வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. நூல்வெளி பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 
 

தமிழில் அச்சேறிய முதல் நூல்

லிஸ்பன் நகரில் 1554இல்
அச்சிடப்பட்ட கார்த்தில்யா (Carthilha) என்ற நூலே முதல்
தமிழ் நூல் என்பார். இந்நூலில் தமிழ் எழுத்துகள்
கையாளப்படாமல் உரோமருடைய எழுத்துகள் தமிழ் ஒலிகளைக் குறிப்பதற்குக் கையாளப் பெற்றிருந்தன. இது 36 பக்கங்களை உடையது. இந்த உரைநடை நூலில்
கத்தோலிக்கக் கிறித்தவ சமயத்தின் வழிபாட்டு முறைகளும்,
செபங்களும் அடங்கியுள்ளன.


http://www.tamilvu.org/courses/
diploma/p203/p2034/html/
p2034661.htm
-----------------------------------------


ஒரு அரவாணியின் முதல் தமிழ் நாவல்


தமிழ்ப் புனைகதை வெளியில் ஒரு முக்கிய நிகழ்வாக, பிரியாபாபு எழுதிய 'மூன்றாம் பாலின் முகம்' என்று ஒரு நாவல் வெளிவந்திருக்கிறது. மிக அண்மையில் வெளிவந்த இதுவே அரவாணி ஒருவரால் எழுதப்பட்ட முதல் தமிழ் நாவல் என்கிற ஒரு ஆவணத்துக்குரிய பெருமையைப் பெறுகிறது. ஆண்களும் பெண்களும் மட்டுமே அடர்ந்த கதை வெளியில் அரவாணிகள் பிரவேசிப்பது மிகவும் ஆரோக்கியமான சூழல் என்பதோடு, சகல மனித உரிமைகளோடும் கூடிய நிகழ்வாக இது விளங்குகிறது. பிரியா பாபு ஏற்படுத்தி இருப்பது ஒற்றையடிப்பாதை எனினும், பாதை.

--பிரபஞ்சன்

http://www.uyirmmai.com/
Uyirosai/ContentDetails.aspx?
cid=1627


-----------------------------------------

சித்திரப்பாவை

அகிலன் சித்திரப்பாவை நூலுக்காக, 1975ஆம் ஆண்டின் ஞான பீட விருது பெற்றார். இவ்விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் இவரேயாவார்.

-----------------------------------------

 

 

 
     
     
     
   
நூல்வெளி
1
 
ஆசிரியர் பற்றி
 
   
 


தமிழ்மகன்


தமிழ்மகன் சென்னையில் 1964- ல் பிறந்தவர். தற்போது தினமணியில் முதுநிலை உதவி ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இளைஞர் ஆண்டையொட்டி, 1984- ல் டி.வி.எஸ்.நிறுவனமும் இதயம் பேசுகிறது இதழும் இணைந்து நடத்திய போட்டியில் இவரது "வெள்ளை நிறத்தில் ஒரு காதல்" நாவல் முதல் பரிசு பெற்றது. 1996- ல் "மானுடப் பண்ணை" என்ற நாவல் தமிழக அரசின் விருது பெற்றது.

சுஜாதா அறிவியல் புனைகதை போட்டியில் இவருடைய கதைக்கு முதல் பரிசு கிடைத்தது. 'சொல்லித் தந்த பூமி' (1997), "ஏவி.எம். ஸ்டூடியோ ஏழாவது தளம" (2007), வெட்டுப்புலி (2010) ஆகிய நாவல்களும் "எட்டாயிரம் தலைமுறை" (2008), "சாலை ஓரத்திலே வேலையற்றதுகள்" (2006), மீன்மலர் (2008), ஆகிய சிறுகதை தொகுப்புகளும், செல்லுலாய்ட் சித்திரங்கள் - சினிமா பிரபலங்கள் பற்றிய நினைவுக்குறிப்புகள் (2010) ஆகிய நூல்களும் வெளிவந்துள்ளன.

 

 
  -------------------------------  
 

பிரதாப முதலியார் சரித்திரம் — மாயூரம் வேதநாயகம் பிள்ளை.

இது முதல் தமிழ் நாவல் எனப்படுகிறது. மேற்கத்திய ‘ரொமான்ஸ் ‘ வகை எழுத்தை முன் மாதிரியாகக் கொண்டது. மேலோட்டமான விகடத் துணுக்குகள், (இந்தக் கடிதம் கிடைக்கவில்லை என்றால் பதில் எழுது. வேறு கடிதம் அனுப்புகிறேன்) அனுபவ விவரசனகள், நல்லு ஆகியவற்றுடன் ஒரு நிலப்பிரபுவின் கதையை, சுயசரிதை போல, கூறுகிறது.

1879ல் பிரசுரமாயிற்று.

