வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா மற்றும் சீன பிரதமர்களின் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பரிவர்த்தனைத் திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சீனாவிற்கு இந்தியாவில் இருந்து 100 இளையோரைக் கொண்ட குழு ஆண்டு தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்தக் குழுவினர் சமீபத்தில் சீனாவிற்குச் சென்றுள்ளார்கள். இக்குழுவில் தமிழ்நாடு சார்பில், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் 2001 முதல் இயங்கிவரும் ஸ்ரீ சக்தி சமூகப் பொருளாதாரக் கல்வி நலன் அறக்கட்டளையின் இயக்குநரும், கவிஞருமான சக்திஜோதி அவர்கள் சீனாவிற்கு சென்று வந்துள்ளார். தனது சீன அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொள்ளவிருக்கிறார்.

தொடராக வரவிருக்கும் இந்தப் பகுதியின் அனைத்துக் கட்டுரைகளும் வாசகர்களுக்கு உறுதியாக பயனளிக்கக் கூடிய ஒன்று அமையும் என்பதில் எமக்கு ஐயமில்லை.

 

 
     
     
     
   
பயணக் கட்டுரை
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


சக்தி ஜோதி

கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா மற்றும் சீன பிரதமர்களின் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பரிவர்த்தனைத் திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சீனாவிற்கு இந்தியாவில் இருந்து 100 இளையோரைக் கொண்ட குழு ஆண்டு தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்தக் குழுவினர் சமீபத்தில் சீனாவிற்குச் சென்றுள்ளார்கள். இக்குழுவில் தமிழ்நாடு சார்பில், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் 2001 முதல் இயங்கிவரும் ஸ்ரீ சக்தி சமூகப் பொருளாதாரக் கல்வி நலன் அறக்கட்டளையின் இயக்குநரும், கவிஞருமான சக்திஜோதி அவர்கள் சீனாவிற்கு சென்று வந்துள்ளார். தனது சீன அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொள்ளவிருக்கிறார்.
தொடராக வரவிருக்கும் இந்தப் பகுதியின் அனைத்துக் கட்டுரைகளும் வாசகர்களுக்கு உறுதியாக பயனளிக்கக் கூடிய ஒன்று அமையும் என்பதில் எமக்கு ஐயமில்லை.

இனி அவரைப் பற்றியும் அவரது நிறுவனம் பற்றியும் அவரது பயணத்திற்கான காரணம் பற்றியும் ஒரு விரிவான அறிமுகம்.

சக்தி ஜோதி அவர்கள் "நிலம் புகும் சொற்கள்" என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளை:

ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளையானது 21-12-2001 அன்று திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு துவக்கப்பட்டது. தற்பொழுது 680 கிராமங்களை உள்ளடக்கி திண்டுக்கல், தேனி, ஈரோடு மற்றும் கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் செயல்படுகிறது.

பார்வையும் நோக்கமும்

“வளர்ச்சியை நோக்கி....” சமூகத்தின் அனைத்து நிலையினரையும் வளர்ச்சியின் அடுத்த நிலை நோக்கி வழிநடத்திச் செல்வதையே, சமூகத்தின் மீதான நீள்பார்வையாகக் கொண்டு செயல்படுகிறது. கிராமப்புற வளங்களை மேம்படுத்துவதும், கிராமப்புற மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மனிதர்களை சமுதாயத்தின் மைய நீரோட்டத்தில் இணைப்பதற்காக ஒட்டு மொத்த ஆதார சக்தியை திரட்டித் தருவதற்காகவும், பெண்கள், குழந்தைகள் முன்னேற்றத்திற்காகவும் சமூகத்தின் அனைத்து வகையான முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

சமூக மேம்பாட்டு செயல்பாடுகள்

மகளிர் மேம்பாட்டில்….
1. 2880 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் 680 கிராமங்களில் 34,800 உறுப்பினர்களுக்கு மேல் சக்தி அறக்கட்டளையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
2. பாரத ஸ்டேட் வங்கியுடன் 18 கிளைகளுடன் இணைந்து சுய உதவிக் குழவினருக்கு கடனுதவிப் பெற்றுத்தரப்படுகிறது. இது வரை 56 கோடி வரை கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
3. மேலும் ர்னுகுஊ வங்கியுடன் இணைந்து 3 கோடி வரை கடனுதவி பெற்றுத் தரப்பட்டுள்ளது.

