வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. நேர்காணல்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

தொடர் பற்றி

கவிஞர் விக்ரமாதித்தன் நம்பி.. தமிழின் மிக முக்கியமான ஆளுமை.. எப்போதும் விக்ரமாதித்தன் ஒருவரை கவிஞர் என்று அங்கீகரித்தால் அவரது கவிதை சக்தி வாய்ந்த சொல்லாடல்களின் கூடலாக இருக்கும். எப்போது விக்ரமாதித்தன் நம்மை கவிஞர் என்று சொல்லுவாரோ என்று பல பெருங்கவிகள் ஏங்கியக் காலங்கள் கூட உண்டு... இப்போதும் தொடர்ந்து நல்ல கவிதைகளை அடையாளம் கண்டு அதனை ஊரறிய செய்து வருகிறார் விக்ரமாதித்தன். அந்த வகையில் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஒரு கவிஞரின் சில கவிதைகளை எடுத்துக் கொண்டு அது பற்றி விவாதிக்க இருக்கிறார்.

 

 

 

 

 
     
     
     
   
அரும் பெறல் மரபின் கரும்பு இவண்...
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


மேலும் ஒளிப்படங்களைக் காண:

விக்ரமாதித்தன் நம்பி

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
   
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS அரும் பெறல் மரபின் கரும்பு இவண்... தொடர்கள் வாயில்


அரும் பெறல் மரபின் கரும்பு இவண் - வித்யாஷங்கர்

விக்ரமாதித்தன் நம்பி  

கடைசிச் சிற்பம் - வித்யாஷங்கர்

மதுரை மேலமாசி வீதியில்
உள்ளது ஆனந்த ஐயப்பன் கோயில்
பலரும் இங்கு வந்து
இருமுடி கட்டி
சபரிமலைக்குச் செல்கிறார்கள்
அடுத்து இருக்கும்
விடுதியின் மாடித்தளத்திலிருந்து
கோயில் சிற்பங்கள்
அத்தனைனையும் பார்க்கலாம்

கோயிலின்
முகப்புத் தளத்தில்
நாலா புறமும்
சிலைகள் நான்கு திசை
நோக்கி நிற்கின்றன.
தென்முகப்பின் மூலையில்
ஆணும்பெண்ணும் நிற்க
சிற்பி வடித்திருக்கிறான்

ஆண்
இறுகக் கட்டித் தார்ப்பாய்ச்சியும்
தோளில் துண்டுமாய் நிற்க
பெண்ணோ
புட்டப் பிளவு தெரிய
சேலை நெகிழ
எப்போது அவிழ்ந்துவிடுமோ என
பதற்றப்பட கைக்கிறாள்

எத்தனையோ பேர்
தங்கிப் போயிருக்கலாம்
இனிமேலும் வந்து தங்கலாம்

இவனுக்கு ஏனோ
அந்தப் பெண்ணின் சிலை
பதற்றம் தந்தது.

வேலைக்காக
மாதக்கணக்கில்
மனைவியைப் பிரிந்ததையா
பல மாதம் சேர்ந்து
பணியாற்றியும்
வசப்பட மறுத்த
பணிப் பெண்ணையா

அவளது புடைவையை
சரி செய்ய
கோயில் நிர்வாகிகள்
தன்னைத் தேடட்டும் என்றா

கும்பாபிஷேக நாள் குறித்த பின்
ரகசியமாய்ச் செய்த
கடைசிச் சிற்பமா
(கேள்விகள் துளைத்தன இவனை)
சிற்பிக்கே தெரியும்
சிலை செதுக்கிய சூட்சுமம்.

-வித்யாஷங்கர்

கவிதை என்பது அடிப்படையில் அனுபவம் சார்ந்த விஷயம்.

சங்க இலக்கித்தில் உள்ள சித்திரங்களாகச் சொல்லப்பட்ட கவிதைகள் என்றாலும் நேரடியாகச் சொல்லப்பட்ட கவிதை என்றாலும், அவற்றில் எல்லாம் ஓர் அனுபவம், அனுபவம் சார்ந்த ஒரு மனம், அந்த மனத்தில் இருந்து கிளர்ந்த உணர்ச்சிகள் ஆகியவை தான் முன்னால் வந்து நிற்கின்றன.
-கவிஞர் சுகுமாரன் (நேர்காணல்) - (காலச்சுவடு டிசம்பர் 2008).

காட்சிகள் கிளைபரப்ப, மனம் நினைக்க, கற்பனை விரிய, தோன்றிய கவிதை பதினான்கு பத்திகள் நாற்பத்தொன்பது வரிகள் நேரடிக் கூற்று எளிமையானது காட்சிகளாலான கவிதையென்றாலும், மனம் சார்ந்தது.

