வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. நூல்வெளி பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 
 

தமிழில் அச்சேறிய முதல் நூல்

லிஸ்பன் நகரில் 1554இல்
அச்சிடப்பட்ட கார்த்தில்யா (Carthilha) என்ற நூலே முதல்
தமிழ் நூல் என்பார். இந்நூலில் தமிழ் எழுத்துகள்
கையாளப்படாமல் உரோமருடைய எழுத்துகள் தமிழ் ஒலிகளைக் குறிப்பதற்குக் கையாளப் பெற்றிருந்தன. இது 36 பக்கங்களை உடையது. இந்த உரைநடை நூலில்
கத்தோலிக்கக் கிறித்தவ சமயத்தின் வழிபாட்டு முறைகளும்,
செபங்களும் அடங்கியுள்ளன.


http://www.tamilvu.org/courses/
diploma/p203/p2034/html/
p2034661.htm
-----------------------------------------


ஒரு அரவாணியின் முதல் தமிழ் நாவல்


தமிழ்ப் புனைகதை வெளியில் ஒரு முக்கிய நிகழ்வாக, பிரியாபாபு எழுதிய 'மூன்றாம் பாலின் முகம்' என்று ஒரு நாவல் வெளிவந்திருக்கிறது. மிக அண்மையில் வெளிவந்த இதுவே அரவாணி ஒருவரால் எழுதப்பட்ட முதல் தமிழ் நாவல் என்கிற ஒரு ஆவணத்துக்குரிய பெருமையைப் பெறுகிறது. ஆண்களும் பெண்களும் மட்டுமே அடர்ந்த கதை வெளியில் அரவாணிகள் பிரவேசிப்பது மிகவும் ஆரோக்கியமான சூழல் என்பதோடு, சகல மனித உரிமைகளோடும் கூடிய நிகழ்வாக இது விளங்குகிறது. பிரியா பாபு ஏற்படுத்தி இருப்பது ஒற்றையடிப்பாதை எனினும், பாதை.

--பிரபஞ்சன்

http://www.uyirmmai.com/
Uyirosai/ContentDetails.aspx?
cid=1627


-----------------------------------------

சித்திரப்பாவை

அகிலன் சித்திரப்பாவை நூலுக்காக, 1975ஆம் ஆண்டின் ஞான பீட விருது பெற்றார். இவ்விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் இவரேயாவார்.

-----------------------------------------

 

 

 
     
     
     
   
நூல்வெளி
1
 
 
     
     
  -------------------------------  
 

பிரதாப முதலியார் சரித்திரம் — மாயூரம் வேதநாயகம் பிள்ளை.

இது முதல் தமிழ் நாவல் எனப்படுகிறது. மேற்கத்திய ‘ரொமான்ஸ் ‘ வகை எழுத்தை முன் மாதிரியாகக் கொண்டது. மேலோட்டமான விகடத் துணுக்குகள், (இந்தக் கடிதம் கிடைக்கவில்லை என்றால் பதில் எழுது. வேறு கடிதம் அனுப்புகிறேன்) அனுபவ விவரசனகள், நல்லு ஆகியவற்றுடன் ஒரு நிலப்பிரபுவின் கதையை, சுயசரிதை போல, கூறுகிறது.

1879ல் பிரசுரமாயிற்று.

 
  --------------------------------  
  சிறந்த தமிழ் நாவல்கள்.  
 

http://www.jeyamohan.in/?p=84

 
  --------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  நூல்வெளி TS நூல் அறிமுகம் / திறனாய்வு



