில் ...
சுற்றுபுறச் சூழல் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக வருடம் 1000 மரக்கன்றுகளை நடுதல், இதுவரை 7,000 மரக்கன்றுகளை சக்தி அறக்கட்டளையின் சார்பாக நடப்பட்டுள்ளது.

நீர்வடிப் பகுதி மேம்பாட்டு திட்டம் :
தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (நபார்டு) உதவியுடன் கிராமப்புறங்களின் இயற்கை வளங்களை மேம்படுத்துவது, மண் அரிப்பைத் தடுப்பது மேலும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது மூலமாக கிராமங்களிலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்து கிராம மக்களின் வாழ்;க்கைத்தரம் மேம்பாடு அடைய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

பாரத ஸ்டேட் வங்கியின் வணிக வழிகாட்டியாக (Business Facilitator)

திண்டுக்கல், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளிலும் கடன் மற்றும் சேமிப்பு சம்பந்தமான வசதிகளை வாடிக்கையாளர்களுக்குப் பெற்றுத்தரும் வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறது.

மருத்துவ முகாம்கள் :

கண் பரிசோதனை முகாம்இ எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்இ தாய்இ சர்க்கரை நோய் விழிப்புணர்வு, சேய் நல பரிசோதனை முகாம் உட்பட 15 வகையான மருத்துவ முகாம் நடத்தப்பட்டு 28இ000 மக்கள் பயனடைந்துள்ளனர்.

சக்தி சுய தொழில் பயிற்சி நிலையம் :
பயிற்சிகளில் சில…….
1. நான்கு இடங்களில் தையல் பயிற்சிப்பள்ளி
2. சானிடரி நாப்கின் பயிற்சி
3. கண்ணாடி மற்றும் பேப்ரிக் பெயிண்டிங் பயிற்சி
4. ரெக்ஸின் மற்றும் ஜூட் பை தயாரிப்பு பயிற்சி
5. செருப்பு தயாரித்தல் பயிற்சி
6. கயிறு (ஊழசை Pசழனரஉவ) தயாரித்தல்
7. உணவு பொருட்கள் தயாரிப்பு பயிற்சி
8. இயற்கை விவசாயப் பயிற்சி

யுரேகா மாலை நேர பயிற்சிப் பள்ளி :
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்காக 10 மையங்களில் மாலை நேர சிறப்பு பயிற்சி நடத்தப்படுகிறது

ஹெலன் பகல் நேர குழந்தைகள் காப்பகம் :
கொடைக்கானல் மலைப்பகுதியில் வடகவுஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் மேல்பள்ளம் காலணியில் மலைவாழ் குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

சக்தி இறகு பந்துக் கழகம் :
கிராமப்புற இளைஞர்கள் மாணவர்களுக்காக உன் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.

பொது சுகாதாரம் :
அய்யம்பாளையத்தில் பெண்களுக்காக பொது கழிப்பறை கட்டித் தரப்பட்டுள்ளது.

சிறப்பு நிகழ்ச்சிகள் :
1. குழந்தைகள் தினம் மாரத்தான் போட்டி
2. பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சிகள்
3. கல்லூரி மாணவர்களுக்காக தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி
4. இளைஞர்களுக்காக புகை, மது பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
5. உலக மகளிர் தின கருத்தரங்கம்
6. உடல் ஊனமுற்றோருக்காக சுய முன்னேற்ற சிறப்பு பயிற்சிகள்.

விருதுகள் :
1. பாரத ஸ்டேட் வங்கி விருது – 2 முறை
2. மாவட்ட ஆட்சியர் பசுமை விருது - 2 முறை
3. லைவ் விருது - லயோலா கல்லூரி
4. மக்கள் தொலைக்காட்சி விருது
5. சி.பா.ஆதித்தனார் விருது
6. நேரு யுவகேந்திரா தேனி மாவட்டம் மற்றும் மாநில விருது
7. நபார்டு விருது.

