வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

 

நன்றி!!!

திருவண்ணாமலையில் மிக சிறப்பாக நடைபெற்ற முற்றம் இலக்கிய சந்திப்பில் இந்தியாவின் மிக முக்கியமான எழுத்தாளுமைகள் பங்கேற்று, உரையாற்றி இருக்கிறார்கள். அவர்களில் சிலர் தற்போது நம்மிடையே இல்லை. இந்த நிகழ்வு நடைபெற்ற காலங்களில் அதில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு நமக்கில்லாமல் போனதே என்று பலரும் வருத்தப்படும் அளவிற்கு இந்த நிகழ்வு நடந்துள்ளது. இருந்தாலும் அந்த ஆளுமைகளின் குரலை முற்றம் நிகழ்ச்சியை நடத்தி வந்த எழுத்தாளர் பவா செல்லதுரை பதிவு செய்து வைத்துள்ளார். ஆடியோ டேப்பில் பதிவு செய்யப்பட்டிருந்த அவற்றை டிஜிட்டல் முறைக்கு மாற்றி இணையத்தில் பதிவேற்றம் செய்யும் அறிய வாய்ப்பை எனக்களித்திருந்தார். இது மிக முக்கியமான வரலாற்றுப் பணி. தமிழின் மிக முக்கிய ஆவணம், இந்த முற்றம் இலக்கிய நிகழ்வு. இந்தப் பணியை சிறப்பாக செய்வதற்கு தேவைப்பட்ட பொருளாதார உதவியை நண்பர் தவநெறி செல்வன் செய்துக் கொடுத்தார்.

முதல் பதிவாக, முற்றம் நிகழ்வில் பங்கேற்ற எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் பேச்சு (ஒலி வடிவில்) இங்கே பதிவேற்றப்பட்டுள்ளது. இனி தொடர்ந்து பல ஆளுமைகளின் பேச்சு இங்கே பதிவேற்றப்படும். இந்த அரிய பணியை என்னை நம்பி ஒப்படைத்த பவா செல்லதுரைக்கும், சிறப்பாக கொண்டு வர உதவி செய்த நண்பர் தவநெறி செல்வன் அவர்களுக்கும் இந்த நேரத்தில் தமிழ் ஸ்டுடியோவின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மோ. அருண்
தமிழ் ஸ்டுடியோ

 

 

 
     
     
     
   
முற்றம்
1
 

 

 
 

முற்றம்

டப்ளின் நகரைப் போல திருவண்ணாமலை நவீன தமிழ் கலை இலக்கியத்தின் தலைநகராக அறிவிக்க வேண்டுமென பல தமிழ் ஆளுமைகள் தொடர்ந்து பேசுவதற்கான காரணம் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மோலாக இங்கு தொடர்ந்து நிகழ்ந்துவரும் புதிய புதிய முயற்சிகள்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் பெரும் மனிதத் திரளை சங்கமிக்க வைத்த கலை இலக்கிய இரவு என்கிற வடிவம் தமிழகமெங்கும் நகலெடுக்கப்பட்ட போது அதிலிருந்து விலகி கொஞ்சம் நாள் மெளனம் காத்தோம்.

நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் பெரும் நிலப்பரப்பிலான மண் மைதானத்தில் முப்பது, நாப்பது பேர் வட்டமடித்து உட்கார்ந்து, தமிழின் முதல் கலைஞன் என அடையாளப்படுத்தப்படும் கோணங்கியோடு ஆரம்பித்தது முற்றம்.

அடுத்த நிகழ்வே டேனிஷ்மிஷன் பள்ளியுன் புராதனமான ரெட் பில்டிங் முன் முற்றத்தில் தொடர்ந்தது.

தமிழின் ஆக சிறந்த படைப்பாளிகள், ஆளுமைகள், கல்வியாளர்கள் என அது மிகக் குறுகிய காலத்திலேயே மொழி, மாநிலம் கடந்து இந்திய அளவிற்கான தழில் வாசல் என ஆனது. பால் சக்காரியாவில் தொடங்கி, டெல்லியிலிருந்து வந்த கவிஞர் சச்சிதானந்தன் வரை பெரும் கனவுகளின் நிஜத்தில் அம்மைதானம் கெளரவப்பட்டது.

