வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. செய்திகள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 
 

First News Paper in India

James Augustus Hickey or Hicky, a highly eccentric Irishman who had previously spent two years in gaol for debt, Hickey's Bengal Gazette or the Calcutta General Advertiser was the first English language newspaper, and indeed the first printed newspaper, to be published in the Indian sub-continent.

It was a weekly newspaper, and was founded in 1779, in Calcutta, the capital of British India. The memoirist William Hickey (who, confusingly, was not in fact related to the paper's founder) describes its establishment shortly after he had succeeded (in his capacity as an attorney-at-law) in having James Hicky released from debtor's gaol.

http://en.wikipedia.org/wiki/
Hickey's_Bengal_Gazette


 
  ------------------------------  
 

Guinness World Record for the world's smallest newspaper

From The Guinness World Records 2010: 'the smallest newspaper measures 32 x 22 mm (1.25 x 0.86 in) achieved by First News Newspaper in West Horsley, Surrey, UK published on the November 8, 2007 in celebration of Guinness World Records Day.'

http://www.firstnews.co.uk/
weird/first-news-is-the-worlds-smallest-newspaper-i97

 
     
   
செய்திகள்
1
 

          உலகின் முதல் செய்தி தாள்

 

Johann Carolus (1575 - 1634) was the publisher of the first newspaper, called Relation aller Fürnemmen und gedenckwürdigen Historien (Collection of all distinguished and commemorable news). The Relation is recognised by the World Association of Newspapers[1], as well as many authors[2] as the world's first newspaper. The German Relation was published in Strassburg, which had the status of an imperial free city in the Holy Roman Empire of the German Nation.

 

 
  ---------------------------------  
  ஸ்வதேசமித்ரன்

இந்தியாவில் பதிப்பிக்கப்பட்ட தமிழின் முதல் செய்தி் தாள்.

இந்த செய்தி தாள் இந்தியா மட்டுமின்றி, பர்மா, சிங்கப்பூர், மலேசியாவின் சில பகுதிகள், பெனாங், இலங்கை, சுமத்ரா, சீனா, தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பரிக்க நாடுகளில் கூட பரவலாக வாசகர்களைப் பெற்றிருந்தது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்த செய்தி தாள் பதிப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.indianetzone.com/
24/swadesamitran_first_
tamil_newspaper.htm
 
 

 

 

 
  ---------------------------------  
     
     
 

 

 

 
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  மற்றவை TS செய்திகள் செய்திகள் வாயில்


ச. தமிழ்செல்வன் பங்கேற்ற கேணி இலக்கிய சந்திப்பு


சா.ரு. மணிவில்லன், பத்மநாபன்  

கேணி அமைப்பின் 11வது மாத இலக்கியக் கூட்டம் 11.04.2010 அன்று நடைபெற்றது.

பத்திரிகையாளர் ஞாநி, அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மேலும் "எழுத்தாளர் அசோகமித்ரன் எனது மூத்த நண்பர். தமிழ் செல்வன் என் சகவயது நண்பர். அவர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. சமூகப் பிரச்சினை, கலாச்சார பிரச்சினை, தொழிலாளர் பிரச்சினை என பல துறைகள் பற்றியும் கருத்து சொல்பவர். தன் கருத்துக்களை கட்டுரைகளாகவும் எழுதுபவர். இவை எல்லாம் விட அவர் ஒரு களப் பணியாளராகவும் உள்ளார். பெரும்பாலும் பயணம் செய்து கொண்டே இருப்பவர். அறிவொளி இயக்க அனுபவங்களையும், தொழிற்சங்க அனுபவங்களையும் நூலாக எழுதியுள்ளார். இவர் களப் பணியாளராக இருப்பதனால் புனைவுகள் எழுத முடியாமல் போகிறது. "என் வாழ்க்கை என் எழுத்து" என்ற தலைப்பில் நம்மோடு உரையாடுவார் பிறகு நாம் அவரோடு விவாதிக்கலாம் என கூறி ஞாநி தொடக்க உரையை நிறைவு செய்தார்.