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பயணக் கட்டுரை TS சக்தி ஜோதி தொடர்கள் வாயில்

சீனப் பயணக் கட்டுரைகள் - 4

சக்தி ஜோதி  

பீஜிங் இன்டர்நேசனல் ஹோட்டலில் நடைபெற்ற இரவு விருந்திற்கு நமது நாட்டின் கலாச்சார உடை அணிந்து புறப்பட்டோம். அனைத்து சீன இளையோர் கழகத்தின் தலைவர் திரு.யாங் யூவுடன் நிகழ்த்தப்பட்ட உரையாடலுக்குப் பின்பு எங்களது விருந்து துவங்கியது. துணைத்தலைவர் திரு. லு யாங் ஷங் அவர்கள் விருந்தளித்தார்.

இந்திய சீன கலை நிகழ்ச்சிகளோடு மாலை 6.30 மணிக்கு துவங்கிய விருந்து இரவு 10.00 மணி வரை நடைபெற்றது. சீனர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் இந்தியர்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும் இடம் பெற்றிருந்தாலும், பஞ்சாபின் பாங்கடா நடனமே அனைவரையும் கவர்ந்தது. அனைத்து சீன இளையோர் கழகத்தின் துணைத் தலைவர் உட்பட அனைவரையும் எழுந்து ஆட வைத்தது.

பஞ்சாப் அளித்த பாரம்பரிய நடனம் பாங்கடா. மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் திருமணம் மற்றும் திருவிழாக்களிலும் கட்டாயம் இடம் பெறுகிற இந்த நடனம், பஞ்சாப் விவசாயிகளிடமிருந்து துவங்கியது. வைஷாக்கி என்ற வசந்த காலத்தை வரவேற்பதற்கான பாரம்பரிய நடனம் இது. இந்த நடனத்தின் நாயகன் டோலி எனப்படும் டோல் வாசிப்பவர். டோர்ஹா என்றழைக்கப்படும்

ட்ரம்ஸினுடைய அடிக்கேற்றார் போல் ஆடுபவர்கள் தங்களுடைய ஸ்டெப்ஸை மாற்றி ஆடுவதும், கூடவே சிறிய சிறிய கிராமிய பாடல்களைப் பாடிக் கொண்டே ஆடுவதுமான இந்த நடனம் பார்ப்பவரை, கேட்பவரை உடனே எழுந்து ஆட வைக்கும் அளவிற்கு உற்சாகமூட்டக்கூடியது.

ஆண்கள் குர்தாவும், தலைக்கு பக்ரி என்னும் தலைப்பாகையும், கையில் ருமாலி எனும் கைக்குட்டை வைத்துக் கொண்டு மேலும் உடலின் இரத்த ஓட்டத்தையும், வெப்ப ஓட்டத்தையும் சீராக்கக் கூடிய வகையிலான யோகாசன முத்திரைகளான பெரு விரலையும் நடுவிரலையும் மடித்து வைத்து (வாம முத்திரை) அல்லது பெரு விரலையும் ஆள் காட்டி விரலையும் மடித்து வைத்து (சின் முத்திரை) ஆடுவார்கள். பெண்கள் தங்களுடைய பாரம்பரிய உடையான காக்ரா சோலி அணிந்தும் ஆடுவார்கள்.

எங்களுடைய குழுவில் டோலிக்காரான ஷிவ் ஷங்கர் தான் மொத்த நிகழ்ச்சியிலும் கதாநாயகனாக இருந்தவர். ஏனெனில் அவரது டோலி வாசிக்கும் முறை பற்றி வியந்து பாராட்டாதவர் எவருமில்லை. ஆனால் இவருக்கு பஞ்சாபி தவிர வேறு மொழி தெரியாது. எனவே எப்பொழுதும் சிரித்த முகத்துடனே இருப்பார் அதிகம் பேச மாட்டார். ஆனால் இவரோடு கமலக்கண்ணன் மட்டும் பேசிக் கொண்டே இருப்பார்.

