வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. செய்திகள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 
 

First News Paper in India

James Augustus Hickey or Hicky, a highly eccentric Irishman who had previously spent two years in gaol for debt, Hickey's Bengal Gazette or the Calcutta General Advertiser was the first English language newspaper, and indeed the first printed newspaper, to be published in the Indian sub-continent.

It was a weekly newspaper, and was founded in 1779, in Calcutta, the capital of British India. The memoirist William Hickey (who, confusingly, was not in fact related to the paper's founder) describes its establishment shortly after he had succeeded (in his capacity as an attorney-at-law) in having James Hicky released from debtor's gaol.

http://en.wikipedia.org/wiki/
Hickey's_Bengal_Gazette


 
  ------------------------------  
 

Guinness World Record for the world's smallest newspaper

From The Guinness World Records 2010: 'the smallest newspaper measures 32 x 22 mm (1.25 x 0.86 in) achieved by First News Newspaper in West Horsley, Surrey, UK published on the November 8, 2007 in celebration of Guinness World Records Day.'

http://www.firstnews.co.uk/
weird/first-news-is-the-worlds-smallest-newspaper-i97

 
     
   
செய்திகள்
1
 

          உலகின் முதல் செய்தி தாள்

 

Johann Carolus (1575 - 1634) was the publisher of the first newspaper, called Relation aller Fürnemmen und gedenckwürdigen Historien (Collection of all distinguished and commemorable news). The Relation is recognised by the World Association of Newspapers[1], as well as many authors[2] as the world's first newspaper. The German Relation was published in Strassburg, which had the status of an imperial free city in the Holy Roman Empire of the German Nation.

 

 
  ---------------------------------  
  ஸ்வதேசமித்ரன்

இந்தியாவில் பதிப்பிக்கப்பட்ட தமிழின் முதல் செய்தி் தாள்.

இந்த செய்தி தாள் இந்தியா மட்டுமின்றி, பர்மா, சிங்கப்பூர், மலேசியாவின் சில பகுதிகள், பெனாங், இலங்கை, சுமத்ரா, சீனா, தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பரிக்க நாடுகளில் கூட பரவலாக வாசகர்களைப் பெற்றிருந்தது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்த செய்தி தாள் பதிப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.indianetzone.com/
24/swadesamitran_first_
tamil_newspaper.htm
 
 

 

 

 
  ---------------------------------  
     
     
 

 

 

 
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  மற்றவை TS செய்திகள் செய்திகள் வாயில்


உண்மையான ஊடகவியலாளன்


சா.ரு. மணிவில்லன், பத்மநாபன்  

ஒரு ஊடகவியலாளன் எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாய் திகழ்ந்த லசந்த விக்ரமதுங்க இலங்கை சிங்கள பேரினவாத அரசாங்கத்தினால் (லசந்த-வின் 25 வருட கால நண்பர் அதிபர் ராஜபக்சே) படுகொலை செய்யப்பட்டார். லசந்தவின் முதல் நினைவுநாளை முன்னிட்டு முத்துக்குமார் நினைவு குழு ஒரு நினைவஞ்சலி கூட்டத்தை 10.01.2010 அன்று சென்னை தி.நகரில் ஏற்பாடு செய்தது. இக்கூட்டத்திற்கு கவிஞர் சூரியதீபன் தலைமை தாங்கினார். பல்வேறு ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.

தான் கொலை செய்யப்படக்கூடும் என்பதை அறிந்த லசந்த கொலை செய்யப்படுவதற்கு ஒரு வாரம் முன்பே தன் வாக்குமூலத்தை மரண சாசனமாக எழுதிவைத்துவிட்டார். அந்த மரண சாசனம் பிறகு வெளியாகியது. அதிலிருந்து சில வரிகளை வாசித்துக்காட்டி நினைவஞ்சலி கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை பேராசிரியர் செல்வி வரவேற்று பேசினார்.

கவிஞர் சூரியதீபன் தலைமை உரையை தொடங்குவதற்கு முன்பாக தமிழ் தேசிய தலைவரின் தந்தை வேலுபிள்ளை மறைவுக்கு ஒரு நிமிடம் மௌன அஞசலி செலுத்தினார். இதில் அனைவரும் பங்கெடுத்துக் கொண்டனர்.