ச. தமிழ்செல்வன்

எதை நாம் முக்கியம் எனக் கருதுகிறோமோ அதை நம்மால் செய்து முடிக்க முடியும். ஒரு காலத்தில் கதை எழுதுவது முக்கியம் என கருதியதால் கதைகள் எழுதினேன். "வெயிலோடு போய்" என்ற என் முதல் சிறுகதை தொகுப்பு வெளிவந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் இரண்டாவது கதைத் தொகுப்பு வந்தது. நான் 33 ஆண்டுகளில் 32 சிறுகதைகளை மட்டுமே எழுதியுள்ளேன். வருடத்திற்கு ஒரு சிறுகதை கூட வெளிவரவில்லை.

என் அப்பா வழி தாத்தா தலையாரியாக வேலை பார்த்தார். என் அம்மா வழி தாத்தா மதுரகவி பாஸ்கரதாஸ் நாடகக்காரர். என் அப்பா எழுத்தாளர். தீவிர தி.மு.க. அனுதாபி. எங்கள் வீடு நிறைய புத்தகங்கள் இருக்கும். எங்கள் சிறுவயதில் புத்தகங்கள் மீதுதான் விளையாடுவோம். எங்கள் அப்பா வேலை மாறுதல் காரணமாக பல இடங்களுக்கு மாறிக் கொண்டு இருந்ததனால் எங்கள் அத்தைதான் எங்களை வளர்த்தார். அவர் ஒரு விதவை. தன் வாழ்க்கையை எங்களிடம் கதைகதையாகச் சொல்லுவார். நான் ஆறாவது படிக்கும்போதே எழுத ஆரம்பித்து விட்டேன். நான் எழுத்தாளனாக மாறியதில் வியப்பு ஏதுமில்லை. முதல் தலைமுறை படிப்பாளிகள் படைப்பாளியாக மாறுவதுதான் சாதனை என நினைக்கிறேன்.

நான் சிறுவயதில் பேச்சுப்போட்டிகளில் கலந்து கொண்டு இருக்கிறேன். எங்களுக்கு முதல்முறையாக கொடைக்கானல் பஸ் வந்தது எனக்கு நினைவு இருக்கிறது. முதன்முதலாக எங்க ஊருக்கு மின்சாரம் வந்தபோது காமராசர் வந்துதான் தொடங்கி வைத்தார். முத்துராமலிங்க தேவர் கைதுக்கு காமராசர்தான் காரணம் எனக் கருதிய என் மாமா அவரை வெட்டுவதற்கு அரிவாளோடு அலைந்து கொண்டிருந்தது நினைவில் உள்ளது.

ஒன்றாம் வகுப்புத் தோழன் ஒருவன் நல்ல கதைசொல்லியாக இருந்தான். "நா நல்லா தூங்கிட்டு இருந்தேன். பக்கத்தில் யாரோ அடிச்சிக்கிறமாதிரி இருந்தது. எழுந்துபார்த்தா பேயும் பிசாசும் சண்டை போட்டுகிட்டு இருந்தது. எனக்கு பயங்கர கோபம். ஒரு கல்லெடுத்து அடிச்சேன். அது பயந்துகிட்டு சுடுகாட்டுக்கு ஓடிடுச்சு" என சாதாரணமாக சொல்லுவான். பேயின்னா என்ன, பிசாசுன்னா என்னன்னு நாங்க கேட்டா, எங்களை ஏளனமாக பார்த்துவிட்டு சொன்னான் ’பேய்ன்னா, ஆண், பிசாசுன்னா பெண். ’
அவனுக்கு பல மரங்களின், செடி, கொடிகளின் பெயர் தெரியும். மழை வரும் என்பதை முன்கூட்டியே அனுமானித்துச் சொல்லுவான். அவனுக்கு ஆங்கிலம் வரவில்லை என்பதனாலேயே படிப்பை நிறுத்தி விட்டான். எல்லாரும் எல்லாப் பாடங்களையும் படிக்க வேண்டும் என கட்டாயப் படுத்துவதே வன்முறைதான். பசங்களுக்கு புரிகின்ற வகையில் பாடம் சொல்லிக் கொடுக்க முடியாதவர்கள், எல்லாவற்றையும் படி படி என கட்டாயப்படுத்தி அவனை என்னால் முடியவில்லையே என நினைக்கும்படி செய்கிறது இந்த கல்விமுறை. இது மாற்றி அமைக்கப்பட வேண்டியது அவசியம்.

