வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. நூல்வெளி பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 
 

தமிழில் அச்சேறிய முதல் நூல்

லிஸ்பன் நகரில் 1554இல்
அச்சிடப்பட்ட கார்த்தில்யா (Carthilha) என்ற நூலே முதல்
தமிழ் நூல் என்பார். இந்நூலில் தமிழ் எழுத்துகள்
கையாளப்படாமல் உரோமருடைய எழுத்துகள் தமிழ் ஒலிகளைக் குறிப்பதற்குக் கையாளப் பெற்றிருந்தன. இது 36 பக்கங்களை உடையது. இந்த உரைநடை நூலில்
கத்தோலிக்கக் கிறித்தவ சமயத்தின் வழிபாட்டு முறைகளும்,
செபங்களும் அடங்கியுள்ளன.


http://www.tamilvu.org/courses/
diploma/p203/p2034/html/
p2034661.htm
-----------------------------------------


ஒரு அரவாணியின் முதல் தமிழ் நாவல்


தமிழ்ப் புனைகதை வெளியில் ஒரு முக்கிய நிகழ்வாக, பிரியாபாபு எழுதிய 'மூன்றாம் பாலின் முகம்' என்று ஒரு நாவல் வெளிவந்திருக்கிறது. மிக அண்மையில் வெளிவந்த இதுவே அரவாணி ஒருவரால் எழுதப்பட்ட முதல் தமிழ் நாவல் என்கிற ஒரு ஆவணத்துக்குரிய பெருமையைப் பெறுகிறது. ஆண்களும் பெண்களும் மட்டுமே அடர்ந்த கதை வெளியில் அரவாணிகள் பிரவேசிப்பது மிகவும் ஆரோக்கியமான சூழல் என்பதோடு, சகல மனித உரிமைகளோடும் கூடிய நிகழ்வாக இது விளங்குகிறது. பிரியா பாபு ஏற்படுத்தி இருப்பது ஒற்றையடிப்பாதை எனினும், பாதை.

--பிரபஞ்சன்

http://www.uyirmmai.com/
Uyirosai/ContentDetails.aspx?
cid=1627


-----------------------------------------

சித்திரப்பாவை

அகிலன் சித்திரப்பாவை நூலுக்காக, 1975ஆம் ஆண்டின் ஞான பீட விருது பெற்றார். இவ்விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் இவரேயாவார்.

-----------------------------------------

 

 

 
     
     
     
   
நூல்வெளி
1
 
ஆசிரியர் பற்றி
 
   
 


தமிழ்மகன்


தமிழ்மகன் சென்னையில் 1964- ல் பிறந்தவர். தற்போது தினமணியில் முதுநிலை உதவி ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இளைஞர் ஆண்டையொட்டி, 1984- ல் டி.வி.எஸ்.நிறுவனமும் இதயம் பேசுகிறது இதழும் இணைந்து நடத்திய போட்டியில் இவரது "வெள்ளை நிறத்தில் ஒரு காதல்" நாவல் முதல் பரிசு பெற்றது. 1996- ல் "மானுடப் பண்ணை" என்ற நாவல் தமிழக அரசின் விருது பெற்றது.

சுஜாதா அறிவியல் புனைகதை போட்டியில் இவருடைய கதைக்கு முதல் பரிசு கிடைத்தது. 'சொல்லித் தந்த பூமி' (1997), "ஏவி.எம். ஸ்டூடியோ ஏழாவது தளம" (2007), வெட்டுப்புலி (2010) ஆகிய நாவல்களும் "எட்டாயிரம் தலைமுறை" (2008), "சாலை ஓரத்திலே வேலையற்றதுகள்" (2006), மீன்மலர் (2008), ஆகிய சிறுகதை தொகுப்புகளும், செல்லுலாய்ட் சித்திரங்கள் - சினிமா பிரபலங்கள் பற்றிய நினைவுக்குறிப்புகள் (2010) ஆகிய நூல்களும் வெளிவந்துள்ளன.

 

 
  -------------------------------  
 

பிரதாப முதலியார் சரித்திரம் — மாயூரம் வேதநாயகம் பிள்ளை.

