வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------

வாழ்வில் நாம் நினைக்கும் பல இலக்குகளை நம்மால் அடைய முடிவதில்லை. சரி நம்மால் முடியாது இந்த முயற்சியை கைவிட்டு விடுவோம் என நினைக்கும் தருவாயில் புதிய நம்பிக்கைகள் தோண்றி நம்மால் சாதிக்க முடியும் என்ற சிந்தனைக்கு நம்மை கொண்டு செல்கிறது. உண்மையில் நம்முடைய இலக்குகளை அடைய இந்த புதிய நம்பிக்கைகள் எந்தவகையிலும் உதவுவதில்லை. மாறாக நம்மை ஒரு உறுதியான முடிவெடுக்க விடாமல் ஒரு நிலையற்ற வாழ்கை வாழ இந்த நம்பிக்கைகள் பயன்படுகின்றது. நம்மை நாம் தோற்றுவிட்டோம் என்று எண்ணிக்கொள்ள இயலாது. அதே சமயத்தில் நம்மை வெற்றியாளர் என்று சொல்லிக்கொள்ளவும் முடியாது. இதற்கு இடைப்பட்ட நிலையில் நாம் காலம் தள்ளிக்கொண்டிருக்க இந்த நம்பிக்கைகள் பயன்படுகின்றது. இப்படிப்பட்ட ஒரு துன்பமிக்க உணர்வை நாம் கற்பனை செய்து பார்க்கின்றோம். ஆனால் பலர் இதை தினமும் அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களில் மிக முக்கியமானவர்கள் பங்குச்சந்தையில் ஈடுபடும் நபர்கள்.

நாம் லாபம் சம்பாதித்துவிட்டோம் என்று சந்தோஷம் கொள்வதும், மறுநாளே நஷ்டம் அடைந்து துவண்டுவிடுவதும், அதற்கு அடுத்த நாள் மீண்டும் லாபம் சம்பாதித்து... இப்படியே லாபம், நஷ்டம் என்று மாறி மாறி நிகழும் நிகழ்வில் நிலையான சந்தோஷமும் இல்லாமல், நிலையான துக்கமும் இல்லாமல் இடைப்பட்ட நிலையில் துவண்டுபோவார்கள். பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்களிடம் பல திட்டங்கள் இருக்கும். ஆனால் எந்த செயல்பாடுகளும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்காது. ஆற்றில் விழுந்த இலைபோல, சந்தை செல்லும் போக்கில் அடித்துச் செல்லப்படுவார்கள். அப்போது ஏற்படும் இடர்பாடுகளை அவர்கள் சந்தித்தே ஆக வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார்கள்.

பங்குச்சந்தையில் மூன்றுவிதமான மனிதர்கள் இருக்கின்றாகள்.

முதலாமவர்: அவருக்கு பங்குச்சந்தை பற்றி எந்த விபரமும் தெரியாது. முதலீடு செய்யலாமா வேண்டாமா என்ற சிந்தனையிலேயே இருப்பார்கள்.

இரண்டாம் நபர்: தெரியாமல் முதலீடு செய்து ஒரு குறிப்பிட்ட தொகையை இழந்தவர்கள். அந்த தொகையை எப்படியாவது பங்குச்சந்தையில் இருந்தே மீட்க வேண்டும் என்று போராடுபவர்கள்.

மூன்றாம் நபர்: பங்குச்சந்தை பற்றி அனைத்து விசயங்களும் இவர்களுக்குத் தெரியும். இவர்கள் பங்குச்சந்தையில் பணம் சம்பாதிக்க பலவிதமான வித்தைகளை கற்று வைத்திருப்பார்கள். ஆனாலும் வெற்றிகரமாக பணம் சம்பாதிக்க இயலாமல் இருப்பவர்கள்.

மேற்கண்ட இந்த மூன்று நபர்களுக்குமே பிரச்சனை ஒன்றுதான் சந்தை அவர்களின் பிடியில் இருக்காது. சந்தை ஏற்படுத்தும் விளைவுகளுக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார்கள். இந்த சூழ்நிலையை நானும் உணர்ந்திருக்கின்றேன். இந்த சுழற்சி முறையில் இருந்து தப்பிக்க பல காரணங்களை, பல காரியங்களை தேடியிருக்கின்றேன். அகப்பட்ட விசயங்களை பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
.
தோற்றவர்களின் சிந்தனை ஒன்றிணையும் போது, அந்த சிந்தனை அவர்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்லும் என்பது எனது நம்பிக்கை. எனவே உங்களின் சிந்தனைகளையும் என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.