ஆங்கிலேயர்கள் இருக்கும் வரை அவர்களோடு தொடர்பு கொள்ள ஆங்கில மொழி தேவையாக இருந்தது. அவர்கள் சென்ற பிறகு எதற்கு ஆங்கிலம். சுதந்திரத்திற்கு பிறகு அவர் அவர் தாய்மொழியில் அல்லவா கல்வி இருந்திருக்க வேண்டும். நான் ஆங்கிலம் கற்றுக்கொள்ள பெரும்பாடு பட்டேன். அதற்கு முதலில் சாமிகளை நாடினேன். முதலில் என் குடியசாமியிடம்தான வேண்டிக் கொண்டேன். பெரிய மீசை, கையில் அருவாள் என பார்ப்பதற்கு படிக்காதவன் போலிருக்கும் இவரிடம் போய் வேண்டிக் கொள்கிறோமே என்ற எண்ணம் ஏற்பட்டவுடன் பக்கத்து தெருவில் பிள்ளையாரிடம் வேண்டிக் கொண்டேன். பக்கத்து தெரு பசங்கள் ஏன் எங்கள் தெருவுக்கு வருகிறாய், உங்கள் தெருவில் சாமி இல்லையா என கேலி பேசுவார்கள். அதை பார்த்தால் முடியுமா? நமக்கு ஆங்கிலம் அல்லவா முக்கியம் என நினைத்துக் கொண்டேன். கொஞ்ச நாட்களுக்கு பிறகு பிள்ளையாருக்கு ஆங்கிலம் தெரியுமா என சந்தேகம. அடடா நாட்களை வீணடித்து விட்டோமே என வருத்தப்பட்டேன். பிறகு பக்கத்து ஊரில் இருக்கும் இயேசு சாமியை கும்பிட ஆரம்பித்தேன். ஆங்கிலம் பேசுபவர்கள் எல்லாம் கும்பிடுகிறார்கள். அதனால் இயேசுவுக்கு ஆங்கிலம் தெரியும் என நினைத்தேன். ஒருநாள் என்னைப் பார்த்த பாதிரியார் என்னைப் பற்றி விசாரித்தார். பிறகு பைபிள் குடுத்து படிக்கச் சொன்னார்.

எனக்கு சிறுவயதில் பள்ளிக்கூடம் போய் வந்த நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் ஆடு மேய்க்க வேண்டிய வேலை. எனக்கு அது மிகவும் பிடித்தமான வேலையும் கூட. பைபிள் படிக்க படிக்க இயேசுவும் ஆடு மேய்ப்பவர் என தெரிய வந்ததும், எனக்கு ரொம்ப மன வருத்தம். ஆடு மேய்ச்சவர் கிட்ட போயி ஆங்கிலம் வரணும் என வேண்டிக் கொண்டது முட்டாள்தனமாக பட்டது. சர்ச்சுக்கு போனால் முட்டங்கால் போட்டு ஆண்டவரை வணங்கச் சொன்னார்கள். பள்ளிக்கூடத்திலும் படிக்காவிட்டால் முட்டங்கால் போடனும், இங்கேயும் அப்படித்தானா? என நினைத்து வேதனைப்பட்டேன். பக்கத்து வீட்டு சின்னசாமி அண்ணன் சொன்னார், இயேசுவுக்கு ஹிப்ரு மொழிதான் தெரியும் என்று. பிறகு வேண்டுதல்களை விட்டுவிட்டு சின்னசாமி அண்ணன்கிட்டேயே ஆங்கிலம் கற்றுக் கொண்டேன். கல்லூரியில் படிக்கும்போது ஆங்கிலத்தில் மாநிலத்தில் இரண்டாவது மதிப்பெண் பெற்றேன்.

நான் கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்தபோது எனக்கு சினிமாப் பைத்தியம் பிடித்தது. ஒரு நாளைக்கு நான்கு படங்கள் பார்ப்பேன். இரவு இரண்டாவது ஆட்டம் படம் முடிந்து வீட்டுக்கு வந்தால் எனக்காக காத்திருந்த அப்பா, கதவை திறந்து விட்டு சாப்பிட்டுவிட்டு படு என சொல்லிவிட்டுத்தான் தூங்க செல்வார். நான் படம் பார்ப்பது பற்றி ஏதும் சொல்ல மாட்டார். இது எனக்கு சங்கடமாக இருக்கும்.

