வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா மற்றும் சீன பிரதமர்களின் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பரிவர்த்தனைத் திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சீனாவிற்கு இந்தியாவில் இருந்து 100 இளையோரைக் கொண்ட குழு ஆண்டு தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்தக் குழுவினர் சமீபத்தில் சீனாவிற்குச் சென்றுள்ளார்கள். இக்குழுவில் தமிழ்நாடு சார்பில், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் 2001 முதல் இயங்கிவரும் ஸ்ரீ சக்தி சமூகப் பொருளாதாரக் கல்வி நலன் அறக்கட்டளையின் இயக்குநரும், கவிஞருமான சக்திஜோதி அவர்கள் சீனாவிற்கு சென்று வந்துள்ளார். தனது சீன அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொள்ளவிருக்கிறார்.

தொடராக வரவிருக்கும் இந்தப் பகுதியின் அனைத்துக் கட்டுரைகளும் வாசகர்களுக்கு உறுதியாக பயனளிக்கக் கூடிய ஒன்று அமையும் என்பதில் எமக்கு ஐயமில்லை.

 

 
     
     
     
   
பயணக் கட்டுரை
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


சக்தி ஜோதி

கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா மற்றும் சீன பிரதமர்களின் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பரிவர்த்தனைத் திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சீனாவிற்கு இந்தியாவில் இருந்து 100 இளையோரைக் கொண்ட குழு ஆண்டு தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்தக் குழுவினர் சமீபத்தில் சீனாவிற்குச் சென்றுள்ளார்கள். இக்குழுவில் தமிழ்நாடு சார்பில், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் 2001 முதல் இயங்கிவரும் ஸ்ரீ சக்தி சமூகப் பொருளாதாரக் கல்வி நலன் அறக்கட்டளையின் இயக்குநரும், கவிஞருமான சக்திஜோதி அவர்கள் சீனாவிற்கு சென்று வந்துள்ளார். தனது சீன அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொள்ளவிருக்கிறார்.
தொடராக வரவிருக்கும் இந்தப் பகுதியின் அனைத்துக் கட்டுரைகளும் வாசகர்களுக்கு உறுதியாக பயனளிக்கக் கூடிய ஒன்று அமையும் என்பதில் எமக்கு ஐயமில்லை.

இனி அவரைப் பற்றியும் அவரது நிறுவனம் பற்றியும் அவரது பயணத்திற்கான காரணம் பற்றியும் ஒரு விரிவான அறிமுகம்.

சக்தி ஜோதி அவர்கள் "நிலம் புகும் சொற்கள்" என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளை:

ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளையானது 21-12-2001 அன்று திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு துவக்கப்பட்டது. தற்பொழுது 680 கிராமங்களை உள்ளடக்கி திண்டுக்கல், தேனி, ஈரோடு மற்றும் கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் செயல்படுகிறது.

பார்வையும் நோக்கமும்

“வளர்ச்சியை நோக்கி....” சமூகத்தின் அனைத்து நிலையினரையும் வளர்ச்சியின் அடுத்த நிலை நோக்கி வழிநடத்திச் செல்வதையே, சமூகத்தின் மீதான நீள்பார்வையாகக் கொண்டு செயல்படுகிறது. கிராமப்புற வளங்களை மேம்படுத்துவதும், கிராமப்புற மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மனிதர்களை சமுதாயத்தின் மைய நீரோட்டத்தில் இணைப்பதற்காக ஒட்டு மொத்த ஆதார சக்தியை திரட்டித் தருவதற்காகவும், பெண்கள், குழந்தைகள் முன்னேற்றத்திற்காகவும் சமூகத்தின் அனைத்து வகையான முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

சமூக மேம்பாட்டு செயல்பாடுகள்

மகளிர் மேம்பாட்டில்….
1. 2880 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் 680 கிராமங்களில் 34,800 உறுப்பினர்களுக்கு மேல் சக்தி அறக்கட்டளையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
2. பாரத ஸ்டேட் வங்கியுடன் 18 கிளைகளுடன் இணைந்து சுய உதவிக் குழவினருக்கு கடனுதவிப் பெற்றுத்தரப்படுகிறது. இது வரை 56 கோடி வரை கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
3. மேலும் ர்னுகுஊ வங்கியுடன் இணைந்து 3 கோடி வரை கடனுதவி பெற்றுத் தரப்பட்டுள்ளது.