தேகம் - தலைமுறை தாண்டி நிற்கும் இலக்கியம்


புதியபாரதி  

தர்மாவைப் பற்றி அவ்வளவு எளிதில் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. பீக்காட்டுக்குள் ஓடித்திரிந்து பன்றி பிடித்திருக்கிறான். பீ அள்ளிய வீடுகளில், எஞ்சியிருக்கும் கெட்டுப்போன சாப்பாட்டை கேட்டு வாங்கித்தின்று ஒத்துக் கொள்ளாமல் வாந்தி எடுத்திருக்கிறான். புடுக்கறுக்கும் போது, பன்றியின் சத்தத்தைக் கேட்டுப் பயந்து எக்காலத்திலும் பன்றியாக மட்டும் ஜென்மம் எடுக்கக்கூடாது என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டிருக்கிறான்.. ஆங்காங்கே அடிவாங்கி தவிக்கும் தர்மாவுக்கு நீதி சொல்கிற ஆலோசனை பிடித்திருக்கிறது. மாடு மாதிரி நம் உடம்பும் அடியை தாங்கும் என்ற நீதியின் வார்த்தையை வேதவாக்காக எடுத்துக்கொண்டு மாடுகளின் வாலை அறுத்து அதை சூப் வைத்து மண்டிக் குடித்திருக்கிறான். பஸ்சில் பயணம் செய்து பெண்களின் பின்னால் நின்று கொண்டு பிருஷ்டத்தைத் தேய்த்து சேலையில் கஞ்சியை வடித்திருக்கிறான். அவ்விதம் கஞ்சியை அப்பிக்கொண்டிருக்கும் மனிதர்களிடம் ஜேப்படி செய்திருக்கிறான். கஞ்சா கடத்தியிருக்கிறான். பணக்கார வீட்டுப் பெண்களை கரைக்ட் செய்து ஒதுங்கியிருக்கிறான். நாற்பது பேரைப் "போட்ட" செலினை, பித்துப்பிடிக்க வைத்து பைத்தியமாக்கி தற்கொலை செய்து கொள்ளச் செய்யும் அளவுக்கு லீலைகள் செய்திருக்கிறான். நாய்சேகரின் கூட்டத்தில் கூலிப்படையாக சேர்ந்து கொலை செய்திருக்கிறான். இன்பம் கூடும் என ஒரு நண்பன் சொன்ன வார்த்தையை நம்பி தன் ஆண்குறியில் ஆறு வளையங்களை மாட்டிக்கொண்டிருக்கிறான். இவை எல்லாவற்றையும் விட ஆகச்சிறந்த எழுத்தாளனாகவும் இருக்கிறான்.

டார்ச்சர் செய்வதிலும் கைதேர்ந்தவன் தர்மா. தர்மா டார்ச்சர் செய்வதே தனித்துவமானது. டார்ச்சர் செய்வதற்கான வழிமுறைகளை எல்லாம் கட்டுடைத்து, புதிய வகையில் தர்மா செய்யும் டார்ச்சர்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றன. டார்ச்சரை தொடங்குவதற்கு முன்பு நிர்வாணமாகி விடுவான். பிறரது உடலை டார்ச்சர் செய்யும் போது இவனது குறி விரைத்துக் கொள்வதுண்டு. அதில் வக்கிரமான இன்பத்தை சுகிக்கிறான். டார்ச்சர் செய்யும்போது முகத்தை கருப்புத் துணியால் மூடிக்கொள்கிறான். டார்ச்சர் செய்வது இன்னார் தான் என்று தெரிந்தால் உயிருக்கு ஆபத்து. இது டார்ச்சரிசத்தில் மிக முக்கியக்கூறு ஆனால் தர்மாவுக்கு உயிர் பயம் இல்லை. டார்ச்சரை கலையாக நேசித்து செய்கிறான். ரசிக்கிறான். அதிக கோபம் வரும்போது அந்த கருப்புத்துணியையும் அவிழ்த்து விடுகிறான். டார்ச்சருக்கு உள்ளாகுபவனை சரியான இலக்கு நோக்கி கொண்டு செலுத்துகிறான்.

தர்மா அனாவசியமாக எல்லோரையும் டார்ச்சர் செய்வதில்லை. துரோகம் செய்பவர்கள் தான் அவனது கொடூரமான டார்ச்சருக்கு ஆளாகுவார்கள்.

நாய் பாஸ்கரின் மைத்துனன் மகளை கற்பழித்து ஆசிட் ஊற்றி சுய நினைவு இழக்கச் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகனை தர்மா டார்ச்சர் செய்வது ரசனைக்குறியதாக இருக்கிறது. கலை சிருஷ்டி மிகுந்த நாடகத்தைப் போல திட்டமிட்டு செய்கிறான். பின்னணியில் ரிச்சர்ட் ஸ்ட்ராஸின் ஆப்பரா இசை ஒலிக்க,. Ôஇந்த சாமான் தானே அந்த வேலையைச் செய்ததுÕ என்று கேட்டபடியே அவனுடைய ஆண்மையின் துளையில் ஊசியை விட்டு இழுக்கும் போதும், மூக்கின் உள்ளே கீழிருந்து குத்தி மேலே எடுக்கும்போதும், ஆண்குறியில் ஊசியால் குத்தி துளையிட்டு வளையம் மாட்டும் போதும் நம் ஆழ்மனதில் கருப்புத்துணியில் முக்காடிட்டு வைத்திருக்கிற வக்கிரம் துணியை விலக்கிகொண்டு எட்டிப் பார்க்கிறது.