அப்பாவுக்கு என் வருத்தத்தை இனி இப்படி செய்ய மாட்டேன் என கூறி, சுமார் 20 பக்கங்களில் கடிதம் எழுதி காலையில் கல்லூரிக்கு செல்வதற்கு முன்பு அவர் கையில் கொடுத்துவிட்டு செல்வேன். இப்படியாக அப்பாவுக்கு பல கடிதங்கள் எழுதியுள்ளேன்.

என் கல்லூரியில் மாணவர்கள் பலரும் எழுத்தாளர்களாக இருந்தனர். அதனால் எழுத வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாகி பல கதைகள் எழுதி தினமணி கதிருக்கு அனுப்பி வைத்தேன். அனைத்தும் திரும்பி வந்துவிட்டன. பக்கத்து ஊரிலிருந்து வெளிவந்த நீலக்குயில் என்ற பத்திரிகையில் என் முதல் படைப்பு வெளிவந்தது.

எழுத்தாளார் நா. பார்த்தசாரதியின் தீவிர வாசகன் நான். அவருடைய குறிஞ்சிமலர், சமுதாய வீதி போன்ற நாவல்களின் கதாநாயகர்களைப் போல் எனக்குள்ளும் லட்சியம் தலைதூக்கியது. நா.பாவின் எழுத்துக்கள் என்னுள் தேசபக்தியை உருவாக்கியது. தேசபக்தியின் உச்சமாக இராணுவத்தில் சேர முடிவு செய்தேன்.

இராணுவத்திற்கு செல்லும்போதுதான் முதல்முறையாக சென்னைக்கு வந்தேன். சென்னையில் எக்மோரை மையமாக வைத்துத் தான் மற்ற இடங்களை என்னால் அடையாளம் காண முடியும். இராணுவத்தில் சேர்ந்து முதல் இரண்டு ஆண்டுகள் மது அருந்தாமல்தான் இருந்தேன். அங்கு நிலவும் கடும் பனிப்பொழிவால் நான் மது அருந்த தொடங்கினேன்.

அங்கு ஒரு பெண்ணை காதலித்தேன். அங்கு எல்லோரும் சிவப்பாக, வெள்ளையாக இருந்தபோது இவள் மட்டுமே கருப்பாக இருந்தாள். இவள் கருப்பு என்பதனாலேயே, நான் அவளை காதலித்தேன். அவள் என்னை காதலிக்க வில்லை. ஆனாலும் நான் அவளை காதலித்தேன்.

நண்பர்களோடு நக்ஸல்பாரி பகுதிக்கு சென்று வீரவணக்கம் செலுத்திவிட்டு வந்தேன். அந்த காலக் கட்டங்களில் கமலதாஸ் கவிதைகள், ஜெ . கிருஷ்ணமூர்த்தி நூல்களை விரும்பி வாசித்தேன். ரொமாண்டிஸமும், அட்வெஞ்சருமான அந்த வாழ்க்கை எனக்கு பிடித்திருந்தது.
இராணுவத்திலிருந்து வெளிவந்த பிறகு அஞ்சல்துறையில் வேலைக்கு சேர்ந்தேன். அங்குதான் முதன்முறையாக தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினேன். எனக்கு பேச்சுத்திறமை இருந்ததனால் என்னை தொழிற்சங்க அமைப்பாளராக்கினர்.

கோவில்பட்டிக்கு அருகில் ஒரு பெரிய விவசாயப் பண்ணை இருந்தது. அங்கு பெண்களை மிகவும் மோசமாக நடத்தினர். அதனால், அங்கு பெண்களுக்காக போராடுவது என முடிவு செய்தோம். போராட்ட களத்தில் என்னுள் பெரும் மாறுதல் ஏற்பட்டது. இதுவரை பெண்களைப் பற்றி என்னுள் இருந்த பிம்பங்கள் உடைந்தது. இந்த பெண்களுக்காக போராட்டங்களுக்கு இடையில் எனக்கு திருமணம் நடைபெற்றது.

