வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. நூல்வெளி பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 
 

தமிழில் அச்சேறிய முதல் நூல்

லிஸ்பன் நகரில் 1554இல்
அச்சிடப்பட்ட கார்த்தில்யா (Carthilha) என்ற நூலே முதல்
தமிழ் நூல் என்பார். இந்நூலில் தமிழ் எழுத்துகள்
கையாளப்படாமல் உரோமருடைய எழுத்துகள் தமிழ் ஒலிகளைக் குறிப்பதற்குக் கையாளப் பெற்றிருந்தன. இது 36 பக்கங்களை உடையது. இந்த உரைநடை நூலில்
கத்தோலிக்கக் கிறித்தவ சமயத்தின் வழிபாட்டு முறைகளும்,
செபங்களும் அடங்கியுள்ளன.


http://www.tamilvu.org/courses/
diploma/p203/p2034/html/
p2034661.htm
-----------------------------------------


ஒரு அரவாணியின் முதல் தமிழ் நாவல்


தமிழ்ப் புனைகதை வெளியில் ஒரு முக்கிய நிகழ்வாக, பிரியாபாபு எழுதிய 'மூன்றாம் பாலின் முகம்' என்று ஒரு நாவல் வெளிவந்திருக்கிறது. மிக அண்மையில் வெளிவந்த இதுவே அரவாணி ஒருவரால் எழுதப்பட்ட முதல் தமிழ் நாவல் என்கிற ஒரு ஆவணத்துக்குரிய பெருமையைப் பெறுகிறது. ஆண்களும் பெண்களும் மட்டுமே அடர்ந்த கதை வெளியில் அரவாணிகள் பிரவேசிப்பது மிகவும் ஆரோக்கியமான சூழல் என்பதோடு, சகல மனித உரிமைகளோடும் கூடிய நிகழ்வாக இது விளங்குகிறது. பிரியா பாபு ஏற்படுத்தி இருப்பது ஒற்றையடிப்பாதை எனினும், பாதை.

--பிரபஞ்சன்

http://www.uyirmmai.com/
Uyirosai/ContentDetails.aspx?
cid=1627


-----------------------------------------

சித்திரப்பாவை

அகிலன் சித்திரப்பாவை நூலுக்காக, 1975ஆம் ஆண்டின் ஞான பீட விருது பெற்றார். இவ்விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் இவரேயாவார்.

-----------------------------------------

 

 

 
     
     
     
   
நூல்வெளி
1
 
ஆசிரியர் பற்றி
 
   
 


தமிழ்மகன்


தமிழ்மகன் சென்னையில் 1964- ல் பிறந்தவர். தற்போது தினமணியில் முதுநிலை உதவி ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இளைஞர் ஆண்டையொட்டி, 1984- ல் டி.வி.எஸ்.நிறுவனமும் இதயம் பேசுகிறது இதழும் இணைந்து நடத்திய போட்டியில் இவரது "வெள்ளை நிறத்தில் ஒரு காதல்" நாவல் முதல் பரிசு பெற்றது. 1996- ல் "மானுடப் பண்ணை" என்ற நாவல் தமிழக அரசின் விருது பெற்றது.

சுஜாதா அறிவியல் புனைகதை போட்டியில் இவருடைய கதைக்கு முதல் பரிசு கிடைத்தது. 'சொல்லித் தந்த பூமி' (1997), "ஏவி.எம். ஸ்டூடியோ ஏழாவது தளம" (2007), வெட்டுப்புலி (2010) ஆகிய நாவல்களும் "எட்டாயிரம் தலைமுறை" (2008), "சாலை ஓரத்திலே வேலையற்றதுகள்" (2006), மீன்மலர் (2008), ஆகிய சிறுகதை தொகுப்புகளும், செல்லுலாய்ட் சித்திரங்கள் - சினிமா பிரபலங்கள் பற்றிய நினைவுக்குறிப்புகள் (2010) ஆகிய நூல்களும் வெளிவந்துள்ளன.

 

 
  -------------------------------  
 

பிரதாப முதலியார் சரித்திரம் — மாயூரம் வேதநாயகம் பிள்ளை.

