வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா மற்றும் சீன பிரதமர்களின் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பரிவர்த்தனைத் திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சீனாவிற்கு இந்தியாவில் இருந்து 100 இளையோரைக் கொண்ட குழு ஆண்டு தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்தக் குழுவினர் சமீபத்தில் சீனாவிற்குச் சென்றுள்ளார்கள். இக்குழுவில் தமிழ்நாடு சார்பில், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் 2001 முதல் இயங்கிவரும் ஸ்ரீ சக்தி சமூகப் பொருளாதாரக் கல்வி நலன் அறக்கட்டளையின் இயக்குநரும், கவிஞருமான சக்திஜோதி அவர்கள் சீனாவிற்கு சென்று வந்துள்ளார். தனது சீன அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொள்ளவிருக்கிறார்.

தொடராக வரவிருக்கும் இந்தப் பகுதியின் அனைத்துக் கட்டுரைகளும் வாசகர்களுக்கு உறுதியாக பயனளிக்கக் கூடிய ஒன்று அமையும் என்பதில் எமக்கு ஐயமில்லை.

 

 
     
     
     
   
பயணக் கட்டுரை
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


சக்தி ஜோதி

கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா மற்றும் சீன பிரதமர்களின் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பரிவர்த்தனைத் திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சீனாவிற்கு இந்தியாவில் இருந்து 100 இளையோரைக் கொண்ட குழு ஆண்டு தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்தக் குழுவினர் சமீபத்தில் சீனாவிற்குச் சென்றுள்ளார்கள். இக்குழுவில் தமிழ்நாடு சார்பில், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் 2001 முதல் இயங்கிவரும் ஸ்ரீ சக்தி சமூகப் பொருளாதாரக் கல்வி நலன் அறக்கட்டளையின் இயக்குநரும், கவிஞருமான சக்திஜோதி அவர்கள் சீனாவிற்கு சென்று வந்துள்ளார். தனது சீன அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொள்ளவிருக்கிறார்.
தொடராக வரவிருக்கும் இந்தப் பகுதியின் அனைத்துக் கட்டுரைகளும் வாசகர்களுக்கு உறுதியாக பயனளிக்கக் கூடிய ஒன்று அமையும் என்பதில் எமக்கு ஐயமில்லை.

இனி அவரைப் பற்றியும் அவரது நிறுவனம் பற்றியும் அவரது பயணத்திற்கான காரணம் பற்றியும் ஒரு விரிவான அறிமுகம்.

சக்தி ஜோதி அவர்கள் "நிலம் புகும் சொற்கள்" என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளை:

ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளையானது 21-12-2001 அன்று திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு துவக்கப்பட்டது. தற்பொழுது 680 கிராமங்களை உள்ளடக்கி திண்டுக்கல், தேனி, ஈரோடு மற்றும் கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் செயல்படுகிறது.

பார்வையும் நோக்கமும்

“வளர்ச்சியை நோக்கி....” சமூகத்தின் அனைத்து நிலையினரையும் வளர்ச்சியின் அடுத்த நிலை நோக்கி வழிநடத்திச் செல்வதையே, சமூகத்தின் மீதான நீள்பார்வையாகக் கொண்டு செயல்படுகிறது. கிராமப்புற வளங்களை மேம்படுத்துவதும், கிராமப்புற மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மனிதர்களை சமுதாயத்தின் மைய நீரோட்டத்தில் இணைப்பதற்காக ஒட்டு மொத்த ஆதார சக்தியை திரட்டித் தருவதற்காகவும், பெண்கள், குழந்தைகள் முன்னேற்றத்திற்காகவும் சமூகத்தின் அனைத்து வகையான முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

சமூக மேம்பாட்டு செயல்பாடுகள்

மகளிர் மேம்பாட்டில்….
1. 2880 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் 680 கிராமங்களில் 34,800 உறுப்பினர்களுக்கு மேல் சக்தி அறக்கட்டளையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
2. பாரத ஸ்டேட் வங்கியுடன் 18 கிளைகளுடன் இணைந்து சுய உதவிக் குழவினருக்கு கடனுதவிப் பெற்றுத்தரப்படுகிறது. இது வரை 56 கோடி வரை கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
3. மேலும் ர்னுகுஊ வங்கியுடன் இணைந்து 3 கோடி வரை கடனுதவி பெற்றுத் தரப்பட்டுள்ளது.

