வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா மற்றும் சீன பிரதமர்களின் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பரிவர்த்தனைத் திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சீனாவிற்கு இந்தியாவில் இருந்து 100 இளையோரைக் கொண்ட குழு ஆண்டு தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்தக் குழுவினர் சமீபத்தில் சீனாவிற்குச் சென்றுள்ளார்கள். இக்குழுவில் தமிழ்நாடு சார்பில், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் 2001 முதல் இயங்கிவரும் ஸ்ரீ சக்தி சமூகப் பொருளாதாரக் கல்வி நலன் அறக்கட்டளையின் இயக்குநரும், கவிஞருமான சக்திஜோதி அவர்கள் சீனாவிற்கு சென்று வந்துள்ளார். தனது சீன அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொள்ளவிருக்கிறார்.

தொடராக வரவிருக்கும் இந்தப் பகுதியின் அனைத்துக் கட்டுரைகளும் வாசகர்களுக்கு உறுதியாக பயனளிக்கக் கூடிய ஒன்று அமையும் என்பதில் எமக்கு ஐயமில்லை.

 

 
     
     
     
   
பயணக் கட்டுரை
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


சக்தி ஜோதி

கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா மற்றும் சீன பிரதமர்களின் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பரிவர்த்தனைத் திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சீனாவிற்கு இந்தியாவில் இருந்து 100 இளையோரைக் கொண்ட குழு ஆண்டு தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்தக் குழுவினர் சமீபத்தில் சீனாவிற்குச் சென்றுள்ளார்கள். இக்குழுவில் தமிழ்நாடு சார்பில், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் 2001 முதல் இயங்கிவரும் ஸ்ரீ சக்தி சமூகப் பொருளாதாரக் கல்வி நலன் அறக்கட்டளையின் இயக்குநரும், கவிஞருமான சக்திஜோதி அவர்கள் சீனாவிற்கு சென்று வந்துள்ளார். தனது சீன அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொள்ளவிருக்கிறார்.
தொடராக வரவிருக்கும் இந்தப் பகுதியின் அனைத்துக் கட்டுரைகளும் வாசகர்களுக்கு உறுதியாக பயனளிக்கக் கூடிய ஒன்று அமையும் என்பதில் எமக்கு ஐயமில்லை.

இனி அவரைப் பற்றியும் அவரது நிறுவனம் பற்றியும் அவரது பயணத்திற்கான காரணம் பற்றியும் ஒரு விரிவான அறிமுகம்.

சக்தி ஜோதி அவர்கள் "நிலம் புகும் சொற்கள்" என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளை:

ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளையானது 21-12-2001 அன்று திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு துவக்கப்பட்டது. தற்பொழுது 680 கிராமங்களை உள்ளடக்கி திண்டுக்கல், தேனி, ஈரோடு மற்றும் கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் செயல்படுகிறது.

பார்வையும் நோக்கமும்

“வளர்ச்சியை நோக்கி....” சமூகத்தின் அனைத்து நிலையினரையும் வளர்ச்சியின் அடுத்த நிலை நோக்கி வழிநடத்திச் செல்வதையே, சமூகத்தின் மீதான நீள்பார்வையாகக் கொண்டு செயல்படுகிறது. கிராமப்புற வளங்களை மேம்படுத்துவதும், கிராமப்புற மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மனிதர்களை சமுதாயத்தின் மைய நீரோட்டத்தில் இணைப்பதற்காக ஒட்டு மொத்த ஆதார சக்தியை திரட்டித் தருவதற்காகவும், பெண்கள், குழந்தைகள் முன்னேற்றத்திற்காகவும் சமூகத்தின் அனைத்து வகையான முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

சமூக மேம்பாட்டு செயல்பாடுகள்

மகளிர் மேம்பாட்டில்….
1. 2880 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் 680 கிராமங்களில் 34,800 உறுப்பினர்களுக்கு மேல் சக்தி அறக்கட்டளையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
2. பாரத ஸ்டேட் வங்கியுடன் 18 கிளைகளுடன் இணைந்து சுய உதவிக் குழவினருக்கு கடனுதவிப் பெற்றுத்தரப்படுகிறது. இது வரை 56 கோடி வரை கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
3. மேலும் ர்னுகுஊ வங்கியுடன் இணைந்து 3 கோடி வரை கடனுதவி பெற்றுத் தரப்பட்டுள்ளது.

