வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா மற்றும் சீன பிரதமர்களின் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பரிவர்த்தனைத் திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சீனாவிற்கு இந்தியாவில் இருந்து 100 இளையோரைக் கொண்ட குழு ஆண்டு தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்தக் குழுவினர் சமீபத்தில் சீனாவிற்குச் சென்றுள்ளார்கள். இக்குழுவில் தமிழ்நாடு சார்பில், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் 2001 முதல் இயங்கிவரும் ஸ்ரீ சக்தி சமூகப் பொருளாதாரக் கல்வி நலன் அறக்கட்டளையின் இயக்குநரும், கவிஞருமான சக்திஜோதி அவர்கள் சீனாவிற்கு சென்று வந்துள்ளார். தனது சீன அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொள்ளவிருக்கிறார்.

தொடராக வரவிருக்கும் இந்தப் பகுதியின் அனைத்துக் கட்டுரைகளும் வாசகர்களுக்கு உறுதியாக பயனளிக்கக் கூடிய ஒன்று அமையும் என்பதில் எமக்கு ஐயமில்லை.

 

 
     
     
     
   
பயணக் கட்டுரை
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


சக்தி ஜோதி

கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா மற்றும் சீன பிரதமர்களின் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பரிவர்த்தனைத் திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சீனாவிற்கு இந்தியாவில் இருந்து 100 இளையோரைக் கொண்ட குழு ஆண்டு தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்தக் குழுவினர் சமீபத்தில் சீனாவிற்குச் சென்றுள்ளார்கள். இக்குழுவில் தமிழ்நாடு சார்பில், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் 2001 முதல் இயங்கிவரும் ஸ்ரீ சக்தி சமூகப் பொருளாதாரக் கல்வி நலன் அறக்கட்டளையின் இயக்குநரும், கவிஞருமான சக்திஜோதி அவர்கள் சீனாவிற்கு சென்று வந்துள்ளார். தனது சீன அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொள்ளவிருக்கிறார்.
தொடராக வரவிருக்கும் இந்தப் பகுதியின் அனைத்துக் கட்டுரைகளும் வாசகர்களுக்கு உறுதியாக பயனளிக்கக் கூடிய ஒன்று அமையும் என்பதில் எமக்கு ஐயமில்லை.

இனி அவரைப் பற்றியும் அவரது நிறுவனம் பற்றியும் அவரது பயணத்திற்கான காரணம் பற்றியும் ஒரு விரிவான அறிமுகம்.

சக்தி ஜோதி அவர்கள் "நிலம் புகும் சொற்கள்" என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளை:

ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளையானது 21-12-2001 அன்று திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு துவக்கப்பட்டது. தற்பொழுது 680 கிராமங்களை உள்ளடக்கி திண்டுக்கல், தேனி, ஈரோடு மற்றும் கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் செயல்படுகிறது.

பார்வையும் நோக்கமும்

“வளர்ச்சியை நோக்கி....” சமூகத்தின் அனைத்து நிலையினரையும் வளர்ச்சியின் அடுத்த நிலை நோக்கி வழிநடத்திச் செல்வதையே, சமூகத்தின் மீதான நீள்பார்வையாகக் கொண்டு செயல்படுகிறது. கிராமப்புற வளங்களை மேம்படுத்துவதும், கிராமப்புற மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மனிதர்களை சமுதாயத்தின் மைய நீரோட்டத்தில் இணைப்பதற்காக ஒட்டு மொத்த ஆதார சக்தியை திரட்டித் தருவதற்காகவும், பெண்கள், குழந்தைகள் முன்னேற்றத்திற்காகவும் சமூகத்தின் அனைத்து வகையான முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

சமூக மேம்பாட்டு செயல்பாடுகள்

மகளிர் மேம்பாட்டில்….
1. 2880 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் 680 கிராமங்களில் 34,800 உறுப்பினர்களுக்கு மேல் சக்தி அறக்கட்டளையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
2. பாரத ஸ்டேட் வங்கியுடன் 18 கிளைகளுடன் இணைந்து சுய உதவிக் குழவினருக்கு கடனுதவிப் பெற்றுத்தரப்படுகிறது. இது வரை 56 கோடி வரை கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
3. மேலும் ர்னுகுஊ வங்கியுடன் இணைந்து 3 கோடி வரை கடனுதவி பெற்றுத் தரப்பட்டுள்ளது.

சுற்றுச் சூழல் மேம்பாட்டில் ...
சுற்றுபுறச் சூழல் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக வருடம் 1000 மரக்கன்றுகளை நடுதல், இதுவரை 7,000 மரக்கன்றுகளை சக்தி அறக்கட்டளையின் சார்பாக நடப்பட்டுள்ளது.