சுற்றுச் சூழல் மேம்பாட்டில் ...
சுற்றுபுறச் சூழல் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக வருடம் 1000 மரக்கன்றுகளை நடுதல், இதுவரை 7,000 மரக்கன்றுகளை சக்தி அறக்கட்டளையின் சார்பாக நடப்பட்டுள்ளது.

நீர்வடிப் பகுதி மேம்பாட்டு திட்டம் :
தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (நபார்டு) உதவியுடன் கிராமப்புறங்களின் இயற்கை வளங்களை மேம்படுத்துவது, மண் அரிப்பைத் தடுப்பது மேலும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது மூலமாக கிராமங்களிலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்து கிராம மக்களின் வாழ்;க்கைத்தரம் மேம்பாடு அடைய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

பாரத ஸ்டேட் வங்கியின் வணிக வழிகாட்டியாக (Business Facilitator)

திண்டுக்கல், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளிலும் கடன் மற்றும் சேமிப்பு சம்பந்தமான வசதிகளை வாடிக்கையாளர்களுக்குப் பெற்றுத்தரும் வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறது.

மருத்துவ முகாம்கள் :

கண் பரிசோதனை முகாம்இ எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்இ தாய்இ சர்க்கரை நோய் விழிப்புணர்வு, சேய் நல பரிசோதனை முகாம் உட்பட 15 வகையான மருத்துவ முகாம் நடத்தப்பட்டு 28இ000 மக்கள் பயனடைந்துள்ளனர்.

சக்தி சுய தொழில் பயிற்சி நிலையம் :
பயிற்சிகளில் சில…….
1. நான்கு இடங்களில் தையல் பயிற்சிப்பள்ளி
2. சானிடரி நாப்கின் பயிற்சி
3. கண்ணாடி மற்றும் பேப்ரிக் பெயிண்டிங் பயிற்சி
4. ரெக்ஸின் மற்றும் ஜூட் பை தயாரிப்பு பயிற்சி
5. செருப்பு தயாரித்தல் பயிற்சி
6. கயிறு (ஊழசை Pசழனரஉவ) தயாரித்தல்
7. உணவு பொருட்கள் தயாரிப்பு பயிற்சி
8. இயற்கை விவசாயப் பயிற்சி

யுரேகா மாலை நேர பயிற்சிப் பள்ளி :
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்காக 10 மையங்களில் மாலை நேர சிறப்பு பயிற்சி நடத்தப்படுகிறது

ஹெலன் பகல் நேர குழந்தைகள் காப்பகம் :
கொடைக்கானல் மலைப்பகுதியில் வடகவுஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் மேல்பள்ளம் காலணியில் மலைவாழ் குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

சக்தி இறகு பந்துக் கழகம் :
கிராமப்புற இளைஞர்கள் மாணவர்களுக்காக உன் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.

பொது சுகாதாரம் :
அய்யம்பாளையத்தில் பெண்களுக்காக பொது கழிப்பறை கட்டித் தரப்பட்டுள்ளது.

சிறப்பு நிகழ்ச்சிகள் :
1. குழந்தைகள் தினம் மாரத்தான் போட்டி
2. பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சிகள்
3. கல்லூரி மாணவர்களுக்காக தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி
4. இளைஞர்களுக்காக புகை, மது பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
5. உலக மகளிர் தின கருத்தரங்கம்
6. உடல் ஊனமுற்றோருக்காக சுய முன்னேற்ற சிறப்பு பயிற்சிகள்.

விருதுகள் :
1. பாரத ஸ்டேட் வங்கி விருது – 2 முறை
2. மாவட்ட ஆட்சியர் பசுமை விருது - 2 முறை
3. லைவ் விருது - லயோலா கல்லூரி
4. மக்கள் தொலைக்காட்சி விருது
5. சி.பா.ஆதித்தனார் விருது
6. நேரு யுவகேந்திரா தேனி மாவட்டம் மற்றும் மாநில விருது
7. நபார்டு விருது.

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பயணக் கட்டுரை TS சக்தி ஜோதி தொடர்கள் வாயில்

சீனப் பயணக் கட்டுரைகள் - 10

சக்தி ஜோதி  

எங்கள் குழுவிற்கு ஒருங்கிணைப்பாளராக வந்திருந்த நேரு யுவகேந்திராவின் அதிகாரி நேகி ஜெய்பால் என்னிடம் கியூசோ பல்கலைக்கழகத்தை பார்வையிட்டது பற்றி விசாரித்தார். நான் அவரிடம், உறவுகள் தான் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது. கியூசோ பல்கலைக்கழக மாணவர்களின் நட்பு என்னுடைய வாழ்க்கைப் பாதையில் புதிதாக மலர்ந்த உறவுகள் என்றும் கலாச்சார பரிவர்த்தனையின் நோக்கத்தை முழுமையடைய செய்த நிகழ்ச்சி இது தான் என்றும் கூறினேன்.

