வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா மற்றும் சீன பிரதமர்களின் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பரிவர்த்தனைத் திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சீனாவிற்கு இந்தியாவில் இருந்து 100 இளையோரைக் கொண்ட குழு ஆண்டு தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்தக் குழுவினர் சமீபத்தில் சீனாவிற்குச் சென்றுள்ளார்கள். இக்குழுவில் தமிழ்நாடு சார்பில், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் 2001 முதல் இயங்கிவரும் ஸ்ரீ சக்தி சமூகப் பொருளாதாரக் கல்வி நலன் அறக்கட்டளையின் இயக்குநரும், கவிஞருமான சக்திஜோதி அவர்கள் சீனாவிற்கு சென்று வந்துள்ளார். தனது சீன அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொள்ளவிருக்கிறார்.

தொடராக வரவிருக்கும் இந்தப் பகுதியின் அனைத்துக் கட்டுரைகளும் வாசகர்களுக்கு உறுதியாக பயனளிக்கக் கூடிய ஒன்று அமையும் என்பதில் எமக்கு ஐயமில்லை.

 

 
     
     
     
   
பயணக் கட்டுரை
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


சக்தி ஜோதி

கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா மற்றும் சீன பிரதமர்களின் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பரிவர்த்தனைத் திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சீனாவிற்கு இந்தியாவில் இருந்து 100 இளையோரைக் கொண்ட குழு ஆண்டு தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்தக் குழுவினர் சமீபத்தில் சீனாவிற்குச் சென்றுள்ளார்கள். இக்குழுவில் தமிழ்நாடு சார்பில், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் 2001 முதல் இயங்கிவரும் ஸ்ரீ சக்தி சமூகப் பொருளாதாரக் கல்வி நலன் அறக்கட்டளையின் இயக்குநரும், கவிஞருமான சக்திஜோதி அவர்கள் சீனாவிற்கு சென்று வந்துள்ளார். தனது சீன அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொள்ளவிருக்கிறார்.
தொடராக வரவிருக்கும் இந்தப் பகுதியின் அனைத்துக் கட்டுரைகளும் வாசகர்களுக்கு உறுதியாக பயனளிக்கக் கூடிய ஒன்று அமையும் என்பதில் எமக்கு ஐயமில்லை.

இனி அவரைப் பற்றியும் அவரது நிறுவனம் பற்றியும் அவரது பயணத்திற்கான காரணம் பற்றியும் ஒரு விரிவான அறிமுகம்.

சக்தி ஜோதி அவர்கள் "நிலம் புகும் சொற்கள்" என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளை:

ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளையானது 21-12-2001 அன்று திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு துவக்கப்பட்டது. தற்பொழுது 680 கிராமங்களை உள்ளடக்கி திண்டுக்கல், தேனி, ஈரோடு மற்றும் கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் செயல்படுகிறது.

பார்வையும் நோக்கமும்

“வளர்ச்சியை நோக்கி....” சமூகத்தின் அனைத்து நிலையினரையும் வளர்ச்சியின் அடுத்த நிலை நோக்கி வழிநடத்திச் செல்வதையே, சமூகத்தின் மீதான நீள்பார்வையாகக் கொண்டு செயல்படுகிறது. கிராமப்புற வளங்களை மேம்படுத்துவதும், கிராமப்புற மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மனிதர்களை சமுதாயத்தின் மைய நீரோட்டத்தில் இணைப்பதற்காக ஒட்டு மொத்த ஆதார சக்தியை திரட்டித் தருவதற்காகவும், பெண்கள், குழந்தைகள் முன்னேற்றத்திற்காகவும் சமூகத்தின் அனைத்து வகையான முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

சமூக மேம்பாட்டு செயல்பாடுகள்

மகளிர் மேம்பாட்டில்….
1. 2880 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் 680 கிராமங்களில் 34,800 உறுப்பினர்களுக்கு மேல் சக்தி அறக்கட்டளையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
2. பாரத ஸ்டேட் வங்கியுடன் 18 கிளைகளுடன் இணைந்து சுய உதவிக் குழவினருக்கு கடனுதவிப் பெற்றுத்தரப்படுகிறது. இது வரை 56 கோடி வரை கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
3. மேலும் ர்னுகுஊ வங்கியுடன் இணைந்து 3 கோடி வரை கடனுதவி பெற்றுத் தரப்பட்டுள்ளது.

சுற்றுச் சூழல் மேம்பாட்டில் ...
சுற்றுபுறச் சூழல் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக வருடம் 1000 மரக்கன்றுகளை நடுதல், இதுவரை 7,000 மரக்கன்றுகளை சக்தி அறக்கட்டளையின் சார்பாக நடப்பட்டுள்ளது.