 
  --------------------------------  
  சிறந்த தமிழ் நாவல்கள்.  
 

http://www.jeyamohan.in/?p=84

 
  --------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  நூல்வெளி TS நூல் அறிமுகம் / திறனாய்வு TS  பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்


பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

தமிழ்மகன் , tamilmagan2000@gmail.com  

சாதாரணமாக அலுவலகங்களில் இப்படி ஒரு காட்சியைப் பார்க்கலாம். இரண்டு பேருக்கு மனஸ்தாபம் என்றால் அதை எரியவிட்டுக் குளிர் காய்ந்து ஆதாயம் தேடும் மனிதர்கள் இருப்பார்கள். இரண்டு கிராமங்களுக்கு, இரண்டு மனித இனங்களுக்கு, இரண்டு நாடுகளுக்கு என்று இதை வளர்த்துக் கொண்டே போகலாம். பிரச்சினை ஏற்படும் தளத்துக்கு ஏற்ப ஆதாயமும் பிரச்சினையை எரியவிடும் போக்கும் பிரம்மாண்டமாக இருக்கிறது. உதாரணத்துக்கு ப்ளூ ஸ்டார் ஆபரேஷனுக்குப் பிறகு சீக்கியர்களுக்கும் இந்திரா காந்திக்கும் ஏற்பட்ட பிரச்சினைக்குப் பிறகு இந்திராகாந்தி கொல்லப்படுகிறார்.


சீக்கியர்கள் எண்ணிறந்த பாதிப்புகளுக்கும் விசாரணை என்ற பெயரில் சித்திரவதைகளுக்கும் ஆளானார்கள்.


சிங்களர்களின் கொடுமைகளுக்கு ஆளான இலங்கைத் தமிழர்கள் அமைதி ஏற்படுத்த விரைந்த இந்திய ராணுவமே இலங்கைத் தமிழர்களுக்கு விரோதிகளானார்கள். ராஜீவ் காந்தி படுகொலையில் வந்து முடிகிறது. இப்போது ஒரு லட்சம் தமிழர்கள் வரை பலியாகியிருக்கிறார்கள்.

இதெல்லாம் நேரடியான ஒற்றைப்படையான நமது பார்வைகள்.
இந்தப் பிரச்சினைகளை எரியவிட்டுக் குளிர் காய்கிறவர்கள் யார் என்பது அதிர்ச்சியூட்டும் திகில் கதைக்கு ஒப்பானதாக இருக்கிறது.

ஜான் பெர்கின்ஸ் எழுதியுள்ள "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" என்ற நூல் நாம் மேற்படி விஷயங்களை வேறு மாதிரியாக பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. ஒரு நாட்டின் அதிபர் திடீரென்று மரணம் அடைவதில் பொதுவாக ஆதிக்க நாடுகளுக்கு ஏற்படும் எண்ணிறந்த ஆதாயத்தைக் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு நாடு தன் நிலைத்தன்மையை, தன்னிறைவை இழக்கும் தருணம்தான் ஆதிக்க நாடுகளுக்கு வரப்பிரசாதம். அவர்களின் கரங்களை சுரண்டுவதற்காக நீட்டுவதற்கான அரிய சந்தர்ப்பம் அது. பொதுவான லத்தின் அமெரிக்க நாடுகளில், குறிப்பாக ஈகுவாடாரில், இந்தோனேஷியாவில், சவுதி அரேபியாவில் என அமெரிக்கக் கைகூலிகள் எப்படி செயல் பட்டார்கள் என்பதை விவரிக்கிறது இந்த நூல். (கூலிகள் என்பதால் ரயில்வேகூலியை, விவசாயக்கூலியையோ நினைத்துக் கொள்ளக் கூடாது. இவர்கள் உலகின் மிக உயர்ந்த பி.எம்.டபிள்யு காரில் கோட் சூட் அணிந்து பிரயாணிப்பவர்கள்).