நீர்வடிப் பகுதி மேம்பாட்டு திட்டம் :
தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (நபார்டு) உதவியுடன் கிராமப்புறங்களின் இயற்கை வளங்களை மேம்படுத்துவது, மண் அரிப்பைத் தடுப்பது மேலும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது மூலமாக கிராமங்களிலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்து கிராம மக்களின் வாழ்;க்கைத்தரம் மேம்பாடு அடைய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

பாரத ஸ்டேட் வங்கியின் வணிக வழிகாட்டியாக (Business Facilitator)

திண்டுக்கல், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளிலும் கடன் மற்றும் சேமிப்பு சம்பந்தமான வசதிகளை வாடிக்கையாளர்களுக்குப் பெற்றுத்தரும் வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறது.

மருத்துவ முகாம்கள் :

கண் பரிசோதனை முகாம்இ எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்இ தாய்இ சர்க்கரை நோய் விழிப்புணர்வு, சேய் நல பரிசோதனை முகாம் உட்பட 15 வகையான மருத்துவ முகாம் நடத்தப்பட்டு 28இ000 மக்கள் பயனடைந்துள்ளனர்.

சக்தி சுய தொழில் பயிற்சி நிலையம் :
பயிற்சிகளில் சில…….
1. நான்கு இடங்களில் தையல் பயிற்சிப்பள்ளி
2. சானிடரி நாப்கின் பயிற்சி
3. கண்ணாடி மற்றும் பேப்ரிக் பெயிண்டிங் பயிற்சி
4. ரெக்ஸின் மற்றும் ஜூட் பை தயாரிப்பு பயிற்சி
5. செருப்பு தயாரித்தல் பயிற்சி
6. கயிறு (ஊழசை Pசழனரஉவ) தயாரித்தல்
7. உணவு பொருட்கள் தயாரிப்பு பயிற்சி
8. இயற்கை விவசாயப் பயிற்சி

யுரேகா மாலை நேர பயிற்சிப் பள்ளி :
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்காக 10 மையங்களில் மாலை நேர சிறப்பு பயிற்சி நடத்தப்படுகிறது

ஹெலன் பகல் நேர குழந்தைகள் காப்பகம் :
கொடைக்கானல் மலைப்பகுதியில் வடகவுஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் மேல்பள்ளம் காலணியில் மலைவாழ் குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

சக்தி இறகு பந்துக் கழகம் :
கிராமப்புற இளைஞர்கள் மாணவர்களுக்காக உன் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.

பொது சுகாதாரம் :
அய்யம்பாளையத்தில் பெண்களுக்காக பொது கழிப்பறை கட்டித் தரப்பட்டுள்ளது.

சிறப்பு நிகழ்ச்சிகள் :
1. குழந்தைகள் தினம் மாரத்தான் போட்டி
2. பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சிகள்
3. கல்லூரி மாணவர்களுக்காக தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி
4. இளைஞர்களுக்காக புகை, மது பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
5. உலக மகளிர் தின கருத்தரங்கம்
6. உடல் ஊனமுற்றோருக்காக சுய முன்னேற்ற சிறப்பு பயிற்சிகள்.

விருதுகள் :
1. பாரத ஸ்டேட் வங்கி விருது – 2 முறை
2. மாவட்ட ஆட்சியர் பசுமை விருது - 2 முறை
3. லைவ் விருது - லயோலா கல்லூரி
4. மக்கள் தொலைக்காட்சி விருது
5. சி.பா.ஆதித்தனார் விருது
6. நேரு யுவகேந்திரா தேனி மாவட்டம் மற்றும் மாநில விருது
7. நபார்டு விருது.

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பயணக் கட்டுரை TS சக்தி ஜோதி தொடர்கள் வாயில்

சீனப் பயணக் கட்டுரைகள் - 20

சக்தி ஜோதி  

ஃப்யூஷோ நகராட்சி இளைஞர் மையத்திற்கு பார்வையிட சென்றோம். சீனாவின் தேயிலை உற்பத்தியை பற்றியும், மிகச்சிறந்த முறையில் தேனீர் தயாரிப்பது பற்றியும், அங்கே விளக்கினார்கள். தேயிலையின் தாய் வீடு சீனா என்றே சொல்லலாம். சீனர்கள் தேனீர் பருகுவதை மதவழிபாட்டினைப் போல செய்கிறார்கள். தேனீர் தயாரிப்புக்கான பாத்திரங்களின் வடிவமைப்பு செய் நேர்த்தியுடன் இருக்கிறது. தேனீர் தயாரிப்பும் அங்கே கடவுளுக்கு படையல் செய்யக்கூடிய உணவினை தயாரிப்பது போன்ற பக்குவத்துடன் தயாரிக்கப்படுகிறது. இப்படியான பக்குவத்துடனே அங்கே இருந்த இளம் பெண்கள் மிகுந்த சிரத்தையுடன்; தேநீர் தயாரிக்கும் செயல்முறையை செய்து காட்டினார்கள்.