இது முதல் தமிழ் நாவல் எனப்படுகிறது. மேற்கத்திய ‘ரொமான்ஸ் ‘ வகை எழுத்தை முன் மாதிரியாகக் கொண்டது. மேலோட்டமான விகடத் துணுக்குகள், (இந்தக் கடிதம் கிடைக்கவில்லை என்றால் பதில் எழுது. வேறு கடிதம் அனுப்புகிறேன்) அனுபவ விவரசனகள், நல்லு ஆகியவற்றுடன் ஒரு நிலப்பிரபுவின் கதையை, சுயசரிதை போல, கூறுகிறது.

1879ல் பிரசுரமாயிற்று.

 
  --------------------------------  
  சிறந்த தமிழ் நாவல்கள்.  
 

http://www.jeyamohan.in/?p=84

 
  --------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  நூல்வெளி TS நூல் அறிமுகம் / திறனாய்வு TS அடிமையின் மீட்சி


அடிமையின் மீட்சி

தமிழ்மகன் , tamilmagan2000@gmail.com  


ஒரு மனிதன் தன் வாழ்நாளில் மீண்டும் ஒரு தரம் மனிதனாவது என்று சொன்னால் கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கும். புக்கர் டி வாஷிங்டன் சுயசரிதையைப் படிக்கும் போது ஆறறிவு ஆடு மாடு போல நடத்தப்பட்ட ஒருவர் எப்படி மனிதராகப் பரிணமிக்கிறார் என்பதை உணரமுடிகிறது. கரியால் ஒரு கோடு போடுவதற்குக்கூட தெரிந்திருக்காத அந்தக் குடும்பச் சூழலில் இருந்துதான் புக்கர் வாஷிங்டன் தஸ்கேஜீ பல்கலைக் கழகத்தை உருவாக்கி மாமனிதனாக உருவாகிறார்.

பார்ப்பதற்கு மனிதர்கள் போல இருப்பதனால் மட்டும் ஒருவரை இன்னொரு மனிதன் மனிதனென்று ஏற்றுக் கொள்வதில்லை. ஆப்ரிக்காவில் இருந்து "ஓட்டிச்' செல்லப்பட்ட ஒரு மனிதக் குழு அமெரிக்காவில் எப்படி விலங்குகள் போல நடத்தப்பட்டது என்பதைச் சொல்லி ஆரம்பிக்கிறது "அடிமையின் மீட்சி' என்ற பெயரில் தமிழாக்கம் செய்யப்பட்ட இந்த நூல்.


ஆடு மாடுகளுக்காவது ஓரளவுக்குப் பாதுகாப்பான இடம் இருக்க முடியும், அவற்றின் விலைக்காக. ஆடு மாடுகள் சித்திரவதைக்குப் பயந்து பணிந்து போகத் தெரியாதவை. மனிதனுக்கோ அது தாங்க முடியாத உயிரின் வலி. நம் குழந்தையை சுட்டுவிடுவார்கள், தம்மைச் சிறையில் அடைத்துவிடுவார்கள் என்ற பயம் மனிதனுக்கு இருப்பதால் அவனைப் பணியவைப்பது சுலபம். எந்தவித உரிமை குறித்தும் தெரியாமல் கொட்டடியில் அடக்கி வைக்கப்பட்டிருக்கும் மக்களில் ஒருவராக வளர்ந்த புக்கர் டி வாஷிங்டனுக்கு மனிதர்களுக்குப் பெயர் இருப்பதுகூட அதிசயமாக இருக்கிறது. இவர்கள் குடும்பத்துக்கென்று பண்ணையில் ஒரு எண் உண்டு. அது 18.

சிறுவயதில் அந்த எண்ணை எங்கு பார்த்தாலும் தன்னால் அடையாளம் கண்டுவிட முடிந்தது என்று அவர் கூறுவதில் இருந்து இதைப் புரிந்து கொள்ள முடியும்.

