வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா மற்றும் சீன பிரதமர்களின் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பரிவர்த்தனைத் திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சீனாவிற்கு இந்தியாவில் இருந்து 100 இளையோரைக் கொண்ட குழு ஆண்டு தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்தக் குழுவினர் சமீபத்தில் சீனாவிற்குச் சென்றுள்ளார்கள். இக்குழுவில் தமிழ்நாடு சார்பில், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் 2001 முதல் இயங்கிவரும் ஸ்ரீ சக்தி சமூகப் பொருளாதாரக் கல்வி நலன் அறக்கட்டளையின் இயக்குநரும், கவிஞருமான சக்திஜோதி அவர்கள் சீனாவிற்கு சென்று வந்துள்ளார். தனது சீன அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொள்ளவிருக்கிறார்.

தொடராக வரவிருக்கும் இந்தப் பகுதியின் அனைத்துக் கட்டுரைகளும் வாசகர்களுக்கு உறுதியாக பயனளிக்கக் கூடிய ஒன்று அமையும் என்பதில் எமக்கு ஐயமில்லை.

 

 
     
     
     
   
பயணக் கட்டுரை
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


சக்தி ஜோதி

கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா மற்றும் சீன பிரதமர்களின் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பரிவர்த்தனைத் திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சீனாவிற்கு இந்தியாவில் இருந்து 100 இளையோரைக் கொண்ட குழு ஆண்டு தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்தக் குழுவினர் சமீபத்தில் சீனாவிற்குச் சென்றுள்ளார்கள். இக்குழுவில் தமிழ்நாடு சார்பில், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் 2001 முதல் இயங்கிவரும் ஸ்ரீ சக்தி சமூகப் பொருளாதாரக் கல்வி நலன் அறக்கட்டளையின் இயக்குநரும், கவிஞருமான சக்திஜோதி அவர்கள் சீனாவிற்கு சென்று வந்துள்ளார். தனது சீன அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொள்ளவிருக்கிறார்.
தொடராக வரவிருக்கும் இந்தப் பகுதியின் அனைத்துக் கட்டுரைகளும் வாசகர்களுக்கு உறுதியாக பயனளிக்கக் கூடிய ஒன்று அமையும் என்பதில் எமக்கு ஐயமில்லை.

இனி அவரைப் பற்றியும் அவரது நிறுவனம் பற்றியும் அவரது பயணத்திற்கான காரணம் பற்றியும் ஒரு விரிவான அறிமுகம்.

சக்தி ஜோதி அவர்கள் "நிலம் புகும் சொற்கள்" என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளை:

ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளையானது 21-12-2001 அன்று திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு துவக்கப்பட்டது. தற்பொழுது 680 கிராமங்களை உள்ளடக்கி திண்டுக்கல், தேனி, ஈரோடு மற்றும் கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் செயல்படுகிறது.

பார்வையும் நோக்கமும்

“வளர்ச்சியை நோக்கி....” சமூகத்தின் அனைத்து நிலையினரையும் வளர்ச்சியின் அடுத்த நிலை நோக்கி வழிநடத்திச் செல்வதையே, சமூகத்தின் மீதான நீள்பார்வையாகக் கொண்டு செயல்படுகிறது. கிராமப்புற வளங்களை மேம்படுத்துவதும், கிராமப்புற மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மனிதர்களை சமுதாயத்தின் மைய நீரோட்டத்தில் இணைப்பதற்காக ஒட்டு மொத்த ஆதார சக்தியை திரட்டித் தருவதற்காகவும், பெண்கள், குழந்தைகள் முன்னேற்றத்திற்காகவும் சமூகத்தின் அனைத்து வகையான முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

சமூக மேம்பாட்டு செயல்பாடுகள்

மகளிர் மேம்பாட்டில்….
1. 2880 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் 680 கிராமங்களில் 34,800 உறுப்பினர்களுக்கு மேல் சக்தி அறக்கட்டளையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
2. பாரத ஸ்டேட் வங்கியுடன் 18 கிளைகளுடன் இணைந்து சுய உதவிக் குழவினருக்கு கடனுதவிப் பெற்றுத்தரப்படுகிறது. இது வரை 56 கோடி வரை கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
3. மேலும் ர்னுகுஊ வங்கியுடன் இணைந்து 3 கோடி வரை கடனுதவி பெற்றுத் தரப்பட்டுள்ளது.