சுற்றுச் சூழல் மேம்பாட்டில் ...
சுற்றுபுறச் சூழல் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக வருடம் 1000 மரக்கன்றுகளை நடுதல், இதுவரை 7,000 மரக்கன்றுகளை சக்தி அறக்கட்டளையின் சார்பாக நடப்பட்டுள்ளது.

நீர்வடிப் பகுதி மேம்பாட்டு திட்டம் :
தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (நபார்டு) உதவியுடன் கிராமப்புறங்களின் இயற்கை வளங்களை மேம்படுத்துவது, மண் அரிப்பைத் தடுப்பது மேலும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது மூலமாக கிராமங்களிலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்து கிராம மக்களின் வாழ்;க்கைத்தரம் மேம்பாடு அடைய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

பாரத ஸ்டேட் வங்கியின் வணிக வழிகாட்டியாக (Business Facilitator)

திண்டுக்கல், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளிலும் கடன் மற்றும் சேமிப்பு சம்பந்தமான வசதிகளை வாடிக்கையாளர்களுக்குப் பெற்றுத்தரும் வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறது.

மருத்துவ முகாம்கள் :

கண் பரிசோதனை முகாம்இ எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்இ தாய்இ சர்க்கரை நோய் விழிப்புணர்வு, சேய் நல பரிசோதனை முகாம் உட்பட 15 வகையான மருத்துவ முகாம் நடத்தப்பட்டு 28இ000 மக்கள் பயனடைந்துள்ளனர்.

சக்தி சுய தொழில் பயிற்சி நிலையம் :
பயிற்சிகளில் சில…….
1. நான்கு இடங்களில் தையல் பயிற்சிப்பள்ளி
2. சானிடரி நாப்கின் பயிற்சி
3. கண்ணாடி மற்றும் பேப்ரிக் பெயிண்டிங் பயிற்சி
4. ரெக்ஸின் மற்றும் ஜூட் பை தயாரிப்பு பயிற்சி
5. செருப்பு தயாரித்தல் பயிற்சி
6. கயிறு (ஊழசை Pசழனரஉவ) தயாரித்தல்
7. உணவு பொருட்கள் தயாரிப்பு பயிற்சி
8. இயற்கை விவசாயப் பயிற்சி

யுரேகா மாலை நேர பயிற்சிப் பள்ளி :
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்காக 10 மையங்களில் மாலை நேர சிறப்பு பயிற்சி நடத்தப்படுகிறது

ஹெலன் பகல் நேர குழந்தைகள் காப்பகம் :
கொடைக்கானல் மலைப்பகுதியில் வடகவுஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் மேல்பள்ளம் காலணியில் மலைவாழ் குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

சக்தி இறகு பந்துக் கழகம் :
கிராமப்புற இளைஞர்கள் மாணவர்களுக்காக உன் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.

பொது சுகாதாரம் :
அய்யம்பாளையத்தில் பெண்களுக்காக பொது கழிப்பறை கட்டித் தரப்பட்டுள்ளது.

சிறப்பு நிகழ்ச்சிகள் :
1. குழந்தைகள் தினம் மாரத்தான் போட்டி
2. பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சிகள்
3. கல்லூரி மாணவர்களுக்காக தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி
4. இளைஞர்களுக்காக புகை, மது பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
5. உலக மகளிர் தின கருத்தரங்கம்
6. உடல் ஊனமுற்றோருக்காக சுய முன்னேற்ற சிறப்பு பயிற்சிகள்.