கோவில்பட்டி வறட்சியான பகுதி. தண்ணி பாடு பெரும்பாடு. பத்தமடைக்கு பணிமாறி வந்த போது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில், பத்தமடையில் எங்கு பார்த்தாலும் தண்ணீர். அந்த அளவுக்கு செழுமையான பகுதி. நல்ல விவசாயம் நடைபெறும். அதனால் அந்த ஊரில் வேலை பார்க்கும் நபர்கள் இந்திய அளவில் போராட்டம் நடந்தாலும் எதிலும் கலந்து கொள்வது இல்லை. தொழிற்சங்கத்தை தங்களது இடமாற்றலுக்காக மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அங்கு நான் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு அவர்களை 1984-ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொள்ள வைத்தேன்.

தொழிற்சங்க போராட்ட வாசகங்களில் வீர ஆவேசத்திற்காக பயன்படுத்தும் வார்த்தைகள் மக்களிடம் பயத்தை தோற்றுவிக்கிறது. அவர்களோடு சேர்ந்து அவர்கள் பயப்படும் விசயங்களை தெளிவுபடுத்தினால் மட்டுமே நாம் விரும்பும் வழிக்கு கொண்டு வர முடியும் என கருதுகிறேன்.
கல்லூரி படிக்கும்போதே எனக்கு சிறுபத்திரிகைகள் அறிமுகமாயிருந்தன. நிறைய இதழ்கள் வாசித்து இருக்கிறேன். செம்மலர், தாமரை இதழ்களில் என் கதைகள் வெளிவரத் தொடங்கின.

அறிவொளி இயக்கம் ஆரம்பிக்கப்பட்டபோது, களப்பணியாளராக மக்களிடம் சென்றேன். அவர்களுக்கு கற்றுக்கொடுக்க சென்ற நான் அவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டு திரும்பி வந்தேன். இந்த அனுபவங்களை எழுதுமாறு சு.ரா. சொன்னார். ஞாநியின் அழைப்பின் பேரில் அவருடைய தீம்தரிகட இதழில் அறிவொளி இயக்க அனுபவங்களை "இருளும் ஒளியும்" என்ற தலைப்பில் எழுதினேன். அது இப்போது நூலாகவும் வெளிவந்திருக்கிறது.

கிராம மக்களிடம் அறிவொளி இயக்கத்தின் நோக்கமான கல்வி கற்றலின் அவசியம் குறித்து பேசிக் கொண்டிருந்தபோது, ஒரு பெண், "இவ்வளவு நாளா எங்க போயிருந்தீங்க" என கேட்டபோது, என்னால் எந்த பதிலும் சொல்ல முடியாமல் திகைத்துப் போய் நின்றேன். பிறகு உடன் வந்திருந்தவர்கள் அறிவொளி இயக்க பாடலை பாடியபோதுதான் எனக்கு ஓரளவு சமாளிக்க முடிந்தது.

முதலமைச்சர் ஜெயலலிதாவை அறிவொளி இயக்க பயனாளிகள் சந்திக்க வேண்டும் என்பதற்காக கிராம மக்களை ஒன்றிணைத்து நிகழ்ச்சி நடக்கும் திடலுக்கு கொண்டு சென்றோம். அங்கு இடவசதி போதுமானதாக இல்லை. அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. இப்படியான இடத்திற்கு இவர்களை கொண்டு வந்ததற்கு நம்மோடு கோபப்படுவார்களே இவர்களை எப்படி சமாளிப்பது என்ற சிந்தனையோடு அவர்களை பார்க்க சென்றபோது அவர்கள் அனைவரும் முதலமைச்சரை இவ்வளவு நெருக்கமாக பார்க்க வைத்ததற்கு மகிழ்ச்சியோடு நன்றி கூறினார்கள். எனக்குள் பெரும் வியப்பு. இந்த மக்களை எப்படி புரிந்துக் கொள்வது. நான் புரிந்து வைத்திருந்தது எல்லாம் தப்பு என்றால் நான் என்ன செய்வது, ஒவ்வொரு முறையும் கிராமத்திற்கு சென்று திரும்பும்போது அவர்கள் ஏதாவது ஒன்றை எனக்கு புரிய வைக்கிறார்கள். அவர்களிடம் கற்றுக் கொள்வதற்கு கூட லாயக்கற்றவர்களாக படித்தவர்கள் உள்ளனர். அவர்களை அந்த அளவு இந்த கல்வி முறை சீரழித்துள்ளது.