சுற்றுச் சூழல் மேம்பாட்டில் ...
சுற்றுபுறச் சூழல் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக வருடம் 1000 மரக்கன்றுகளை நடுதல், இதுவரை 7,000 மரக்கன்றுகளை சக்தி அறக்கட்டளையின் சார்பாக நடப்பட்டுள்ளது.

நீர்வடிப் பகுதி மேம்பாட்டு திட்டம் :
தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (நபார்டு) உதவியுடன் கிராமப்புறங்களின் இயற்கை வளங்களை மேம்படுத்துவது, மண் அரிப்பைத் தடுப்பது மேலும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது மூலமாக கிராமங்களிலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்து கிராம மக்களின் வாழ்;க்கைத்தரம் மேம்பாடு அடைய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

பாரத ஸ்டேட் வங்கியின் வணிக வழிகாட்டியாக (Business Facilitator)

திண்டுக்கல், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளிலும் கடன் மற்றும் சேமிப்பு சம்பந்தமான வசதிகளை வாடிக்கையாளர்களுக்குப் பெற்றுத்தரும் வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறது.

மருத்துவ முகாம்கள் :

கண் பரிசோதனை முகாம்இ எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்இ தாய்இ சர்க்கரை நோய் விழிப்புணர்வு, சேய் நல பரிசோதனை முகாம் உட்பட 15 வகையான மருத்துவ முகாம் நடத்தப்பட்டு 28இ000 மக்கள் பயனடைந்துள்ளனர்.

சக்தி சுய தொழில் பயிற்சி நிலையம் :
பயிற்சிகளில் சில…….
1. நான்கு இடங்களில் தையல் பயிற்சிப்பள்ளி
2. சானிடரி நாப்கின் பயிற்சி
3. கண்ணாடி மற்றும் பேப்ரிக் பெயிண்டிங் பயிற்சி
4. ரெக்ஸின் மற்றும் ஜூட் பை தயாரிப்பு பயிற்சி
5. செருப்பு தயாரித்தல் பயிற்சி
6. கயிறு (ஊழசை Pசழனரஉவ) தயாரித்தல்
7. உணவு பொருட்கள் தயாரிப்பு பயிற்சி
8. இயற்கை விவசாயப் பயிற்சி

யுரேகா மாலை நேர பயிற்சிப் பள்ளி :
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்காக 10 மையங்களில் மாலை நேர சிறப்பு பயிற்சி நடத்தப்படுகிறது

ஹெலன் பகல் நேர குழந்தைகள் காப்பகம் :
கொடைக்கானல் மலைப்பகுதியில் வடகவுஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் மேல்பள்ளம் காலணியில் மலைவாழ் குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

சக்தி இறகு பந்துக் கழகம் :
கிராமப்புற இளைஞர்கள் மாணவர்களுக்காக உன் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.

பொது சுகாதாரம் :
அய்யம்பாளையத்தில் பெண்களுக்காக பொது கழிப்பறை கட்டித் தரப்பட்டுள்ளது.

சிறப்பு நிகழ்ச்சிகள் :
1. குழந்தைகள் தினம் மாரத்தான் போட்டி
2. பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சிகள்
3. கல்லூரி மாணவர்களுக்காக தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி
4. இளைஞர்களுக்காக புகை, மது பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
5. உலக மகளிர் தின கருத்தரங்கம்
6. உடல் ஊனமுற்றோருக்காக சுய முன்னேற்ற சிறப்பு பயிற்சிகள்.