சின்ன சின்ன கிராமங்களிலிருந்து வந்த மாணவர்களையும், நகர்புற மாணவர்களையும் ஒருங்கிணைத்ததோடல்லாமல் இந்தியா முழுமைக்குமான ஒரு நட்புறவை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்த ஏதுவாக அமைந்த இந்த சீனப் பயணம் கியூசோ பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்களுடனான சந்திப்பில் இளைஞர்களின் உறவை உலகளாவியதாக மாற்றியுள்ளது என்றும் கூறினேன். என்னுடைய பதிலில் நேகி ஜெய்பால் மிகவும் மகிழ்ந்தார். இவரைப் பற்றி சொல்லவேண்டுமென்றால் அனைவருடனும் நட்புடனும் ஒரு தந்தையின் பரிவுடனும் பழகுவார். இவர் மிகமுக்கியமான அரசு அதிகாரி என்கிற பந்தாவெல்லாம் இல்லாமல் இயல்பாக பழகக்கூடிய மனிதர்.

மேலும் அவர் என்னிடம், அடுத்ததாக நமது பயணத்திட்டத்தில் அமைந்திருக்ககூடிய ஹோம் ஸ்டே என்ற நிகழ்ச்சி நிச்சயமாக உங்களை இன்னும் கவரும் என்று கூறினார். அந்த நிகழ்ச்சியை பற்றி விளக்கும்படி கேட்டேன். சீன அரசாங்கம், கியூசோவை சேர்ந்த சீன நாளிதழ்களில் மூன்று மாதங்களுக்கு முன்பாகவே இந்திய இளைஞர்களின் கலாச்சார பரிவர்த்தனை பயணத்திட்டம் பற்றியும், இந்திய இளைஞர்களில் இரண்டு பேரை குடும்ப உறுப்பினராக ஏற்றுக் கொண்டு விருந்தளிக்க விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ளும்படி விளம்பரம் கொடுத்திருந்தார்கள்.

நூற்றுக்கணக்கான குடும்பங்கள் விண்ணப்பித்ததில் ஆங்கிலம் தெரிந்த ஐம்பது விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் ஒரு குடும்பத்திற்கு இரண்டு இந்திய இளைஞர்கள் வீதம் அனுப்பி வைக்கப்படுவார்கள். அவர்கள் அந்த குடும்பத்து உறுப்பினர்கள் போல அவர்களின் வீடுகளுக்குச் சென்று சீனர்களின் கலாச்சாரம் பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் விதமாகவும், இந்த நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது என்றும் நேகி ஜெய்பால் கூறினார்.

மிஸ்டர் லூ ஹோவின் குடும்பம் என்னையும் ஹிமாச்சலைச் சேர்ந்த சுனில்குமாரையும் அழைத்துச் செல்வார்கள் என அறிவித்த போது நான் எழுந்து மேடைக்குச் சென்றேன். குடும்பம், குடும்பமாக வந்திருந்தவர்கள் மத்தியில் எது என்னுடைய குடும்பம் என்ற ஆர்வத்தில் இருந்தபோது ஒரு பிஞ்சு கரம் என்னைப் பற்றியது. ஜெர்ரி என்ற பன்னிரெண்டு வயது சிறுவன் என்னைப் பற்றியிருந்தான். அவன் கண்களில் இருந்த அன்பும், ஆர்வமும் என்னை நெகிழ்த்தியது. அவனது கரம் இன்னுமொரு உறவை அங்கே எனக்கு உருவாக்கித் தந்தது என்று சொல்ல வேண்டும்.