ஒரு ரூபாய்க்கு மாப்பசான், கு. அழகிரிசாமி, ஆண்டாவ் செக்காவ், புதுமைப்பித்தன் என பல எழுத்தாளர்களின் கதைகளை மக்களுக்கு கொண்டு சென்றோம். மக்கள் மத்தியில் கதைகளை வாசித்தபிறகு விவாதித்தோம். அவர்கள் விவாதத்தில் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர். நம் அரசமைப்பு மக்களோடு விவாதிக்க, அவர்களின் கருத்துக்களை கேட்காமலே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

தூத்துக்குடி தொழிலாளர் பிரச்சினையில் அவர்களுக்கு அரசியல் பாடம் எடுப்பதற்காக எழுதப்பட்ட சிறுநூல், "அரசியல் எனக்கு பிடிக்கும்". இந்நூல் இதுவரை சுமார் 3 லட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளது. ஆனால் அந்த தொழிலாளர்களுக்கு இந்நூல் போதுமான பயனைத் தரவில்லை. எளிமையாக இருப்பதாக எல்லோரும் கூறுகிறார்கள். தூத்துக்குடி தொழிலாளர்களுக்கு இந்நூல் கடினமாகத்தான் உள்ளது.

சில விசயங்களை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பல சிறுநூல்களை எழுதியுள்ளேன். இதுதான் இப்போது அவசியம் என கருதுவதினால் இதை எழுதுகிறேன். சிறுகதை எழுதுவது அவசியம் என கருதும்பட்சத்தில் என்னால் சிறுகதைகள் எழுத முடியும். ஏதோ கதை எழுதினோம் என்று இல்லாமல் உலகத்தரமான சிறுகதைகள் எழுதவே விரும்புகிறேன்.
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஒருமுறை பாட்சா படத்தின் சண்டைக்காட்சி, லேடி பாய் படத்தின் சண்டைக்காட்சி, ஆந்திராவில் அரசாங்கம் சாராயக்கடை நடத்தும்போது அவற்றை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தினர். மக்களுக்கு எதிராக அரசாங்கம் போலீஸை ஏவியது. அப்போது ஆந்திர பெண்கள் ஒருகையில் மிளகாய் தூள், மற்றொரு கையில் விளக்குமாறு வைத்துக்கொண்டு போலீஸை எதிர்கொண்டனர். போலீஸ் தங்களை தாக்க வந்தபோது, முதலில் மிளகாய்த் தூளை தூவினர். பிறகு விளக்குமாற்றால் அடித்தனர். போலீஸார் பின்வாங்கி ஓடினர். இந்த செய்தி பட காட்சி ஆகிய மூன்றும் திரையிடப்பட்டன. மக்கள் ஆர்வமுடன் விவாதித்தனர். சினிமா படக் காட்சிகளின் எதார்த்தத்தை விளக்கிய பின்பு அவர்கள் அதை கேலி செய்தனர். ஆந்திர பெண்கள் செய்தது சரியென அவர்கள் உணரும்படி செய்தோம். நாம் விரும்பியதை நோக்கி அவர்களை கொண்டுவருது பற்றிய நெருடல் என்னுள் இருக்கவே செய்கிறது.

அறிவொளி இயக்க சுற்றுப் பயணத்தின் போது ஒரு கிராமத்தில் பேய் பற்றிய விவாதம் நடைபெற்றது. நாங்கள் அவர்களுக்கு பேய் இல்லையென விளக்கிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு பாட்டி எழுந்து ஒரு குறிப்பிட்ட மரத்தடியில் இரவு முழுவதும் தனியாக படுத்திருந்தால் பேய் இல்லை என்பதை ஒத்துக் கொள்வதாக சவாலுக்கு அழைத்தார். எல்லோரும் என்னையே ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். நான் சவாலுக்கு ஒத்துக் கொண்டு பாட்டியை தோற்கடித்துவிடுவேன் என எதிர்பார்த்தனர். ஆனால், நான் பாட்டியிடம் சொன்னேன் உங்கள் ஊர் மரத்தில் பேய் இருந்தாலும் இருக்கலாம் என சொல்லி பின் வாங்கிவிட்டேன்.