விருதுகள் :
1. பாரத ஸ்டேட் வங்கி விருது – 2 முறை
2. மாவட்ட ஆட்சியர் பசுமை விருது - 2 முறை
3. லைவ் விருது - லயோலா கல்லூரி
4. மக்கள் தொலைக்காட்சி விருது
5. சி.பா.ஆதித்தனார் விருது
6. நேரு யுவகேந்திரா தேனி மாவட்டம் மற்றும் மாநில விருது
7. நபார்டு விருது.

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பயணக் கட்டுரை TS சக்தி ஜோதி தொடர்கள் வாயில்

சீனப் பயணக் கட்டுரைகள் - 15

சக்தி ஜோதி  

கடல் மனிதனுக்கு பிரமிப்பூட்டும் விஷயமாக இருந்தது. கடல் மனிதனை பயப்படுத்தக் கூடிய ஒன்றாக இருந்தது. கடல் மீதான மனிதனின் பயம் விலகிய போது கடலை தெய்வமாகவும், தாயாகவும் பார்க்க ஆரம்பித்தான். கடலை மீன்கள் விளையும் நிலமாகவும் பார்த்தான் மூன்று பக்கமும் மலைகளால் சூழப்பட்டு வளர்ச்சியில் பின்தங்கியிருந்த பியூஜியன் மாகாணம் வளர்ச்சி பெறுவதற்கு கிழக்கு சீனக் கடல் மிகப்பெரிய பங்கினை அளித்திருக்கிறது.

சீனா, மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம், தைவான், பிலிப்பைன்ஸ் மற்றும் ப்ரூனே போன்ற நாடுகளின் கடல் வாணிபத்தலமாக அறியப்பட்டுள்ள கிழக்குச் சீனக்கடல் உலகத்திலேயே பெரிய கடலாக கின்னஸில் இடம் பெற்றிருக்கிறது. இந்தக் கடல் உலகின் மூன்றாவது பெரிய கப்பல் துறைமுகமாகவும், பத்தாவது மீன் பிடித்தலமாகவும் உள்ளது. 2500 ஆண்டுகளாக சீனக்கடல் மார்கமாக சந்தனக் கட்டை, பட்டு, தேயிலை மற்றும் நறுமணப் பொருள்களின் விற்பனை உலகம் முழுவதும் பரவலாக்கப்பட்டுள்ளது.

சீனா, சீனக் கடல் தேசங்களில் தொழில் நுட்பம் மற்றும் திட்டக் கண்காட்சி ஜீன் 18 மேளா என்று அழைக்கப்படுகிறது. பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சியாளர்கள், வங்கியாளர்கள், முதலீட்டாளர்கள், தொழில் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் இந்த கண்காட்சியில் இளைஞர்களின் புதிய கண்டுபிடிப்புகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. நிறுவனங்கள், வங்கியாளர்களின் ஆதரவுடன் புதிய கண்டுபிடிப்புக்கள் தயாரிக்கப்பட்டு உலகளவில் சந்தைப்படுத்தப்படுகிறன. இந்த நிகழ்வு இளைஞர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

ஜீன் 18லிருந்து இருபது வரை ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இதுவரை ஆறு கண்காட்சிகள் நடத்தப்பட்டுள்ளது. 2500 ஆராய்ச்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டு பல கண்டுபிடிப்புகள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக மொபைல் போன் செய்தித் தொடர்புக்காக வீடுகளில் சிறிய ஆன்டனாவை பயன்படுத்துவது, ரோபோட் மூலமாக உயரமான கட்டிடங்களை சுத்தம் செய்வது போன்ற வித்தியாசமான பல படைப்புகள் இந்த கண்காட்சி மூலமாகவே உருவாக்கப்பட்டுள்ளது. இது திறமை வாய்ந்த இளைஞர்களுக்கு அவருடைய திறமையை உலகிற்கு காட்டும் மிக முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது.