லூ ஹோ சீனாவில் கட்டிடக் கலை பொறியாளர். இவருக்கு ஒரு வார்த்தையும் ஆங்கிலத்தில் பேச தெரியாது. ஆனால் ஜெர்ரியின் அம்மா ஷங் யாங் ஆங்கில பள்ளி நிர்வாகி. சீனாவில் இப்பொழுது ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிக்கு மிகுந்த வரவேற்பு இருப்பதாகவும் அதற்கான சிறப்பு பயிற்சிப் பள்ளிகள் தனியாக நடத்துவதாகவும் தெரிவித்தனர். முக்கியமாக பல்கலைக்கழக மாணவர்கள் கூட சீன மொழியிலேயே கல்வி கற்பதால் வெளிநாடுகளுக்கு செல்லும்போது தொடர்பு கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது என்பதால் இந்த பயிற்சிப் பள்ளிகள் பரவலாக நடத்தப்படுகிறது. ஆங்கில மொழியின் மீதான ஈடுபாடு இப்பொழுது சீனர்கள் மத்தியில் பரவலாகி வருகிறது. அதன் விளைவு தான் கல்லூரி மாணவர்கள் அனைவருமே சீனப் பெயரோடு தங்களுக்கு ஆங்கிலத்தில் ஒரு பெயரையும் வைத்துக் கொள்கிறார்கள்.

ஜெர்ரியின் சகோதரி மயோ மற்றும் அவர்களது உறவினர் மகன் மேக்ஸ் உடன் எங்களை அழைக்க வந்திருந்தனர். மயோ பள்ளிப்படிப்பை முடித்து விட்டு கல்லூhயிpல் சேருவதற்காக காத்திருந்தார். பள்ளிப் பருவம் வரை கல்விக்காக அதிகம் செலவு செய்ய தேவையில்லை. ஆனால் பல்கலைக்கழக படிப்பிற்காக அதிகமாக கட்டணம் செலுத்த கூடியதாக அமைந்திருக்கிறது என்று மயோ கூறினார். ஹிமாச்சலில் பள்ளி ஆசிரியராகவும், சமூக சேவகராகவும் பணியாற்றும் சுனில்குமார் டெல்லியிலேயே எனக்கு நன்கு அறிமுகமாகி இருந்தார். எனவே நாங்கள் இருவரும் சேர்ந்து செல்வதில் இயல்பாக செயல்பட முடிந்தது. நானும், சுனில்குமாரும் இந்தியாவில் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்று மையோ நினைத்தாராம். ஆனால் இந்தியா முழுமைக்குமான மாநிலங்களின் வேறுபாடு, மொழிகளின் வேறுபாடு, கலாச்சாரங்களின் வேறுபாடு, நிலங்களின் தூரம் பற்றியும் சுனில்குமார் எடுத்துச் சொன்னார்.

“முப்பது கோடி முகமுடை யாளுயிர்
மொய்ம்புற வொன்றுடையாள் - இவள்
செப்புமொழிபதி னெட்டுடையாள், எனிற்
சிந்தனை யொன்றுடையாள்.”

என்ற பாரதியின் வரிகளை அந்த இடத்தில் என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. பாரதியைப் பற்றியும் தமிழ் மொழியில் அவர் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் பற்றியும் பேசாமல் இருக்க முடியவில்லை. இன்று தமிழில் பேசுகிற எழுதுகிற யாரும் பாரதியின் கைப்பற்றாமல் சென்று விட முடியாது என்று கூறினேன். இந்தியா முழுவதுமான எத்தனையோ வேறுபாடுகளுக்கு மத்தியில் உறவுப் பாலமாக அமைந்திருக்கும் பொதுவான பல விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டே ஜெர்ரியின் வீட்டிற்குச் சென்றோம்.

பனிபடர்ந்த ஹிமாச்சல பிரதேசமும், நீண்ட கடற்கரையை தன்னகத்தே கொண்ட தமிழகம் பற்றியும் பேசுவதற்கு ஏராளமான விசயங்கள் எங்களிடம் இருந்தது. கேட்டுத் தெரிந்து கொள்ள அவர்களுக்கு ஆர்வமும் இருந்தது. பன்னிரெண்டு வயது நிரம்பிய ஜெர்ரி இந்திய மதங்கள் பற்றி என்னிடம் கேட்டது எனக்கு சற்று வியப்பளித்தது. இந்து மதம் பற்றியும் அதனுடைய தோற்றம் வளர்ச்சி என பல்வேறு விசயங்களைப் பற்றிப் பேசினேன். இருப்பினும் குறிப்பாக மதங்கள் பற்றி ஜெர்ரி என்னிடம் கேட்டது பற்றி அவனிடம் விசாரித்தேன் அதற்கு அவன் புத்த மதம் இந்தியாவிலிருந்து தான் சீனாவிற்கு வந்தது, அதனை மிகத் தீவிரமாக சீனர்கள் நம்புகிறார்கள். ஆனால் ஏன் இந்தியாவில் புத்த மதத்தை பின்பற்றுவதில்லை என்று கேட்டது என்னை நிறைய சிந்திக்க வைத்தது.

பயணிப்போம்...

 

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.