நீர்வடிப் பகுதி மேம்பாட்டு திட்டம் :
தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (நபார்டு) உதவியுடன் கிராமப்புறங்களின் இயற்கை வளங்களை மேம்படுத்துவது, மண் அரிப்பைத் தடுப்பது மேலும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது மூலமாக கிராமங்களிலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்து கிராம மக்களின் வாழ்;க்கைத்தரம் மேம்பாடு அடைய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

பாரத ஸ்டேட் வங்கியின் வணிக வழிகாட்டியாக (Business Facilitator)

திண்டுக்கல், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளிலும் கடன் மற்றும் சேமிப்பு சம்பந்தமான வசதிகளை வாடிக்கையாளர்களுக்குப் பெற்றுத்தரும் வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறது.

மருத்துவ முகாம்கள் :

கண் பரிசோதனை முகாம்இ எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்இ தாய்இ சர்க்கரை நோய் விழிப்புணர்வு, சேய் நல பரிசோதனை முகாம் உட்பட 15 வகையான மருத்துவ முகாம் நடத்தப்பட்டு 28இ000 மக்கள் பயனடைந்துள்ளனர்.

சக்தி சுய தொழில் பயிற்சி நிலையம் :
பயிற்சிகளில் சில…….
1. நான்கு இடங்களில் தையல் பயிற்சிப்பள்ளி
2. சானிடரி நாப்கின் பயிற்சி
3. கண்ணாடி மற்றும் பேப்ரிக் பெயிண்டிங் பயிற்சி
4. ரெக்ஸின் மற்றும் ஜூட் பை தயாரிப்பு பயிற்சி
5. செருப்பு தயாரித்தல் பயிற்சி
6. கயிறு (ஊழசை Pசழனரஉவ) தயாரித்தல்
7. உணவு பொருட்கள் தயாரிப்பு பயிற்சி
8. இயற்கை விவசாயப் பயிற்சி

யுரேகா மாலை நேர பயிற்சிப் பள்ளி :
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்காக 10 மையங்களில் மாலை நேர சிறப்பு பயிற்சி நடத்தப்படுகிறது

ஹெலன் பகல் நேர குழந்தைகள் காப்பகம் :
கொடைக்கானல் மலைப்பகுதியில் வடகவுஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் மேல்பள்ளம் காலணியில் மலைவாழ் குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

சக்தி இறகு பந்துக் கழகம் :
கிராமப்புற இளைஞர்கள் மாணவர்களுக்காக உன் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.

பொது சுகாதாரம் :
அய்யம்பாளையத்தில் பெண்களுக்காக பொது கழிப்பறை கட்டித் தரப்பட்டுள்ளது.

சிறப்பு நிகழ்ச்சிகள் :
1. குழந்தைகள் தினம் மாரத்தான் போட்டி
2. பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சிகள்
3. கல்லூரி மாணவர்களுக்காக தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி
4. இளைஞர்களுக்காக புகை, மது பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
5. உலக மகளிர் தின கருத்தரங்கம்
6. உடல் ஊனமுற்றோருக்காக சுய முன்னேற்ற சிறப்பு பயிற்சிகள்.

விருதுகள் :
1. பாரத ஸ்டேட் வங்கி விருது – 2 முறை
2. மாவட்ட ஆட்சியர் பசுமை விருது - 2 முறை
3. லைவ் விருது - லயோலா கல்லூரி
4. மக்கள் தொலைக்காட்சி விருது
5. சி.பா.ஆதித்தனார் விருது
6. நேரு யுவகேந்திரா தேனி மாவட்டம் மற்றும் மாநில விருது
7. நபார்டு விருது.

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பயணக் கட்டுரை TS சக்தி ஜோதி தொடர்கள் வாயில்

சீனப் பயணக் கட்டுரைகள் - 18

சக்தி ஜோதி  

நதிகள் பொதுவாகவே அழகானவை. அதிலும் மாலைநேரத்து நதிகள் இளமையானவை என்று சொல்ல வேண்டும். ஐந்து மணிக்கு கிளம்பி ஃபியூஜியன் மாகாணத்தின் புகழ் பெற்ற 'பின் இன்' எனப்படும் மின் சியாங் நதியைப் பார்க்க சென்றோம். மாலை நேரத்து நதியைப் பார்க்கிற ஆர்வம் எங்கள் அனைவரிடமும் இருந்தது. ஆனால் எங்களது குழுவை வழிநடத்துகிற சுதான்ஸ்ராஜ் மட்டும் இல்லாமல் எங்களது பயணம் துவங்கியது. வான் டூவிடம் சுதான்ஸ் ராஜ் இன்னும் வரவில்லை என்று தகவல் சொல்லப்பட்ட போது யாராக இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்திற்கு வரவில்லையென்றால் அவர்களை விட்டுவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்று கூறிவிட்டார்.