மலம் கழித்து, அதை சிறுநீருடன் சேர்த்து கலந்து புனல் வைத்து இன்ஸ்பெக்டரின் மகனின் வாயில் ஊற்றும்போது தர்மா கேட்கிறான். "எத்தனை காலம் எங்க வாயில ஊத்துனிங்க.. இப்போ நீ குடிடா.."

இவ்வளவு வல்லமை மிக்க தர்மாவுக்கு சிறு வயதில் தனது "சாமான்" சரியாக வேலை செய்ய வில்லையோ என்ற அச்சம். 15 வயதில் ஆங்கிலோ இந்தியன் கிழவியை புணர்ந்தபோது அவள் செய்த எந்த வித்தைக்கும் பலனில்லாமல் போனது அவன் அச்சத்தை அதிகப்படுத்தியது. அந்த பயத்திலேயே ஒரு பன்றிக்குட்டியையும் புணர்ந்து பார்க்கிறான். ஆனால் பன்றிக்குட்டி கதறும் அளவுக்கு அதை சிதைக்க முடிகிறது. தர்மாவிடம் உள்ள மிகப்பெரிய பிரச்னை இதுதான். தர்மா அணுகிய அத்தனை பெண்களும் அவனிடம் புரிந்து கொள்ள முடியாத பிரச்னையும் அதுதான்.

ஒரு குழந்தையைப் போல முகத்தை வைத்துக் கொண்டிருக்கும் சாருவின் பிம்பமாக தர்மாவை நோக்கும் போது, கொஞ்சம் அதிர்வாகத் தான் இருக்கிறது. ஆனால், நீங்களும், நானும் தர்மாவாகிப் போகும்போது சாரு விலகிப்போகிறார்.

எனது பாதி-சுயசரிதை என்று சாருவாலேயே அறிவிக்கப்பட்ட அவரின் அண்மைக்கால வெளியீடான தேகம், பல்வேறு அதிர்ச்சிகரமான தருணங்களை பதிவு செய்கிறது. அதன் நிறை, குறைகள் விமர்சகர்களின் பண்புக்கேற்பவும், தன்மைக்கேற்பவும் அலசப்படுகின்றன. என்னைப்போன்ற நவீன இலக்கியத்தின் தொடக்கநிலை வாசிப்பாளர்களுக்கு உள்ள வழி, இந்த புத்தகத்தை வாங்காமல், வாசிக்காமல் தவிர்த்துவிடுவது தான். ஆனால், வாசித்துப் பார்ப்பது என்று முடிவெடுத்து விட்டால் நீங்களும் இந்த நாவலின் பாத்திரமாக மாறி வக்கிரத்தை ருசிக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டு விடும்.

சாருவைப் பொறுத்தவரை ஜீரோ டிகிரியிலேயே அவர் தன் இலக்கைத் தொட்டு விட்டார். தேகமும் சரி, ராசலீலாவும் சரி, ஜீரோ டிகிரியின் உள்ளடக்கத்தோடு ஒப்பிடும்போது, இறங்கு வரிசையாகவே படுகிறது.

சாருவுக்கு "மேட்டர் ரைட்டர்" என்றொரு பிம்பம் தெரிந்தோ, தெரியாமலோ இருக்கிறது. நான் வாசிப்பற்றவனாக இருந்த தருணத்தில் சாருவைப் பற்றி எனக்கும் அப்படிப்பட்ட எண்ணம் இருந்தது. அவரின் கட்டுரைகளைக் கூட படிப்பதைத் தவிர்த்திருக்கிறேன். அவற்றை எல்லாம் ஆகப்பெரிய இழப்புகளாக இப்போது உணர்கிறேன்.

