வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

தொடர் பற்றி

கவிஞர் விக்ரமாதித்தன் நம்பி.. தமிழின் மிக முக்கியமான ஆளுமை.. எப்போதும் விக்ரமாதித்தன் ஒருவரை கவிஞர் என்று அங்கீகரித்தால் அவரது கவிதை சக்தி வாய்ந்த சொல்லாடல்களின் கூடலாக இருக்கும். எப்போது விக்ரமாதித்தன் நம்மை கவிஞர் என்று சொல்லுவாரோ என்று பல பெருங்கவிகள் ஏங்கியக் காலங்கள் கூட உண்டு... இப்போதும் தொடர்ந்து நல்ல கவிதைகளை அடையாளம் கண்டு அதனை ஊரறிய செய்து வருகிறார் விக்ரமாதித்தன். அந்த வகையில் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஒரு கவிஞரின் சில கவிதைகளை எடுத்துக் கொண்டு அது பற்றி விவாதிக்க இருக்கிறார்.

 
     
     
     
   
அரும் பெறல் மரபின் கரும்பு இவண்...
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


மேலும் ஒளிப்படங்களைக் காண:

விக்ரமாதித்தன் நம்பி

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TSஅரும் பெறல் மரபின் கரும்பு இவண்... தொடர்கள் வாயில்

அரும் பெறல் மரபின் கரும்பு இவண் - ஷங்கர் ராமசுப்ரமணியன்


விக்ரமாதித்தன் நம்பி  

தலைமுறைகளின் வாழ்வைக் கலாபூர்வமாகப் பதிவு செய்திருக்கும் கவிதை

அவள் சிறுமியாயிருந்த போது
பெற்றோர் அவளுக்கு ஒரு வெள்ளியோனியை
பரிசளித்தனர்
அப்போது அவளுடைய தந்தை ஒரு சிறுநகரத்தில்
ஆசிரியராய் இருந்தார்
வீட்டின் பின்புறம் ராட்டைக் கிணறும்
வீட்டினுள் குளிர்மர இருக்கைகளும் இருந்தன
வெள்ளியோனியுடன் அவள் வளர்ந்து
பருவமடைந்த போது
தந்தை தலைமையாசிரியராகியிருந்தார்
வெள்ளியோனிக்கு
நகரத்தின் தலைமைச்செயலக உதவி அதிகாரியுடன்
திருமணம் செய்விக்கப்பட்டது
சிறுமியின் ஊரிலிருந்த நாட்டைக் கிணற்றின்
சப்தம்
நகர வீட்டிற்குள்ளும் அவளுக்கு முதலில்
ஒலித்துக்கொண்டு இருந்தது
குடித்தனத்தின் சத்தத்தில் கிணற்றின்
முனகல் அமிழ்ந்தே போனது,
இப்போது வெள்ளியோனி தூர்ந்து மந்திர ஜெபங்கள்
முணுமுணுக்கத்
தொடங்கிவிட்டது
ஊரின் கிணற்று ராட்டை சப்தம்வேறு
கனவுகளில் வர ஆரம்பித்திருந்தது
தலைமைச் செயலக அதிகாரியும்
வெள்ளியோனி அம்மாவும்
தங்கள் சிறுமிக்குப் பரிசளித்தனர்
தங்கயோனியை
சிறிதாய் இருந்தபோது
தங்கயோனி பட்டு மென்மையாக
மடிந்தபடி இருந்தது
ஒரு கண்ணில் கனிவு
மறு கண்ணில் குறும்பு
ஒரு கவிதையை அறிவதற்கு முன் அதை உணர்ந்து கொள்வதுதான் முதன்மையாது. கவிதை அறியத்தக்கதாக இல்லாவிட்டாலும் உணரமுடிந்தால் அதுவே வாசகவெற்றி என்று கூடச் சொல்லப்படுவதுண்டு.
- சி.சு. செல்லப்பா
(பிச்சமூர்த்தி கவிதைகள் முன்னுரையில்)

இந்த கவிதை, அனுபவமா. நிச்சயமாக, இல்லை. உணர்வா. அதுவும் இல்லை. பிறகு? கண்டதும் கேட்டதுமான அவதானிப்பு? இருக்கலாம். அப்படியானால், அதுவும் அனுபவம்தான், உணர்வு தான் - ஒரு வகையில். எப்படியோ கவிஞன் கவிப்பொருளை வசப்படுத்திவிடுகிறான். இப்படிதான் சொல்லமுடிகிறது. நம்மால்.

நாமே கூட அநேக குடும்பங்களைப் பார்த்திருப்போம் ஒரு தலைமுறை. சாதாரணமாக இருக்கும், அடுத்த தலைமுறை கொஞ்சம் விருத்தியாகி வந்திருக்கும் அதற்கடுத்த தலைமுறை செல்வச் செழிப்பாக வளர்ந்து நிற்கும்.