சுந்தர ராமசாமி, தமிழவன், நாஞ்சில்நாடன் எனத்துவங்கி கே.எண்.பணிக்கர், வசந்திதேவி, திரும்பாம்பரம் சண்முக சுந்தரம் என பல்வேறு ஆளுமைகளால் விரிந்த அதன் கிளைகள் அசுர வேகத்தில் வளர்ந்தது.

கேளிக்கை மனத்திற்கு முற்றம் மெளனமாக தடைபோட்டது. சகிக்க முடியாத ஒரு சமூக அமைப்பை படைப்பாளர்களும், கலைஞர்களுமாக சேர்ந்து தங்கள் வாசகர்கள் முன் லேசாக அசைத்துப்பார்த்த நேரடி நிகழ்வாக அதன் வெற்றியை அம்மைதானத்தின் இருளடைந்த ஏதாவதொரு மூளையில் தனியே நின்று கவனிக்கும் போது மனம் பெருமிதப்பட்டிருக்கிறது.

எத்தனையோ பெரும் சிரமங்களுக்கிடையே என் அன்பு நண்பர் தவநெறிச் செல்வன் அவர்களின் ஒரு சிறு பங்களிப்புடன் இந்நிகழ்வை உலகம் முழுமைக்கும் சாத்தியப்படுத்துகிறது இணையம்.

- பவா செல்லதுரை

 

 
  ---------------------------------  
     
 

 

 

 
  ---------------------------------  
     
     
 

 

 

 
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  நூல்வெளி TS முற்றம்  முற்றம் வாயில்
 

அம்பை பங்கேற்ற முற்றம் இலக்கிய சந்திப்பு

நன்றி : தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் & கலைஞர்கள் சங்கம் - திருவண்ணாமலை கிளை



அம்பை பங்கேற்ற முற்றம் இலக்கிய சந்திப்பு


நிமிடம்: 51
--  நொடி: 38



----------------------------------------------------------------------------------------------------
நன்றி!!!

திருவண்ணாமலையில் மிக சிறப்பாக நடைபெற்ற முற்றம் இலக்கிய சந்திப்பில் இந்தியாவின் மிக முக்கியமான எழுத்தாளுமைகள் பங்கேற்று, உரையாற்றி இருக்கிறார்கள். அவர்களில் சிலர் தற்போது நம்மிடையே இல்லை. இந்த நிகழ்வு நடைபெற்ற காலங்களில் அதில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு நமக்கில்லாமல் போனதே என்று பலரும் வருத்தப்படும் அளவிற்கு இந்த நிகழ்வு நடந்துள்ளது. இருந்தாலும் அந்த ஆளுமைகளின் குரலை முற்றம் நிகழ்ச்சியை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் நடத்தி வந்த எழுத்தாளர் பவா செல்லதுரை பதிவு செய்து வைத்துள்ளார். ஆடியோ டேப்பில் பதிவு செய்யப்பட்டிருந்த அவற்றை டிஜிட்டல் முறைக்கு மாற்றி இணையத்தில் பதிவேற்றம் செய்யும் அறிய வாய்ப்பை எனக்களித்திருந்தார். இது மிக முக்கியமான வரலாற்றுப் பணி. தமிழின் மிக முக்கிய ஆவணம், இந்த முற்றம் இலக்கிய நிகழ்வு. இந்தப் பணியை சிறப்பாக செய்வதற்கு தேவைப்பட்ட பொருளாதார உதவியை நண்பர் தவநெறி செல்வன் செய்துக் கொடுத்தார்.

முதல் பதிவாக, முற்றம் நிகழ்வில் பங்கேற்ற எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் பேச்சு (ஒலி வடிவில்) இங்கே பதிவேற்றப்பட்டுள்ளது. இனி தொடர்ந்து பல ஆளுமைகளின் பேச்சு இங்கே பதிவேற்றப்படும். இந்த அரிய பணியை என்னை நம்பி ஒப்படைத்த பவா செல்லதுரைக்கும், சிறப்பாக கொண்டு வர உதவி செய்த நண்பர் தவநெறி செல்வன் அவர்களுக்கும் இந்த நேரத்தில் தமிழ் ஸ்டுடியோவின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மோ. அருண்
தமிழ் ஸ்டுடியோ

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

</