வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. எழுத்தாளர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்த முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 
 

தொடர் பற்றி
---------------------


தமிழ் எழுத்தாளர்களை பற்றிய முழுமையான தொகுப்பை உருவாக்குவது என்பது இமைமுடியை கட்டி இமயமலையை இழுப்பதற்கு ஒப்பாகும். இந்த பேருண்மை புரிந்தும் நாங்கள் இத்தகைய ஒரு முயற்சியில் இறங்கியிருப்பதற்குக் காரணம், எவ்வித சார்பும் அற்று இதுவரை இதற்கான முன்முயற்சிகள் தொடங்கப்படவில்லை என்ற ஆதங்கம் தான். இதுவரை நிகழ்ந்துள்ள தொகுப்பு முயற்சிகள் ஏதேனும் ஒரு துறை சார்ந்தோ, பிரிவு சார்ந்தோ, அல்லது ஒரு இசம் சார்ந்தோ மட்டுமே நடந்துள்ளன. நாங்கள் எந்த இசத்துக்குள்ளும் சிக்காதவர்கள். இப்பணி தமிழின் செழுமையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கான சிறிய தொடக்கப்புள்ளி. படைப்பாளிகளுக்குள்ளான பகிரதலுக்கும், படைப்பு மேம்பாட்டுக்கும் இது உதவக்கூடும்.

இதுவும் பல காரணங்களால் சர்ச்சைக்குள்ளாகலாம். ஆனால் தவறுகள் சுட்டப்படுமானால் அவைகளை திருத்திக்கொள்வதில் நமக்கு எந்த பிரச்னையும் இருக்கப்போவதில்லை. கூடுமானவரை அத்தகைய சூழல் ஏற்படாத வண்ணம் உழைக்க சித்தமாக இருக்கிறோம். இது நீண்டகால வேலை. உங்களின் விமர்சனங்கள் இப்பணியை மேம்படுத்தவும், எங்களை ஊக்கப்படுத்தவும் உதவும்.

மூன்று பிரிவாக எழுத்தாளர்களை வரிசைப்படுத்த திட்டமிட்டுள்ளோம். 1. பாரதிக்கு முன்னான எழுத்தாளர்கள். 2 பாரதிக்கு பின்னான எழுத்தாளர்கள். 3. சமகால எழுத்தாளர்கள். தொடக்கத்தில் வரிசைப்படுத்துவதில் சில தவறுகள் நேரலாம். ஆனால் எதிர்காலத்தில் உன்னதமான வெளிப்பாடாக இது அமையும் என்று நம்புகிறோம். அதைக் காலமும், வாசகர்களும் தான் தீர்மானிக்கப் போகிறார்கள்.

 

 
     
     
     
   
எழுத்தாளர்கள்
1
 

ஆசிரியர் பற்றி

முடச்சிக்காடு புதியபாரதி

எழுத்தால் இந்த சமூகத்தை புணரமைக்க முடியும என்று நம்பும் இளம் பத்திரிகையாளர். பெரும் பின்புலம் இல்லாத ஒரு கிராமத்தில் இருந்து பலத்த பொருளாதார நெருக்கடிகளில் இருந்து இவரை தற்காலிகமாக மீட்டுள்ளது சென்னை மாநகரம். அரசியல் ஈடுபாடு மிக்கவர். சுற்றுச்சூழல் ஆர்வலர். தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்பட்ட தஞ்சை மாவட்டத்தில் பிறந்த இவர், இயற்கை வேளாண்மை பற்றி விழிப்புணர்வு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இவரது கவிதைகள் "நாங்களும் சில பூக்களும்" என்ற பெயரில் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. 'கூடாரம்' என்ற பெயரில் இலக்கிய இதழ் நடத்திய அனுபவமும் உண்டு. தமிழின் பிரதான வார இதழில் 2 தொடர் கட்டுரைகள் எழுதியுள்ளார். அந்தக் கட்டுரைகள் நூலாக வரவுள்ளன. இருளர்கள், நரிக்குறவர்கள் உள்ளிட்ட விழிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கைநிலை, அவர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் பற்றி ஆய்வு செய்து வரும் இவர் அது பற்றிய நூலொன்றை விரைவில் வெளியிட இருக்கிறார். தமிழக ஆறுகளின் இயற்கைச்சூழலும், இப்போதைய இழிநிலையும என்றொரு நூலும் தயாராகி வருகிறது. சென்னையின் பிரதான கானா பாடகர்களில் ஒருவரான ' மரணகானா விஜியின்' சர்ச்சைக்குறிய வாழ்க்கை வரலாறை தொகுத்து "சாக்கடை சரித்திரம்" என்ற பெயரில் நூலாக வெளியிட இருக்கிறார்.