மின் நதி ஃபியூஜியன் மாகாணத்தின் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு மலைகளில் துவங்கும் பல்வேறு சிற்றாறுகளினால் மிகப்பெரிய இரண்டு நதிகளாக ஃபூடான், ஜூன் என்ற பெயர்களுடன் நான் பிங் எனும் இடம் வரை பயணித்து, பின்பு மின் என்கிற 580 கி.மீ. நீளமுடைய இந்த நதி 56,000 ச.கி.மீ முகத்துவாரத்தை உடையதாக பரந்து விரிந்து கிழக்குச் சீனக் கடலில் கலக்கிறது. கப்பல் பயணத்திற்காகவும், வியாபார போக்குவரத்திற்காகவும் பயன்படுத்தப்பட்ட இந்த நதி இன்று ஃபியூஜியன் மாகாணத்தின் சுற்றுலாத் தளங்களில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறது. அதற்கு காரணம் மிகப்பெரிய நதியில் இயங்குகின்ற சுற்றுலா சொகுசுப் கப்பல்களும், இந்த நதியை சுற்றி அமைந்துள்ள மிகப்பெரிய பூங்காவும் தான்.

பூங்காவில் இயக்கப்படுகிற திறந்த வெளி சிறிய வாகனங்களில் பயணித்து பூங்காவைப் பார்வையிட்டோம். சீனா என்றவுடனே நமக்கு நினைவுக்கு வருகின்ற ஒரு சில விஷயங்களில் டிராகன் உருவமும் ஒன்று. வீடுகளிலும், உணவு விடுதிகளிலும், கோவில்களிலும் தொடர்ந்து டிராகன் பார்த்துக் கொண்டே வந்தாலும் இந்த பூங்காவில் அமைக்கபட்டுள்ள டிராகன் உருவங்கள் என்னை கவர்ந்தது.

சீனாவின் அடையாளமாக டிராகன் திகழ்ந்தாலும் டிராகன் சீனாவின் உருவாக்கம் அல்ல. கிரேக்கத்தின் மிக முக்கியமான படைப்பு டிராகன். கிரேக்க புராணங்களில் வருகிற டிராகன் கால்கள், இறக்கைகளுடனும் பாம்பின் உருவத்துடனும் வாயில் நெருப்பு உமிழும் தோற்றத்துடன் இருக்கிறது. இந்த டிராகன்கள் மனிதனைவிட வலிமையானதாக, மனிதர்களுக்கு தீங்கு செய்யக்கூடிய கொடூரமான அரக்க குணம் கொண்ட படைப்பாக படைக்கப்பட்டது. ஐரோப்பாவின் டிராகன் அசுரத் தன்மை வாய்ந்தது. பின்னாளில் இந்த கற்பனை பாத்திரம் உலகம் முழுவதும் அசுர வளர்ச்சி பெற்றது. குறிப்பாக ஆசியாவின் கிழக்கு பகுதியில் வேகமாக பரவியது.

சீனாவில் ஆதிக்கம் பெற்ற டிராகன் ஐரோப்பாவில் டிராகனை போன்ற தோற்றத்துடன் இருந்தாலும் முற்றிலும் மாறுபட்ட குணாதிசயத்துடன் படைக்கப்பட்டது. சீனாவின் டிராகன் இரக்க குணம் கொண்டது. மனிதர்களுக்கு உதவி செய்வது, மனிதனை விட புத்திசாலியாக படைக்கப்பட்டது. நான்கு கால்களுடன், ஐந்து பாதத்துடன் உள்ள டிராகன் ஆண்மைக்கு அடையாளமாக கருதப்படுகிறது. ஒரு சீனப் பழமொழி, “Hopping one’s son become a dragon” அதாவது சீன டிராகனைப் போன்று வலிமையும், வெற்றியும் உடையவராக இருக்க விரும்புகிறார்கள். டிராகன் அதிர்ஷ்டத்தை கொண்டு வருகிறது என்று நம்புகிறார்கள். பலம், சக்தி, கௌரவம், செழுமை, அறிவு, ஆசை, இரக்க சிந்தனை இவற்றை தருகிற டிராகன் உருவம் ஹாங், ஷாங் வம்சத்து அரசர்களின் அரசச் சின்னமாக மதிக்கப்பட்டது.