சுற்றுச் சூழல் மேம்பாட்டில் ...
சுற்றுபுறச் சூழல் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக வருடம் 1000 மரக்கன்றுகளை நடுதல், இதுவரை 7,000 மரக்கன்றுகளை சக்தி அறக்கட்டளையின் சார்பாக நடப்பட்டுள்ளது.

நீர்வடிப் பகுதி மேம்பாட்டு திட்டம் :
தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (நபார்டு) உதவியுடன் கிராமப்புறங்களின் இயற்கை வளங்களை மேம்படுத்துவது, மண் அரிப்பைத் தடுப்பது மேலும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது மூலமாக கிராமங்களிலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்து கிராம மக்களின் வாழ்;க்கைத்தரம் மேம்பாடு அடைய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

பாரத ஸ்டேட் வங்கியின் வணிக வழிகாட்டியாக (Business Facilitator)

திண்டுக்கல், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளிலும் கடன் மற்றும் சேமிப்பு சம்பந்தமான வசதிகளை வாடிக்கையாளர்களுக்குப் பெற்றுத்தரும் வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறது.

மருத்துவ முகாம்கள் :

கண் பரிசோதனை முகாம்இ எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்இ தாய்இ சர்க்கரை நோய் விழிப்புணர்வு, சேய் நல பரிசோதனை முகாம் உட்பட 15 வகையான மருத்துவ முகாம் நடத்தப்பட்டு 28இ000 மக்கள் பயனடைந்துள்ளனர்.

சக்தி சுய தொழில் பயிற்சி நிலையம் :
பயிற்சிகளில் சில…….
1. நான்கு இடங்களில் தையல் பயிற்சிப்பள்ளி
2. சானிடரி நாப்கின் பயிற்சி
3. கண்ணாடி மற்றும் பேப்ரிக் பெயிண்டிங் பயிற்சி
4. ரெக்ஸின் மற்றும் ஜூட் பை தயாரிப்பு பயிற்சி
5. செருப்பு தயாரித்தல் பயிற்சி
6. கயிறு (ஊழசை Pசழனரஉவ) தயாரித்தல்
7. உணவு பொருட்கள் தயாரிப்பு பயிற்சி
8. இயற்கை விவசாயப் பயிற்சி

யுரேகா மாலை நேர பயிற்சிப் பள்ளி :
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்காக 10 மையங்களில் மாலை நேர சிறப்பு பயிற்சி நடத்தப்படுகிறது

ஹெலன் பகல் நேர குழந்தைகள் காப்பகம் :
கொடைக்கானல் மலைப்பகுதியில் வடகவுஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் மேல்பள்ளம் காலணியில் மலைவாழ் குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

சக்தி இறகு பந்துக் கழகம் :
கிராமப்புற இளைஞர்கள் மாணவர்களுக்காக உன் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.

பொது சுகாதாரம் :
அய்யம்பாளையத்தில் பெண்களுக்காக பொது கழிப்பறை கட்டித் தரப்பட்டுள்ளது.

சிறப்பு நிகழ்ச்சிகள் :
1. குழந்தைகள் தினம் மாரத்தான் போட்டி
2. பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சிகள்
3. கல்லூரி மாணவர்களுக்காக தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி
4. இளைஞர்களுக்காக புகை, மது பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
5. உலக மகளிர் தின கருத்தரங்கம்
6. உடல் ஊனமுற்றோருக்காக சுய முன்னேற்ற சிறப்பு பயிற்சிகள்.

விருதுகள் :
1. பாரத ஸ்டேட் வங்கி விருது – 2 முறை
2. மாவட்ட ஆட்சியர் பசுமை விருது - 2 முறை
3. லைவ் விருது - லயோலா கல்லூரி
4. மக்கள் தொலைக்காட்சி விருது
5. சி.பா.ஆதித்தனார் விருது
6. நேரு யுவகேந்திரா தேனி மாவட்டம் மற்றும் மாநில விருது
7. நபார்டு விருது.

