வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


திரைத் துறையில் ஓய்வின்றி உழைத்தாலும் தனக்கு இலக்கியத்தின் மீது உள்ள காதலால் தொடர்ந்து எழுதி வரும் திரு. ரவிவர்மன் ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கு உரிய அத்துனை அடையாளங்களையும் கொண்டுள்ளார். 

திரைத்துறையில் பணிபுரியும் பலருக்கு இலக்கியத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், தங்களை இலக்கியத்தில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்வதில்லை. ஆனால் திரு. ரவிவர்மன் அவர்கள் பரவலாக அறியப்பட்ட ஓர் எழுத்தாளர். இலக்கியம் மீது தீராக் காதல் கொண்டவர். அவரது எழுத்தின் நடை, சொல்லாடல் போன்றவை தனித்தன்மை பெற்று விளங்குபவை.

"யாவரும் கேளிர்" தொடர்கதை (நாவல்) கிராமத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்படும் தொடர். அவரது சொல்லாடல், காட்சிப்படுத்துதல் போன்றவை ஒரு கிராமத்திற்கே சென்றது போன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். இன்றைய எந்திர உலகில் நாம் இழந்த நமது கிராமத்து உணர்வுகளை, நிகழ்ச்சிகளை நம் கண்முன்னே அழைத்து வரப்போகிறது இந்தத் தொடர். 

 

 
     
     
     
   
யாவரும் கேளிர்
1
 
யாவரும் கேளிர்
ஆசிரியர் பற்றி
------------------------

 
 

 
 



ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்

கிராமத்து மைந்தனாக இருந்தாலும் திரைத்துறை மீது கொண்ட காதலால் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ரவிவர்மன் அவர்கள், தமிழ், தெலுகு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும், ஹிந்தி உள்ளிட்ட வடமொழிப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

"ஆட்டோகிராப்", "அந்நியன்", "வேட்டையாடு விளையாடு", "தசாவதாரம்", "வில்லு", போன்ற தமிழ் படங்களிலும், "கிளிச்சுண்டன் மாம்பலம்" (கிளிசுண்டன் மாம்பழம்), போன்ற மலையாளப் படங்களிலும், "ஜெய்" (Jai), போன்ற தெலுகுப் படங்களிலும் "பிர் மிலேஞ்சே" (Phir Milenge), ராம்ஜி லண்டன் வாளா" (Ramji London Vala) போன்ற ஹிந்திப் படங்களிலும், "பைவ் பைவ் போர்" (Five Five Four) போன்ற இந்திய ஆங்கிலப்படங்களிலும்

ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.இது தவிர M.I.A Video 2007 (English) ஆல்பத்திலும், சைல்ட் என்விரான்மென்ட் (Child Environment) என்கிற ஆங்கில ஆவணப்படத்திலும், ஐநூறுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

இதுவரை அவர் பெற்றுள்ள விருதுகள்:

2000 ஆம் ஆண்டு சாந்தம் என்கிற மலையாளப் படத்துக்காக 23 EME 3rd continents International Award மற்றும் அதே திரைப்படத்திற்காக கேரளா சாலச்சித்ரா விருதையும் (2000) பெற்றுள்ளார். SICA வழங்கும் சாதனையாளர் விருதை 2001 வருடமும், அந்நியன் திரைப்படத்திற்காக 2005 ஆம் ஆண்டு பிலிம் பேர் (Film Fare) விருதையும், இந்தியா டுடேவின் Award for face of the feature in cinema (2005) விருதையும், வேட்டையாடு விளையாடு" படத்திற்காக தமிழக அரசின் விருதையும் (2005), இதே படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2005) விருது மற்றும் IIFA (2006) விருதையும், தசாவதாரம் படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2009) விருதையும் பெற்றுள்ளார்.