முதல் பத்தி, மதுரை மேலமாசி வீதியில் உள்ள ஆனந்த ஐயப்பன் கோயில் பற்றிய விவரிப்பும், அங்கே, ஐயப்ப பக்தர்கள் வந்து இருமுடி கட்டி, சபரிமலை செல்வதும் இரண்டாவது, கோயிலையொட்டிய விடுதி மாடித்தளத்திலிருந்து பார்வைக்குப்படும் கோயில் சிற்பங்கள்.

மூன்றாவது பத்தியில், கோயிலின் முகப்புத்தளத்தில், நாலாபுறமும் உள்ள சிலைகள் குறித்த விவரிப்பு நான்காம் பத்தியில் தென்முகப்பின் மூலையில், சிற்பி வடித்திருக்கும் ஆண்/பெண் சிலைகள் பற்றிய குறிப்பு.

கவிதையின் ஐந்தாவது பத்தி, ஆணின் தோற்றம் பற்றிய விவரணம் ஆறாவதாக, பெண் நிற்கும் கோலமும் அஃது ஏற்படுத்தும் பதற்றமும். ஏழாவது எட்டாவது பத்திக்கு அந்த விடுதிக்கு வரும் போகும் மற்றவர்கள் பற்றிய எண்ணமும் அவர்களுக்குத் தோன்றாத உணர்வு தனக்கு நேர்வதும் பற்றியதுமாக.

ஒன்பது, பத்து, பதினொன்று, பன்னிரெண்டாம் பத்திகள், அந்தப் பெண்ணின் சிலையை, அப்படி ஒரு வடிவில் சிற்பி செய்தான் என்ற யோசனைகள் பிறையடைப்பில் இவன் மனநிலை.

முத்தாய்ப்பு சிற்பிக்கே தெரியும்/சிலை செதுக்கிய சூட்சுமம் என மதுரை மேலமாசி வீதி ஆனந்த ஐயப்பன் கோயில் ஆவணப்படுத்தப்பட்டுவிட்டது அதன் முகப்புத்தளச் சிலை ஒன்றினால்.

அந்தப் பெண் நிற்கும் ஸ்திதிதான் கவிஞனைப் பதற்றம் கொள்ள வைக்கிறது இதுதான் கவிதைப் பொருளே.
பெண்ணோ
புட்டப் பிளவு தெரிய
சேலை நெகிழ
எப்போது அவிழ்ந்துவிடுமோ என
பதற்றப்பட வைக்கிறாள்.
இவனுக்கு ஏனோ
அந்தப் பெண்ணின் சிலை
பதற்றம் தந்தது.
மற்றவர்களுக்கெல்லாம் நேராத பதற்றம் இவனுக்கு ஏன் நேரவேண்டும். இவனை ஏன் அது படுத்த வேண்டும்.

ஸ்தபதி ஏன் இப்படிச் செய்தான், இதனாலா இதனாலா என்றெல்லாம் யோசித்துப் பார்க்கிறான் அஃது எப்படி பிடிபடும்.
கவிஞனுக்குத் தோன்றியது கவிதையில் இருக்கிறது சிற்பிக்குத் தோன்றியது?
கவிமனம்தான், கவிதைக்கு ஊற்றுக்கண் தோற்றுவாய் அப்படித் தோன்றி வந்த கவிதை, இது.
வித்யாசமான கவிதை இதுபோல இருப்பதே நல்லது கவிதை, விதவிதமாக இருக்க வேண்டும். இன்டோர் கவிதைகள், பைபாஸ் கவிதைகள், டொமஸ்டிக் கவிதைகளே பல்கிப் பெருத்து, வார்த்தைக் கூட்டங்களே மலிந்துபோய், நவீன கவிதை அயர்வூட்டும் வேளையில், இது போலக் கவிதைகள் புதியனவாகவும் அனுபவம் தருவனவாகவும் அமைந்து நம்பிக்கையேற்படுத்துகின்றன.

வித்யாஷங்கர், தொடர்ந்து கவிதையில் செயல்பட்டு வருவதும், அபூர்வமான கவிதைகளை வசப்படுத்தி விடுவதும் நல்ல விஷயங்கள். மூத்த கவிஞர்கள் நிறைப்பேர் இடறிவிடும் இடங்களை இவர் சுலபமாகக் கடந்து விடுகிறார். உள்ளபடியே, இது பெரிய காரியம். சத்துவமுள்ளவனுக்கே இது சாத்தியம். இதற்காக அவரை வாழ்த்தவேண்டும். வாழ்த்துகள். வித்யாஷங்கர்

---------------------------------------------------------------------------------------

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

</