 

 

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
காணாமல் போன காளையைத் தேடி ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 



பூபதி

ஊர் : உழைப்பிற்கு பெயர் பெற்ற ஊரை சேர்ந்தவன்.

தொழில் :பிடித்தமான தொழிலை தேடி இன்று வரை ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன்.

விருப்பம் : மனித விருப்பங்கள் மாறக்கூடியது என்பதற்க்கு நானும் ஓர் உதாரணம்.

விரும்பி படிப்பது: பாரதி, பாரதி சார்ந்த எழுத்துக்களை.

விருப்பமானவர் : பன்றி ஏன் தெருவிற்கு வந்தது என பகுத்தறிவு பேசிய பாவேந்தர்.

பிடித்த எழுத்தாளர் : இன்னும் பிடிபடவில்லை.

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பூபதி தொடர்கள் வாயில்


கரடி என்கிற காளை – DOWN TREND

பூபதி  

Down trend என்பது புரிந்துகொள்ள மிகவும் எளிமையானது. ஆனால் இதை புரிந்துகொள்ள நீங்கள் Uptrend-ஐ நன்றாக புரிந்து கொண்டிருக்க வேண்டும். இங்கு நீங்கள் சந்திக்கப்போவது சென்ற வாரம் சந்தித்த அதே காளைதான். சென்ற வாரம் நீங்கள் நன்றாக அதனுடன் பழகியிருந்தால் (படித்திருந்தால்) இந்த முறை நன்றாக உங்களுக்கு ஒத்துழைக்கும். ஒருவேலை காளை உங்களுடன் முரண்டு பிடித்தால் நீங்கள் சென்ற வாரம் அதனுடன் நன்றாக பழகவில்லை (படிக்கவில்லை) என்று அர்த்தம். எனவே உங்களுக்கு இந்த வாரம் புரிந்துகொள்வதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் மீண்டும் ஒரு முறை Uptrend பற்றி படித்து அறிந்துகொள்ளுங்கள்.

அதென்ன! கரடி என்கிற காளை! பொதுவாக பங்குச்சந்தை எழுச்சியில் இருந்தால் அதை காளையின் ஆதிக்கம் என்றும் பங்குச்சந்தை வீழ்ச்சியில் இருந்தால் கரடியின் ஆதிக்கம் என்றும் குறிப்பிடுவார்கள். என்னைப் பொருத்த வரையில் கரடி என்றெல்லாம் எதுவும் கிடையாது பங்குச்சந்தை வீழ்ச்சியடைவதும் ஒருவகையில் காளையின் ஆதிக்கம்தான். தினசரி காலண்டரில் நான் படித்த வாசகம் இது “புத்திசாலி மாலுமிக்கு புயல் ஒரு பொருட்டல்ல” மிகவும் உண்மையான வாசகம் இது. எனவே நமக்கு போதுமான திறமை இருந்தால் சந்தையின் வீழ்ச்சியின் போதும் நம்மால் பணம் சம்பாதிக்க முடியும்.

பங்குச்சந்தையின் வீழ்ச்சியிலும் நம்மால் பணம் சம்பாதிக்க முடியும் என்பது பலருக்கு ஆச்சரியம் அளிக்கலாம். அதெப்படி சந்தை இறங்கும் போது பங்குகளை வாங்கி வைத்திருந்தால் நஷ்டம்தானே ஏற்படும், எப்படி இலாபம் கிடைக்கும்! பொதுவாக Down trend-ன் இயக்கத்திற்கான சூத்திரம் ஒன்று இருக்கிறது “அவ்வளவா!, அவ்வளவுதனா!” இதுதான் அந்த சூத்திரம். இந்த சூத்திரம் மூன்று வகையான Trend-களுக்கும் பொருந்தும் ஆனால் Down trend-லும் பணம் சம்பாதிக்க முடியும் என்பதை நிரூபிக்க இந்த சூத்திரம் உதவுவதால், Down trend-ல் இந்த சூத்திரம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இந்த சூத்திரதின் மூலம் Down trend எப்படி இயங்குகிறது என்பதை பார்ப்போம்.