இவர் பேசியது அவருக்கும் அவர் பேசியது இவருக்கும் புரிந்ததா என்று கேட்டால், மொழி முக்கியம் இல்லை நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட நல்ல நண்பர்கள் என்று கமலக்கண்ணன் சொல்வார். அன்பை வெளிப்படுத்த வார்த்தைகள் தேவையில்லை.

" ஒருபோதும்
உணர்ந்த அன்பை
சொற்களில்
வெளிப்படுத்த முடிந்ததில்லை"
– சக்தி ஜோதி

சீன மொழியிலும், ஆங்கிலத்திலும் எங்களுடைய பெயர்களை எழுதி நாங்கள் அமர வேண்டிய இருக்கைகளில் வைத்திருப்பார்கள். நாளெல்லாம் உழைப்பதில் சலிக்காத சீனர்கள் இரவு உணவு உண்பதற்காக அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார்கள். ஏனெனில் குடும்பத்தோடு அமர்ந்து உரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.

பெரிய கிண்ணங்களில் வைக்கப்படுகிற உணவு வகைகள, பரிமாறுவதற்கு தனியாக கரண்டி எதுவும் இருப்பதில்லை. தாங்கள் பயன்படுத்தும் சாப்ஸ்டிக்கில் எடுத்து தங்கள் சிறிய கிண்ணத்தில் போட்டு ஒன்றாக அமர்ந்து உண்பது தான், சீனர்களின் வழக்கம். தற்பொழுது மேற்கத்திய கலாச்சாரம் பரவியதின் விளைவாக முள் கரண்டியும், கத்தியும் மற்ற சிறிய கரண்டி வகைகளும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு முழு உணவு என்பது குறைந்த பட்சம் எட்டு வகையான உணவு வகைகள் டேபிளில் வைக்கப்படும். மூன்று வகையான பானங்கள் உணவிற்கு முன்பு கொடுக்கப்படும். ஓன்று மோ – தாய் எனப்படும் சீன வகை ஸ்பிரிட், இரண்டாவது சிவப்பு வைன், மூன்றாவது பியர் மேலும் ஆரஞ்சு அல்லது கோக் வழங்கப்படும. நமக்கு வேண்டாம் என்றாலும் கட்டாயமாக வாங்கிக் கொள்ளவேண்டும. ஆனால் சாப்பிட வேண்டிய அவசியமில்லை. சிறப்பு விருந்தினர் எழுந்த பின்பு அனைவரும் எழுந்து விடவேண்டும்.

சீனர்களின் உணவுகள் பொதுவாக உணவின் இயற்கையான நிறமும், மணமும், சுவையும் மாறாத வகையில் சமைக்கப்படுகிறது. குறைவான எண்ணெய் விட்டு வதக்கி தயாரிக்கப்படும் (ஸ்டிர் ஃப்ரை) உணவு வகைகளை விரும்பி உண்ணுகிறார்கள். அரிசி நூடுல்ஸ், கொலுக்கட்டை போல அவித்த பண் வகைகள், பன்றி இறைச்சி, மாட்டு இறைச்சி, மீன் இறைச்சி மற்றும் காய்கறி வகைகள் அரைவேக்காட்டில் பரிமாறப்பட்டது.

அநேகம்பேர் பழ வகைகளால் பசியாறினோம். இருந்தாலும் சாப்ஸ்டிக்கை லாவகமாக பயன்படுத்தப் பழகிவிட்டோம். அமீருல் ஹசன் என்ற நண்பரை பச்சை காய்கறிகள் சாப்பிடும் போதெல்லாம் இது பச்சைப் பாம்பு என்று வம்பு பண்ணுவதை வழக்கமாக வைத்திருந்தோம். வகை வகையான உணவுக்கு மத்தியில் பாம்புக் கறி இருக்கிறதா என்று தேடி ஏமாந்தோம். காலை 5.00 மணிக்கு எழுந்து இரவு 11.00 மணிக்கு தூங்கச் செல்லும் சீனர்களின் வழக்கம் எங்களுக்கும் பழக்கமானது.

பயணிப்போம்...

 

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</