விருதுகள் :
1. பாரத ஸ்டேட் வங்கி விருது – 2 முறை
2. மாவட்ட ஆட்சியர் பசுமை விருது - 2 முறை
3. லைவ் விருது - லயோலா கல்லூரி
4. மக்கள் தொலைக்காட்சி விருது
5. சி.பா.ஆதித்தனார் விருது
6. நேரு யுவகேந்திரா தேனி மாவட்டம் மற்றும் மாநில விருது
7. நபார்டு விருது.

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பயணக் கட்டுரை TS சக்தி ஜோதி தொடர்கள் வாயில்

சீனப் பயணக் கட்டுரைகள் - 24

சக்தி ஜோதி  

ஷாப்பிங் செய்வதில் பல வகை உண்டு. தேவைக்காக பொருள் வாங்குவது, தேவையே இல்லாமல் வாங்குவது, பொருட்கள் மீதான கவர்ச்சியில் வாங்குவது, நீடித்த உழைப்பு, உத்திரவாதம் இவைகளை பார்த்து வாங்குவது, விலைப்பட்டியலை பார்த்து வாங்குவது, என்ன பொருள் வாங்கப் போகிறோமோ அதற்கான கடையை தேர்ந்தெடுத்து நண்பர்களிடம் விசாரித்து பின்பு பொருட்களை வாங்குவது என அவசரமான, நிதானமான ஷாப்பிங் வகைகள் பல இருக்க, சுற்றுலாதலங்களில் இவை எதுவுமே கைகொடுக்காது. ஒன்றைத் தவிர. அது பொருட்கள் மீதான கவர்ச்சியில் வாங்குவது.
அதுவும் அந்த நாட்டின் கலாச்சார அடையாளங்கள், நினைவுப் பரிசுகள் என வாங்குகையில் மற்ற எதுவும் மறந்து விடும். மேலும் எங்களது பயணம் கலாச்சார சுற்றுப் பயணமாக அமைந்திருந்ததால் ஷாப்பிங் செய்வதற்காக எங்களுக்கு கொடுத்திருந்த காலம் மிகக்குறைவு. எனவே ஷாங்காய் நகரின் நான்ஜிங் ரோடு எங்களுக்கு முழுமையாய் சுற்றி வர இயலாமல் போனது. எனவே ஹோட்டலுக்கு போன பின்பு இரவு நேர ஷாப்பிங் வருவதாக முடிவு செய்து அனைவரும் கிளம்பினோம்.

இரவு ஷாங்காய் மாகாண இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்த கலைநிகழ்ச்சிகள் வழக்கத்தைவிட சிறப்பாகவும் நீண்ட நேரமும் எடுத்துக் கொண்டு இனிதே நடைபெற்றது. குஷ்புகுமாரியின் பாடல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மேலும் ஃபௌசியா யூனுஸ், இவர் கேரளாவைச் சேர்ந்தவர், மருத்துவக் கல்லூரி மாணவி, முக்கியமாக கவிஞர், இவரது கவிதைகளை வாசித்தார். நானும் என்னுடைய கவிதைகளை வாசித்தேன். நாங்கள் இருவரும் கவிஞர்கள் என்பதால் கூடுதலாக பாராட்டப்பட்டோம். ஃபௌசியா யூனுசும் என்னிடத்தில் மிகுந்த அன்புடன் இருந்தார். இவர் சமூக சேவையில் ஆர்வம் உள்ளவராகவும், இந்தியா முழவதும் உள்ள பெண் படைப்பாளர்களுக்கான கருத்தரங்கம் நடத்துவதற்கு விருப்பம் உடையவராகவும் இருப்பதாக கூறினார். இறுதியாக சீனாவின் பாரம்பரிய இசை கருவியான பிப்பாவின் இசையில் நாங்கள் அனைவருமே எங்களை மறந்திருந்தோம். இசையின் இனிமையில் மயங்கி அந்த இசைக்கருவியை பற்றி ஷாங்காய் இளைஞர் குழுவைச் சேர்ந்த மைக்கேலிடம் விசாரித்தேன். அப்போது அவர் இந்த இசைக்கருவி கிறிஸ்து பிறப்பதற்கு இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது. பாரம்பரியமான இந்த இசைக்கருவியைப் பற்றிய மிக முக்கியமான ஒரு செய்தியை உங்களுக்கு நான் நாளை சொல்கிறேன் என்று கூறி என்னுடைய ஆர்வத்தை மேலும் அதிகரித்துவிட்டார்.