Down trend என்பது நீங்கள் சென்ற வாரம் படித்த Uptrend-ஐ அப்படியே தலைகீழாக படிப்பதுதான். சென்ற வாரம் நீங்கள் சந்தித்த அதே காளையை அப்படியே தலைகீழாக கற்பனை செய்துகொள்ளுங்கள்.

இதோ நீங்கள் சந்தித்த சீற்றமிக்க காளை தலைகீழாக:

சென்ற வாரம் செய்தமாதிரியே இந்த காளையின் பின்னங்காலில் இருந்து முன்னங்காலுக்கு இரண்டு கோடுகளை வரைந்துகொள்ளுங்கள்.

இப்போது நாம் போட்டிருக்கிறோமே இந்த இரண்டு கோடுகள்தான் Down trend-டிற்கான அமைப்பு. எந்த ஒரு பங்கும் கிழ் நோக்கி Down trend-ல் செல்வதற்கு முன்பாக இந்த அமைப்பில்தான் உருவாகும்.

பொதுவாக பங்குச்சந்தையில் விலை ஏன் இறங்குகிறது என்பதை ஆராய்வது எப்படிப்பட்டதென்றால் ஒரு மூட்டை அரிசை கீழே கொட்டிவிட்டு ஒவ்வொரு அரிசியாக என்னுவதற்கு சமம். சந்தையில் விலை இறங்குவதற்கு அவ்வளவு காரணங்கள் உள்ளன. அமெரிக்க அதிபருக்கு அல்சர் என்றாலும் சந்தை இறங்கும், ஐரோப்பாவில் அரசியல் ரீதியான பிரச்சனை என்றாலும் சந்தை இறங்கும். எனவே ஏன் இறங்கியது என்பதை விட்டு விட்டு, சந்தை இறங்கிவிட்டது இப்போது நாம் என்ன செய்வது என்பதிலிருந்து ஆரம்பிப்போம்.

ஒவ்வொருவருக்கும் இந்த இந்த பங்குகள் சிறப்பானவை என எண்ணம் மனதினுள் இருக்கும். ஒரு சிலர் வங்கி தொடர்பான பங்குகள் சிறப்பானவையாக கருதுவார்கள். சிலர் எண்ணை வளம் தொடர்பான பங்குகள் சிறப்பானவையாக கருதுவார்கள். பங்குச்சந்தை வீழ்ச்சியின் போது அவர்களின் எண்ணத்தில் உள்ள சிறப்பான பங்குகளின் விலையானது குறைந்து கொண்டே செல்லும் ஒரு கட்டத்தில் கிட்டத்தட்ட பாதி விலை குறைந்துவிடும் (இது நாம் வரைந்த முதலாவது கோடு). பாதி விலையில் உள்ளதை கவனித்ததும் என்ன! அந்த பங்கின் விலை அவ்வளவுதானா! (சூத்திரம்) என்ற எண்ணம் தோன்றியவுடன் குறிப்பிட்ட அந்த பங்கை வாங்க ஆரம்பிப்பார்கள். இதனால் விலையானது தொடர்ந்து இறங்கிக் கொண்டே செல்லாமல் திடீரென்று மேல் நோக்கி செல்ல ஆரம்பிக்கும் (இது நாம் வரைந்த இரண்டாவது கோடு). இதுதான் நமக்கு தேவையான அமைப்பு. இப்போது இப்போது முதலாவது கோட்டின் ஆரம்பத்தில் இருந்து இரண்டாவது கோட்டின் முடிவை நோக்கி கீழ்கண்டமாதிரி ஒரு கோடுபோடுங்கள்:

இதோ இந்த மூன்றாவது கோடுதான் இந்த காளை கீழ் நோக்கி செல்வதற்கான பாதை. இந்த பாதையில்தான் இனி இந்த காளை பயணம் செய்யும். எண் 2 உள்ள இடத்தை கவனியுங்கள், சந்தை இறங்கிக் கொண்டிருக்கிறது ஆனால் குறிப்பிட்ட இந்த பங்கின் விலை கணிசமாக அதிகரித்திருகிறது. இந்த சமயத்தில் அந்த பங்கை வைத்திருப்பவர்கள் அந்த பங்கின் விலை அவ்வளவா! அதிகரித்துவிட்டது! சந்தைவேறு கீழ்நோக்கி செல்கிறதே ஒரு வேலை நாம் வாங்கிய பங்கின் விலை தொடர்ந்து மேலே செல்லாமல் இறங்கிவிடுமோ என்ற அச்சத்தில் மீண்டும் விற்க ஆரம்பிப்பார்கள். இதனால் மீண்டும் விலை இறங்க ஆரம்பிக்கும். மீண்டும் அவர்களுக்கு பங்கின் விலை அவ்வளவுதானா! என்ற எண்ணம் ஏற்பட்டவுடன் வாங்குவார்கள். பங்கின் விலை அவ்வளவா! என்ற எண்ணம் ஏற்பட்டதும் மீண்டும் விற்க ஆரம்பிப்பார்கள். இப்படித்தான் இந்த சூத்திரத்தின் மூலம் Down trend இயங்குகிறது. Uptrend-ல் நீங்கள் பார்த்த மூன்றாவது கோட்டுக்கும், Down trend-ல் நீங்கள் பார்க்கின்ற இந்த மூன்றாவது கோட்டுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. Uptrend-ல் காளை தன் காலால் மூன்றாவது கோட்டை தொடும் போதெல்லாம் பங்குகளை வாங்க வேண்டும். ஆனால் Down trend-ல் காளை தன் காலால் மூன்றாவது கோட்டை தொடும் போதெல்லாம் விற்க வேண்டும். இப்போது இதே விசயத்தை நடைமுறை உதாரணத்துடன் பார்ப்போம்:

எண் 1 உள்ள இடத்திலிருந்து எண் 2 உள்ள இடம் வரை பங்கின் விலையானது இறங்கியிருக்கிறது (இது நாம் வரைந்த முதலாம் கோடு) இந்த இடத்தில், இந்த பங்கை வாங்கலாம் என நினைத்திருந்தவர்கள் அட இந்த பங்கின் விலை அவ்வளவுதா! என்ற ஆச்சரியத்தோடு வாங்க ஆரம்பிப்பார்கள். இதனால் பங்கின் விலையானது எண் 3 உள்ள இடம் வரை அதிகரிக்கும் (இது நாம் வரைந்த இரண்டாவது கோடு) இப்போது காளை படத்தில் வரைந்ததைப்போல இரண்டு கோடுகளை வரைந்து, அந்த இரண்டு கோடுகளையும் இணைக்கும் விதமாக மூன்றாவது கோட்டை வரைந்து காளை செல்வதற்கான பாதையை உருவாக்குங்கள்.

இதோ மூன்றாவதாக வரைந்த கோட்டை அடிப்படையாக வைத்துக்கொண்டு இந்த பங்கின் விலை பயணிப்பதை கவணியுங்கள் எண்கள் 2, 4, 6 ஆகிய இடங்களில் வாங்க விரும்புபவர்களுக்கு இதன் விலை அவ்வளவுதானா என்ற ஆச்சரியம் ஏற்படும் அந்த ஆச்சரியம் அவர்களை வாங்கத்தூண்டும். பின்னர் மூன்றாவது கோட்டை ஓவ்வொரு முறை பங்கின் விலை தொடும் போதும் (எண்கள் 3, 5) அவ்வளவு அதிகரித்துவிட்டதா என ஆச்சரியம் ஏற்படும் அந்த ஆச்சரியம் அவர்களை விற்கத்தூண்டும். இதுதான் Down trend இயங்கும் முறை. எனவே பங்கின் விலை இறங்கும் போது நீங்கள் வாங்கியிருந்தால் அதன் விலை மூன்றாவது கோட்டை தொட்டதும் விற்றுவிட வேண்டும். பின்னர் மீண்டும் மலிவான விலையில் கிடைத்தால் வாங்கி மீண்டும் மூன்றாவது கோட்டை தொட்டதும் விற்க வேண்டும்.

மழைக்காலம் மட்டுமே விவசாயத்திற்கு ஏற்றது என்ற எண்ணம் தவறானது. கோடைக்காலத்திலும் சில பயிர்கள் குறைந்த தண்ணீரைப் பெற்றுக்கொண்டு வளரும். எனவே இந்த பருவத்தில்தான் விவசாயத்தில் ஈடுபடுவேன் என்று இறுமாப்போடு இருக்காமல் பருவத்திற்கு ஏற்ற பயிர்களை பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபட வேண்டும். நாம் முயற்சித்தால் Uptrend மட்டுமல்ல Down trend-டிலும் பணம் சம்பாதிக்கலாம். அதற்கு தேவை காலத்திற்கு ஏற்ற சிந்தனை அவ்வளவுதான். அடுத்த வாரம் சந்திப்போம்.

தொடரும்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

s
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</