சுற்றுச் சூழல் மேம்பாட்டில் ...
சுற்றுபுறச் சூழல் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக வருடம் 1000 மரக்கன்றுகளை நடுதல், இதுவரை 7,000 மரக்கன்றுகளை சக்தி அறக்கட்டளையின் சார்பாக நடப்பட்டுள்ளது.

நீர்வடிப் பகுதி மேம்பாட்டு திட்டம் :
தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (நபார்டு) உதவியுடன் கிராமப்புறங்களின் இயற்கை வளங்களை மேம்படுத்துவது, மண் அரிப்பைத் தடுப்பது மேலும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது மூலமாக கிராமங்களிலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்து கிராம மக்களின் வாழ்;க்கைத்தரம் மேம்பாடு அடைய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

பாரத ஸ்டேட் வங்கியின் வணிக வழிகாட்டியாக (Business Facilitator)

திண்டுக்கல், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளிலும் கடன் மற்றும் சேமிப்பு சம்பந்தமான வசதிகளை வாடிக்கையாளர்களுக்குப் பெற்றுத்தரும் வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறது.

மருத்துவ முகாம்கள் :

கண் பரிசோதனை முகாம்இ எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்இ தாய்இ சர்க்கரை நோய் விழிப்புணர்வு, சேய் நல பரிசோதனை முகாம் உட்பட 15 வகையான மருத்துவ முகாம் நடத்தப்பட்டு 28இ000 மக்கள் பயனடைந்துள்ளனர்.

சக்தி சுய தொழில் பயிற்சி நிலையம் :
பயிற்சிகளில் சில…….
1. நான்கு இடங்களில் தையல் பயிற்சிப்பள்ளி
2. சானிடரி நாப்கின் பயிற்சி
3. கண்ணாடி மற்றும் பேப்ரிக் பெயிண்டிங் பயிற்சி
4. ரெக்ஸின் மற்றும் ஜூட் பை தயாரிப்பு பயிற்சி
5. செருப்பு தயாரித்தல் பயிற்சி
6. கயிறு (ஊழசை Pசழனரஉவ) தயாரித்தல்
7. உணவு பொருட்கள் தயாரிப்பு பயிற்சி
8. இயற்கை விவசாயப் பயிற்சி

யுரேகா மாலை நேர பயிற்சிப் பள்ளி :
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்காக 10 மையங்களில் மாலை நேர சிறப்பு பயிற்சி நடத்தப்படுகிறது

ஹெலன் பகல் நேர குழந்தைகள் காப்பகம் :
கொடைக்கானல் மலைப்பகுதியில் வடகவுஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் மேல்பள்ளம் காலணியில் மலைவாழ் குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

சக்தி இறகு பந்துக் கழகம் :
கிராமப்புற இளைஞர்கள் மாணவர்களுக்காக உன் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.

பொது சுகாதாரம் :
அய்யம்பாளையத்தில் பெண்களுக்காக பொது கழிப்பறை கட்டித் தரப்பட்டுள்ளது.

சிறப்பு நிகழ்ச்சிகள் :
1. குழந்தைகள் தினம் மாரத்தான் போட்டி
2. பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சிகள்
3. கல்லூரி மாணவர்களுக்காக தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி
4. இளைஞர்களுக்காக புகை, மது பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
5. உலக மகளிர் தின கருத்தரங்கம்
6. உடல் ஊனமுற்றோருக்காக சுய முன்னேற்ற சிறப்பு பயிற்சிகள்.