கீழ் நடுத்தரவர்க்கம், நடுத்தரவர்க்கம், உயர் நடுத்தர வர்க்கம் என்று வசதியை வைத்துத்தானே வகுத்திருக்கிறார்கள்.

ஷங்கர் ராமசுப்ரமணியன், இந்த விஷயத்தைத்தான் சரியாக ஆவணப்படுத்தியிருக்கிறார் ஐம்பது - அறுபதாண்டுக் காலத்தில் ஒவ்வொரு தலைமுறையினரும் தழைத்து வளர்ந்துவருவதை கலாபூர்வமாகப் பதிவுசெய்கிறார், இதனாலேயே அருமையான கவிதையாகிவிடுகிறது.

உள்ளபடியே. கவிதையாக்குவதற்குக் கடினமான பாடுபொருள்தான் கருத்தாக்கக் கவிதையாகச் சரிந்துவிடும் அபாயம் நேர்ந்துவிடும் கவிதையாகத் திரளாமல் போகும் ஆபத்து வந்துவிடும் அதுபோல எல்லாம் ஆகாமல் காப்பாற்றிக் கொண்டு வந்திருப்பது திறமான கவித்துவம்தான்.

இவ்வளவும் கவிதையின் பொருள் குறித்து…

இனி, சொல்முறைபற்றி

இந்தக் கவிதையின் பெரிய பலமே இதன் சொல்முறை தான்.

மூன்று தலைமுறையினரின்வாழ்வே கதைச் சுருக்கம் போல - அவர்களின் வளர்ச்சி, மாற்றம், உயர்வு அனைத்தும் ஒரு சேர - செய்தி சொல்லில்பாங்கில் முன் வைக்கப்படுகிறது.

காலமாற்றத்துக்குத் தக, அவர்களின் மனப்பாங்கு வடிவு கொள்வது கட்டாக விவரிக்கப்படுகிறது, வெள்ளியோனி என்ற உருவகம் (குறியீடு/புனைவு), நடுத்தர வர்க்கத்தைச் சுட்டுவதாகவும், தங்கயோனி என்ற உருவகம் உயர் நடுத்தரவர்க்கத்தைக் குறிப்பதாகவும் வருகிறது.

கவிதையின் ஆரம்ப வரியே அதே சமயம், புனைவும் விரவ. அவள் சிறுமியாயிருந்த போது / பெற்றோர் அவளுக்கு ஒரு வெள்ளியோனியை / பரிசளித்தனர்.
அதே சமயம், புனைவும் விரவ. அப்போது அவளுடைய தந்தை ஒரு சிறுநகரத்தில் ஆசிரியராய் இருந்தார். இந்த வரி முழுக்கச் செய்தி சொல்லல்.

வீட்டின் பின்புறம் நாட்டைக் கிணறும் வீட்டினுள் குளிர்மர இருக்கைகளும் இருந்தன. தகவல் போலத்தாம் தெரியும், எனில் அப்படியல்ல. அவர்கள் வசதியைக் காட்டுவது மேலும், அவள் வாழ்க்கையில் ராட்டைக் கிணறு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. நினைவாக, கனவாக, பழம் பொருள் அலங்காரமாக.

வெள்ளியோனியுடன் அவள் வளர்ந்து
பருவமடைந்த போது
தந்தை தலைமையாசிரியராகியிருந்தார்.
வெள்ளியோனிக்கு
நகரத்தின் தலைமைச்செயலக உதவி அதிகாரியுடன் திருமணம் செய்விக்கப்பட்டது.

இந்த இரண்டு வாசகங்களுமே செய்தி சொல்வது போலத்தாம் சொல்லப்படுகின்றன. இதிலும் கவிதை சொல்லலாம் போல இதுவே தமிழுக்குப் புதிதுதான் நவீன கவிதையின் சாதனைதான்.

சிறுமியின் ஊரிலிருந்த நாட்டைக் கிணற்றின் / சப்தம் நகர வீட்டிற்குள்ளும் அவளுக்கு முதலில் ஒலித்துக் கொண்டு இருந்தது.
ஊர் ஞாபகம்? பிறந்தவீட்டு நினைவு?
குடித்தனத்தின் சத்தத்தில் கிணற்றின்
முனகல் அமிழ்ந்தே போனது.
ஏதார்த்தத்தையே அழகாகச் சொல்லிவிடுகிறான் கவிஞன்.
இப்போது வெள்ளியோனி தூர்ந்து மந்திர ஜெபங்களை முணுமுணுக்கத் / தொடங்கிவிட்டது.
ஊரின் கிணற்று ராட்டை சப்தம் வேறு
கனவுகளில் வர ஆரம்பித்திருந்தது,

இந்த கவிதைக்கு தான் சரிபோல தெரிந்தேதான், கவிஞன் இப்படிக் கவிதை கூறல்த் தேர்ந்தெடுத்திருப்பான்போல. இதில் அநேகம் சாதகங்கள் முதலில், நிறைய விஷயங்களை நாசூக்காகச் சொல்ல முடிகிறது, பிறகு பட்டுக்கொள்ளாமல் – விட்டேற்றியாக இருக்க முடிகிறது. அதே வேளை வெறும் சொல்லும் அல்ல இது, நூதனமான பின்னல் வேலை உள்ளதும் தான்.