சட்டம் படித்தவர்கள் பெரும்பாலும் ஊடகத்துறைக்கு வருவதில்லை. லசந்தா வழக்கறிஞராக இருந்தும் அதை உதறிவிட்டு ஊடகத்துறைக்கு வந்தார். இலங்கையில் சிங்கள பேரினவாத அரசபடையினால் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட அரச பயங்கரவாதத்தை சட்டப்பூர்வமாக விமர்சித்து பல கட்டுரைகள் எழுதினார். அவரின் பெரும்பாலான கட்டுரைகள் ஆய்வு பூர்வமான கட்டுரைகளாகும். மனித உரிமை அரங்கில் செயல்பட்டவர். இலங்கையின் வடகிழக்கு பகுதிகளில் தமிழர்கள் மீது இனப்படுகொலை செய்யப்படுவதையும் முன்பு தென்பகுதியில் புரட்சியை காரணம் காட்டி சிங்கள இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதையும் வெளியுலகுக்கு கொண்டு வர பாடுபட்டவர். அதிகாரம் மனிதர்களை எப்படி அதிகாரத்துவம் படுத்துகிறது என்பதை தன் எழுத்துக்கள் மூலம் வெளிச்சம் போட்டு காட்டியவர். தான் படுகொலை செய்யப்படலாம் என்பதை உணர்ந்திருந்தும் தான் கண்டதை நேர்மையுடன் தொடர்ந்து பதிவு செய்தார். அவரை போன்ற நேர்மையான துணிச்சலான ஊடகவியலாளர்கள் உலகுக்கு தேவை என கவிஞர் சூரியதீபன் கூறினார்.

மேலும் அண்மையில் இலங்கை சென்று வந்ததையும் அங்கு தமிழர்களை அவர்கள் நடத்தும் விதம் மிகவும் கொடுமையானதாக உள்ளது எனவும் கூறினார். இலங்கையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தை கடப்பதற்குள் 4 முறை சிங்கள ராணுவத்தினரால் பரிசோதிக்கப்படுகிறது. பெரும்பாலான ராணுவ வீரர்கள் பால்மணம் மாறாத சிறுவர்களாகவே உள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.

1958 ஆண்டு நடந்த இன கலவரங்களை கட்டுப்படுத்த தமிழர் பகுதிக்கு வந்த ராணுவம் இன்றுவரை வெளியேறவில்லை. சுமார் அரை நூற்றாண்டுக்கு மேலாகவே தமிழர் பகுதி ராணுவ கண்காணிப்பில் உள்ளது என கூறி கவிஞர் சூரியதீபன் தலைமை உரையை நிறைவு செய்தார்.

மருத்துவர் குழந்தைசாமி பேசுகையில் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட லசந்தா மட்டுமின்றி மற்ற 34 ஊடகவியலாளர்களுக்கும் சேர்த்தே நாம் மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

கால் நூற்றாண்டு கால நண்பரையே படுகொலை செய்த சர்வாதிகாரி ராஜபக்சேவிடம் தமிழர்கள் தங்களுக்கான சம உரிமையை எதிர்பார்க்க முடியாது. சிங்கள பேரினவாத அரசின் கோர முகத்தையே லசந்த-வின் படுகொலை மறுபடியும் உலகு காட்டியுள்ளது என இந்திரன் குறிப்பிட்டார்.

டெக்கான் கிரானிக்கல் ஊடகவியலாளர் கிருஷ்ணன் தன் உரையில் இலங்கையில் பேச்சு உரிமை, எழுத்து உரிமை, கருத்து உரிமை என எதுவும் கிடையாது. பத்திரிகையாளர் பயிற்சி துறை தலைவர் கூட சுதந்திரமாக செயல்பட முடியாத இலங்கையில் லசந்தாவின் செயல்பாடுகள் வியப்பைத் தருகிறது எனக் கூறினார்.

போர் உச்சத்தில் இருக்கும்போது அதிகமாக பேசினோம் எழுதினோம். செயல்பூர்வமாக எதையும் தடுக்காமல் விட்டுவிட்டோம். இவ்வளவு துயரங்களை சந்தித்த தமிழர்களுக்கு இனி தனி ஈழம் அமைவதே சரியானதாக இருக்குமென குங்குமம் எழிலன் கூறினார்.

சிங்களர்கள் அனைவரும் தமிழர்களின் எதிரி அல்ல. தமிழ்நாட்டு தமிழர்கள் அனைவரும் ஈழ ஆதரவாளர்கள் அல்ல என்பதை நாம் புரிந்துகொண்டு செயல்பட வேண்டுமென குமுதம் பாலா கேட்டுக்கொண்டார்.