விருதுகள் :
1. பாரத ஸ்டேட் வங்கி விருது – 2 முறை
2. மாவட்ட ஆட்சியர் பசுமை விருது - 2 முறை
3. லைவ் விருது - லயோலா கல்லூரி
4. மக்கள் தொலைக்காட்சி விருது
5. சி.பா.ஆதித்தனார் விருது
6. நேரு யுவகேந்திரா தேனி மாவட்டம் மற்றும் மாநில விருது
7. நபார்டு விருது.

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பயணக் கட்டுரை TS சக்தி ஜோதி தொடர்கள் வாயில்

சீனப் பயணக் கட்டுரைகள் - 12

சக்தி ஜோதி  

முதல் நூற்றாண்டில் சீனாவில் புத்த மதம் அறிமுகம் ஆகும் போதே சீன மக்கள் குவான் இன்; தெய்வத்தையும் வணங்க ஆரம்பித்து விட்டனர். தெய்வங்களைப் பற்றிய கதைகள் நிரம்பிய இந்தியாவைப் போலவே இந்தப் பெண் தெய்வம் பற்றிய புராணக் கதைகள் சீனா முழுவதும் நிரம்பி பின் உலகம் முழுவதும் பரவியும் இருக்கிறது.

அழகும், அமைதியும் நிறைந்த குவான் இன் தெய்வம் சில இடங்களில் இந்தியாவின் கல்விக்கடவுள் சரஸ்வதியைப் போல தாமரை மலரின் மேல் அமர்ந்திருக்கிறாள். சில இடங்களில் அழகிய வேலைப்பாடுடன் கூடிய மரப்பலகையின் மீது அமர்ந்திருக்கிறாள். சீனாவின் பாரம்பரிய உருவாக்கமான டிராகன் மேல் காட்சியளிக்கிறாள். இந்தப் பெண் தெய்வம் இந்திய பெண்களைப் போல கழுத்தில் நெக்லஸ் அணிந்தே காட்சியளிக்கிறாள்.

சில இடங்களில் நான்கு கரங்கள், ஆறு கரங்கள் மற்றும் எட்டு கரங்கள் கொண்டவளாகவும் காட்சியளிக்கிறாள். இன்னும் சில இடங்களில் ஆயிரம் மாயக்கரம் கொண்டனைக்கும் சூரியனைப் போல ஆயிரம் கரங்களோடு காட்சியளிக்கிறாள். இந்த கரங்களால் உலகத்து மக்கள் அனைவரையும் அரவணைத்துக் கொண்டிருக்கிறாள் என்று நம்புகிறார்கள்.

புத்த துறவியைப் போல அமைதியின் வடிவமாய் போர்த்திக் கொண்ட மேலாடையுடன் காட்சி தருகிறாள். சீனாவில் கிறிஸ்தவ மதம் தோன்றிய பின்பு உருவான குவான் இன், குழந்தை இயேசுவை தூக்கி கொண்டு இருக்கும் கன்னி மேரியைப் போல குழந்தையோடு கூட காட்சி அளிக்கிறாள். கடலோரப் பகுதியில் மீன் கூடையை கையில் வைத்திருக்கும் கன்னிப்பெண் தோற்றத்தில் இருக்கிறாள். இவள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களைக் காக்கும் கடலம்மாவாக இருக்கிறாள். தவத்தில் நிற்கும் காட்சி, இரண்டு குழந்தைகளோடு நிற்கும் காட்சி, பணிப் பெண் தோற்றத்தில் ஒரு காட்சி என குவான் இன் தெய்வத்தைப் பற்றிய கதைகளும், காட்சிகளும் ஏராளம். ஆனால் எந்த தோற்றத்தில் இந்தப் பெண் தெய்வம் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் அதன் கண்கள் தாழ நோக்கி அமைந்திருக்கும். ஏனென்றால் இந்த உலகம் முழுவதையும் தன் கண்களால் கண்டு காப்பதாக நம்புகிறார்கள். குவான் இன் பொதுவாக பெண் என்று கருதப்பட்டாலும் சில இடங்களில் சிவபெருமானைப் போல அர்த்தநாரீஸ்வரர் எனவும் கருதப்படுகிறது.