தமிழில் கொண்டாடப்படும் பெரும்பாலான எழுத்துக்கள் வெறும் ஒரு வட்டத்துக்குள்ளான பாவனைகளாகவே முடிந்துவிடுகிறது. கிராமங்களில் நான்கு வார்த்தைக்கு ஒரு வார்த்தை புண்டை என்றோ, கூதி என்றோ பகிரப்படுவதை நாட்டுப்புற இலக்கியம் செய்பவர்கள் கூட தீண்டதகாத அம்சமாக கருதி தள்ளி வைத்துவிடுகிறார்கள். வாமு.கோமு போன்ற ஒருசிலர் மட்டுமே நேர்மையாக எழுதுகிறார்கள். பாலியல் பற்றி பேசினாலோ, எழுதினாலோ அது அபத்தம், தேசதுரோகம் என்கிறது பொதுப்புத்தி. "மேட்டர் ரைட்டர்" என்று இரண்டு வார்த்தையில் அடையாளப்படுத்தி தள்ளிவைத்து விடுகிறோம். ஆனாலும் சரோஜாதேவியும், மருதமும், நளீனாவும் இங்கு தான் அதிகம் விற்பனை ஆகின்றன. தமிழகத்தில் உள்ள பாத்ரூம்களுக்கும், டாய்லெட்டுகளுக்கும் வாய் இருந்தால் அவை சொல்லும் ஆயிரம் கதைகள்.

கிராமப்புறங்களில் தண்ணீர் பிடிக்கும் போது, குப்பை கூட்டும்போது, கொடுக்கல் வாங்கல் தகராறுகளின் போது நடக்கும் சண்டைகளில், தூமையக் குடிக்கி.. என்று தொடங்கி பலவிதமாக சாமான்களை உருவகப்படுத்திப் பெண்கள் பேசிக்கொள்வது வெகு சாதாரணம். தெரிந்தோ, தெரியாமலோ அந்த சண்டைகளில் தான் கிராமத்தின் ஆத்மா இருக்கிறது. அந்த வார்த்தைகள் ஆணில் இருந்து பெண் வரைக்கும் குழந்தையில் இருந்து பெரியவர் வரைக்கும் எல்லோரின் நாவிலும் தர்க்கமாடும். ஆனால், நாகரீகம் என்று முகப்பூச்சு கொண்டோர் செய்யும் பாவனைகள் அபத்தமானவை.

பழங்குடி மக்கள் பற்றி ஆய்வுசெய்து வருபவன் நான். சில பழங்குடிகளில் ஒரு பெண்ணை பல சகோதரர்கள் மணம் முடித்துக்கொள்ளும் வழக்கம் இருக்கிறது. ஜவ்வாது மலையில் வசிக்கும் சில பழங்குடிகள், முதலில் உறவு வைத்துப் பார்த்துக்கொண்டபிறகு, அதில் திருப்தி இருந்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்கிறார்கள். கரூரை ஒட்டி உள்ள பகுதிகளில் வசிக்கும் ஒரு பழங்குடி சமூக மக்கள் மத்தியில் "ப்ரீ செக்ஸ் மூவ்மெண்ட்" இருக்கிறது. இதுபற்றி, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் அ.கா.பெருமாளிடம் பேசிக்கொண்டிருந்தபோது, திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் 50, 60 வருடங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் ஒரு திருவிழாவின் போது ப்ரீ செக்ஸ் வைத்துக்கொள்வதுண்டு என்றார். இதுபற்றியெல்லாம் இந்த பாவனைக்காரர்கள் அறிந்தால், "ஐயோ இதென்ன காட்டுமிராண்டித்தனம்" என்பார்கள். ஆனால், அந்த பழங்குடிகள் மத்தியில் எயிட்ஸ் தாக்குதல் இல்லை. அங்கு கற்பழிப்புக் குற்றங்கள் இல்லை. உரிமையுள்ளவள் தவிர மற்ற பெண்களை மனதுக்குள் கற்பழிப்பதில்லை. பெண்களின் மாராப்பு ஒதுங்கினால் நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு அங்குள்ள ஆண்கள் பார்ப்பதில்லை. எல்லோரும் மனம் ஒத்து வாழ்கிறார்கள். ஒரு பெண் கருவுற்ற பிறகு அந்தப் பெண்யாரை விரும்புகிறாளோ அவன் மட்டுமே தகப்பனாக இருந்து கடைமையாற்றுகிறான்.