 

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS யாவரும் கேளிர் TS ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் யாவரும் கேளிர் வாயில்

யாவரும் கேளிர் - 18

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்  

தனுக்கொடி என் பங்காளி, ஆரான் ஒன்னுவிட்ட பங்காளி. என்மேலேயும் ஏ... சம்சாரத்துமேலேயும் அவ்வளவு பாசமா இருப்பானுக. அவெங்களே என் நிலத்துல விவசாயம் பண்ணி ஒருபடி நெல்லுகூட எடுக்காம வீட்டுல கொண்டாந்து கொடுப்பாங்கெ, எனக்கு புள்ள இல்லாதது தெரிஞ்சு அவெங்கதான் கோயிலுக்கு எல்லாம் போயிவர ஏற்பாடு பண்ணினாங்க, தனுக்கொடி ஒருபடி மேலே போயி எனக்காக பழனி முருகனுக்கு மொட்டை போட்டுட்டு வந்தான், இதெல்லாம் பார்த்து எனக்கு அவெங்க மேலே அளவுகடந்த பிரியம் வந்துச்சு. கடைசியில எனக்கு கொழந்தை பொறக்காதுன்னு தெரிஞ்சு நானும் கோயில் கொளத்துக்கு போரத நிறுத்திட்டேன்.

ஒருநா தனுக்கொடி வந்து அமாவாசை நடு சாமத்துல திருநல்லாற்றிலுள்ள சனீஷ்வரன கும்பிட்டா கொழந்த பொறக்கும்ன்னா, “அதான் டாக்டர் கொழந்த இருக்காதுன்னு சொன்னாரேப்பா” டாக்டரா நம்மள படைச்சாரு? கடவுள்தானே நம்பள படைச்சது என்று சொல்லி, நான் வேண்டாம்ன்னு சொன்னதையும் கேட்காம ஒரு வாரிசு வேணும் இந்த ஒருவாட்டி மட்டும் போயிட்டுவாங்கன்னு அவனே எல்லா ஏற்பாடும் பண்ணி அனுப்பிச்சு வச்சான். நானும் என் சம்சாரமும் திருநல்லாறு போயி சனீஷ்வரன கும்பிட்டுவிட்டு கோயில விட்டு வெளியேவரும் போது, அமாவாச இருட்டுவேர.. அந்த நேரத்துல ஒரு கொழந்த அழுகை சத்தம் ரொம்ப நேரமா கேட்டுச்சு, அந்த கும்மிருட்டுல எங்க இருந்து அழுகை சத்தம் வருதுன்னு கண்டு பிடிக்கவே ரொம்ப நேரம் ஆச்சு.