இரவு உணவிற்கு பின்பு நாங்கள் மறுபடியும் நான்ஜிங் ரோட்டிற்கு சென்றோம். இரவு நேர ஷாங்காய் நகரை காண்பதில் எங்களுக்கு இருந்த ஆர்வமும், ஷாப்பிங் செய்வதற்கான ஆர்வமுமாக இணைந்து சென்றிருந்தோம். அங்கு பல கடைகள் மூடியிருக்க, நீளமும், அகலமுமாக அந்த தெருவில் அங்கிருந்த கூட்டத்தை ரசித்து நடந்து சென்றோம். அப்பொழுது அங்கு சீன திரைப்பட காட்சிகள் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. எங்களுடன் துணையாக வந்த மைக்கேல் சீனத் திரைப்படம் பற்றி கூறினார். சீனாவில் திரைப்படம் ஹாங்காங் திரைப்படங்கள், தைவான் திரைப்படங்கள், சீனத் திரைப்படங்கள் என்று மூன்று விதமாக பிரிக்கப்பட்டிருக்கிறது.

1949க்கு பின்பு இப்போது வரை சீனாவின் ஆட்சி மொழியில் பல படங்கள் படமாக்கப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் ஆரம்ப காலங்களில் கம்யூனிஸ்ட் கட்சியினரால் பல படங்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டது. ஹாலிவுட் மற்றும் ஹாங்காங் தயாரிப்பு படங்கள் தடைசெய்யப்பட்டன. பல படங்கள் அரசினுடைய பிரச்சார படங்களாக உருவாகின.

1930களில் இடதுசாரி இயக்கமாகவும், சீன திரைப்படங்களுக்கு பொற்காலமாகவும் இருந்தது. 1940களில் அது மேலும் வளர்ந்தது. 1960லிருந்து 1980 வரை சீன திரைப்படங்களில் கலாச்சார மறுமலர்ச்சி ஏற்பட்டது. 1980களின் பின்பகுதியில் தலைமுறை மாற்றம் ஏற்பட்டது. 1990களுக்கு பின்பு, சர்வதேச அளவிளான பல திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு இன்று பல படங்கள் சர்வதேச விருதுகளையும் பெற்று உள்ளது.

1896ல் திரைப்படம் சீனாவில் அறிமுகமானாலும், 1905ல் தான் "த பேட்டில் ஆப் டிங்ஜங்ஷாங்" என்ற முதல் திரைப்படம் சீனாவில் தயாரிக்கப்பட்டது. கி.பி.184லிருந்து கி.பி.280வரை சீனாவில் ஆட்சி செய்த கா வி, ஷ_ ஹான், மற்றும் வூ என்ற மூன்று பேரரசர்களைப் பற்றிய கதை தான் த பேட்டில் ஆப் டிங்ஜங்ஷாங். இந்தக் கதையை மிங் வம்சத்தைச் சேர்ந்த லூ குவான் ஷாங் என்பவர் ரொமான்ஸ் ஆப் திரீ கிங்டம்ஸ் என்ற பெயரில் எழுதியிருக்கிறார்.

இன்றும் இந்தக் கதை சிறுவர்களுக்கான கார்ட்டூன், அனிமேசன், தொலைக்காட்சித் தொடர், புத்தகங்கள், விளையாட்டுக்கள், சினிமா, இசை என பல வடிவமெடுத்து சீனா, தைவான், தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் பரவியுள்ளது.

பயணிப்போம்...

 

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</