தலைமைச் செயலக அதிகாரியும் / வெள்ளியோனி அம்மாவும் / தங்கள் சிறுமிக்குப் பரிசளித்தனர் / தங்கயோனியை.
உதவி அதிகாரி, அதிகாரியாகிவிட்டார்.
பரிசளிப்பு, வெள்ளியிலிருந்து தங்கமாகியிருக்கிறது.
சிறிதாய் இருந்தபோது
தங்கயோனி பட்டு மென்மையாக
மடிந்தபடி இருந்தது.
ஒரு கண்ணில் கனிவு
மறு கண்ணில் குறும்பு
மலர்கள் பூத்த உள்ளுடைகள்
மேலுடைகள்
மனதின் உருத்தெரியாத
கைகள் போஷித்தன
தங்க யோனியை.
விவரிப்புகள் வழியே ஓர் ஓவியத்தையே வரைந்திருக்கிறான் கவிஞன் கவித்துவ சாத்யங்களுடன்.

இப்போது வெள்ளியோனி பூஜை பீடமாகி விட்டது
தங்கயோனி பருவத்திற்கு வந்துவிட்டது
உடலெங்கும் பரவுகின்றன அதன்
கட்டளைகள்
நிழல்களை பிரதிபலிக்கும் தங்கயோனி
எந்தக் காதலையும் ஞாபகம் வைத்துக் கொள்வதில்லை
சிறுநகரத்தில் வெள்ளியோனியின்
நினைவிலிருந்த ராட்டைக் கிணறு
வீட்டின் நடுவில்
பழம்பொருள் அலங்காரமாய் நிற்கிறது
வெள்ளி யோனி மந்திரங்களை ஜெபித்துக்
கொண்டு இருக்கிறது
தங்க யோனி
நகரத்தை தலைக்கழித்தபடி
சாலையில் விரைகிறது.

தேர்ந்த மொழிதல் பெண்மணியின் இருப்புநிலையை, மனநிலையைச் சொல்லி யுவதியின் வாழ்நிலையை, மனப்போக்கை சித்தரித்து – இரண்டையும் மாறி மாறி / அடுத்தடுத்து பூர்த்தியடையும் கவிதை காட்டும் உலகம் நுட்பமானது.

பெரிய விஷயம் நுணுக்கமான உத்தியினால், எளிமையாகச் சொல்வது போலப் படுகிறது. ஆகச் சிறந்த கவிதை ஆகச் சிறந்த கவிஞன்தான் ஷங்கர் ராமசுப்ரமணியன்.

வெள்ளியோனி – தங்கயோனி என்று உருவகப்படுத்தியிருக்கும் பெண்களின் மனமும் உலகமும் சுருதிசுத்தமாக – லயம்பிசகாமல் -சொல்லப்ட்டிருப்பதாலேயே இது கவனம் கொள்ள வேண்டிய கவிதை ஆகும். ஷங்கரின் மணிபாப்பா கௌரி / கௌரி அம்மாள் கவிதைகள் போலவே இதுவும் பிறர் பற்றிய கவிதைதான். நவீன தமிழ்க் கவிதையில் பிறர் குறித்த கவிதைகள் குறைவு. ஏனெனில். அது எளிதானதில்லை அதனாலயே கௌரவிக்கப் பெறவேண்டியதும் ஆகும்.

இந்த மூன்று கவிதைகளையுமே, ஷங்கர்ராமசுப்ரமணியன் இருபத்தெட்டு வயதுக்குள்ளாகவே எழுதிவிட்டார் அவரை சீரிய கவிஞன் என்று அங்கீகரிக்கவும், அவர் °தானத்தை உறுதிப் படுத்தவும் இதுவே போதுமானது. பிறகும், இவை தமிழ் வாழ்வை மையமாகக் கொண்டவை என்பது கூடுதல் சிறப்பு.

நல்ல கவிஞனுக்குத்தான் பொறுப்புகளும் அதிகம்.

பிறையடைப்பில்  காகங்கள் வந்த வெயில் தொகுதியிலிருந்து ...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

  </