பெறகு நானும் ஏ...சம்சாரமும் கொழந்த கத்தர இடத்துக்கு போயிட்டோம் (இருள் என்பது குறைந்த ஒளி என்று பாரதி சொன்னாரே) அந்த அமாவாச இருட்டு வெளிச்சத்துல இந்த குருட்டு பய கண்ணுவேற சரியா தெரியல.. வயசு அம்பது ஆச்சுல்ல... நான் ஒன்னும்புரியாம நின்னப்ப மழைக் காத்து வேர. மழைய அறிஞ்ச பூமியோட மணம் மூக்க தொளைச்சுது... கொழந்த அழுகை சத்தம், கழுத்து அறுபட்ட ஆடு கதறுவது போல இருந்தது.. அந்த நேரத்துல பளிச்சுன்னு ஒரு மின்னல், அந்த வெளிச்சத்துல எந்த பாவி பெத்த புள்ளயோ, பச்சபுள்ள தொப்புள் கொடி அப்பதான் அறுந்து இருக்கும் போல.. அந்த கொழந்த சப்பாத்தி கள்ளிச்செடி மேலே ரத்தம் சொட்ட கத்திக்கிட்டு இருந்துச்சு, மின்னல் வேற நிக்கல.. நான் என்ன பண்றதுன்னு புரியாம இருந்தப்போ ஏ...சம்சாரம் அந்த கொழந்தைய தூக்கினா... மழைவேற ச்சோன்னு கொட்ட ஆரம்பிச்சுச்சு நாங்க கோயில் மண்டபத்துக்குள்ள மழையோட கொழந்தைய தூக்கிட்டு போயி அந்த சாமிக்கு வெச்ச வெளக்கு வெளிச்சத்துல கொழந்தைய பார்த்தா வெள்ள வெளேர்ன்னு ஆம்புள புள்ளனு தெரிஞ்சது. அப்பவும் குழந்தை அழுவறத நிறுத்தல.. ஒரு வேல குழந்தைக்கு பசிக்குதோனு , நா... கோயில்ல இருந்த ஐய்யருகிட்ட போயி சாமிக்கு வச்சு இருந்த பால கொஞ்சம் கேட்டப்ப ஐயறு தயங்கினாரு. கொழந்தைக்கு கொடுத்துட்டு அந்த எச்சில் பால எப்படி சாமிக்கு ஊத்துறதுன்னாரு... குழந்தையும் தெய்வமும் ஒன்னுன்னு எல்லாரும் சொல்றாங்களே ஐயரே... பரவாயில்ல கொடுங்கன்னேன் ... ஐயறு மனசு வந்து கொடுத்தாரு அந்த பால கொழந்தைக்கு கொடுத்தப்ப அதுவும் மொடக்மொடக்குன்னு குடிச்சுச்சு. பால குடிச்சு முடிக்கிறதுக்குள்ள கொழந்த ஏ...சம்சாரம் மடியில தூங்கிடுச்சு.

அசதியில சம்சாரமும் உக்கார்ந்த படியே தூங்க நானும் அவ பக்கத்துலயே தூங்கிட்டேன், பொழுது பளபளன்னு விடிஞ்சுடுச்சு. நாங்க முழிக்கிறதுக்கு முன்னாடியே மழைத்தண்ணிய கண்ட தவளைகளோட கொண்டாட்ட சத்தத்தில குழந்தை முழுச்சு... “ ங்கா ” -ன்னு சொல்லிகிட்டு இருந்தான், நானும் ஏ...சம்சாரமும் அதை பாத்து சந்தோஷப்பட்டோம், அந்த சமயத்துல எங்க பக்கத்துல ஒரு சாமியார் வந்து வயசாகியும் இளமை இருக்குன்னு தெரியுது என்றார், இல்ல சாமியாரே இது என் கொழந்தை இல்லன்னு நடந்தத சொன்னேன். சாமியார் வாய்விட்டு சிரித்துவிட்டு “யாரோ ஒரு வேசியின் காமத்தின் சந்தோஷத்தால் உபரிய பாவி இவன், நீங்கள் எடுத்துச்செல்லுங்கள் -ன்னாரு,

“எப்படி சாமின்னேன்”
“குழந்தை வரம் வேண்டிதானே இங்கு வந்தீர்கள்”
“ஆமாம்”
“அப்ப சாமி கொடுத்த குழந்தைய எடுத்துட்டுபோங்க”

நான் தயங்கிகொண்டே.... இந்த கொழந்தையோட உறவுக்காரங்க யாராவது வந்தா? “தொப்புள் கொடி அறுந்தவுடன் தாயும் சேயும் வேறுவேறே... அதன்பின் உறவு என்பது ஏதப்பா.... என்பதைத்தான் இவனைப் பெற்றவள் ஊர்சிதப்படுத்தியிருக்கிறாள்... என்றார். பிறகு கொழந்தை வரம் வேண்டி கோயிலுக்கு போன நாங்க அந்த கொழந்தைய எடுத்துக்கிட்டு வந்தோம். அப்படித்தான் என் ராஜா எங்ககூட வளர்ந்தான். அங்கதான் ஆரம்பிச்சு இருக்கு என் பங்காளிகளுக்கு என்னபெத்த ராஜா மேல பகை.......

தொடரும்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</