இங்கே என்ன நிலை? நாளுக்கு பத்துக் குழந்தைகள் புதரில் வீசப்படுகின்றன. டாய்லெட்டில் போட்டுவிட்டு எஸ்கேப்பாகி விடுகிறார்கள். எத்தனை கற்பழிப்பு..? அண்மையில் சேலத்தில் ஒரு ஜோடி, வாடகைக்கு வீடு பிடித்து அந்த வீட்டில் தங்கள் மூன்று மாத கைக்குழந்தையைப் போட்டுவிட்டு எஸ்கேப்பாகி விட்டது. பல்வேறு கொலைச் சம்பவங்களுக்கும், மோசடிகளுக்கும் செக்ஸ் தான் பிரதான காரணமாக இருக்கிறது.

சென்னையில் மட்டும் ஆண்களை மட்டுமே எதிர்கொள்ளும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண் பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். நான் அறிந்த சிலர் சக ஆண்களோடு திருமண பந்தத்திலும் இருக்கிறார்கள்.

சரி, அதற்காக இதையெல்லாம் எழுத வேண்டுமா? அது அக்கிரமம் அல்லவா? புனிதத்தை கெடுத்து விடாதா?. இந்த உளவியலை எழுதுவதற்கும், ஆய்வு செய்வதற்கும் தமிழ்ச்சூழலில் யார் இருக்கிறார்கள். இன்றைக்கு திருநங்கைகள் பற்றி எவ்வளவு பேருக்கு விழிப்புணர்வு வந்திருக்கிறது. அது பிறப்பால் நேரும் பிறழ்வு என்பதை எத்தனை பேர் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இன்றைக்கும் சூடு போடுவதும், அடித்து வீட்டுக்குள் அடைத்து வைப்பதும் நிகழத்தானே செய்கிறது. இதற்கு எதிர்மறையாகத் தானே ஓருபால் ஈர்ப்பு கொண்டவர்கள் மாநாடு போட்டு தங்களை அடையாளப்படுத்தி அங்கீகாரம் கேட்கிறார்கள். இதுபற்றிய உளவியலை எழுதவந்தால், இதென்ன ஆபாசம் என்று கூப்பாடு போடுபவர்களுக்கும், சாருநிவேதிதாவின் இலக்கியத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவருடைய எழுத்து அடிமன உளவியல் சார்ந்தது. உண்மையானது. வாழ்க்கையின் இன்னொரு புறத்தை படம்பிடித்துக் காட்டக்கூடியது. எல்லோருக்கும் தர்மா இருக்கிறான். எல்லோருக்குள்ளும் நாய்சேகர் உண்டு.

"தேகம்" பேசும் எல்லாமும் இன்றும் நமக்கு முன்னும், பின்னும் நடக்கத் தான் செய்கின்றன. பேருந்தில் எந்த பெண்ணின் பெட்டெக்ஸ் கிடைக்கும் என்று அழையும் வக்கிரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்றுள்ள கார்பரேட் கலாச்சாரத்தில் புனிதமான காதல் எல்லாம் கேட்கத்தான் இனிக்கிறது. ஈ.சி.ஆரின் ரிசார்டுகள் எப்போதும் பிசியாகத் தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன. மெரினா பீச்சுகளிலும், பார்க்குகளிலும், அறைகளிலும் திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பாலியல் வீடியோக்கள் இணையங்களில் சர்வசாதாரணமாக பார்க்கக்கிடைக்கின்றன.

ஜனரஞ்சக இதழ்களின் வாசகர்களுக்கு இவற்றைக் காட்சிப்படுத்துவது பிடிக்காது. அவர்கள் எதையும் மனதால் உணர்பவர்கள். தொடை தெரிய உடை உடுத்திய நடுப்பக்க நடிகையின் உடையை மனதால் தூக்கிப் பார்க்க துடிப்பவர்கள். அவர்கள் முகமூடி 'டீசண்ட்' டானது. எந்த அவலமுமே அற்ற ஒரு சுப லோகத்தில் சஞ்சாரித்துக்கொண்டிருப்பதாக கற்பனை செய்து கொண்டு வாழ்பவர்கள்.

வன்மம் சார்ந்த மன உளவியலை சாரு அளவுக்கு வார்த்தைப்படுத்த இங்கே யார் இருக்கிறார்கள். எந்த இடர்பாடும் இல்லாமல் வாசகனை கதைக்குள் இழுத்துக்கொண்டு, அவனை வைத்தே கதையை நகர்த்துகிற பாங்கு அவருக்கு கிடைத்த வரம்.