புகழேந்தி தங்கராசு தன் உரையில் இலங்கை ஆட்சியாளர்களின் துரோகங்களை பட்டியலிட்டார். விடுதலை புலிகள் விமான தாக்குதல் நடத்தக்கூடும் என அஞ்சிய ராஜபக்சே மக்களைப் பற்றி கவலைப்படாமல் தன்னை - தன் குடும்பத்தினரை மட்டும் பாதுகாக்க அதிபர் மாளிகையில் 500 அடி ஆழத்தில் நிலவறை அமைத்தார். ராசபக்சேவின் இத்துரோகத்தை வெளிகொணர்ந்தவர் லசந்த் மட்டுமே. போராளி குழுக்கள் தங்கள் கட்டுப்பாட்டு பகுதியில் நிறைய மரங்களை நட்டு வளர்த்தனர். சிங்கள் பேரினவாத ராணுவம் குண்டுமழை பெய்து மரங்களையும் மக்களையம் அழித்தனர். மரம் அழித்தவன் மனிதனா? என்பதை உலகம் புரிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இலண்டனிலிருந்து வெளிவரும் நாழிகை இதழி ஆசியரான மாலி (அ) மகாலிங்கம் பேசுகையில் இலங்கையில் ஊடக சுதந்திரம் பறிக்கப்பட்டு அச்சுறுத்தலுக்கு உள்ளான முதல் தலைமுறையை சார்ந்தவன் நான். இலங்கையில் இன்றும் ஊடக சுதந்திரம் இல்லை என்பதிலிருந்தே இலங்கையின் சர்வாதிகார நிலை உணரலாம் எனக் கூறினார்.

வெப் துனியா இணைய இதழில் ஆசிரியர் அய்யநாதன் தன் உரையில் லசந்த வழிகாட்டுதலுக்குரிய நபர். சுதந்திரமாக சிந்தித்தவர். அவருடைய கருத்தில் சில முரண்பாடுகள் இருந்தாலும் சிங்கள பேரினவாத அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ள அரச பயங்கரவாதத்தை வெளிக்கொணர்ந்தவர் என்பதினால் நாம் அவரை பாராட்டவும் நன்றி கூறவும் கடமைப்பட்டுள்ளோம். ஊடகங்கள் ஆட்சியாளர்களின் நேர்மையாக பதிவு செய்ய வேண்டியது. ஊடகவியலாளின் கடமையாகும். அடிப்பவனை எதிர்த்து அடிக்காமல் வன்முறை கட்டுப்படுத்த (அ) தடுக்க முடியாது எனக்கூறி தன் உரையை நிறைவு செய்தார்.

முஸ்லீம் மக்கள் நபிகள் பிறந்த இடமான மெக்காவை தரிசிப்பதை தன் வாழ்நாள் கடமையாக கருதுவது போல தமிழ் தேசிய தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் பிறந்த இடத்தை தரிசிப்பதை ஒவ்வொரு தமிழனும் தன் வாழ்நாள் கடமையாக கருதவேண்டும் என உணர்ச்சி பொங்க ஓவியர் அரஸ் பேசினார். மேலும் தமிழக அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் நலம் கருதியே ஈழப்பிரச்சினையை கையிலெடுக்கிறார்கள். இவர்களது போராட்டம் போலியானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என கேட்டுகொண்டார்.

தமிழ் ஊடகவியலாளர் சங்க எழிலரசு பேசும்போது இலங்கையில் சிங்கள பேரினவாத அரசு தமிழர்கள் மீது நடத்தும் இனப்படுகொலையை ஊடகங்கள் வெளியிடாதிருக்க பல ஊடகங்களை பேரம் பேசியுள்ளது. ஒரு சுதந்திரமான ஊடகவியலாளனுக்கு முன்னுதாரணமாய் வாழ்ந்த லசந்த மதிக்கப்பட வேண்டியவர். அவரது இலட்சியங்களை ஒரு ஊடகவியலாளக பின் தொடர்வதே உண்மையான நினைவு அஞ்சலியாக இருக்க முடியும் எனக் கூறினார்.

லசந்த் விக்ரமதுங்கே நினைவஞ்சலிக்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள். முத்துக்குமார் நினைவு அஞ்சலி குழுவினர். ஓர் உண்மையான ஊடகவியலாளனுக்கு உறவுகள் நாடுகளின் எல்லைக்கு அப்பாலும் இருக்க முடியும் என்பதை இங்கு கூடியவர்கள் மூலம் உணர முடிந்தது.


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.



   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</