ஜான் பெர்கின்ஸ் "மெய்ன்' என்ற நிறுவனத்தில் கட்டடப் பொறியாளர் வேலைக்குச் சேருகிறார். இவருடைய திடமான மனமும் உடற்கட்டும் இவருக்கு நிறைய சலுகைகளை வாரி வழங்குகிறது. அடுத்தடுத்து பதவி உயர்வுகள். ஒரு பெண்மணி வந்து சந்திக்கிறார். அவருடைய முதல் பேச்சே ஏன் எதற்கு என்று கேட்கக் கூடாது என்கிறது. அவர்கள் சொல்லும் நாட்டுக்கு உடனடியாக பயணிக்க வேண்டும். அங்கே நிலவும் அரசியல், சமூக, பொருளாதார நிலைமைகளை வேகமாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும். என்னென்ன கட்சிகள் இருக்கின்றன, யாருக்கு செல்வாக்கு அதிகம்?, எந்த மாதிரியான ஆவேசமான சூழல் நிலவுகிறது? எந்த விஷயத்தைத் தொட்டால் மனிதர்கள் செண்டிமென்ட்டாக பாதிக்கப்படுவார்கள்? என்றெல்லாம் தகவல் தர வேண்டும். இது முதல் கட்டம். (இரண்டாவது பிரச்சினையை உருவாக்க வேண்டும். உதாரணத்துக்கு விநாயகர் ஊர்வலம் போனால் மக்கள் கலவரத்துக்குத் தயாராக இருப்பார்கள் என்றால் அங்கு கலவரத்தை வெடிக்க வைக்க வேண்டும்.. சீக்கியர்களை உசுப்பிவிட்டு இந்திரா காந்தியைக் கொல்ல வேண்டும்) . அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. நேரடியாக இன்னொரு நாட்டில் தனது ஆட்களை இறக்குமதி செய்து பணத்தை அனுப்பிக் காரியம் சாதிக்க முடியாது என்பதால் மெய்ன் போல பல்வேறு நிறுவனங்கள் வாயிலாக வேறு நாடுகளுக்குள் இறங்குகின்றன. அது கட்டடம் கட்டும் நிறுவனமாக இருக்கலாம். செல் போன் நிறுவனமாக இருக்கலாம். மெயின் நிறுவனத்தின் மெய்ன் பிஸினஸ் நாட்டைச் சுரண்டுவது... பிரச்சினை ஏற்படுத்துவது... சைடு பிசினஸ்தான் கட்டடம் கட்டுவது.

ஜான் பெர்கின்ஸுக்கு இந்த வேலை மிகவும் பிடிக்கிறது. வேகமாக காரியங்களைச் சாதிக்கிறார். பதவி உயர்வுகள்.. ஒரு கட்டத்தில் அந்த நிறுவனத்தின் டைரக்டருக்கு நிகரான சம்பளமே அவருக்கு வழங்கத் தயாராகிறது. ஈகுவடாரிஸ் அணைகள் கட்டி, எண்ணெய் வளத்தைச் சுரண்டி, அங்குள்ள மக்களின் உழைப்பைச் சுரண்டி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தையே பாழாக்கி, இயற்கை எழில் சூழ்ந்த அந்தப் பகுதியை சின்னா பின்னமாக்கி, அந் நாட்டு அதிபரைக் கொன்று.. என இவர் விவரித்துக் கொண்டே போகிறார். நமக்கு அடிவயிற்றைக் கலக்குகிறது. பக்கத்தில் "டயம்" என்ன என்று கேட்டால் கூட ஏதாவது அதில் உள் நோக்கம் இருக்குமா?' என்று அஞ்ச வேண்டியதாக இருக்கிறது.

2001 செப்டம்பர் பதினோரம் தேதி இரட்டைக் கோபுரமும் பென்டகன் நிறுவனமும் தாக்கப்பட்டன. அத்தனை பாதுகாப்புகள் நிறைந்த அமெரிக்காவிலேயே பின்லேடன் உள்ளே நுழைந்துவிட்டானே என்று ஆச்சர்யப்படுவது மேலே குறிப்பிட்டபடி இந்த விஷயத்தை நேரடியாக அணுகுவது.

பெர்கின்ஸ் தரும் குறிப்புகளைப் பாருங்கள்..

"ஜார்ஜ் எச். டபிள்யூ புஷ் ஐ.நா. சபைக்கான அமெரிக்க தூதராக 1971 லிருந்து 1977 வரை பணியாற்றிய காலத்திலும் 76 முதல் 77 வரை சி.ஐ.ஏ.வின் தலைவராகவும் பணியாற்றிய போதும் பின்லேடன் குடும்பத்தினருக்கும் புஷ் குடும்பத்தினருக்கும் உறவுகள் வேர்விட்டு வளர்ந்தன. கடந்த 20 ஆண்டுகளாக வணிக, அரசியல் உறவாக அது நீடித்து வருகிறது.

செப்டம்பர் பதினொன்றாம் தேதி தாக்குதலுக்குப் பிறகு பின்லேடன் குடும்பத்தினர் மற்றும் பணம் படைத்த சவுதி அரேபியர்கள் அமெரிக்காவில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அந்த விமானங்களைப் பறக்க அனுமதித்து யார் என்று இதுவரை தெரியவில்லை.''

இப்படி உலகத்தின் அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளுக்குப் பின்னணியில் பதுங்கியிருக்கும் மற்றொரு அதிர்ச்சியை நூல் முழுக்கச் சொல்லிக் கொண்டே போகிறார் பெர்கின்ஸ்.