"மைக்கேல் ஏஞ்சலலோவின் ஓவியத்தைப் பார்த்த ஒருவன் சொன்னானாம். இவ்வளவு வரையத் தெரிஞ்ச அந்த ஆளுக்கு கோமணமோ, ஜட்டியோ வரையத் தெரியாமப் போச்சி. புடுக்கெல்லாம் தெரியுதே.. என்று.." & அப்படி புடுக்கைத் தேடிப் பார்க்கிற ஆட்களுக்கு சாரு அம்மணமாகத் தான் தெரிவார்.

குண்டியடித்தலையும், சாமான் போடுவதையும் பற்றி பக்கம் பக்கமாக எழுதினாலும் இந்த ஆளுக்கு மட்டும் எப்படி இவ்வளவு பெண் ரசிகைகள் கிடைக்கிறார்கள். அவருடைய இணையத்தில் இடம்பெறும் கடிதங்களைப் படித்துவிட்டு இதெல்லாம் கற்பனைப் பாத்திரங்கள் என்று நான் கருதியதுண்டு. ஆனால், புத்தகச் சந்தையில் கூட சாருவைப் பார்த்து பொறாமையாக இருந்தது. சாருவிடம் பேசிக்கொண்டிருந்த அந்த ஊதாநிற சுடிதார் பெண்ணிடம் எவ்வளவு வெட்கம்..? பரிதவிப்பு?

தேகத்தைப் பொறுத்தவரை, தமிழின் மிக முக்கிய நாவல். தெள்ளிய, அதிர்வூட்டும் நடை. பாவனைகளை தகர்ந்தெரிந்து, வாழ்க்கையின் இருண்ட பக்கத்தில் நடக்கும் நிகழ்வுகளை அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டும் நுண்ணிய முயற்சி. தமிழ் எழுத்துச் சூழல் உலகளாவிய திசையில் நகர்ந்து கொண்டிருப்பதற்கு சாட்சி.

பஸ்சில் பயணிக்கும் பெண்களில் பெட்டக்சில் தேய்ப்பவர்கள், அடிவாங்காமல் தப்பிக்கும் நுட்பமறிந்த மனிதர்கள், ஜேப்படி செய்பவர்கள், பன்றி வளர்ப்பது, பன்றிக்கு கொட்டையறுப்பது, பன்றியை பிடிக்கும் வழிகள், மலத்தின் வகைகள் என நாவல் எங்கும் கெட்ட வாடை.. ரணம்.. ரத்தம். வெளியில் என்னதான் அலங்காரங்கள் செய்தாலும், தேகம் என்பது உண்மையிலேயே கெட்ட வாடைகளின் தேங்கிடம் தானே..!

என் பார்வையில் நாவலில் உள்ள குறைகள். டார்ச்சர் சம்பவங்களில் நிறைவில்லை. இன்னும் கொஞ்சம் விவரித்திருக்கலாம். அந்த நாற்பது பேரைப் போட்ட பெண்ணின் பைத்தியக்காரத்தனமான புலம்பல்கள் (பைத்தியமானவள் தான்) அளவுக்கு மேல் இருப்பது எரிச்சலூட்டுகிறது. அவசரக் கதியில் எல்லோரையும் நல்லவர்களாக்கி உலகின் அதிஉன்னதமான முடிவை வழங்கியிருப்பது சாருவின் பின்னடைவு. சில இடங்களில் எழுத்துப் பிழைகள் உண்டு. எப்படி கவனிக்காமல் விட்டார் ஹமீது.

சாரு, ஒரு வாரத்தில் எழுதினேன், பத்துநாளில் எழுதினேன் என்பதெல்லாம் சுத்த ஹம்பக். உங்களிடம் அதையெல்லாம் யாரும் எதிர்பார்க்கவில்லை. அவ்வளவு விரைவாக யார் உங்களை எழுதச் சொன்னது. உங்கள் அடையாளம் பிசகாமல் எழுதுங்கள். உங்கள் இலக்கியம் தான் தலைமுறை தாண்டி நிற்கப்போகிறது.

தேகம்

சாரு நிவேதிதா

உயிர்மை பதிப்பகம்
விலை: 90ரூ


வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</