வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


திரைத் துறையில் ஓய்வின்றி உழைத்தாலும் தனக்கு இலக்கியத்தின் மீது உள்ள காதலால் தொடர்ந்து எழுதி வரும் திரு. ரவிவர்மன் ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கு உரிய அத்துனை அடையாளங்களையும் கொண்டுள்ளார். 

திரைத்துறையில் பணிபுரியும் பலருக்கு இலக்கியத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், தங்களை இலக்கியத்தில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்வதில்லை. ஆனால் திரு. ரவிவர்மன் அவர்கள் பரவலாக அறியப்பட்ட ஓர் எழுத்தாளர். இலக்கியம் மீது தீராக் காதல் கொண்டவர். அவரது எழுத்தின் நடை, சொல்லாடல் போன்றவை தனித்தன்மை பெற்று விளங்குபவை.

"யாவரும் கேளிர்" தொடர்கதை (நாவல்) கிராமத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்படும் தொடர். அவரது சொல்லாடல், காட்சிப்படுத்துதல் போன்றவை ஒரு கிராமத்திற்கே சென்றது போன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். இன்றைய எந்திர உலகில் நாம் இழந்த நமது கிராமத்து உணர்வுகளை, நிகழ்ச்சிகளை நம் கண்முன்னே அழைத்து வரப்போகிறது இந்தத் தொடர். 

 

 
     
     
     
   
யாவரும் கேளிர்
1
 
யாவரும் கேளிர்
ஆசிரியர் பற்றி
------------------------

 
 

 
 



ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்

கிராமத்து மைந்தனாக இருந்தாலும் திரைத்துறை மீது கொண்ட காதலால் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ரவிவர்மன் அவர்கள், தமிழ், தெலுகு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும், ஹிந்தி உள்ளிட்ட வடமொழிப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

"ஆட்டோகிராப்", "அந்நியன்", "வேட்டையாடு விளையாடு", "தசாவதாரம்", "வில்லு", போன்ற தமிழ் படங்களிலும், "கிளிச்சுண்டன் மாம்பலம்" (கிளிசுண்டன் மாம்பழம்), போன்ற மலையாளப் படங்களிலும், "ஜெய்" (Jai), போன்ற தெலுகுப் படங்களிலும் "பிர் மிலேஞ்சே" (Phir Milenge), ராம்ஜி லண்டன் வாளா" (Ramji London Vala) போன்ற ஹிந்திப் படங்களிலும், "பைவ் பைவ் போர்" (Five Five Four) போன்ற இந்திய ஆங்கிலப்படங்களிலும்

ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.இது தவிர M.I.A Video 2007 (English) ஆல்பத்திலும், சைல்ட் என்விரான்மென்ட் (Child Environment) என்கிற ஆங்கில ஆவணப்படத்திலும், ஐநூறுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

இதுவரை அவர் பெற்றுள்ள விருதுகள்:

2000 ஆம் ஆண்டு சாந்தம் என்கிற மலையாளப் படத்துக்காக 23 EME 3rd continents International Award மற்றும் அதே திரைப்படத்திற்காக கேரளா சாலச்சித்ரா விருதையும் (2000) பெற்றுள்ளார். SICA வழங்கும் சாதனையாளர் விருதை 2001 வருடமும், அந்நியன் திரைப்படத்திற்காக 2005 ஆம் ஆண்டு பிலிம் பேர் (Film Fare) விருதையும், இந்தியா டுடேவின் Award for face of the feature in cinema (2005) விருதையும், வேட்டையாடு விளையாடு" படத்திற்காக தமிழக அரசின் விருதையும் (2005), இதே படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2005) விருது மற்றும் IIFA (2006) விருதையும், தசாவதாரம் படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2009) விருதையும் பெற்றுள்ளார்.

 

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS யாவரும் கேளிர் TS ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் யாவரும் கேளிர் வாயில்

யாவரும் கேளிர் - 24

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்  

காருக்குள் செல்லா கொலை நடுக்கத்தில் அமர்ந்து இருக்க, கார் ஒட்டுனர் ரெட் இண்டியன் காரைவிட்டு இறங்கி, நின்ற காரின் முன்பு எதிரில் வரும் கார் வெளிச்சத்தில் அவன் நடக்க, செல்லப்பா மேலும் உறைந்து போனான்.

அவன் கண்ட காட்சியில் அந்த ரெட் இண்டியன் கொஞ்சம் நொண்டி நொண்டி நடந்தான். அவனை உற்று நோக்கினான். அவனோ செயற்கை காலுடன் நடந்து கொண்டு இருக்கிறான். அவ்வேலையில் 160 கிலோமீட்டர் வேகத்தில் ஒடிக்கொண்டு இருக்கும் கார்களை நாம் கையில் பணம் இருந்தும் பெரும் ஒசிப்பயணம் செய்ய சாலையில் செல்லும் கார்களை வழி மறிப்போமே, அதே போல் அவனும் ஒவ்வொரு காராக வழி மறிக்கின்றான்.