தான் செய்யும் தொழில் மீது அவருக்குக் குற்ற உணர்வு ஏற்படுகிறது. எப்படி ஒரு பெண்ணின் மூலம் இந்தத் தொழிலில் இறங்குவதற்குக் காரணமாக இருந்தேனோ அதே போல் இன்னொரு பெண்ணின் மூலமாகத்தான் இந்த இழி செயலைப் புரிந்து கொண்டேன் என்கிறார். எந்த கணத்தில் அவர் அதை உணர்ந்தாரோ அப்போது முதலே அவருடைய நிறுவனத்தில் இருந்து அவருக்கு எதிர்ப்பும் ஆபத்தும் வரும் என்பது புரிந்து போகிறது. தனது உயிருக்கு நாள் குறிக்கப்பட்டு விடும் என்று தெரிந்து கொள்கிறார். நிறுவனமோ அவருக்கு இன்னொரு வாய்ப்பைத் தருகிறது. ""நீங்கள் நமது நிறுவனத்துக்கு எதிரான கருத்துத் தொனிக்கும் கட்டுரையை எழுதியிருப்பதாக அறிகிறோம். இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு இன்னும் சலுகைகளும், பதவிகளும் காத்திருக்கின்றன'' என்று எலிக்கு மசால் வடை காட்டி அழைத்துப் பார்க்கிறார்கள். அதிலே மிரட்டலும் ஒளிந்திருக்கிறது. மறுத்தால் அந்த இடத்திலேயே கொன்றுவிடுவார்கள் என்று தெரிந்து போகிறது. சம்மதம் தெரிவித்துவிட்டு வெளியே வருகிறார். அவருக்குத் தான் செய்யும் தொழில் விபசாரத்துக்கு ஒப்பான தொழிலாக கேவலமாகப்படுகிறது. ஆனாலும் வேறுவழியில்லை.

ஆப்ரிக்காவில் தம் செயலால் சுரண்டப்பட்ட பகுதிகளைப் பார்க்கிறார்.
அவருடைய நடையிலேயே அப்படியே தருகிறேன்...

""கடலிலிருந்து ஒரு கணம் பார்வையைத் திருப்பியபோது ஆப்ரிக்க இல்லங்களிலிருந்து பிய்த்தெடுக்கப்பட்ட அடிமைகளால் கட்டப்பட்ட சுவர்கள் கண்ணில் பட்டன. அதைக் காணச் சகிக்காமல் அப்பால் திரும்பியபோது தரையில் கிடந்த ஒரு பருமனான தடியைக் கண்டேன். பாய்ந்து அதை எடுத்துக் கொண்டு கல் சுவர்களை அதனால் விளாசத் தொடங்கினேன். உடலில் உள்ள சக்தியெல்லாம் வற்றிப் போகும் வரை சுவர்களை அடித்து நொறுக்கிக் கொண்டே இருந்தேன். பின்பு புல்லில் விழுந்து உயரத்தில் மேகங்கள் நகர்வதை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தேன்.

என்ன செய்ய வேண்டுமென்று எனக்குப் புரிந்துவிட்டது. இனி பழைய வாழ்க்கைக்குத் திரும்பிச் சென்றால் அவ்வளவுதான். ஒழிந்தே போக வேண்டியதுதான். சம்பள உயர்வுகளும், சலுகைகளும் லாபங்களும் கட்டிப் போட்டுவிடும். பணியில் நீடிக்க, நீடிக்க வெளியேறுவது மென்மேலும் கடினமாகிவிடும். அடிமையாகிவிடுவேன். தப்பி ஓடிவிட வேண்டும்... இரண்டு நாள் கழித்து பாஸ்டன் திரும்பினேன். 1980 ஏப்ரல் 1 அன்று பால் பிரிட்டியின் அலுவலகத்துக்குச் சென்று வேலையை ராஜினாமா செய்தேன்.''

ராஜினாமா செய்த பிறகு பெர்கின்ஸஸுக்குத் தொடர்ந்த மிரட்டல்களும் அதன் பின்பு இந்த நூல் பதிப்பிக்கப்பட்டு வெளியானதும் துப்பறியும் நாவலுக்குரிய இன்னொரு பாகம்.

இரா. முருகவேள் சுவாரஸ்யமான காவிய நடையில் இதை மொழி பெயர்த்திருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக விற்பனையில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது இந்த மொழி பெயர்ப்பு நூல்.

நாமிருக்கும் உலகம் எப்படி இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள உதவும் ஒப்பற்ற நூல்.

பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்
ஜான் பெர்கின்ஸ்

தமிழில்:இரா. முருகவேள்
விடியல் பதிப்பகம்,
11, பெரியார் நகர்,
மசக்காளி பாளையம் (வடக்கு),
கோயமுத்தூர்} 641 015.

மின்னஞ்சல்:
sivavitiyal@yahoo.co.in

phone: 0422 - 25776772


வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</