இது முதல் தமிழ் நாவல் எனப்படுகிறது. மேற்கத்திய ‘ரொமான்ஸ் ‘ வகை எழுத்தை முன் மாதிரியாகக் கொண்டது. மேலோட்டமான விகடத் துணுக்குகள், (இந்தக் கடிதம் கிடைக்கவில்லை என்றால் பதில் எழுது. வேறு கடிதம் அனுப்புகிறேன்) அனுபவ விவரசனகள், நல்லு ஆகியவற்றுடன் ஒரு நிலப்பிரபுவின் கதையை, சுயசரிதை போல, கூறுகிறது.

1879ல் பிரசுரமாயிற்று.

 
  --------------------------------  
  சிறந்த தமிழ் நாவல்கள்.  
 

http://www.jeyamohan.in/?p=84

 
  --------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  நூல்வெளி TS நூல் அறிமுகம் / திறனாய்வு TS  தந்தையரும் தனயரும்



மாதொரு பாகன்


தமிழ்மகன் tamilmagan2000@gmail.com

அவன் அவள் அது என்று ஒரு கதை. சிவசங்கரி எழுதி தொடர் கதையாகவும் பிறகு சிவகுமார், ஸ்ரீபிரியா, லட்சுமி நடிக்க சினிமாவாகவும் வந்தது.

குழந்தையில்லாமல் வருந்தும் தம்பதியினர். மலடி என்ற பட்டம்.. வாரிசு இல்லாத வருத்தம்.. தன் கணவன் தாதுவை இன்னொரு பெண்ணின் கருப்பையில் சுமக்க வைத்து குழந்தையைப் பெற்றெடுக்கிறாள் மனைவி. எண்பதுகளின் துவக்கத்தில் பெரிய வட்டமிட்டு அதில் ஏ குறியிட்டு போஸ்டர் ஓட்டப்பட்டபடம்.

பெருமாள் முருகனின் மாதொரு பாகன் அப்படியான விஞ்ஞான முறையெல்லாம் தெரியாத கணவன் மனைவி பற்றியது. சமூகம் அங்கீகரித்த ஒரு கலாசார அதிர்ச்சி வைத்தியம்தான் கதையின் மையம். தமிழகத்தின் ஒரு சிறு பகுதியில் அது பெண்ணின் மாமியாரும் தாயாரும் ஏற்றுக் கொள்ளும் ஒருவகை தெய்வீக உத்தியாக அது இருந்திருக்கிறது. தமிழ் நாட்டில் நூறாண்டுகளுக்கு முன்னர் இருந்த ஒரு நடப்பை நமக்குத் தெரிவிக்கிறது.

கதையின் ஆரம்பத்தில் இருந்தே வருவதுதான் சரியாக இருக்கும். காளி- பொன்னா திருமணம் நடக்கிறது. காளி மாமனார் வீட்டின் வாசலில் தோதான இடம் பார்த்து பூவரசு மரக் கிளை ஒன்று நடுகிறான். அதுவும் கிளைவிரித்து, பூத்து நிழல் பரப்பி நிற்கிறது. ஆனால் பொன்னாவோ குழந்தை பாக்கியம் இல்லாமலேயே ஆண்டுகளைக் கடத்துகிறாள். அவளுக்கு முதல் மாசம் தீட்டுப் பட்டதுமே முகம் சுளிக்கிறாள் மாமியார். அறிவுரைகள் ஆரம்பமாகின்றன. தீட்டுப் பட்ட மூணாம் நாளு இந்த சாறைக் குடி.. இந்த மூலிகையைக் கரைத்துக் குடி என்று அவளுக்கு நாக்கையே மறக்கடிக்கிறார்கள். காலம் ஓடுகிறது.என்னத்த கண்டே இருக்கிற வரைக்கும் நல்லா சாப்பிட்டுட்டுப் போ என்கிறார்கள். உனக்கென்ன குழந்தையா குட்டியா என்கிறது ஊர். வேர்க்கடலை விதைக்கப் போனால், மலடியின் கை பட்ட விதை முளைக்க வில்லை என்று கதை சொல்கிறார்கள். ஊரும், உறவும், சொந்த தாயும்கூட மலடியாக இருப்பவளை மன்னிப்பதாக இல்லை. மருமகனை வேறு கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லுகிறாள். மறு கல்யாணம் செய்து கொள்வதில் காளிக்கும் விருப்பமில்லை. ஆம்பளையா பொறந்தா ஒழுங்கா தண்ணிப் பாய்ச்சணும்டா
என்பது போன்ற ஜாடை மாடையான எகத்தாளப் பேச்சுகள். காளியின் வீட்டுத் திண்ணையில் வந்து உட்கார்ந்து கொண்டு பொன்னாத்தாவை மடக்கப் பார்க்கும் இளசுகள் என்று காளியின் ஆண்மையை உரசிப் பார்க்கும் சங்கடங்கள் தொடருகின்றன.