 
   
   
  ---------------------------------  
 

புதுமைப்பித்தன்

உலகின் சிறந்த சிறுகதை ஆசிரியர்கள் எவரோடும் சமமாக வைத்துப் பேசப்படக்கூடிய எழுத்து புதுமைப்பித்தனுடையது. திருநெல்வேலியில் 1906&ல் பிறந்த இவரது பெயர் விருத்தாசலம். முதல் கதை, மணிக்கொடி இதழில் 1934\ம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு தொடர்ந்து பதினாலு ஆண்டுகள் சிறுகதை, கவிதை, நாடகம், சினிமா, அரசியல் கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கதைகள் என பன்முகத் தன்மைகொண்ட கலைஞனாக விளங்கினார். இவரது கதைகளை தமிழ்வாழ்வின் நாடித் துடிப்புகள் எனலாம். கடவுளைக்கூட காபி கிளப்புக்கு அழைத்துச் செல்லும் அபூர்வமான பகடி கொண்ட எழுத்து புதுமைப்பித்தனுடையது. காசநோய் தாக்கி 42 வயதில் மரணமடைந்த இந்த அபூர்வ கலைஞன், புதிய தமிழ்ச் சிறுகதைகளுக்கு மூலவித்தாக தனது படைப்புகளை விட்டுச் சென்றிருக்கிறார்.

 
  ---------------------------------  
  ல. ச. ராமாமிர்தம்  
 

லா.ச.ரா.வின் முதல் கதை 18வது வயதில் வெளியானது. லா. சா. ராமாமிர்தம் ஆரம்பத்தில் சிறுகதைகள் எழுதிவந்த அவரை அவருடைய 50-வது வயதில் சென்னை வாசகர் வட்டம் "புத்ர" என்ற நாவல் எழுத வைத்தது. அவருக்கு 1989-ல் "சாகித்ய அகாதெமி விருது" பெற்றுத் தந்த சுயசரிதை ""சிந்தாநதி தினமணி கதிரில் தொடராக வந்தது.

லா.ச.ரா.வின் படைப்புகள் பல இந்திய மற்றும் அயல் மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட "மஹஃபில்", பெங்குவின் நிறுவனத்தார் வெளியிட்ட "நியூ ரைட்டிங் இன் இந்தியா" செக் மொழியில் அவரை மொழியாக்கம் செய்த கமீல் ஜீவலபில் என்ற தமிழ் ஆய்வாளர் சுதந்திர இந்தியாவின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக லா.ச.ரா.வைக் கருதினார். அவருடைய "பாற்கடல்" என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள். அவருடைய "புத்ர" மற்றும் "அபிதா" நாவல்கள் மொழிநடையால் தனித்துச் சிறந்து விளங்கும். கட்டுரை நூல் "சிந்தாநதி" அவருடைய இயல்பான குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில் எழுதப்பட்டது.

 
  ---------------------------------  
  சி.சு.செல்லப்பா  
     
 

சி.சு.செல்லப்பா தமிழின் சிறப்புவாய்ந்த எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். எழுத்து என்ற பத்திரிக்கையினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா.

பல நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர் செல்லப்பா. சிறந்த விமர்சகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட் சாமிநாதன், பிரமீள், ந.முத்துசாமி மற்றும் பல எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பாவினால் ஊக்குவிக்கப்பட்டவர்கள். தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படும் வாடிவாசல், சுதந்திர தாகம் போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா. காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர்.

 
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  எழுத்தாளர்கள் எழுத்தாளர்கள் வாயில்

டி.எஸ். சொக்கலிங்கம்

முடச்சிக்காடு புதியபாரதி,  ilamurasu@gmail.com  

'பேனா மன்னன்' என்று இலக்கியம் மற்றும் இதழியல் உலகத்தால் அழைக்கப்பட்ட டி.எஸ்.சொக்கலிங்கம் தன் இறுதிக்காலம் வரையிலும் போராளியாகவே வாழ்ந்தவர், சுதந்திரப் போரில் சொக்கலிங்கம் தனது எழுத்தால் எழுப்பிய கனல், போராட்டத்தை நின்று கனன்றெரியச் செய்தது. சொக்கலிங்கத்தின் போராட்ட வாழ்க்கையை ஆங்கிலேயர்களுக்கு எதிராக, வணிக இதழ்களின் சுரண்டலுக்கு எதிராக என இரண்டு வகையாக பிரித்து அணுகலாம். காந்திய அரசியலில் தீவிர பற்றுக்கொண்ட சொக்கலிங்கம், 1920களில் தனது 21 வயதில் இதழியல் துறையில் காலடி வைத்தார்.