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பயணக் கட்டுரை TS சக்தி ஜோதி தொடர்கள் வாயில்

சீனப் பயணக் கட்டுரைகள் - 3

சக்தி ஜோதி  

அடுத்ததாக எங்களை வரவேற்ற இடம் "பர்பிடன் சிட்டி". சிவப்பு வர்ணத்தில் மிளிர்ந்த மிகப்பெரிய நுழைவாயில் கொண்ட இம்பீரியல் பேலஸ், எனது சிவப்பு வர்ணம் பற்றியக் கேள்வியை நினைவூட்ட எங்களுக்கு வழிகாட்டியான வான் டூ என்ற சீன இளைஞரைத் தேடினேன். "அனைத்து சீன இளையோர் கூட்டமைப்பைச்" சேர்ந்த பலரை எங்களுக்கு உதவியாக நியமித்திருந்தனர். இவர்களில் "வான்ட் டூ" மட்டுமே எங்களது மொத்த நிகழ்ச்சியிலும் உடன் இருக்குமாறும், மற்ற மாகாணங்களுக்கு செல்லும் போது அந்தந்த பகுதியின் இளையோர் அமைப்பு பொறுப்பேற்குமாறும் எங்களது பயணத்திட்டம் அமைந்திருந்தது. வான் டூ என்ற அந்த இளைஞர் இந்திய அரசியலில் மிகுந்த ஆர்வம் உடையவராய் இருந்தார். தேசிய அளவில் BJP மற்றும் காங்கிரஸ் கட்சி பற்றியும் தெரிந்து வைத்திருந்தார். குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து சென்றதால் என்னிடம் திராவிட கட்சிகள் பற்றியும் பேசினார். இது இந்த இளைஞர் மீதான எங்களது மதிப்பினை அதிகப்படுத்தியது.

டினான்மென் சதுக்கத்திற்கு அருகில் 74 ஹெக்டேர் பரப்பளவில் 9,999 அறைகளைக் கொண்ட சதுர வடிவிலான இம்பீரியல் பேலஸின் கிழக்கு வாயிலில் நுழைந்து 750 மீட்டர் நீளமுள்ள தூரத்தை கடந்து மேற்கு வாயிலில் வெளியேறினோம். விலக்கபட்ட நகரம் என்று அழைக்கப்பட்ட இந்த அரண்மனையின் 7,20,000 சதுர மீட்டர் பரப்பளவுமே சிவப்பும், மஞ்சளுமாய் பரந்து விரிந்திருந்தது.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை சதுரம், சதுரமாக அமைக்கப்பட்ட கட்டிடங்களும் மஞ்சள் நிறத்தில் பதிக்கப்பட்ட மேற்கூரைகளும் மாலைவெயில் பட்டு தங்கமென மின்னியது. 9000க்கும் அதிகமான மஞ்சள் வண்ண மேற் கூரைகள் கம்பீரமான தோற்றத்தை கொடுத்தது.

சிவப்பு நிறத்தினால் ஆன அகலமான உயர்ந்த சுவர்கள் 5000 ஆண்டு கால பழமையான வரலாற்று சிறப்புடையது. இந்த சுவர்கள் சீன மக்களின் ஆன்மாவில் கலந்த நிறம் சிவப்பு என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தது. சிவப்பு சீனர்களின் ஆன்மாவில் மட்டுமல்ல அதிகாரத்திலும் கலந்த வர்ணம். பர்பிடன் சிட்டியில் சுவர்களும், தூண்களும் சிவப்பு நிறத்திலும், அலங்கார வேலைப்பாடுகளும் தூண்களின் டிராகன் சிற்பங்களும் அரசப் பரம்பரையின்