இப்படி நான் சொன்னதும் தோழர்கள் வருத்தப்பட்டனர். நான் அவர்களிடம் சொன்னேன். "பாட்டியின் சவாலை ஏற்று அவர்களை தோல்வியடைய செய்வது எளிது. பிறகு பாட்டி நம்மிடமிருந்து விலகி சென்றுவிடுவார். அந்த பாட்டி வெற்றி பெற நாம் வாய்ப்பு கொடுக்காவிட்டால் வேறு யார் வாய்ப்பு கொடுப்பார்கள்".

எந்த விசயத்திலும் ஈடுபடும்போது, அதில் நான் பைத்தியமாகி விடுகிறேன். அதன் குறைபாடான பகுதியை உணராமல் இருப்பதில்லை. அதனால்தான் நான் பைத்தியமாக இருந்த துறையில் தோல்வி ஏற்படும்போது, நான் துவண்டு விடுவதில்லை.

தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்ப துறையில் எங்கள் தோழர்களின் பிள்ளைகள் சுமார் 2000 பேர் இருப்பார்கள். இருந்தும் தகவல் தொழில்நுட்ப துறையில் சங்கம் அமைக்க முடியவில்லை. இருப்பினும் வருங்காலத்தில் சங்கம் அமையும். அதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் இப்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.

ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் தேதி குறிப்பிட்டு தீண்டாமையை ஒழிக்க முடியாது. பொருளாதார மாற்றம் காரணமாக கலாசாரமற்ற மாற்றமும், கலாச்சார மாற்றத்தின் மூலம் தீண்டாமை ஒழிப்பு ஓரளவுக்கு சாத்தியமாகியுள்ளது. சில பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை இன்று இல்லை. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாற்றம் சாத்தியமாகியுள்ளது. தீண்டாமை ஒழிப்பில் தற்போதைய நிலையில் இருந்து மேம்பட்ட நிலையை அடைய அனைவரும் பாடுபட வேண்டும்.

நான் மார்க்சிஸ்ட் கட்சியில் இருக்கிறேன். விமர்சனங்களை கட்சிக்குள் மட்டுமே விவாதிக்க விரும்புகிறோம். ஒரு இயக்கத்தை நடத்திச் செல்ல இது அவசியம் என கருதுகிறேன். ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்படும்போது வெறும் பார்வையாளனாக இருந்தது குறித்து எனக்குள் குற்ற உணர்வு இருக்கிறது. இந்த உணர்வு எல்லோருக்கும் இருக்கும். குஜராத்தில் படுகொலைகள் நடந்தபோது இதேநிலைதான்.

நந்திகிராமில் துப்பாக்கி சூடு என்றபோது என்னுள் பதற்றம் எழுந்தது. இடதுசாரி அரசாங்கத்திலும் இவ்வாறு நடைபெறும் என்பதை நம்பமுடியாமல்தான் பார்த்தேன். ஆனால் பிறகு வந்த செய்திகள் ஊடகங்களால் வேண்டுமென பெரியதாக்கப்பட்டவைகள். உண்மைக்கு புறம்பான, இடதுசாரிகளுக்கு எதிரான செய்திகளுக்கு ஆங்கில ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்தன.

மனைவி என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. துணைவன் - துணைவி என்று சொல்லவே விரும்புகிறேன். எல்லோரும் சமூகப் பார்வையோடுதான் இயங்குகின்றனர். எந்த சமூகம் என்பதில்தான் வேறுபாடு உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் சுமார் 500 திரைப்பட சங்கங்கள் அமைக்கும் பணி தமுஎகச மூலம் நடைபெற்று வருகிறது. இன்னும் ஐந்து ஆண்டுகளில் இது சாத்தியமாகும். திரைப்பட சங்கத்தில் குறும்படம், ஆவணப்படம் மற்றும் உலகப் படங்கள் திரையிடப்படும். இந்தப் பணியில் எங்களோடு திரைத்துறையை சார்ந்த சுமார் 200 பேர் இணைந்து செயல்படுகின்றனர்.

இறுதியாக எழுத்தாளர் பாஸ்கர் சக்தி நன்றி கூறினார்.

இந்நிகழ்வை ஒலி வடிவில் கேட்க

 

மணி: 2 நிமிடம்: 52 --  நொடி: 20

 




இந்நிகழ்ச்சி சார்ந்த ஒளிப்படங்களைக் காண:


http://picasaweb.google.co.in/thamizhstudio/11042010#

 


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</