பள்ளியில் சேரும் ஆர்வம் இவருள் தீயாய் பெருகிக் கொண்டிருக்கிறது. பள்ளியிலோ எல்லோருக்கும் இரண்டு பெயர்கள் அல்லது மூன்று பெயர்கள் இருக்கின்றன. இவரை எல்லோரும் புக்கர் என்று மட்டுமே அழைத்துக் கொண்டிருந்ததால் தனக்குப் படிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுவிடுமோ என்னும் அளவுக்கு அஞ்சுகிறார். ஆசிரியர் ஒவ்வொருத்தராக பெயர் கேட்டுக் கொண்டே வருகிறார். திடீரென்று புக்கர் வாஷிங்டன் என்கிறார். நெடுநாளாக தனக்கு அந்தப் பெயர்தான் போல அவருக்கே அப்போது தோன்றுகிறது. அந்தப் பெயரே அவருக்கு இறுதி வரை நிலைத்துவிட்டது. ஏனென்றால் புக்கருக்கு அவருடைய தந்தையைத் தெரியாது. பின்னாளில் தன் தாய்க்கும் ஒரு வெள்ளையருக்கும் தாம் பிறந்ததாகத் தெரிந்து கொள்கிறார். உள் நாட்டு அரசியல் போர்கள் முடிந்து ஆபரகாம் லிங்கன் ஆட்சிக்கு வந்து சுதந்திரப் பிரகடனம் அறிவிக்கும் வரை நீக்ரோக்கள் அங்கு விலங்குகள் போலத்தான் வாழ்கிறார்கள்.

வெர்ஜினியாவின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதியில் இருக்கும் ஹாம்டன் கல்வி மன்றத்துக்கு இவர் கல்வி கற்கப் பிரயாணிப்பதை விவரிக்கும் புத்தகத்தின் எழுத்துக்களை, நம் கண்ணீர் திரையிட்டு மறைப்பதைத் தவிர்க்க முடியவில்லை. சரியான துணி மணி இல்லை. மரநாரில் இருந்து பின்னி தயாரிக்கப்பட்ட ஆடையும், மரப்பட்டையும் பதப்படுத்தாத தோலும் சேர்ந்து உருவாக்கப்பட்ட மடங்காத காலணி, சாக்குப் பை சகிதம் 800 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து போகத் துணியும் ஒரு கறுப்பின சிறுவன், இனவெறி தலைதூக்கி ஆடிக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் எத்தனைத் துன்பங்கள் அனுபவத்திருப்பான் என்பதை கற்பனை செய்து பாருங்கள். வண்டியில் ஏற்றிக் கொள்ள மறுக்கிறார்கள், ஓட்டலில் சாப்பிட அனுமதிக்கவில்லை, தங்குவதற்கு அனுமதிக்கவில்லை... ஏறத்தாழ முக்கால் வாசி தூரத்தை நடந்தே கடக்கிறான். பசியிலும் பனியிலும்.

அவ்வளவு தூரம் கடந்து ஹாம்டன் கல்வி மன்றத்தை அடைந்து அங்கு படிப்பதற்கு அனுமதி கேட்கிறார். பஞ்சத்தாலும் பசியாலும் வாடிப் போய் அழுக்காக கோணிப் பையுடன் நின்று கொண்டிருக்கும் புக்கரை யாரும் ஏறிட்டும் பார்க்கவில்லை. இவருக்குப் பின்னால் வந்தவர்களுக்கெல்லாம் அனுமதி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நமக்கு பள்ளியில் இடம் கிடைக்காமல் போய்விடுமா என்று பதறுகிறார். அந்த நேரத்தில் அங்கிருந்த ஆசிரியருக்கு வழிபாட்டுக் கூடம் சுத்தம் செய்ய வேண்டும் என்று ஞாபகம் வருகிறது. அங்கே நின்று கொண்டிருந்த புக்கரை சுத்தம் செய்ய பணிக்கிறார்.