சீனாவின் தேயிலை வரலாறு மிகவும் நீண்டது. கி.மு. 2737ம் ஆண்டு ‘ஷென் னாங்;’ என்ற சீனாவின் இரண்டாவது பேரரசர்தான் முதன்முதலாக தேயிலையின் ருசியை கண்டுபிடித்தார். இவர் தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்கும் பழக்கமுடையவர். ஒரு முறை தொலைதூரப் பயணம் மேற்கொண்டிருந்த போது ஓய்வெடுப்பதற்காக ஓரிடத்தில் தன்னுடைய படையினரை நிறுத்தி இருந்தார். அந்த சமயத்தில் அவருடைய வேலைக்காரன் அவருக்கு குடிப்பதற்காக தண்ணீரைக் காய்ச்சும் போது தேயிலையின் காய்ந்து போன இலை, கொதிக்கின்ற அந்த தண்ணீருக்குள் விழுந்தது. அப்பொழுது அந்த தண்ணீர் ப்ரௌன் நிறத்தில் மாறியது. அரசர் அந்த தண்ணீரைக் குடித்த போது மிகுந்த புத்துணர்ச்சியை உணர்ந்தார். அன்றிலிருந்து ‘ச்சா’ என்கிற தேயிலை பிறந்தது.

தேயிலை ஆரம்ப காலங்களில் மூலிகையாக மட்டும் பயன்படுத்தப்பட்டது. முக்கியமாக ஹான் வம்சத்து அரசர்கள் மூலிகையாக இந்த தேயிலையை பயன்படுத்தினார்கள். பின்னால் வந்த டேங் வம்சத்தினர் புத்துணர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய ஒரு பானமாகப் பயன்படுத்த ஆரம்பித்தனர். அந்த காலகட்டத்தில் தேயிலை தயாரிப்பு என்பது இன்றைக்கு இருப்பதைப் போல் அல்லாமல் வித்தியாசமாக இருந்தது. தேயிலையின் இலைகளை அழுத்தப்பட்ட கட்டிகளாக (டீசiஉம வுநய) உருமாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டது. பின்பு படிப்படியாக மாற்றம் பெற்று இன்றைக்கு நாம் பயன்படுத்தக்கூடிய தேயிலை வகைகள் உருவாகியது. தேயிலையை கண்டுபிடித்த ஹீயுன்னான் மாகாணத்தின் ‘ஷென் னாங்’ அரசர் தேயிலை மலையில் இறந்ததாக ஒரு கதை உண்டு.

கி.பி 618லிருந்து 907வரை உள்ள காலகட்டத்தில் வெள்ளைத் தேயிலை அறிமுகப்படுத்தப்பட்டது. பச்சைத் தேயிலை, மணமுள்ள தேயிலை, கருப்பு தேயிலை என சீனாவின் தேயிலைகள் உலகப் பிரசித்தி பெற்றவை. செடி வகையாக பார்த்து பழக்கப்பட்ட எனக்கு 100 அடிக்கு மேலான தேயிலை மரம் பற்றி கேள்விப்பட்டவுடன் ஆச்சர்யமாக இருந்தது. யுன்னான் காடுகளில் தேயிலையின் அரசன் என்று அழைக்கப்படுகிற தேயிலை மரம் 1961ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மரம் 1700 வயதும், 105அடி உயரமும், 3.5அடி சுற்றளவும் கொண்ட காட்டுத் தேயிலைமரம். இதைப் போல இன்றும் 6.5, 7.5அடி, 40அடி, 30அடி, என பல்வேறு உயரங்களில் தேயிலை மரங்கள் காணப்படுகிறது என்கிற தகவல்களோடு இளைஞர் மையத்தின் சிற்ப கலைகளை பார்க்கச் சென்றோம்.

கற்கள், மரங்கள், உலோகங்கள், கண்ணாடி போன்றவைகளால் செய்யப்பட்ட பல்வேறு புத்தர் சிலைகளையும், குவான் இன் சிலைகளையும், டிராகன் வடிவங்களையும், சிரிக்கும் புத்தரையும் அங்கே பார்த்தோம். சீனர்களின் கலைத்திறமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய ஜேட் கற்களால் ஆன புத்தர் சிலை பலகோடி மதிப்புடையது. மரத்தினால் செய்யப்பட்ட குவான் இன் சிலை மிக அழகாக வழக்கம் போல் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் விதமாக இருந்தது. இந்த இளைஞர் மையத்தின் உள் விளையாட்டு அரங்கங்களில், அங்கு இருந்த இளைஞர்களோடு விளையாடினோம். இந்த இளைஞர் மையத்தின் மிக சிறப்பானதாக நான் கருதிய ஒரு பணியினை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். ஃபியூஷோ நகரில் உள்ள ஊனமுற்றோர்களை கணக்கெடுத்து, அவர்களுக்கு வீட்டிலிருந்தே செய்யக் கூடிய தொழிற்பயிற்சிகளை வழங்குகிறார்கள். இதில் குறிப்பாக கை வேலைப்பாட்டுடன் கூடிய வாழ்த்து அட்டைகள் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் விற்பனை செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பயணிப்போம்...

 

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</