காந்தியின் அறைகூவலை ஏற்று பல்வேறு போராட்டங்களில் முதன்மை பெற்று சிறை சென்றார். இதழியல்துறை வணிகமாக தலையெடுக்காத காலக்கட்டத்தில், அத்துறைக்கு வந்த சொக்கலிங்கம் வெளிப்படையாகவும், நேரடியாகவும் ஒரு கருத்தை சொல்லும் இதழியலின் புதிய வடிவத்திற்கு முன்னோடியாக திகழ்ந்தார். சேலம் வரதராஜூலு தொடங்கி நடத்திவந்த தமிழ்நாடு இதழில் தான் சொக்கலிங்கத்தின் இதழியல் அறங்கேற்றம் நடந்தது. தமிழ்நாடு இதழில் தன்னை இணையற்ற பத்திரிகையாளராக அடையாளப்படுத்திக் கொண்ட சொக்கலிங்கம், வரதாராஜூ நாடுயுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தமிழ்நாடு இதழில் இருந்து வெளியேறினார். பின்னர், 'காந்தி' என்ற வாரம் இருமுறை இதழை தொடங்கினார்,. பின்னர், வ.ரா, சீனிவாசன் ஆகியோரோடு இணைந்து மணிக்கொடி இதழை தொடங்கினார்.

ஓரிரு வருடங்களில் மணிக்கொடி இதழில் இருந்து வெளியேறி, எழுத்தாளர் சதானந்த் தொடங்கிய தினமணி இதழின் முதல் ஆசிரியராக பொறுபேற்றார்,

'இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு தமிழரும் தன்னைத் தமிழர் என்று பெருமையுடன் கூறிக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டுக்கு வெளியே சென்றால் தன்னை இந்தியன் என்று பெருமை பொங்க அழைத்துக் கொள்ள வேண்டும். தமிழர்கள் என்றால் தமிழ்நாட்டில் பிறந்த தமிழ்நாட்டை தன் வசிப்பிடமாகக் கொண்ட இந்து, முஸ்லீம், கிறித்தவர்கள் மற்றும் தமிழ்பேசும் அனைவரும் தான்' என்று முதல்நாள் வெளிவந்த தினமணியின் தலையங்கத்தில் எழுதி தினமணியின் தரத்தையும், கொள்கையையும் திறன்பட வெளிப்படுத்தினார் சொக்கலிங்கம் சுதந்திரப் போராட்டக் காலத்தில் விடுதலைப் போராளிகளின் குரலாகவும், ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைக்கு எதிரான ஆயுதமாகவும் தினமணியில் தலையங்கங்களை தீட்டினார் சொக்கலிங்கம்.

சொக்கலிங்கம், தினமணியில் ஆசிரியராக இருந்த தருணத்தில், ஏ.என்.சிவராமன், புதுமைபித்தன், சி.சு.செல்லப்பா, கு.அழகிரிசாமி உள்ளிட்டோர் துணை ஆசிரியர்களாக இருந்தனர். பத்திரிகையாளர் சதானந்தத்தால் தொடர்ந்து தினமணியை நடத்த முடியாமல் போனதன் காரணமாக, கோயங்கோ குழுமத்திற்கு கைமாறியது அந்நாளிதழ். அதன்பிறகு நிர்வாகத்தில் கடைபிடிக்கப்பட்ட நெருக்கடியான அணுகுமுறைகள், ஆசிரியர் குழுவை நிர்வகித்த விதம் ஆகியவை பிடிக்காமல் தினமணியில் இருந்து வெளியேறினார் சொக்கலிங்கம்,. புதுமைபித்தன், சி.சு.செல்லப்பா, கு.அழகிரிசாமி ஆகியோரும் சொக்கலிங்கத்துடனே வெளியேறினர். பின்னர் தினசரி என்ற நாளிதழை தொடங்கினார். வியாபாரத்துக்காக சமரசங்களை கையாளாமல், நேர்மிகு பார்வையுடன் தினசரியை நடத்தியதால் சிறிது காலத்துக்கு மேல் அந்த இதழ் தாக்குப்பிடிக்காமல் திணறியது. ஒரு கட்டத்துக்கு மேல் நின்று போனது. ஆனாலும் மனம் தளராத சொக்கலிங்கம், ஜனயுகம், பாரதம், நவசக்தி உள்பட பல பத்திரிகைகளை நடத்தினார்.

சொக்கலிங்கம் போற்றத்தகுந்த பத்திரிகையாளராகவும், சிறந்த தேசபக்தராகவும் திகழ்ந்ததோடு, தனக்குக் கீழ் பணியாற்றிய பிற பத்திரிகையாளர்களின் நலன் குறித்தும் மிகவும் கவலைப்பட்டவர்,.பிற படைப்பாளர்கள் மீதான சுரண்டலுக்கு எதிராக குரல் எழுப்பினார், இதழியல் மற்றும் இலக்கியத்துறையில் தொழிற்சங்க மனோபாவத்துடன் இயங்கினார்.