அடையாளமாகக் கருதப்படும் மஞ்சள் வர்ணத்திலும் மிளிர்ந்தது. இந்த அரண்மனை மிங் மற்றும் க்விங் வம்சத்து அரசர்களால் 1420ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. இது வரை 24 பேரரசர்கள் (14 மிங் வம்சத்தினரும், 10 க்விங் வம்சத்தினரும்) இங்கிருந்து ஆட்சி புரிந்திருக்கிறார்கள். "சுப்ரீம் ஹார்மணி" ஹாலில் தங்கத்தால் ஆன மிகப் பெரிய அரியணை மற்றும் கண்ணாடித் தடுப்பின் வழியாக பார்த்த அரசர்களின் சிவப்பு நிற கம்பளம் விரித்த படுக்கைகள், பட்டுக்கம்பளங்கள, தரையில் பதிந்திருக்கும் டிராகன் சிற்பங்களும் பிரமிப்பை ஏற்படுத்த தவறவில்லை. பர்பிடன் சிட்டி உலகச் சுற்றுலா பகுதியில் பாரம்பரியமிக்க கட்டிடங்களில் ஒன்றென 1987ல் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் சுற்றுலா பகுதியாக அங்கீகரிக்கப்பட்டு சீன அரசாங்கத்தால் முறையாக பராமரிக்கப்பட்டு வருகின்ற இந்த கட்டிடம் உள்ளே நுழைந்தவர் தொலைந்து போவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ள சிக்கலான கட்டிட அமைப்பு கொண்டது.

தொலைந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் கூட்டம் கூட்டமாக சுற்றுலா பயணிகள் தங்களுடைய வழிகாட்டிகளோடு கலந்திருந்தனர். நாங்களும் மற்ற சுற்றுலா பயணிகளோடு புகைப்படம் எடுத்துக் கொண்டாலும் கவனமாக இருந்தோம். இருப்பினும் நினைவுப் பொருட்கள் வாங்குவதில் கலைந்த இந்திய நண்பர்களில் கமலக்கண்ணன் மட்டும் வெகுநேரமாக காணவில்லை.

மேற்கு வாயிலில் இவர் ஒருவருக்காக அத்தனை பேரும் பதட்டத்துடன் காத்திருந்தோம். துளியும் பதட்டமின்றி இயல்பாக வந்து சேர்ந்தார் கமலக்கண்ணன்.

இம்பிரியல் அரண்மனையிலும் வழக்கமான நமது இந்திய அரண்மனைகளைப் போல வரலாறு நிரம்பியிருந்தது. அரண்மனையின் உயர்ந்த சுவர்கள், அலங்கார வேலைப்பாடுகள் இதனைக் காண்பதற்காக அலைமோதிய கூட்டத்திற்கு மத்தியில் அதன் பூட்டிய அறைகளும், கனத்த மௌனமும் ஆயிரமாயிரம் கதை சொல்லியது.

“கனத்த வெற்றிடத்தை
நிரப்பவியலாத
பெரும் சுவர்களும் ஜன்னல்களும்
அற்புத வேலைப்பாடுகளினால்
நிரம்பியிருக்கின்றன”

என்ற என்னுடைய கவிதை வரிகளை நினைவூட்டியது.

மஞ்சள் நதி நாகரீகத்தில் வளர்ந்த சீனர்கள் சிவப்பு வண்ணம் தங்களை இயற்கை பேரழிவிலிருந்து காப்பதாக ஆத்மார்த்தமாக நம்புகிறார்கள். கோவில்களிலும், ஆடைகளிலும் சிவப்பு நிறம் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. வீட்டின் முகப்பில் துணியாலான சிவப்பு வண்ண விளக்குகள் கட்டித் தொங்க விடுவது தங்களை தீய சக்தியிலிருந்து காப்பாற்றுவதாக நம்புகிறார்கள்.

குழந்தை பிறந்த மகிழ்ச்சியை கொண்டாட வேக வைத்த முட்டையை சிவப்பு சாயம் நனைத்து அனைவருக்கும் கொடுத்து மகிழ்கிறார்கள். சிவப்பு வண்ண ஆடையும், சிவப்பு நிற புலித்தலை ஷீவும் பிறந்த குழந்தைக்கு அணிவிக்கின்றனர், என்று எங்களால் ரோஸி என்று செல்லமாக அழைக்கப்பட்ட வான் டூ கூறினார்.

பயணிப்போம்...

 

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.