"இதுதான் வாய்ப்பு என எனக்குப் பட்டது. அது போன்ற ஓர் உத்தரவை அத்தனை குதூகலத்துடன் நான் ஏற்றது இல்லை. கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்யும் பணியை மிகத் திறமையாகச் செய்பவன் நான். வழிபாட்டுக் கூடத்தை மூன்றுமுறைக் கூட்டினேன். பழந்துணி பெற்று நான்கு முறை துடைத்தேன்' என்கிறார்.

இந்த செய் நேர்த்திக்காகத்தான் அங்கு அவருக்குப் படிக்க அனுமதி கிடைக்கிறது. அந்தக் கறுப்புச் சிறுவன் அங்கே இருக்கும் உப்பளத்தில் காலையும் மாலையும் வேலை பார்த்து இடையே படிப்பைத் தொடர்கிறான். உப்பளத்தில் வேலைப் பார்த்து அதே ஆடையில் படிப்பது சிரமமாக இருக்கிறது. சாமுவேல் ஆம்ஸ்ட்ராங் என்ற ஆங்கிலேயர் அவருக்கு ஆடை கொடுத்து உதவுகிறார். (அந்த நெருக்கம் வாழ்நாள் முழுக்கத் தொடர்கிறது.) அங்கு அவருக்கு இரண்டு போர்வைகள் தருகிறார்கள். அது நாள் வரை அந்த மாதிரி ஒரு ஆடம்பரத்தை அவர் அனுபவித்திராதவர். சுதந்திரம் பெறும் வரை படுக்கை என்பது கூட அவருக்குத் தெரியாது. தரையில் தூசியிலும் தும்பிலும் ஈரத்திலும் ஒரு பன்றியைப் போலவோ மாட்டைப் போலவோதான் உறங்கி வந்தவர். அதனால் இரண்டு போர்வைகளை எப்படிப் பயன்படுத்துவதென்று அவருக்குத் தெரியவில்லை. முதல் நாள் இரண்டு போர்வைகளையும் தரையில் போட்டு அதன் மேல் படுத்துக் கொள்கிறார். இரண்டாம் நாள் இரண்டு போர்வைகளையும் போர்த்திக் கொள்கிறார். மூன்றாவது நாளில்தான் அதை கீழே ஒன்றும் போர்த்திக் கொள்ள ஒன்றுமாகப் பயன்படுத்தியதாகச் சொல்கிறார்.

இப்படியாகப் படித்து ஆசிரியர் பயிற்சி மேற்கொண்டு தன் கிராம மக்களுக்குக் கல்வியின் அவசியத்தைப் போதிக்கிறார். இத்தனை துன்பத்திலும் அவர் ஒரு இடத்திலும் வெள்ளை இனத்தவரின் முரட்டுக் குணத்தைப் பழிக்கவே இல்லை. படிப்பின் மூலமாக அவர் எல்லோரையும் விட சிறந்தவராக மாறுகிறார். ஜனாபதி ரூஸ்வெல்ட் அவரை வெள்ளை மாளிகைக்கு அழைத்து கவுரவிக்கிறார். உலகம் முழுக்க அவருடைய பேச்சைக் கேட்க மக்கள் திரள்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் அவருடைய சுற்றுப் பயணமும் பேச்சும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுகிறது.

இறுதி வரி இப்படி முடிகிறது...

எந்த மாநிலத்தில் நான் பிறந்தேனோ, அந்த மாநிலம் என்னை வரவேற்று உபசரித்ததற்காக இரு இனத்தவர்க்கும் என் இதயபூர்வமான நன்றி.

என வரவேற்பளித்த வெள்ளை இனத்தவருக்கும் சேர்த்தே நன்றியைத் தெரிவிக்கிறார். வன்முறையைக் கையில் எடுக்க மிக நேர்மையான காரணம் இருந்தாலும் ம.ந.ராமசாமியின் இயல்பான மொழி பெயர்ப்பில் நெஞ்சைத் தைக்கும் நூல் இது.

அடிமையின் மீட்சி
புக்கர் டி. வாஷிங்டன்,
நிவேதிதா புத்தகப் பூங்கா,
14, இரண்டாம் தளம், பீட்டர்ஸ் சாலை,
ராயப்பேட்டை,
சென்னை- 14

விலை: ரூ.120


வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</