அவ்வேளையில் செல்லப்பா காரைவிட்டு இறங்கிய சத்தம் கேட்டு திரும்பிய அவன் அவனிடம் ஒடி வந்து காருக்குள் அமரும்படி கட்டளையிட்டான். செல்லப்பாவும் பயந்து கொண்டே காரில் அமர்ந்து கொண்டான். தான் என்ன மொழியில் பேசுகிறோம் என்று அறியாமலே ஏன் காரு நிக்குது என்றான். இவன் என்ன கேள்வி கேட்டான் என்பதை அறியாத அவன் no fuel என்றான். கிளிஞ்சதுபோ பெட்ரோல் இல்லையா என்றான்.காரை யாரும் நிறுத்தாத காரணத்தால் அங்கு இருந்து சற்று தொலைவில் இருக்கும் செக் போஸ்ட்டை நோக்கி நடக்கிறான் ஒட்டுனர்.

அதை கண்ட செல்லப்பா இதுதான் சமயம் என்று காரைவிட்டு இறங்கி கையில் சூட்கேசுடன் 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் கார்களின் இடைவெளியில் ரோட்டை கடந்து ஒரு ஆள் மட்டுமே நடந்து செல்லும் நடைபாதைக்கு வந்த அவன் எங்கே செல்ல வேண்டும் என்று தவிக்கையில் சாலையில் ஒரு நிமிடம் அவன் வந்த வாகனம் நிற்பதை தவிர வேறு எந்த வாகனமும் இல்லாமல் சாலை மட்டும் அமைதியாக காட்சி தந்தன. அதை கண்டு மேலும் பயந்து கொண்டு இருக்கும் வேளையில் கனநேரத்தில் அவன் நின்ற நாலா பக்கத்திலிருந்து சயரின் சத்தத்துடன் போலீஸ் கார்களில் வந்து இறங்கிய போலீஸ்காரர்கள் இவனைப் பார்த்து துப்பாக்கியை அவன் மீது குறிபார்த்துக் கொண்டே ஹான்ஸ் அப், ஹான்ஸ் அப் என்று சொல்லிக்கொண்டே அவன் அருகில் வர அதைக் கண்ட செல்லப்பா தன் கையில் உள்ள சூட்கேசை கீழே போட்டுவிட்டு தனக்கு ஏதோ விபரீதம் நடக்க போகிறது என்று பயந்து கொண்டே கைகளை மேலே தூக்கினான்.

அதற்குள் அவன் அருகே போலீஸ் வந்து அவன் இரண்டு கைகளிலும் விலங்கிட்டு போலீஸ் வேனுக்குள் தள்ளினர். கண் இமைக்கும் நேரத்தில் பழையபடி அங்கே கார் அதே வேகத்தில் சென்று கொண்டு இருந்தன. செக் போஸ்ட் அருகே இருந்த காவல் நிலையத்தில் உள்ள அறையின் உள்ளே செல்லப்பாவை நிறுத்தி அவனை சுற்றி போலீஸ் நின்று கொண்டு அவனையும் அவன் சூட்கேசையும் சோதனை செய்துவிட்டு அவர்களுக்கு ரோட்டில் ஒருவன் பாமை சூட்கேசில் வைத்துக்கொண்டு இருக்கிறான் என்ற தகவல் பொய்யாகிப் போனது என அறிந்த போலீஸ் அவனை விசாரிக்கும் போது அவன் எதற்காக அங்கே நிற்கிறான் என்பதை அறிந்த, போலிஸ்காரர்கள் இனிமேல் இந்த நாட்டில் இதுபோல் நீங்கள் நடு ரோட்டில் இறங்கி நடக்க கூடாது என்று அறிவுருத்தி ஐந்து நிமிடம் அவனை அமரச்செய்து அவனுக்கு காபி குடிக்க கொடுத்து அவன் குடித்து முடிப்பதற்குள் அவனை ஏற்றிக்கொண்டு வந்த ஒட்டுனரும் அங்கே வந்துவிட்டார்.

அவனும் தான் பெட்ரோல் இல்லாமல் வண்டி ஒடிவந்து நின்ற விஷயத்தை கூறி அவனும் மன்னிப்பு கடிதம் வழங்கிவிட்டு அங்கே வர செல்லப்பாவிடம் போலிஸ் யூ கோ திஸ் கார் ஒன்லி என்று அவன் தான் இறங்கிய அதே காரில் அமர்ந்து செல்ல அவர்கள் பின்னால் ஒரு போலீஸ் கார் பின் தொடர அவன் ச்சே... இதே காருல ஏத்திவிட்டுட்டாங்களே என்று ட்ரைவர் ரியர் மிரர் வியூவை பார்க்க ட்ரைவரோ அதே கருத்த முகம் குருட்டு கண்களுடன் அவனை பார்க்க இப்போது அவனுக்கு அவனை பார்த்து வருத்தம் வந்தது. ஒரு கண் குருடாகியும் ஒரு கால் ஊனமாகியும் உழைத்துக்கொண்டு இருக்கிறார்களே என்று இருந்தும் சற்று பயத்துடன் அவனுக்கு பின்னே திரும்பி பார்த்தான் போலிஸ் கார் வந்து கொண்டு இருந்தது......


தொடரும்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</