ஒரு குழந்தை பிறந்தால் எல்லா பிரச்சினையும் சரியாகிவிடும் என்ற நிலமை. குழந்தை என்பது ஒரு அங்கீகாரம். குலம் தழைக்க வந்த வம்ச விளக்கு. வாரிசு.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர் கோவில் பதினாலாம் நாள் தேர் திருவிழாவில் அதற்கு ஒரு விடிவுகாலம் இருப்பதாக காளியின் தாயே வழி சொல்கிறாள்.

குழந்தை பிறப்பதற்கான உபாயத்தை தாயிடமிருந்தே மகன் கேட்பது கதையின் உலுக்கலான பக்கங்கள். மகனுக்குத் தெரியாமல் தாயும் தாய்க்குத் தெரியாமல் மகனும் கள் குடிப்பது இருவருக்கும் தெரிந்த விஷயம்தான். தன்னிடம் ஏதோ பேச வந்து தயங்கிக் கொண்டிருக்கும் தாய்க்கு கள் இருக்கு குடிக்கிறியா என்று காளி குடிக்கக் கொடுக்கிறான். மெல்ல மெல்ல பேச்சு வருகிறது. எல்லாம் குழந்தை பிறப்பது பற்றித்தான். யார் மேல குறையோ எதற்கும் திருவிழாவுக்குப் பொன்னாவை ஒரு நடை அழைத்துக் கொண்டு போய் வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதாகச் சொல்கிறாள். இடிந்து போகிறான் காளி.

பதினாலாம் திருவிழாவில் குழந்தையில்லாத பெண்கள் அங்கே ஆண்களோடு கூடி குழந்தை பெற்றுக் கொள்ளலாம். அந்த தினத்தில் அங்கு இருக்கும் எல்லா ஆண்களுமே சாமிகள்தான் என்பது ஐதீகம். காளியும் அவனுடைய மைத்துனனுமே திருமணத்துக்கு முன்பு இந்தத் திருவிழாவுக்கு வந்து பெண்களை வலம் வந்தவர்கள். இந்த ஐதீகம் ஆண்களுக்குத் தெரிந்திருப்பதுபோலவே பெண்களுக்கும் தெரிந்திருக்கிறது. அதாவது மகனுக்குத் தெரிந்திருந்தது, அம்மா மூலம் தெரியவருகிறது.

சிக்கலான கதை.

முதல் சிக்கல் தமிழகத்தில் இப்படியொரு வழக்கம் இருந்ததாக எழுதுவது. அதை அம்மாவும் மகனும் பேசுவதாக எழுதுவது.. அதுவும் மாமியாரே தன் மருமகளை அதற்கு ஆட்படுத்துவது பற்றி பேசுவது.. எப்படிப்பட்ட சிக்கலான முடிச்சையும் நேர்மையான நடையின் மூலம் அவிழ்க்க முடியும் என்பதுதான் பெருமாள் முருகன் அவருடைய செறிவான நடையின் மூலம் நமக்குத் தெரிவிக்கும் செய்தி. சவாலான கதையம்சம் பொதிந்திருக்கும் கரு. வலிந்து ஆபாசம் எழுதும் கதை போக்கு இருந்தும்கூட இயல்பான தொனியில் கதையைக் கொண்டு சொல்லியிருக்கிறார். நல்லுப் பையன் சித்தப்பா போன்ற ஏட்டிப் போட்டியான கதாபாத்திரங்கள், அவர்களுக்கான ஆபாச மொழிகளை பேசுகிறார்கள். அது முற்றிலும் கதையில் இருந்து விலகாத இயல்பான மொழியாகவும் இருக்கிறது.