காலையில் இருந்து மதியம் வரை பியூஷோ நகரத்தின் வளர்ச்சியைப் பற்றி பியூஷோ இளையோர் சங்க நிர்வாகிகள் விளக்கினார்கள். மிகக்குறைந்த காலத்தில் பியூஜியன் மாகாணத்தின் தொழில் வளர்ச்சி ஏற்பட்ட விதத்தை, பியூஷோ நகரம் முழுவதும் மிக உயர்ந்த கட்டிடங்களாய் நிறைந்திருக்கின்ற காரணத்தை தொழில் நுட்பத்திலும், ஏற்றுமதியிலும் கவனம் செலுத்துவதை அறிந்த போது நமது நாட்டின் வளங்களைப் பற்றி சிந்திக்காமலிருக்க முடியவில்லை. நமது நாட்டிலும் எத்தனையோ இளைஞர்கள் புதியதாக கண்டுபிடித்த பல்வேறு கண்டபிடிப்புக்களை வெளிக்கொண்டுவரும் சாத்தியமின்றி முடங்கிப் போய்விடுவதை நினைத்து வருத்தப்பட்டேன். இந்திய இளைஞர்களின் விஞ்ஞான தொழில் நுட்ப அறிவை இந்தியா முறையாக பயன்படுத்தினால் தான் முழுமையான வல்லரசு நாடாக வரமுடியும்.

மதிய உணவிற்காக நாங்கள் சென்ற ஹோட்டலின் முகப்பில் இருந்த மிகப் பெரிய சிரிக்கும் புத்தர் பற்றி அறிந்து கொள்ள வழக்கம்போல வாண் டூவை அணுகினேன். சிரிக்கும் புத்தர் அல்லது புத்தாய் எனப்படும் சீன ஜென் முனிவரின் உருவம் போதி சத்துவரின் உருவமாக போற்றப்படுகிறது. லியாங் வம்ச அரசர்கள் காலத்திலிருந்து (ஒன்பதாவது நூற்றாண்டு) அன்பும், கருணையும் நிறைந்த இந்த ஜென் துறவி ஏழு வடிவங்களில் அதிர்ஷ்ட தேவதையாக வழிபடப்படுகிறது.

சிரிக்கும் புத்தர் புத்திசம், தாவோயிசம் இரண்டிலும் போற்றப்படும் கடவுளாக, குழந்தைகளின் நண்பனாக இருக்கிறார். கனத்த உருவம், வழுக்கை தலை மிகப்பெரிய தொப்பையுடன் இருக்கும் இந்த சிரிக்கும் புத்தரை கோவில்களில் மட்டுமன்றி அனைத்து வீடுகளிலும், வியாபார தலங்களிலும் வைத்து வணங்குகிறார்கள். இந்த சிலையின் தொப்பையை தடவிக் கொடுப்பது அதிர்ஷ்டத்தை வரவழைக்கும் என்று நம்புகிறார்கள். ஹோட்டலின் முகப்பில் இருந்த மிகப்பெரிய சிரிக்கும் புத்தரை அவருடைய தொப்பையை தடவிக் கொடுத்து மகிழ்ந்தோம். இந்தியாவிலும் குபேர கடவுள் என்று இப்பொழுது நம்பி வணங்குவது பரவலாகியுள்ளது. ஏழு அதிர்ஷ்ட தேவதைகளின் பெயர்களையும், விளக்கங்களையும் கேட்டு அறிந்து கொண்டேன்.

1. கோட்டாய் - உடல் நலம், 2. ஜூரோஜின் - அறிவு, 3. ஃபுக்ரோ குஜூ - மகிழ்ச்சி, செல்வம் மற்றும் சுபிட்சம், 4. பிஷா மோன்டன் - அமைதி, 5. பென் ஷெய்ட்டன் - அழகு, இசை, 6. டெய்க்கோ குட்டன் - வணிக வளர்ச்சி, 7. எபிஷன் - மீன் பிடித்தல். இந்த ஏழு உருவங்களும் அதனுடைய சிறப்புத் தன்மையும் பற்றி அறிந்து கொண்டேன். சிரிக்கும் புத்தரை வீட்டில் வைத்திருப்பது செல்வத்தை மட்டுமல்ல சுபிட்சத்தையும், நீண்ட ஆயுளையும் வழங்கும் என்ற நம்புகிறார்கள்.

பயணிப்போம்...

 

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.