கோவிலின் நுழைவாயிலில் இருந்த மிகப் பெரிய பித்தளை மணியைப் பார்த்தவுடன் அதன் வயதை தெரிந்து கொள்ளும் ஆர்வமும், புத்தர் கோவிலைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வமும் ஏற்பட்டது. பொதுவாகவே கோவில்களுக்கு சென்றால் கோயிலின் வரலாறு பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு இயல்பாகவே உண்டு. குறிப்பாக மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு கோவில்களைப் பற்றியும் அங்கு உள்ள காவல் தெய்வங்களைப் பற்றியும் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். எனவே மயோவிடம் கோவில் பற்றிய வரலாற்றைக் கூறும்படி கேட்டேன்.

தெற்கு கியூஷோ பகுதியில் அமைந்த புகழ் பெற்ற கியான் லிங் மலைத் தொடர் குயான் நகரத்திலிருந்து 1.30 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. இந்த மலையடிவாரத்தின் நகரத்திற்குள் அமைந்த உலகத்திலேயே மிகப்பெரிய கியான் லிங் பூங்கா 1,100 ஏக்கரில் 1957ல் உருவாக்கப்பட்டது. இந்த பூங்காவிற்குள் தான் நாங்கள் நின்று கொண்டிருந்த புத்தர் கோவில் ஹாங் ஃபூ என்று அழைக்கப்படுகிறது. மிகச் சிறிய அளவில் இருந்த இந்த கோவில் 1667ல் மிங் வம்சத்து அரசர்கள் உதவியுடன் விரிவாக்கம் செய்யப்பட்டது. பின்னால் வந்த பல்வேறு அரசர்களும் இந்தக் கோவில் உருவாக்கத்தில் கவனம் செலுத்தியதால் இன்று உலக பிரசித்தி பெற்ற கோவிலாக உள்ளது. கோவிலின் நுழைவாயிலில் உள்ள பித்தளை மணி 600 ஆண்டுகள் பழமையானதும், கிட்டத்தட்ட 3300 பவுண்டு எடையுடனும் அமைக்கப்பட்டுள்ளது.

கோவிலின் உள்ளே மூன்று விதமான வழிபாட்டு அறைகள் உள்ளது. ஹெவன்லி கிங் எனப்படும் அறையில் மைத்ரேயா புத்தர் சிலையும் சுவர்களில் மிகப்பெரிய ஓவியங்களும் நம் தமிழகத்தில் காணப்படுகிற பெரிய காவல் தெய்வங்களைப் போன்ற தோற்றமுடைய தெய்வங்களும் (கருப்பசாமி, முனியசாமி) அமைந்திருக்கிறது. போதி சத்வா அறையில் ஸ்கந்த போதி சத்வா மற்றும் 32 கரங்களோடு கூடிய அவலோக்கி தேஸ்வர சிலையும் அமைந்திருக்கிறது. மகா வீர அறையில் மின்னுகின்ற சாக்கிய முனி மற்றும் ஜூகான் ஜி ராக்கன் எனப்படும் 18 ஞான முக்தி பெற்றவர்களுடைய சிலையும் அமைந்திருக்கிறது. பர்மாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 5 அடி உயரமுள்ள 900 கிலோ கிராம் எடையுள்ள பச்சை மரகதக் கல்லினால் செய்யப்பட்ட புத்தர் சிலையும் இருக்கிறது என்று கோவிலின் ஒவ்வொரு பகுதியையும் சுற்றிக் காட்டிக் கொண்டே விளக்கினார்.