காளி தன் மனைவியிடம் கருத்து கேட்கிறான். திருவிழாவுக்கு நீ போகப் போகிறாயா என. உனக்கு விரும் என்றால் போய் வருகிறேன் என்கிறாள். காளிக்கு இரண்டாவது இடி. நான் போக மாட்டேன் என்று சொல்லுவாள் என பெரிதும் நம்பிக்கையோடு அவளிடம் கேட்டதற்கு அவள் சொன்ன பதில் அது.

உற்ற தோழனாக பழகிய மைத்துனன் பொன்னாவின் அண்ணன்- அவனும் தன் தங்கை போய்விட்டுவந்தால் குழந்தை பாக்கியம் கிட்டுமே என்கிறான்.

குழந்தை என்றால் குலம் தழைக்க வந்த வாரிசு. இதிலே குலம் எங்கே இருக்கிறது. பிறக்கப் போவது யாருடைய வாரிசு?... காளியின் ஆண்மைக்கு இதைவிட இழுக்கு இருக்க முடியாது. பொன்னாவை அனுப்பிவைக்க முடியாதென மறுக்கிறான். காளிக்கு விருப்பமில்லை என்ற செய்தியையே மறைத்து பொன்னாவை விழாவுக்கு அழைத்துச் செல்கிறார்கள். பொன்னாவும் காளியும் என்ன முடிவுகள் எடுத்தார்கள் என்பது கதையின் முடிவு... அல்லது கதையின் முடிச்சும்கூட.

தமிழகத்தில் இப்படியொரு முறை இருந்ததாக எங்கேனும் பதிவுகள் இருந்ததா என்று தெரியவில்லை. பெருமாள் முருகன் அப்படியான ஒரு ஆதாரச் செய்தியின் அடிப்படையில்தான் இந்தக் கதையை எழுதத் துணிந்திருக்கிறார் என்றே நம்புகிறேன்.

கதை வெள்ளையர் ஆட்சி காலத்தில் நடைபெறுவதாக இருந்தாலும் அந்தக் காலக்கட்டத்தைச் சொல்லும் சூழல்கள் கதையில் வலுவாக இடம் பெறவில்லை. குளத்தின் ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு கல் எறியும் போட்டி ஒன்றை ஒரு வெள்ளைக்கார துரை நடத்துகிறார். என் கவனத்தில் அந்தக் காலத்துக் காசுகள், நோட்டுகள், உடை போக்குவரத்துகள் விவரிக்கப்படவில்லை.

காலம் பற்றிய குறிப்புகள் நாவலை பெரும்பகுதி வாசித்த பின்னரே உணர வேண்டியிருக்கிறது. எல்லோரும் குடுமி வைத்திருந்தார்கள் என்பது அத்தகையதோர் குறிப்பு. ஆனால் இது நாவலின் மையத்தில்தான் கண்டெடுக்க முடிந்தது.

குழந்தையில்லாத ஒரு கணவன் மனைவியின் கதையாக மாதொரு பாகனைப் பார்க்க முடியவில்லை. பல நூறு கணவன்- மனைவிகள் அதில் தெரிகிறார்கள். ஒரு கதையின் பின்னால் பல கதைகள் இருந்திருக்கும் அதிர்வை ஏற்படுத்தும் நாவல்.

மாதொரு பாகன்,

பெருமாள் முருகன்,

காலச்சுவடு பதிப்பகம்,
669, கே.பி.சாலை
நாகர்கோவில் 629 001
விலை: 140
email: kalachuvadu@sancharnet.in



வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.