எழுத்தாளர்களின் பதிப்புரிமை, ஊதியம் போன்றவற்றை முறையாகவும், முழுமையாகவும் பெறுவதற்காக நிர்வாகங்களுடன் போராடினார். இவர் தினமணியில் பணியாற்றிய நேரத்தில், ஒரு தயாரிப்பாளர் ஒரு பிரபல எழுத்தாளரின் கதையை திருடி திரைப்படமாக்கி ஏமாற்ற முயன்றதை அறிந்து, அக்கதையை தினமணியில் தொடராக வெளிவரச்செய்து பதிப்புரிமையை அந்த எழுத்தாளருக்கே பெற்றுத்தந்தார்.

புதுமைப்பித்தன் என்ற எழுத்தாளன் தமிழ் இலக்கிய உலகுக்கு கிடைக்க முழுப்பெரும் காரணம் சொக்கலிங்கம் தான். தினமணி, மணிக்கொடி, காந்தி உள்ளிட்ட தான் பணியாற்றி அத்தனை இதழ்களிலும் புதுமைபித்தனுக்கு வாய்ப்பளித்தார்.

எந்த இதழில் பணியாற்றினாலும், பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர் சுதந்திரத்தை சிறிதும் விட்டுக்கொடுக்காமல் செயலாற்றியனார். சிறந்த இதழியலாளராக மட்டுமில்லாமல் சொக்கலிங்கம் சிறந்த படைப்பிலக்கி.யவாதியாகவும் திகழ்ந்தார். லியோ டால்ஸ்டாயின் புகழ்பெற்ற நாவலான வார் அன்ட் பீஸ் நாவலை போரும், அமைதியும் என்ற பெயரில் தமிழாக்கம் செய்தது மிகச்சிறந்த இலக்கியப்பணியாகும். இது தவிர, சிறுகதை, நாவல், கவிதை என இலக்கியத்தின் அத்தனை பரிமாணத்திலும் வெகுசிறப்பாக பங்களித்துள்ளார் சொக்கலிங்கம்,.

எழுத்தாளர்களின் ரத்தத்தை உறிஞ்சும் பதிப்பகங்களை அரை நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டித்தவர் சொக்கலிங்கம். எழுத்தாளரிடமே படைப்பையும், பணத்தையும் பெற்றுக்கொண்டு கொஞ்சமே கொஞ்சமாக புத்தகங்களை வழங்கிவிட்டு கொள்ளைக்காசு பார்க்கும் பதிப்பகங்கள் இன்றைக்கும் இருக்கின்றன. இன்றைக்கும் சொக்கலிங்கத்தின் குரலுக்கு தேவையிருப்பது குறிப்பிடத்தக்கது.

உதவி ஆசிரியர்களின் ஊதியக்குறைபாடு காரணமாக தினமணியில் இருந்து வெளியேறிய சொக்கலிங்கம், தனது ராஜினாமா குறித்து எனது ராஜினாமா என்ற நூலை எழுதினார். இதற்கு பதிலளிக்கும் விதத்தில் தினமணி நிர்வாகம் தன்னிலை விளக்கப் பிரசுரம் ஒன்றை வெளியிட்டது. சொக்கலிங்கத்துக்கு பின்னர் தினமணி ஆசிரியர் பொறுப்புக்கு அவரின் முதன்மை சீடரான சிவராமன் வந்தார்,

தினமணியில் இருந்து வெளியேறிய சொக்கலிங்கம், பிறிதொரு நேரத்தில் மீண்டும் தினமணிக்கு பணிக்கு வர நேர்ந்த சூழலில் தினமணி நிர்வாகம் அவருக்கு அலுவலக நிர்வாகத்தில் இடம் அளித்தது குறிப்பிடத்தகுந்தது.

டி.எஸ்.சொக்கலிங்கம் மணிமலர், பேனா மன்னர் சொக்கலிங்கம் (டி.ஜி.ஏகாம்பரம்), டி.எஸ்.சொக்கலிங்கம்-அரசியல், இதழியல் (பா.மமதிவாணன்) உள்ளிட்ட பல நூல்கள் சொக்கலிங்கத்தின் இதழியல், சமூக வாழ்க்கைக்கு சான்றாக உள்ளன.

தன் இறுதிக்காலம் வரையிலும் போராளியாக வாழ்ந்து மறைந்த சொக்கலிங்கம், இதழியல், இலக்கியம் மற்றும் சமூக மறுமலர்ச்சிக்கு குறிப்பிடத்தகுந்த பங்காற்றிய மாமனிதர் என்றால் மிகையில்லை..

தொடர்புடைய சுட்டிகள்: 

http://www.kalachuvadu.com/issue-81/mathippurai02.htm


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</