பின்பு இந்த ஹாங் ஃபூ கோவிலின் மலைச் சுற்றுப் பாதையில் நடந்து பூங்காவிற்கு வந்தோம். வரும் வழியெல்லாம் ஐஸ்கிரீம், கூல்டிரிங்ஸ், சிப்ஸ் வகை என சுற்றுலாத் தலத்திற்கு ஏற்ற உணவுப் பண்டங்கள் விற்கப்பட்டுக் கொண்டிருந்தது. நமது வீடுகளில் பற்ற வைக்கக்கூடிய சிறிய பத்தியிலிருந்து அரை அடி சுற்றளவில் ஆள் உயரத்தையும் தாண்டிய பத்திகளையும் பாதையோரங்களில் விற்பதைக் கண்டேன். நானும், சுனில் குமாரும் பத்திக் கடைக்குச் சென்று சிறிது நேரம் பத்திகளை வியாபாரம் செய்தோம். கோவிலுக்கு வணங்க வந்த சீனர்கள் பலர் எங்களை வியப்பாகவும், ஆர்வமாகவும் பார்த்தார்கள். சில பெண்கள் தயங்கிக் கொண்டு அருகில் வந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார்கள். சில பெண்கள் மயோவிடம் என்னைப் பற்றி விசாரித்தார்கள். என்னுடைய உடை பற்றி விசாரித்ததாக மயோ என்னிடம் கூறினார். சேலை கட்டும் விதம் பற்றியும், அதனை கற்றுக் கொடுக்க முடியுமா என்றும் மயோ என்னிடம் கேட்டார். அறைக்கு சென்ற பிறகு சொல்லித் தருவதாக நான் கூறினேன்.

குவான் லிங் பூங்கா முழுவதும் பசுமை நிரம்பி ததும்புகிறது. 1500 வகையான மரங்களும், மலர்களும், 1000 வகையான மூலிகைத் தாவரங்களும் இங்கு நிரம்பியிருக்கிறது. பூங்காவிற்கு வருகிற பார்வையாளர்களை கவரும் விதமாக மரத்தினால் செய்யப்பட்ட மயில் சிற்பம் மற்றும் 2008ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் சிற்பங்களும் வடிவமைக்கப்பட்டிருந்தது. பூங்காவின் உள்ளே 90 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குவான் லிங் ஏரி இயற்கையினால் உருவாகாமல் முழுக்க முழுக்க மனித உழைப்பால் 1959ல் கட்டமைக்கப்பட்டது. 1999ல் இதன் சுற்றுச் சுவர் வெள்ளை மார்பிள் கற்களினால் கட்டப்பட்டு சீரமைக்கப்பட்டது. கண்ணாடியைப் போன்ற தெளிந்த நீர் நிரம்பிய குவான் லிங் ஏரி அதன் கரைகளில் மரங்களும், செடிகளும் மட்டுமல்லாமல், ஜப்பானுக்கு எதிரான கியூஷோ விடுதலைப் போராட்டத்தில் உயிர் தியாகம் செய்தவர்களின் நினைவுத் தூண்களும் ஏரியின் மேற்குப் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.

மலைத் தொடரின் அடிவாரத்தில் பூங்கா அமைந்திருப்பதால் குவான் லிங் பார்க் 98 சதவீம் வனப்பகுதி நிறைந்தது. இங்கு மக்காக் எனப்படும் சிங்க வால் குரங்குகளுக்காக தனி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. குவான் லிங் ஏரியிலிருந்து தென்மேற்கில் 600 மீட்டர் தூரத்தில் ஷாங்கியோ என்ற இடத்pல் பாறைகளுக்கு மத்தியில் உற்பத்தியாகும் புனித நீர் ஊற்று உள்ளது. இடை விடாத மழைப்பொழிவைப் போல வற்றாத ஜீவ ஊற்று அது. சீனர்கள் புனித நீராக அதனை வணங்குகின்றனர்.

குவான் லிங் பூங்காவில் உள்ள கிளைன் கேவ் என்ற மலைக்குகை, ஜப்பானுக்கு எதிரான போர்க் கால வரலாற்று நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்படுகிறது. இந்தக் குகையில் விடுதலைப் போராட்ட போர்ப்படைத்தளபதிகள் ஷாங் ஷீயூ லியாங், யாங் ஹீயூஷெங் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருந்தால் அவர்களின் நினைவுச் சின்னமாக கருதப்படுகிறது. மலை உச்சியில் அமர்ந்து மொத்த நகரத்தையும் பார்க்கும் வியூ பாய்ண்ட்டும் உள்ளது..

பயணிப்போம்...

 

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.