டிராகன் மதிப்பு பெற்ற காலத்தில் இருந்தே டிராகன் நடனம் சீனாவில் ஆரம்பமாகி விட்டது. 20 முதல் 35 மீட்டர் நீளமுடைய சிறிய டிராகன் நடனமும், 50 முதல் 70 மீட்டர் நீளமுடைய பெரிய டிராகன் நடனமும் நடைபெறாத விழாக்களே சீனாவில் இல்லை. டிராகன் நடனம் குழு ஒற்றுமைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. 50 முதல் 100 பேர் வரை டிராகன் உருவத்திற்குள் இருந்து ஒரே மாதிரியாக ஆடுவது என்பது மிகச்சிறந்த ஒற்றுமையான அணிக்கு உதாரணம்.

மகாபாரதத்திலும் கூட வாசுகி எனும் பாம்பு முக்கிய இடத்தை பெற்றிருக்கிறது. ஆதிசேஷன் எனும் ஐந்து தலை நாகம் இந்து மதத்தின் உயரிய அடையாளம். நாகம் பற்றிய மதிப்பீடும், கதைகளும் எந்த அளவிற்கு இந்தியாவில் ஆதிக்கம் பெற்றிருக்கிறதோ அதே அளவிற்கு சீனாவில் டிராகன் பற்றிய மதிப்பீடு ஆதிக்கம் பெற்றிருக்கிறது.

ஆண்மைக்கு அடையாளமாக டிராகன் இருப்பதால் பெண்மைக்கு அடையாளமாக எதைக் கருதுகிறார்கள் என்று வான் டூவிடம் கேட்டேன். தங்க நிறம், நீல நிறம், பச்சை நிறத்துடன் உடலும், வயலட் நிற வால் பகுதியிடனும் மயில் போன்றும், கழுகு போன்றும் தோற்றத்துடன் கூடிய பீனிக்ஸ் என்னும் கற்பனை பறவை பெண்மைக்கு அடையாளமாக மதிக்கப்படுகிறது. பென் குவாங் எனும் இந்த பறவை நேர்மறை சிந்தனை உடையது. கணவன், மனைவியின் அன்பிற்கும் மகிழ்ச்சியான வாழ்விற்கும் தொடர்புடையதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒழுக்கம், நற்குணம், கற்பு, பரிசுத்தத் தன்மை, கனிவு, கருணை, கிருபை இவற்றின் குறியீடாக பென் குவாங் என்ற பீனிக்ஸ் பறவை மதிக்கப்படுகிறது. உடல் சார்ந்த வலிமையான விஷயத்தை ஆண்கள் மீதும், உணர்வு சார்ந்த விஷயத்தை பெண்கள் மீதும் ஏற்றிப் பார்ப்பது இயல்புதானே.

மின் நதிப்பகுதியை பார்வையிட்டு நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்ற போது சுதான்ஸ் ராஜ்வை ஏன் விட்டு விட்டு சென்றீர்கள் என்று திரு.கேவல்யா வான் டூவிடம் கோபத்துடன் கேட்டார். அதற்கு அவர், “யாராக இருந்தாலும் நேரத்தைப் பின்பற்ற வேண்டும். நீங்களாக இருந்தாலும் கூட” என்று கூறினார். ஐந்து நிமிடம் என்பது சுதன்ஸ்ராஜ் என்கிற அந்த ஒருவரின் ஐந்து நிமிடம் அல்ல. மீதியுள்ள 99 பேரின் ஒவ்வொரு ஐந்து நிமிடத்தையும் அவர் வீணாக்கிக் கொண்டிருக்கிறார். அதாவது மற்றவர்களின் 495 நிமிடம் குறைந்த பட்சம் எட்டு மணி நேரம் பதினைந்து நிமிடத்தை சுதான்ஸ் ராஜ்காக வீணாக்க முடியாது என்று கணக்கு போட்டு காரணமும் சொல்லி விட்டு நகர்ந்தார். பின்பு என்னிடம், காலை உணவை நீங்கள் சாப்பிடவில்லை என வருத்தப்பட்டீர்கள் அல்லவா சீனாவில் உணவை விட நேரம் மிக முக்கியம் என்று கூறினார். இந்தியாவில் வேண்டுமென்றால் திரு. கேவல்யா ஒரு பெரிய அதிகாரியாக இருக்கலாம். ஆனால் இங்கே அனைவரும் சமம், நேரத்தை பின்பற்றுவதில் என்று கூறினார். இதே மாதிரி நேர்மையான உணர்வும், தைரியமும் இந்திய இளைஞர்களுக்கும் வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

பயணிப்போம்...

 

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</